திங்கள், அக்டோபர் 01, 2012

திருந்துமா மக்கள் மனம்.?


மக்களின்  சிந்தனைக்கு 

இன்று  சுதந்திரம் அடைந்து  65 ஆண்டுகளுக்குப்பின்  அன்னா ஹஜாரே 

அலறுகிறார்.இத்தனை ஆண்டுகள் அவருக்கு எவ்வித எழுச்சியும் 
வரவில்லை.காரணம்,ஊழல்  தன்  இறுதி எல்லைக்கு சென்று விட்டது.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று  பாரதியார் பாடினார்.
இன்று  எங்கும் எதிலும் ஊழலே பேச்சு என்றாகிவிட்டது.
நானும் சிந்தித்தேன்.
விளைவு?

விவசாயிகள் 80% இருக்கும்  நாட்டில் 
 விவசாயத்திற்கு முதலிடம் தர வேண்டும்.
ஆனால் 
வெளிநாட்டு  கமிசன் தலைவர்களுக்கு கிடைக்காது.
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் சேராது.
நாட்டின் ராணுவத்திலிருந்து,தொலைத்தொடர்பு வரை 
பகல் கொள்ளை அடிக்கமுடியாது.
ராமாயணத்தில் மந்தரை,
மகாபாரதத்தில் சகுனி,
விடுதலை இந்தியாவில் 
உலகில் நான்காவது பணக்காரி.
கருப்புப் பண பட்டியல் வெளியிடத் தடுக்கும் 
தலையாட்டி பொம்மை,
பொம்மலாட்ட  பொம்மை 
பிரதமர்.
ஊழல் என்று போராடுவோரும்  ஊழல் 
ஊழல் ஒழிக்க என்னிடம் ஒரு மந்திரக்கோல் இல்லை 
என மௌனமாகும் பிரதமர்.
தமிழக ரஹசிய(சிதம்பரம்) அமைச்சர் நில ஊழல்.
மமாதாவும்  கருப்பு பணப்பட்டியல்  பற்றிய பேச்சு இல்லை.
விலை நிலங்கள் விற்று  தொழில் மய  மாயை .
ஏன் ?
விவசாயிகள் வறுமை.
அவர்கள் அறியாமை,
தலைவர்கள் சுயநலம்.
நாடு தொழில் துறையில் முன்னேற்றம் என 
நாட்டுத்தொழில்  ஒழிப்பு.
காரணம் 
விவசாயிகளுக்கு நன்மை செய்தால் கமிசன் கிட்டாது.
விளைநிலம்   தொழில் மயமானால் கோடிகள் 
தன்  இல்லம் சேரும்.
மாயையில் மக்கள்.
மகிழ்ச்சியில்  மந்திரிகள்.
விழித்துக் கொள்ளுமா ஜனநாயகம்?
தப்புமா விளை  நிலம்.
கோடிகள்  சேர்த்தாலும் சுடுகாடுதான் மிச்சம் என 
நினைக்கும அரசியல் தலைகள்.
கங்கையே சாக்கடை ஆக்கும் 
தொழில் மாயம் 
அதன் சாபத்தால் அழியுமோ பாரதம்.
எங்கும் ஊழல் என் பதே பேச்சு.
அது ஒழியாது  ஊழலாலே 
ஊழல் பணம் தேர்தலில்  நடமாடும் வரை.
திருந்துமா  மக்கள் மனம்.


பாரத மக்கள் மேல் கருணை காட்டு.



இன்றைய  இளம் வாக்காளர்கள் 

18 வயது பூர்த்தி ஆனவர்கள் 

பாரத நாட்டின் முன்னேற்றத்திற்கான 

பார் புகழ் பெரும் போக்கைத் 
தடுக்கும்  அரசியல் கட்சிகளை 
  ஒழிக்க புதிய சக்தி யாக 
ஒலி  -ஒளி  கொடுக்கவேண்டும்.
காங்கிரசும் ஊழல்.
கலைஞரும் ஊழல்.
அம்மாவும் ஊழல்.
பாரதிய ஜனதாவும் ஊழல்.
இவர்களுடன் கூட்டுச்
சேருவோரும்  ஊழல்.
ஊழல் வழக்கு சந்திக்காதோர் யார்?
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் 

அனைவரும் ஊழல் என்றும் 
கூறி  கூட்டணி வைக்கும் சிறு கட்சிகள்.
காமராஜரைப் புகழும் 
கக்கனைப் புகழும் 
அவர்கள் 
ஊழலில்  ஒன்றுபட்டு
 மாறி மாறி
 ஆட்சி செய்தது 
போதும்.
பூஜை ,யாகம்,ஹோமம் என்று 
அவர்கள் செய்தாலும் 
நல்லாட்சி அமைய அனைவரும் 
தினமும் பத்து நிமிடம்  
ஏன்  ஐந்து நிமிடம் 
சிந்தியுங்கள்.
அதுவே பிரார்த்தனை.
ஆண்டவா!!
ஊழல்கள் வளர்ந்தால் 
அதற்கு நீ உறுதுணையா!
உன் மேல் பக்தி வருமா?
ஊழல் ஒழிக்கும்  சக்தி கொடு.
அறிவைக் கொடு.
மக்கள் நேர்மைக்கு தலை வணங்கட்டும் .
அநியாயத்தை வேரோடு ஒழி க்கட்டும்.
ஆண்டது போதும் பணப் பேய்கள்.
பாரத மக்கள் மேல் கருணை காட்டு.