சனி, ஜூன் 29, 2013

காந்தி கணக்குபோல் இனி தமிழ் வழக்கு ஆகும்.

கண்ணதாசன் பார்வையில் இன்றைய அரசியல்..?

'கறுப்புப் பணம்’ படத்தில் கண்ணதாசன் எழுதினார்...

கையிலே பணமிருந்தால்

கழுதைகூட அரசனடி!

கைதட்ட ஆளிருந்தால்

காக்கைகூட அழகனடி!

பொய்யிலே நீந்தி வந்தால்

புளுகனெல்லாம் தலைவனடி!





தேர்தல் வெற்றி-தோல்வி 

அரசர்கள்  காலத்தில் போரிட்டனர்.

பல்லாயிரம்  வீரர்கள் மடிந்து 

பலரை அனாதைகள் ஆக்கி ,

விதவைகள்  ஆக்கி ,

அரண்மனையில்  அந்தப்புரத்தில் 

ஆனந்தமாக வாழ்ந்து ,

அரசனை இறைவனின் பிரதி நிதி 

அவர்கள் ஆண்டவனின் மறுபிறவி 

என்றே புகழ்ந்து 

கல்வி என்பதை அனைவருக்கும் வழங்காமல்

ஆண்ட காலங்கள்  .


மக்களை  மடையர் களாக்கி,

புலவர்களை வஞ்சப்புகழ்ச்சி அணியில் பாட வைத்து,

பொற்காசு  அளித்து 

படித்தோரை வறுமையில் வாழ வைத்த காலம் .

அதன் பயனாய் வந்த முகலாயர்காலம்.

ஆங்கிலேயர் காலம்.

யார் வந்தாலும் அவர்கள் மொழி கற்று 

ராவ் பஹாதூர்,சர்,பட்டம் பெற்று 

வாழ்ந்ததோர் கூட்டம்.

அதன் பயன் அவர்களை விரட்டினாலும் 

அவர்கள் மொழியின்றி வாழ முடியா பாரதம்.

அந்த ஆங்கில ஆட்சியில் 

ஏற்பட்ட பெரும் நன்மை 

தேச ஒற்றுமை.

தலித்துகள் ,தாழ்த்தப்பட்டோர்

கல்வி பயில ஓர் வாய்ப்பு.

சீர் திருத்தவாதிகள் 

விதவைகள் மறுமணம்,

ஹரிஜன முன்னேற்றம் 

அனைவருக்கும் சமவாய்ப்பு.

பெண்கள் முன்னேற்றம் .

ஆனால் 

விடுதலைக்குப் பிறகு 

தியாகிகள்  ஆட்சிப்பொறுப்பை ஏற்கவில்லை
.
ஆட்சியில் அமர்ந்தவர்கள் 

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் 

பெரும்பாலான கிராம மக்கள் 

கிராமங்களிலேயே வசிப்பதற்கும் 

முக்கியத்துவம் அளிக்கவில்லை.

வெளிநாட்டினரோடு கலப்பு காதல் மணம் .

அலெக்ஸாண்டர்  காலத்தே தொடங்கினாலும்,

வெளிநாட்டு முதலீடு ,தொழில்வளம் என்று 

நாட்டுத் தொழில்களை 

அழித்து   நகரமயமாக்கி 

பெட்டிகள் பெற்று கோடிகள் சேர்த்து,

வெளிநட்டு வங்கிகளிலும் ,வீடுகளிலும் 

பதுக்கிவைக்கும் அரசியல்வாதிகள்.

அவர்களை அண்டிப் பிழைக்கும்  அதிகாரிகள்.

நேர்மை அதிகாரிகள் நடவடிக்கை 

எடுத்தாலோ  மாறுதல்.

இன்றைய பாரத ஜனநாயகம் 

ஜனநாயகம் என்ற பெயரால் 

ஒரு சர்வாதிகாரம்.

ஆளும் கட்சியினர்

 தவறைக்கேட்டால் வழக்கு .

விமர்சித்தால் வழக்கு.

மாற்றுக்கட்சி  சட்டமன்ற  உறுப்பினர்களை

ஆளும் கட்சிக்கு  ஆசை காட்டி

 இழுக்கும்   இழிவு  வழக்கு.

ஊழலுக்கு  கை கொடுக்கும் கைகள்.

நீதி கேட்டால் வாழ முடியா நிலை.

 மக்கள்  பயந்து பயந்து வாழும் நிலை.

லஞ்சம் ஊழலுக்கென்றே சில துறைகள்.

இப்பொழுது கல்வி அனைவருக்கும் என்றாலும் 

தனியாருக்கு மறைமுக ஆதரவு;

அதற்கு அரசியல்வாதிகள் துவங்கும் கல்வி நிலையங்கள்.

தாய் மொழி வழிக் கல்விகூடங்களில் 

இன்று ஆங்கில வழி  வகுப்புகள்.

தாய் மொழி வழியில்

 படிப்போருக்கு தாழ்வு மனப்பான்மை.

 அந்த வகுப்புகளை ஏளனமாக ,

முட்டாள் மடையர்களாக பார்க்கும்  சமுதாயம்.

இனி ஒரு வழியும் இல்லை

 தாய்  மொழி படிப்போருக்கு.

வேலையில்லை;சோறில்லை;

தேர்தல் நேரத்தில் மட்டும் 

தமிழுக்கு உயிர் கொடுப்போம்.

தமிழ்  என் தாய்.

தமிழ் என் காதலி.

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்  என்று 

ஆட்சிக்கட்டில் அமர்ந்தோர்  ஆட்சியில் 

எங்கே தமிழ் என்றும் தேடும் நிலை.

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி,

அது ஊழலுக்கும், 

 பரிந்துரைக்கும் ,

கைஊட்டுக்கும் 

ஏற்படுத்தும் தனிவழி.

வாழ்க தேர்தல்!வாழ்க ஜனநாயகம்!

வாழ்க தமிழ்;

வளர்க ஆங்கிலம்.

காந்தி கணக்குபோல்,

 இனி தமிழ் வழக்கு ஆகும்.


திங்கள், ஜூன் 24, 2013

ஆண்டவன் அருள் எப்படி மாறுமோ.?

ஆலயங்களின் இன்றைய ஆடம்பரங்கள் 

பரமானந்த ப்ரஹ்மானந்த  நிலையில்  இல்லை.

வணிக  ஸ்தலங்களாக  மா.றும் 

தீர்த்த ஸ்தலங்கள்.

தீர்த்தக் குளங்கள் குப்பை  மேடாகும் காட்சி.

பவித்திரமான  இடங்கள்  இன்று 

உண்மையான பக்தர்களின் உள்ளத்தில் 

ஊமைக்காயங்கள்.

ஆற்றங்கரைகளின் அவலம்  இன்று 

பக்தி ஸ்தலங்கள் சுற்றுலா ஸ்தலங்களாகி 

மல ஜலம்  கழிக்க இடமின்றி 
அது இயற்கை உபாதை என்பதை  அறிந்தும் 
கழிப்பிடம் கட்ட எதிர்க்கும் ஆன்மீக வேடதாரிகள்.
நடிகர் விவேக் ஒரு படத்தில் 
ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்,
ஆனால் கழிப்பிடக்கட்டணம்  ஐந்து ரூபாய்.
நதிகள் ,ஏரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள்.
அதை அனுமதித்து மின்சாரம் ,வங்கிக்கடன் 
அனைத்தும் வழங்கும் அதிகாரிகள்.

கேதா ர்நாத்தின்   இந்த சுயநலக் கேடாளர்களால்

நாடு முழுதும் வெள்ளமாகவோ ,வரட்சியாகவோ மாறும் நிலை.

நான் பல பதிவுகள் பழனி  ஆலயக்கேடுகள்  பற்றி  பதிந்துள்ளேன்.
கடம்பப்பூ மனமில்லை.-அங்கே  ஒரு தெய்வீகம் 
தேய்ந்த நிலை.
பக்தர்கள் நடக்க வழிஇல்லை.
நடைபாதை முழுதும் ஆக்கிரமிப்புகள்.
பேருந்து நிலையம் சிறுநீர் நாற்றம்.
புனித வையாபுரிக் கண்மாய்
 கழிவுநீர் கண்மாயாக 
மாறிய காட்சி.
ஆன்மீகம் என்பது வணிகமாக மாறினால்,
ஆண்டவன்  அருள் எப்படி மாறுமோ.







வியாழன், ஜூன் 20, 2013

இளைஞர்களே!!

இறைவன் படைப்பில் பல அற்புதங்கள்.
இயற்கையின் விந்தைகள் 

இதயத்திற்கு ஒரு இன்பம்.

மனதிற்கு ஒரு அமைதி,

இன்றைய உலகம் எப்படி உள்ளது?

மற்றவர்களுக்காகவே  வாழும் சிலர்.
நாட்டிற்காக வாழும் சிலர்.
தங்கள் குடும்பம் சுற்றத்திற்காக  வாழும் சிலர்.
தங்கள் குடும்பத்திற்கு மட்டும் வாழும் சிலர்.

நேர்மைக்காக  சிலர்,
வாய்மைக்காக சிலர்.
நீதிக்காக சிலர்,
தன் மன நிம்மதிக்காக சிலர்,
தனக்காக சிலர்,
தன் சுய நலத்திற்காக  சிலர்.
தன் பதவிக்காக ,
தன் வாரிசின் பதவிக்காக .
மற்றவர்களின் உழைப்பில் வாழும்  பலர் .

இந்த மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்கள் 


தான் உண்டு ,தன்குடும்பம் உண்டு  என 
என்று இறைவன் அளித்தது போதும் என்று 
கிடைத்ததைக்கொண்டு வாழ்பவர்கள் 
எவ்வித பேராசையும் ,உலக இன்பங்களை 
அனுபவிக்கவேண்டும் என்று ஆசைப்படாதவர்கள்  பலர்.

இந்த பலரின் வாழ்க்கை ,ஜனனம், மரணம்  எல்லாம் 

எப்படி அமைகிறது?

இதைப் புரிந்துகொண்டால்  இறைவனாகலாம் .

இந்த கடும் மந்தணமான  பணி

மனித சக்திக்கு அப்பாற்பட்ட  ஒரு  சக்தி.

அதைத்தான்  இறைவன் என்கிறோம்.

அந்த இறைவன்  ஒருவரே.

ஆனால்  பல மதங்கள்.

மனிதர்களை நெறிப்படுத்த.
மனிதர்கள் மனதில் மனித நேயம் வளர்க்க.
மக்களிடம் உள்ள வேற்றுமைகளை ஒழித்து 

ஒற்றுமை வளர்த்து 
வையகம் வாழ   என்று உணர்த்த.

சஹிப்புத்தன்மை  வளர.

இந்த உயர் தத்துவம் உலகிற்கு உணர்த்தும் ஒரே நாடு 

பரந்த உள்ளம் கொண்ட பாரத நாடு.

விருந்தினர்களை தெய்வமாக  போற்றும் நாடு .


राम एक है,रहीम एक है,
मज़हब नहीं सिखाता आपस में वैर रखना 
ईश्वर अल्ला तेरे नाम सबको संमति दे भगवान!
हिन्दू मुस्लिम सीख ईसाई ,आपस में है भाई -भाई.

மஹா கவி பாரதி, கவிஞர் கண்ணதாசன் 

போன்றோர் அனைத்து மதங்களையும்  புகழ்ந்து பாடினர்.

இதனால் தான் நாடு ஊழல்கள் வளர்ந்தாலும் 

நாடும் வளர்ந்து  வருகிறது.

இளைஞர்கள்  அறிவுத்திறனைக்கண்டு  

அகிலமும் புகழ்கிறது.

பாரதம் வாழ்க! வையகம் வாழ்க!
வையகம் ஒரு குடும்பம்.

ஆகையால் தான் விவேகானந்தர் ,

இந்திய இளைஞர்களுக்கு 

ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இளைஞர்களே!!

இந்தியாவின் எதிர்காலம்  உங்கள் கையில்.

ஜய்   ஹிந்த்!

















புதன், ஜூன் 19, 2013

என்று தணியும் நேர்மையின் தாகம் .

இந்திய அரசியல்.

தடி எடுத்தவன் தண்டல் காரன்.

இன்று பணம் என்ற தடி கொண்டவன் 

அரசியல்வாதி ;மக்கள் பிரதிநிதி;

மக்கள் வரிப்பணம் அதையே இலவசமாக 

வழங்கி வாக்குப் பெரும் அரசியல் தந்திரம்;

அம்மா உணவகம்  நல்ல திட்டம்;

ஆலயங்களில் அன்னதானம் உயரிய திட்டம்.

கல்விக்கொடங்களில் இலவசங்ககள்;

அனைத்தும் உயரிய திட்டங்கள்;

பாராட்டப்பட வேண்டியவைகள்;
அரிசிகார்டுக்கு  இலவசம் ;
சர்க்கரை  கார்டுக்கு கிடையாது.

ஒய்வு பெற்ற முதியோர்கள்,
வருமானம் இழந்தோர் 
எத்தனையோ பேர் 
அன்றைய சூழலில் சர்க்கரை அட்டையாக மாற்றியோர்,

அன்றைய அரிசி  அட்டை,
இன்று  பணவசதி கொண்டோரிடம்,

இலவசங்கள் ஏழைகளை சென்றடைவதில் எத்தனையோ 

ஊழல்கள்; சிக்கல்கள்;

ஒரே வீட்டிற்கு இரண்டு  மூன்று இலவசங்கள்;

இதற்கு ஒரு விசாரணை குழு போட்டால் 

இலவச விநியோக முறைகேடுகள்;

விசாரணைக் குழுக்கள் அறிக்கை  வெளிவராது;
சொத்துக்குவிப்பு வழக்குகள் போல்;

பல விசாரணைக்குழுக்கள் ,பல அறிக்கைகள் 

மீண்டும் கருணை அல்லது ஜெயா;
வேறு மாற்று வழியில்லை 
தமிழக மக்களுக்கு;

என்று ஏற்படுமோ விழிப்புணர்வு;
என் காலம் முடியும் நேரம்;
விழி த்து க்   கொள்ளுமா 

இளைய சமுதாயம்;

பணத்திற்கும் ,இலவசத்திற்கும் 

விலைபோகுமா ,
விலைமதிப்பில்லா வாக்குரிமை.

பாரதி இருந்தால் பாடி இருப்பான்.

என்று தணியும் இந்த இலவச மோகம்,

என்று தணியும் நேர்மையின் தாகம் .



செவ்வாய், ஜூன் 18, 2013


அன்னையர் தினம், சுவைக்கு ,அன்பிற்கென்றால் ,

அப்பாக்கள் தினம் ,அறிவுக்கு,ஆஸ்திக்கு.

அப்பா மட்டும் பொருளாதாரம் என்ற
 நிலை மாறிவரும் சமுதாயம்.
அன்னை யும்  பிதாவும் சேர்ந்து
சம்பாதிப்பதால் பொருளாதார தன்னிறைவு.

ஆனால், மன நிறைவு?

இது என்னைப்போன்ற ஒய்வு பெற்றோரின் புலம்பல்.

ஆனால் ,அனுபவத்தில் பார்த்தால்

எவ்வளவு முன்னேற்றம்.

குழந்தைகளின் திறமைகள்  வெளிப்பட

பொருளாதாரம் தன்னிறைவு ?

அப்பாவின் வருமானம் ,
போதும் என்றால் போதும்.

ஆனால் பெற்ற குழந்தைகளைப் பள்ளிக்கு மட்டும்

அனுப்பினால் போதுமா?

ஓவியம்,இசை,விளையாட்டு,இசைக்கருவிகள்,கராட்டே ,

இன்னும் எத்தனையோ புதைந்து கிடைக்கும் திறமைகளை

வெளிப்படுத்த  தனிப்பயிற்சி. கட்டணம்.

இருவர் சம்பாதிப்பதால்  குழந்தைகள் தங்கள்

திறமையை வளர்த்துக்கொள்ள முடிகிறது.

அதே சமயம் தனிப்பயிற்சி கட்டணம் கட்டி

நேரத்திற்கு குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்ப முடியாமல்

குழந்தைகளின் பயிற்சி அரைகுறை யாவதும் உண்டு.

குழந்தைகளின் ஆர்வம் குறைவதும் உண்டு.

பெற்றோர்கள் சற்றும் அயராமல்,ஓய்வெடுக்காமல் இருக்கவேண்டும்.

இது எவ்வளவு  தூரம் சாத்தியமாகிறது என்றால்......

அது கேள்விக்குறி தான்.








இச்சா சக்தி ,ஞான சக்தி இரண்டும் இருந்தால் தான் க்ரியா சக்தி.

ஆன்மிகம் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை உணரச்செய்வது.

அது எல்லோரின் வாழ்க்கையிலும் எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது.


சிலர் தன் ஆணவத்தால் தன்  ஆற்றல் வெளிப்படும் வரை உணர்வதில்லை.
தனிமனிதன் அனைத்தும் தன் முயற்சியால் முழு வெற்றிபெறும் என்றே நினைக்கிறான்.

முயற்சி-முயற்சி-முயற்சி-
- என்னதான் முயற்சி எடுத்தாலும் முதல் பரிசு  ஒருவருக்கே.

அனைவரும் முதல்வராக முடியாது.

அனைவரும் குடியரசுத் தலைவராக முடியாது.

முயற்சி எடுப்போர் அனைவரும் சிறந்த பாடகராக முடியாது.

பணம் படைத்தோர் அனைவரும் தான் நினைத்ததை  சாதிக்க முடியாது.

சாதித்தவர்கள் அனைவரும்  பணம் படைத்தவர்களாக இருக்க முடியாது.


அறிவும் திறமையும் இருந்தாலும்  அனைவரும் புகழும் /ஆதரிக்கும் மகானாக
முடியாது.

முதுகலை/ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெற்றாலும்  வரகவிகள் போல்
கதையோ /கட்டுரையோ/கவிதையோ எழுத முடியாது.

பட்டம்,பதவி,புகழ்  முயற்சியால் கிடைத்தாலும் அதற்கு இறைவனின் கருணை வேண்டும்.

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு,பாடம் படிக்காத மேதைகளும்

பாரினில் உண்டு. என்ற திரைப்பட பாடல்.

ஆலயங்கள் புதிது புதிதாக தோன்றினாலும் ,சில ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம்  அலை மோதுகிறது.

சில ஆலயங்களுக்குச் சென்றால்,மீண்டும் மீண்டும் செல்லும் உணர்வு மேலோங்குகிறது.
சில ஆலயங்களுக்கு செல்லவே மனம் ஈடுபடுவதில்லை.
அப்பொழுது பக்தர்களுக்குள் வேறுபாடு.
விநாயக பக்தர்கள்,காளிதாஸ்,காயத்ரி ,
சிவதாஸ்,ஐயப்ப பக்தர்கள்,முருக பக்தர்கள்,ராமதாஸ்,கண்ணதாஸ் ,சக்தி உபாசகர்கள்,ஹனுமான்  உபாசகர்கள்,

இவைகளைத்தவிர  தேவதூதர்கள்,ஸ்வாமிஜீக்கள், ஆஷ்ரமங்கள் ,மடாலயங்கள்.பாபாக்கள்.அகோரர்கள்,சித்தர்கள்.

   இத்தனை அலௌகீக  சிந்தனை தூண்டுவோர்கள் ,சுய விழிப்புணர்கள்

ஏற்பட்டாலும்  லௌகீக மாயை/சைத்தான்/சாத்தான்  மனிதர்களை
மிகவும் கவர்ந்து ஆட்டிவைக்கிறது.

இதை உணரும் வரை மனிதர்களுக்கு நிம்மதியில்லை.

ஊழல் ,லஞ்சம்,சுயநலம் ,மோகம் முதலியவை  ஒழிய வழியுமில்லை.

மன அமைதிக்கு,மகிழ்ச்சிக்கு,நிம்மதிக்கு ஒரே வழி  மனத்தூய்மை யான

பவித்திரமான  பக்தி.  ஒருநாள் வாழ்நாளில் உணர்வ தே ஆன்மிகம்.

ஆகையால் தான் ஆன்மிகம் பலரின் புகலிடமாக விளங்குகிறது.

பண ஆசை பல   ஆன்மீக  ஆண்டவன் அருள் பெற்றோரையும் பொய்யர்களாக்கி  அவப்பெயர் ஏற்படுத்துகிறது.

அதனால் தான்  மக்கள் சண்டை-சச்சரவு,துன்பம் போன்றவைகளை அனுபவிக்கின்றனர்.

ஆசையே துன்பத்திக்குக் காரணம் என்பதைவிட பேராசையே காரமாகிறது.

இச்சா சக்தி ,ஞான சக்தி இரண்டும் இருந்தால் தான் க்ரியா சக்தி.

ஆனால் இந்த இச்சை  பேராசையாக,புலனடக்கம் இன்றி அதிகரித்தல் துன்பமே மிஞ்சும்.








வியாழன், ஜூன் 13, 2013

ஆரோக்யமாக வாழலாம்.

இறைவனை வழிபடும்போது 

நாம் சுயநலத்திற்காக  வழிபடலாமா?

பொது நலத்திற்காக வழிபடலாமா?

நமது   தேவைகளுக்காக வழிபடலாமா?

பொதுநலப் பணிகளுக்காக?

செல்வம் வேண்டும்  என்பதற்காக ?

இவை எல்லாம் நம் முயற்சியில் 

சாதிக்கக் கூடியவை.

பின்னர்  வழிபாடு?

தெய்வ சக்திபெற.

இறைவன் படைத்த உடல் 

நோய் -நொடியின்றி 

ஆரோக்யமாக வாழ.

மனது சஞ்சலமின்றி வாழ.

மன நிறைவு அமைதியுடன் வாழ.

மனதில் தூய எண்ணங்கள், 
உயர் சிந்தனைகள்  வளர.

மன ஒருமைப்பாடு இருந்தால் 

உயர்ந்த நோக்கங்கள் இருந்தால்,

தீர்க்க ஆயுளுடன் ஆரோக்ய உடலுடன்  வாழலாம்.

கவலை பொறாமை என்பதில் 
வலை உள்ளத்து.
ஆமை உள்ளது.

வலையில்  சிக்கினால் தப்ப முடியுமா?

ஆமை மெதுவாக செல்லும் ,
பொறாமை,பேராசை இரண்டும் 
மெதுவாக  நம்மை கவலை என்ற வலையில் 
சிக்கவைத்துவிடும்.

அதிலிருந்து தப்புவது இயலாத காரியும்.

சிந்தா ,சிதா  என்றவர்த்தைகள்.
சிந்தா என்றால்  கவலை.
சிதா  என்றால் சிதை.
சிதை உடனே எரித்துவிடும்.
கவலை தினந்தோறும் .
இறந்த பின் சிதை.
உயிருடன் அன்றாடம் கொள்வது கவலை.
இதிலிருந்து  மனிதன் தப்பிக்க 
ஆழ்மனதில் முழு விசுவாசத்துடன் 

பக்தி என்ற வலையை வீச வேண்டும்.

நல்ல உயர்ந்த எண்ணங்களுக்கு முதலிடம் 
தந்து 
தீய எண்ணங்களான 
ஆசை,ஆணவம்,பொறமை,கோபம் 
விட்டு விட வேண்டும்,

काम ,क्रोध,मद,लोभ,,जब मन में लगे खान,
तब पंडित मूर्खो  एक सामान..

இந்த குணங்கள் மனதில் குடிகொண்டால் 

படித்த பண்டிதர்களும் ,முட்டாளும் சமமே என்றார் துளசிதாசர்.

வள்ளுவர் 

அறத்தைப் பற்றி கூறும்போது 

அழுக்காறு,அவா,வெகுளி, இன்னா சொல்  இவை நான்கும் 
இழுக்கா இ யன்ற தறம்   என்றார்.
இன்னா சொல்  என்பது
 மற்றவர்களுக்கு தீங்கி விளைவிக்கும் சொற்கள்.
 அதன் விளைவு கவலையில் ஆழ்த்திவிடும்..

 ஆகையால் இவ்வுலகக் கவலையிலிருந்து  விடுபட 

பகவானின் தியானம் அவசியம்.

உலகில் வாழும் நாம் அழியும் உலகம், இவ்வுடல் என்றறிந்தும்,

சுயனலத்தால்  மற்றவர்களுக்கு இன்னல் தரக்கூடாது.

இவ்வுலகியல் இன்பங்களில் பட்டும் படாமலும் 
ஒட்டியும் ஒட்டாமலும் 
ஆண்டவன் ,இறைவன் மேல்  

பக்தி ,சிரத்தை கொண்டு வாழ்ந்தால் 
ஆரோக்யமாக வாழலாம்.


செவ்வாய், ஜூன் 11, 2013

இப்பள்ளிகள் டாஸ்மார்க் மதுக்கடைகள் போல் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க வில்லை.

பாரத  நாடு ,பழம் பெரும் நாடு;
இன்னினைவகற்றாதீர் --என்றார் 
மஹா கவி பாரதி.
விடுதலைக்கு முன்பே முழக்க மிட்ட பாரதி 
ஆடுவோமே பள்ளுபாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று  ஆடுவோமே என்றான்.

அவரின் தேசீய ஒருமைப்பாடு பாடல் 
வெள்ளிப்பனி மலை மீது உலாவுவோம்,

தேசீய நதி இணைப்புச் செய்தி தருகின்றது.

ஆனால் இன்று காவிரி நதியின் நீருக்காக 

பெரும் போராட்டம்.

தேசீய நதி நீர் திட்டம் வலியுறுத்தும் போராட்டம் இல்லை.

முதலில் ஊழலற்ற தேசீயக் கட்சிகள் இல்லை.

காங்கிரெஸ் ,பாரதீய ஜனதா  இரண்டுமே ஆட்சி பீடத்தில் 

இருந்தாலும் இரண்டுமே களங்கமற்ற கட்சி அல்ல.

ஒவ்வொரு மாநிலக்கட்சியும் 

மம்தா வானாலும் ,மாயாவானாலும் ,ஜெயா வானாலும் 
ஊழலற்றவர்கள் என்று பாராட்டுப் பெறவில்லை.

ஊழல் என்பது அரசியல் வாதிகள் ஊழல் என்றால் கோடிக்கணக்கில் 

என்றால் தான் ஊழல். இலக்ஷக் கணக்கு என்பது ஊழலளல்ல என்று 
ஒரு மத்திய அமைச்சர் விளக்கயுள்ளார்.

அரசியல் வாதிகளின் நிலா ஆக்கிரமிப்புகள்,
மலை மடுவான  உண்மைக் கதைகள்
கற்பனைக்கதைகளாக மாறிவருகின்றன.

நாட்டின் முன்னேற்றம் என்பதில் இந்த 

சுயநலம் ,தேர்தல் ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்கள்,

கோடிக்கணக்கில் தேர்தலில் வெற்றிபெற சிலவு செய்யும் 

அரசியல் வாதிகள்,

கல்வி வாணிகம் ,
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பொறியியல் கல்லூரி ,
மருத்துவக் கல்லூரி என்ற நிலைமாறி 

மழலை பள்ளிமுதல்  பெருமுதலீட்டளர்களுக்கே

என்ற நிலை மாற்றும் அரசின் ஆங்கில மோகக் கல்வி .

பெட்டிக்கடை கூடாது என்பதுபோல் சிறு பள்ளிக்கூடங்கள் கூடாது 

என ஏழை ,நடுத்தர மக்கள் கல்வி நிறுவனங்கள் 
நடத்தக் கூடாது  என்று திட்டமிடும் அரசாங்கம்.
கல்வி அதிகாரிகள்.

பொதுமக்கள் விரும்பி ஏற்கும் பள்ளிகளை மூட உத்தரவு.

எத்தனையோ அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 
அடிப்படைவசதி இல்லை.
மக்களுக்கு கல்விபயில சுதந்திரம் வேண்டும்.
அதை பொருளாதரத்திற்கு முக்கியத்துவம் அளித்து
இடவசதி இல்லை என்று பலர் வயிற்றில் அடிப்பதில் 

சற்று பொறுமை வேண்டும்.
மாணவர்கள் வரவில்லை என்றால் பள்ளி மூடப்படும்.
எத்தனை நகராட்சி,மாநகராட்சி பள்ளிகள் தானாகவே மூடப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளும் தரமில்லை என்றால் 
அதுவாகவே மூடப்படும்.
இதை நினைவில் கொண்டு மூடப்படும் பள்ளிகளில் 
மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் 
மூடக்கூடாது.
சிறு பள்ளிகளும் நடுத்தரவருவாய் 
உள்ள ஏழை,எளிய மக்களுக்குத் தேவை.
பெட்டிக்கடைகள் கூடாது என்று சொல்ல முடியாது.

அவ்வாறே பலனளிக்கும் சிறு பள்ளிகள் இருக்கவேண்டும்.
அரசாங்கத்திற்கு தனியார் பள்ளிகளால் 
கோடிக்கணக்கில் பணம் மிச்சம்.

இப்பள்ளிகள் டாஸ்மார்க் மதுக்கடைகள் போல் 
சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க வில்லை.

ஆழ்ந்து சிந்தித்தால் இப்பள்ளிகளின் தியாகமான ஆசிரியர்கள்,
நிர்வாகிகளின் உண்மைத் தொண்டு புரியம்.
அரசே!ஏழை எளிய நடுத்தர மக்களை வாழ வைக்கும் 
பள்ளிகளை மூடவேண்டாம்.
பெற்றோர்கள் பொறுப்பில் கல்வி இருக்கட்டும்.









திங்கள், ஜூன் 10, 2013

ஒரு யுகாவதர புருஷனைப் புவிக்கு அனுப்பு.

  நாட்டின் சுதந்திரம்
 தன்நல மற்ற தியாகிகளால் 
கிடைத்தது.
தன நல்லுயிர்,
உற்றார் உறவினர் 
மேல் கொண்ட பாசம் 
கட்டிய மனைவியின் மோகம் 
பெற்றெடுத்த குழந்தை 
நேரடியாக கொஞ்ச முடியா நிலை 
அனைத்துயும் துறந்து 
நாடே பெரிதென 
நாட்டுப்பற்று காரணமாக 
தேசபக்திக்காக 
துறவறம் பூண்டு ,
சிறைச்சாலைக் கொடுமைகள் ,
சுதந்திரம் காணாமலே 
உயிர் துறந்த தியாகிகள்.

ஆனால் ,விடுதலைக்குப்பின் 

நாடு முன்னேற்றம் அடைந்தாலும்,

ஏழைகளும் ,நடுத்தர மக்களும் 

சுகம் பெறவில்லை.

வீடுகட்ட அனுமதி,வங்கிக்கடன்,

ஆனால் கட்டிய வீடுகளுக்கு 

செல்ல நல்ல சாலைகள் கிடையாது.

கழிவுநீர் வசதிகள் கிடையாது,

குடிநீர் வசதிகள் கிடையாது.

சமாதிகள் புதுப்பிக்க,
சிலைகள் எடுக்க ,
வளைவுகள் இடிக்க,மீண்டும் தாங்கி வைக்க 

என பல கோடி ரூபாய்கள்.
இன்று ஒரு சிலைக்கு ௧௦௦ கோடி ரூபாய்.

கட்டிய வீட்டிற்குச் செல்ல சாலைகள் இல்லை.
சாக்கடை நீர் செல்ல வசதி இல்லை.
குடிநீர் வசதி இல்லை.

ஆனால் இது அனைத்திற்கும் வரி மட்டும் வசூல் .

அப்பணம் ஆட்சியாளர் ,ஆளும் கட்சி மகிழ்ச்சிக்கே.

விரிவாக்கம் செய்யப்பட்ட புது நகர்ப் பகுதிக்கு 

அடிப்படை வசதி செய்யா அரசுகள்,

நிரந்தர  முதல்வர்/பிரதமர்  என்ற கனவுகள் 

பலித்தால் ஆண்டவன்
 இருப்பது அகிலத்தில் உண்மையா?
கோடிக்கணக்கில் ஊழல் செய்து ,
சுகபோக வாழ்க்கை.
இறைவா! நீ இருப்பதை நிரூபிக்க 

ஊழல் வாதிகளுக்கு ஒரு முடிவைக் கொடு.

ஒரு யுகாவதர புருஷனைப் புவிக்கு அனுப்பு.






ஞாயிறு, ஜூன் 09, 2013



மனிதனின் ஆற்றல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகளிடையே 

விருப்பங்கள்,வெறுப்புகள்,எண்ணங்கள்,அறிவாற்றல்,

வேறு படுகின்றன.

உணவு விஷயத்திலும் அப்படியே.

ஒரு குழந்தைக்கு தோசை என்றால் ஒருகுழந்தைக்கு ஆடை.

ஆடை விஷயத்திலும் அப்படியே.

வாகனம் ,திரைப்பட நாயகன் ,நாயகி,விளையாட்டு வீரர்கள் 

என அனைத்திலுமே கருத்து வேறுபாடுகள்.

இதற்கும் மேலே சுயநல எண்ணங்கள்.

போட்டி பொறாமைகள்..

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.

இதானால் அண்ணன் தம்பிகளிடையே பெரும் விரிசல்.

இருபது முப்பது வருடங்களுக்கு முன் மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் 

ஒருவர் வருமானம் அதிகமாக இருக்கும்.

பலருக்கு வருமானமே இருக்காது.

ஒருவரின் வருமானத்தில் அனைவரும் உண்டு ,உடுத்தி 

வறுமையிலும் தியாகத்துடன் வாழ்ந்த காலம்..

பாசத்துடன் குடும்பத்தில் பெரியவர்கள் சொல்லை கண் மூடித்தனமாக 
மதித்த காலம்.
வீட்டில் உள்ள பெண்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு 

வறுமையிலும் ,பொருளாதார ஏற்றத்  தாழ்விலும் 

ஒற்றுமையாக இருந்தகாலம்.

ஆனால் இன்று தனிக் குடித்தனங்கள்,

தனி வாழ்க்கை,
முதியோர் இல்லங்கள்,

இருப்பினும் 
தம்பதியர்களிடம் பிணக்கு.
தாய் தந்தையர்கள் நமக்கு எதுவும் பெரிதாக செய்யவில்லை 
என்ற குற்றச்சாட்டு.முயற்சி எடுக்கவில்லை .
வீடில்லை வாசலில்லை  ,
என்னை சரியாக படிக்கவைக்கவில்லை ,
சொத்து இல்லை .
கல்லூரிக்கு செல்லும்போது கைச் செலவிற்கு பணம் தரவில்லை.
அம்மாவிற்கு அது செய்யவில்லை.
எங்கும் அழைத்துச் செல்லவில்லை.
இதை எல்லாம் ஒய்வு பெற்ற முதியவர்கள் 
சந்திக்கும் போது பேசிக் கொள்ளும் விஷயங்கள்.

இதில் அதிகம் வருத்தம் தரும் விஷயம்,

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளும்

நிம்மதியாக இல்லை என்பதுதான்.




சனி, ஜூன் 08, 2013

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

இன்று காலை .

இறைவன்  பற்றிய எண்ணம்.

இல்லை என்போர் வாதம்.

இறைவன்  ஏன் இல்லை என்ற வாதத்திற்குள்?

முச்சந்தியில்  பெரும் கூட்டம் கூடும் இடங்களில் 

இல்லை இல்லை கடவுள் இல்லவே இல்லை.

அதற்கு அருகிலேயே ஆலயம் .

ஆண்டவன்  தன்  சக்தியைக் காட்டும் 

நாகாத்தம்மன் ஆலய.ம்

ராயப்பேட்டை வே.மு.தெரு நடைபாதைக்கோயில்.

அருகில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற சிலை.

அதற்கு அருகில் இராமலிங்க அடிகளார்.

நடைபாதைக்கோயில்  சனீஸ்வரர்,தக்ஷிணாமூர்த்தி
நாகாத்தம்மன்.

பக்தர்கள் கூட்டம் ;
அம்மனின் மேல் சிரத்தை,பக்தி,
அங்கு புதிதாக வாகனங்கள் வாங்குவோர்,
சுப காரியங்கள் செய்வோர் என்ற பெரும் கூட்டம் 
அன்றாடம் அலைபாயும் பக்தர்கள்.
உண்டியல் வசூல் அரசாங்கமே ஆலயத்தை 
ஏற்கும் அளவிற்கு.

அருகில் தி.க. கூட்டம்.
இறைவன் இல்லை என்ற ஆபாசப் பேச்சு.
அதை காதில்வாங்காமல்   
ஆலயத்தின் பூஜைகள்.

ஹிந்துக்கள் எவ்வளவு  பொறுமை யும்
 சாஹிப்புத்தன்மையும் 
 உடையவர்கள்.

பகுத்தறிவுப் பிரசாரம் நடிகர்கள் கட்டௌட்டிற்கு

பாலாபிஷேகம் செய்யும் அளவிற்குத்தான் 

இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளது.

கல்லுக்கு அபிஷேகத்தை எதிற்கும் நாத்திகவாதிகள்,

நடிகர்கள் கட்டௌட்டிற்கு  பாலாபிஷேகம் செய்வதை 

எதிர்க்காதது ஏன்?

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

பலகோடி இந்துக்கள் மனம் புண் படும் நாத்திக பிரசாரம் 

நடிகைக்கு கோயில் கட்டும் அளவிற்கு 

பக்திமயமாகி உள்ளது  என்பது 

அவர்களின் நாத்திகப் பிரசாரம் வீண் 

கடவுள் உள்ளார் என்பதற்கு 

அடிப்படையாக உள்ளது.







வெள்ளி, ஜூன் 07, 2013



அன்புக்கு ,ஆற்றலுக்கு,இன்பத்திற்கு ,ஈகைக்கு ,எங்கும் ஏற்றத்திற்கு ,

ஐயம் இல்லா ஒப்பில்லா ,ஓங்கும் புகழுக்கு ,

கடும் முயற்சிக்கு  இறைவனின்  கடைக்கண் பார்வை ,

க்ருபா கடாக்ஷம் ,பூர்வஜன்ம இந்த ஜன்ம நல்வினைப்பயனே

மூலகாரணமாகும்..

இவ்வுலகில்  தோன்றிய எத்தனை பேர் தங்கள் விரும்பிய வாழ்க்கையை அடைந்துள்ளனர்.?
 எத்தனை பேர் தங்கள் குறிக்கோளில் வெற்றிபெற்றுள்ளனர்.?

எத்தனை பேருக்கு தங்கள்  விரும்பாமலேயே  பதவியும் புகழும் கிடைக்கிறது?

புகழைத் தேடி அலைந்தாலும் கிடைக்காதவர்கள் எத்தனை பேர்?

இந்த சூக்ஷமத்தை அறியும்  ஞானிகள்  எங்கே ?


இறைவன் எங்கே?

இறைவன்  எங்கே?

ஒவ்வொருவருக்கும் 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட

 ஒன்று 

இவ்வுலகை ஆட்டிப்படைப்பதை 

உணர்ந்தே ஆகவேண்டிய நிலை ஏற்படுகிறது.

மனிதன் தனக்கு இருக்கும் தனித்திறமையால் 

வெற்றி அடைந்து  கொண்டே இருந்தால் 

தனக்கு நிகர் தானே என்று  செருக்கடைகிறான்.

அந்நிலையில்  ஆண்டவனை  மறந்துவிடுகிறான்.

அப்படிப்பட்ட நிலை இப்புவியில் 

எவருக்கேனும் இருந்துள்ளதா?

 இல்லையே?

இந்த இறைவன் எங்கே?

அவனைக்காண முடியாது.

நமக்கு இன்னல் நேரும் போது

நமக்கு அறிமுகமாகாத ஒருவர் 

உதவி செய்வார்.

அவருக்கும் நமக்கும் 

எவ்வித சம்பந்தமும் இருக்காது.

நாம் அவரிடம் 

தெய்வம்போல் எங்களுக்கு

 உதவி செய்துள்ளீர்கள் என்போம்.

சிலரை எனக்கு அவர்தான் தெய்வம் என்போம்.
நமக்கு எத்தனையோ 
அறிமுகம் ஆனவர்கள் இருந்தாலும் 

முன்பின் தெரியாதவர்கள் 
எதிர்பாராத இடத்தில் செய்யும் உதவி 

அங்குதான் இறைவன் நமக்கு உதவி யுள்ளார்.


 அதைத்தான்  கடவுள் மனித உருவத்தால்  வந்துள்ளார் 

என்கிறோம்.

நாம் குழப்பத்தில் இருக்கும்போது 

முன்பின் தெரியாதவர்கள் நம் 

குழப்பத்தைத் தீர்க்கும் படி நம் காதில் 
விழும்படி பேசிக்கொண்டு செலவர்.

அது நம் குழப்பம் தீர 





  

வியாழன், ஜூன் 06, 2013

பணம் இருந்தும் பொருளற்று ஆகிவிடும்.

      நண்பர்களே ! உற்றார் -உறவினர்களே,


நமது புராணக்கதைகள் ,

நட்புக்கு இலக்கணமாகவும் ,

பங்காளிப்பகையால் ,ஏற்படும்  அழிவையும்

நம்பிக்கை துரோகத்தையும் காட்டுகின்றன.

பொறாமை,வெறுப்பு,பாரபட்சம் ,ஆணவம்,காமம் ,மோசடி.

 ஞானம்  இருந்தும்  செய்து போராடும் குணம்.

அஞ்ஞான லௌகீக  மோகத்தால்,

அழியும் உலகில் போராட்டம். அதனால்

மன அழுத்தம் .கொலைவெறி.

 இரக்க மற்ற தன்மை.

பதவி மோகத்தால் தன சகோதரர்களையே

அழிக்கும்  வரலாற்று நிகழச்சிகள்,

வாலி,சுக்ரீவ் ,ராவணன்,விபீஷணன் ,

சமுதாய கௌரவத்தால் பெற்ற குழந்தையை

ஆற்றில் வீசிய   குந்தி,

குளக்கரையில் விட்டுச்சென்ற கபீர்தாசரின் அன்னை,

மாற்றான் மனைவியின் மோகத்தால்

அவனைக் கொன்று மனைவியை கவர்ந்த கதை,

அகலிகை ஏமாந்து கல்லான கதை.

கோபத்தால் தவ வலிமை  இழக்கும் ரிஷிகள்.

அனைத்தும் கற்பிக்கும் தாய்மொழி வழி  கல்வி

இன்று வேண்டாம் என்ற பெரும்பான்மை

விளைவு ஆன்மீக  நாட்டில்

உணர்த்தும்  நேர்மை,சத்தியம்,இரக்கம்,

கடமை, தானம்,பரோபகாரம்,தியாகம்

நியாயம்  காணா நிலை/குறைந்த நிலை.

பக்தி பெருகினாலும் ,

ஆலயங்கள் அதிகரித்தாலும்

ஆன்மீகப் பிரசாரகர்கள் ,துறவிகள்,

அதிகரித்தாலும் ,

ஊழல் தலைவர்களால்


சுயநல அரசியல்வாதிகளால்,

பணம் படைத்தோரால்,

சுயநல அதிகாரிகளால்,

நாட்டில் கொலைகள்,

கற்பழிப்புகள்,

தற்கொலைகள்,

கையூட்டுகள்,

விளைநிலங்கள் வீடுகளாகும் நிலை.

விளைவு மழை இன்மை.

விலைவாசி உயர்வு.

எத்தனையோ  கஷ்டங்கள்.

இருப்பினும் ஆன்மீக சக்தியால் அனைத்தும்

வெட்ட வெளிச்சமாகும் நிலை.

பாரதத்தைக் காக்கும்  பார்புகழும்

ஆன்மிகம்  விவேகானந்தர் காட்டிய வழி.

அந்த ஆன்மீக தெய்வ பலத்தால் ,


இன்றும் பார்வியக்க வளரும் பாரதம்.

இன்று எந்தக் கதைக் கருவும்  அந்த புராண இதிகாசக்

கதைகளால் உருவானதே.

அக்கதைகளில் காதலும் உண்டு.

காம வெறியர்களும் உண்டு.

சிசுக்கொலை களும் உண்டு.

இனத்  துரோகிகளும் உண்டு.

தேச துரோகிகளும் உண்டு.

அல்லிராஜ்யமும் உண்டு.(ஓரினச் சேர்க்கை}

விந்து பரிமாற்றமும் உண்டு.

விருந்து பரிமாற்றமும் உண்டு.

இந்த பாரதக் கதைகள்

இன்றைய  கல்வி முறையில்

இன்றியமையாத அங்கமாகும்.

ஆனால்,பொருளாதாரம்  ஆங்கிலத்தையும்

ஆங்கிலக்கல்விமுறையையும்  ஆதரிக்கிறது.

அவற்றுக்குமேல்  இந்த ஆன்மீகக் கல்வி

முக்கியத்துவம் பெற்றால்

இன்றைய இளைய தலை முறை

சமுதாயம் அமைதிபெறும்.

அல்லது நல்லோளுக்கமில்லா

பொருளில்லா  பணக்கார வாழ்க்கை

பணம்  இருந்தும் பொருளற்று ஆகிவிடும்.





















சனி, ஜூன் 01, 2013

பழையன கழிதல் ,புதியன புகுதல்,

கூட்டுக் குடும்பம்  ஆனந்தமே!-ஆனால்

இன்றைய இளம் தலை முறையினர் ,

கல்வியில் முதுகலைப்பட்டம்.

ஆனால் , பொறுமை என்பதே 

மழலையர்    பட்டம்.

பிடிவாதம் ,படித்த செருக்கு 

வேலை நல்ல ஊதியம்.

உறவினர்களுக்கு உதவுவதை விட 

பெற்றோர்களுக்கு சிலவு செய்வதை விட ,

சொந்த தம்பி தங்கைக்கு உதவு வதைவிட,

ஐந்து நக்ஷத்ர ஹோட்டல் ,

ரிசார்ட்  ஆடம்பர சிலவில் 

ஆனந்தம்.

தனித்து வாழ்ந்து  தன குழந்தைகளை ,

மழலையர் காப்பகத்தில் மாதம் ஐயாயிரம் 

சிலவளித்து     ,பெற்றோர் உறவினர்களை 

அரவணைக்காமல் ,தனி ஆனந்தம்.

விளைவு   காதல் ,விவாகரத்து, பிரிந்து  வாழ்தல்,

புரியாமல் வாழ்தல்  இன்றைய இளம் தலைமுறையினரின் 

வாழ்க்கை வினோதம்.

அனைவருக்கும் வேலை,ஆணும் பெண்ணும் 

சம்பாதிப்பதால் வருமானத்திற்கு குறைவில்லை.

சந்தோஷம் என்பது தான் வெளிவேஷம்.

வீடு பெரிது.உள்ளத்தில் ஒரு வெற்றிடம்.

அனைத்தும் இருந்தும் 

no  peace  of mind  தான்.

நிமிடத்திற்கு  ஒரு சண்டை,

ஒரு நொடியில் சமாதானம் 

இல்லையேல் தனித்து பிரிந்த வாழ்க்கை.

அல்லது மறுமணம்.//.விவாகரத்து.

பொருந்தாக் காதல்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.

என்ற விபரீதம்.

கல்வி அறிவு பெருகுவததென்பதில் 

பண்பாடும்  காக்கப்படவேண்டும்.

பொறுமை,தியாகம் ,குடும்பபாசம்,

இல்லா உயர்கல்வி 

தேசபக்திக்கும் ஊறுவிளைவிக்கும்.

இளைய தலைமுறையினர் பிரிந்து வாழும் சூழல் 

இயற்கையாகவே அமைந்துவிட்ட நிலை.

அண்ணன்,தம்பி வெவேறு நாட்டில்,

பெற்றோர் பாடு பெரும்பாடு.

என் குழந்தைகள் வெளிநாட்டில்,

வீடுகள் இருக்கின்றன.

விருந்தினர்கள் வருவதில்லை.

விடுமுறை இல்லை.

ஓரிருநாட்கள் விடுமுறை 

ஓய்வுக்காக.

இன்றைய தலை முறையினருக்கு 

வரப்பிரசாதம் 

வலை தளம். மின் அஞ்சல் 

சந்திப்பு ;பேச்சுவார்த்தைகள்.

அதற்கும் நேரம் வேண்டும்.

இந்தியா போன்ற நாட்டில் 

மின் தட்டுப்பாடு,வலைதள சேவை 

இல்லாத ஊர்கள்.

மடிகணினி இலவசம்.

ஆனால் அதை பயன்படுத்த முடியா நிலை.

இருப்பினும் தொலை தொடர்பு 

கைபேசி மூலம்.

இன்றைய தலைமுறையினரின் 

மகிழ்ச்சி ,நிம்மதி,சந்திப்பு ,பேச்சு எல்லாமே 

கைபேசி. அறிவியல் விந்தை.

மூத்த குடிகளின் முணுமுணுப்பு.

என்னடா வாழ்க்கை. 

இளைய தலைமுறையினருக்கு 

இணையில்லா ஆனந்தம்.

பழையன கழிதல் ,புதியன புகுதல்,

இதுவே இன்றைய தலைமுறை ஆனந்தம்.