வெள்ளி, மே 13, 2016

கூட்டு

காலை வணக்கம்.
கடவுளைத் தொழுதேன் .

மக்கள் நலம் நாட்டுநலம்

மனநலம் நன்கு அமைய
மே பதினாறு .

தலைவருக்காக ஓட்டு வேண்டாம்.

நல்லோருக்காக ஓட்டு.

பெற்றோரையே ஒதுக்கும் யுகத்தில்

சுயநலசொத்து  சேர்க்கும் தலைவரை ஒதுக்கி
நல்லோரை தேர்ந்தெடுங்கள்.
கணவன் மனைவி தலாக் செய்யும்
யுகத்தில்  தலைவிக்கு பயந்து
கொத்தடிமை  யாக கொள்ளைக்கு
தலை குனிந்து கேள்விக்குறியாக
இருக்க வேண்டுமா ..?

மக்களாட்சி தலைவனாே தலைவியோ கோடிகள் சேர்க்க அல்ல.
அரசன் காலத்தில் அந்தப்புர
அழகிகள் சேர்க்க பல வீரர்கள் மனைவிகள் விதவைக்கோலம்.
மக்களாட்சி காலத்தில்
குடிகார தொழிற்சாலை லாபம்
பெற டாஸ்மாக்கால்
வறுமை விதவைகள்
இருவருமே உள்ளுக்குள்
பொருளாதாரக் கூட்டு.
சிந்திக்க வைக்க 
இறைவன் அருள்
வேண்டும் .
மக்கள் மனதில் நல்லோர் வெற்றி பெற அருள ப்ரார்த்தனைகள் .