வெள்ளி, நவம்பர் 16, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-7

அம்மாவின் நினைவு அலைகள்-7
1968ஆம்  ஆண்டு பள்ளி திறந்ததும்,அம்மா இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்தினார். நானும் நடத்த ஆரம்பித்தேன்.அதற்கு சபா மூலம் மாதம் 120 ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்கினர். அதுவும் ஓராண்டிற்கு ஒரு முறை வரும்.நாற்பது மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று  என்ற விகிதத்தில் வசூலித்துத் தரவேண்டும்.சபாவுக்கு வருமானாம். ஹிந்தி போராட்டத்தால் சபாவின்  மாணவர்கள் குறைந்த நேரத்தில் நாங்கள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.அப்பொழுது சபாவில் பணியாற்றிய செயலர், அமைப்பாளர்கள் பிரசாரகர்களை சந்தித்து  உற்சாகப் படுத்தினர். செயலாளர்   தி.பி.வீரராகவன் ஜீ ,அமைப்பாளர்கள் ஈ.தங்கப்பன் ஜீ ,சுமதீந்திரா ஜீ ,எம்.சுப்ரமணியன் ஜி, வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி, போன்றோர் சபாவை காப்பதற்குப் போராடினர். எங்கள் வீட்டிற்கும் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி வித்தியாலயத்தை மூடவேண்டும் என்று ஊர்வலமாக வந்தனர்.நான் மூடிவிடுகிறேன், இங்கு விரும்பி வருபவர்களுக்கே கற்பிக்கிறேன். எனக்கு மாத வருவாய் வேண்டும் என்றேன். மாணவர்கள் சென்று விட்டனர். அன்று மாலையே சில கல்லூரி மாணவர்கள் ஹிந்தி பயில வந்தனர்.
அன்றைய சபா செயலர்கள்,அமைப்பாளர்கள் அனைவரும் எங்கள் சேவையைப் பாராட்டினார். ஆனால் அங்கும்  தேர்தல். ஜாதி,போராட்டம். ஜே,எஸ்,ராமதாஸ் செயலராக வந்ததும் என் தாயாரின் முழு நேர வித்யாலயம் பகுதி நேரமாக மாற்றப்பட்டது. நேர்மையான பிரசாரகர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.சென்ற ஆடு வயதான ப்ரசாகர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினர். அதற்கு என் அம்மாவிடமே  ரூபாய் 600/-கட்டணம் வாங்கி உள்ளனர். அம்மா வயதானதால் , ஆடோவில் தான் செல்லவேண்டும் .இரண்டாயிரம் செலவு. அங்கு பாராட்டி எதுவும் பேசவில்லை. பிரசாரகர்கள்  ஊக்குவிக்கப் படவில்லை. ஆனால் ,ஹிந்தி பிரசாரம் மட்டும் நடந்துவருகிறது. பலர் சபாவை எதிர்பார்ர்க்காமல் ஹிந்தி பிரசாரம் செய்கின்றனர்.ஏனென்றால் பொதுமக்கள் விரும்பி படிக்கின்றனர். நிரந்தரமான பிரசாரகர்கள் இன்றியே ,மாநில அரசின் உதவியும் இன்றி லக்ஷக்கணக்கில் மாணவர்கள் ஹிந்தி படிப்பது மகாத்மா காந்தி அடிகளின் தீர்க்க தரிசனம் தான். அவர் சென்னையில் 1918இல் சபாவை ஆரம்பித்தார்.
தொடரும்.

இளைஞர்கள் வலைத்தளம், இந்தியாவின் எதிர்காலம்


 





தர்மத்தால் செல்வம் குறையாது
?????????? 26,2012,
09:09  IST
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். 
* பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.
* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். 
* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும். கஞ்சத்தனம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.
* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். 
* தர்மம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை. தர்மம் செய்கின்றபோது வருகின்ற துன்பமும் துயரமும் அல்லாஹ்வின் கருணையின் அறிகுறியாகும்.
* துர்பாக்கியமுள்ளவனிடமிருந்து இரக்க சிந்தனை அகற்றப்படுகின்றது.
- நபிகள் நாயகம்


 இடுகைகள்  பல ,
கணினி  பிறப்பிக்கிறது
வலைத்தளங்கள் மூலமாக.
இளைஞர்கள்  வலைத்தளம்,
இந்தியாவின்  எதிர்காலம் 
ஒளிமயமானது  என்பதற்கே 
ஒரு ஒளிச்சுடராக விளங்குகிறது.
அதில் வெளிநாட்டு வேதனைகள் ,
சஹிக்கும்  நாங்கள்,
மத வேற்றுமை மறக்கிறோம்.
மொழி வேற்றுமை  மறக்கிறோம்.
அழகுதேவதைகள் கண் முன் தோன்றினாலும்.
எண்களின் பார்வை,அவர்களின் மேல் 
படுவதில்லை. புலன் அடக்கம் கற்றுக்கொள்கிறோம் .
புலால் உண்பதில் சில சமயம் ஜாதி வேறுபாடு மறக்கிறோம்.
தம்பி,தங்கைகளுக்காக,அம்மாவிற்காக ,உற்றார் உறவினர்களுக்காக,
சிக்கனைத்தை  கடைபிடிக்கிறோம்.
தாய்நாட்டில்  இல்லா வேதனை இருந்தாலும் 
நாங்கள் இருக்குமிடத்தில்,
வையகம் வாழ்கிறது.
ஜாதி வேற்றுமைகள் இல்லை.
மொழி வேற்றுமைகள் இல்லை.
மத வேற்றுமைகள் இல்லை.
வசுதைவ குடும்பகம் என்ற நம் ஆன்றோர் 
கூற்று இங்கு மெய்யாகிறது,
இது ஒரு வெளிநாட்டு இளைஞரின் கவிதை.(surukkam)
வெளிநாட்டுப்பிரிவில் அவர் காணும் சுகம்.
பாரதநாடு பலம் பெரும் நாடாக  
இளையர்கள் கனவில் ஏற்படும் தடைகள் 
மத-இன-ஜாதிக் கலவரங்கள்.
மீண்டும் மீண்டும் ஒளிக்க  வேண்டிய 
அவ்வையின் பாடல்:
இட்டார் பெரியார் ;இடாதார் இழி குலத்தோர்.
பாரதியின் பாடல் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா.
ஆனால் இன்று ஜாதி என்ற பெயரில்.
3% விகித முள்ள ஜாதியைமட்டும் 
மிகக் கீழ்த்தரமாக தாக்கும் கூட்டம்.
இது பொறாமையா?இயலாமையா?
அந்தப்  பிரிவு இல்லை என்றால் 
சுபகாரியங்கள் யாரும் நடத்த 
ஒரு அச்சம்.
திதி கொடுக்க அந்த இனம் வேண்டும்.
புதிய தொழில் துவங்க 
கணபதி ஹோமம் வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற யாகங்கள் வேண்டும்.
ஹோமங்கள் வேண்டும்.
உண்மைகளை உதைக்க உதைக்க ,
ஆலயங்களில் கூட்டம் .
முன்னேற்றச் சிந்தனைகள் 
முன்னேறச் செய்யும்.
பாரதம் பார் புகழ  
இன வேற்றுமை ஒழிய வேண்டும்.
ஆனால்,
அரசியல்வாதிகள் 
தங்கள் சுய நலத்திற்கே 
ஜாதி வெறி, சமயவெறி தூண்டும் போக்கு.
இதே சத்திய வாக்கு.