வியாழன், அக்டோபர் 11, 2012

மதங்களின்புனிதநூல்கள்அன்றாடம்படிக்கப்பட வேண்டும்.



மதங்களின்  புனித நூல்கள் அன்றாடம் படிக்கப்பட வேண்டும்.




உலகுக்கு  வேண்டிய  அனைத்தும்
 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே
உலகின் அனைத்து  மதங்களின் புனித நூல்களில்
கூறப்பட்டுள்ளன.
வேதங்கள்,குரான்,பைபிள் அனைத்தும்
தினமும் மீண்டும் மீண்டும்  படிக்க வேண்டியவை.
அந்நூல்களை ஆழ்ந்து புரிந்து படித்தால்
மனித நேயம் வளரும்.
ஹிம்சை எண்ணங்கள் வளராது.
மனித உயிரை  எடுக்கும் இரக்க மற்ற  செயல்கள்
நடைபெறாது.
எந்த மதமும் மற்ற  மாற்றுக்கருத்துள்ளவர்களை
 கொன்று குவித்து
நீ மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று
 போதிப்பதில்லை.
மற்றவர்களை  வெறுத்து ஒதுக்கிவிடு
என்றும்
கூறுவதில்லை.
அவ்வாறு   கூறினால்
 அந்த மதம்  ஏற்றுக்கொள்ள முடியாது.
மனிதன நேயத்தையும்,ஒற்றுமையையும் ,அஹிம்சையும்
பரப்பிய ஒரு 14வயது சிறுமி சுடப்பட்டது
ஒரு வெறிச்செயல்.
அல்லா ! அவர்கள் மனம் திருந்த ,
அந்த சிறுமி உலகில் நல்லனசெய்ய
உயிர்பிழைக்க
தொழுவோம்.பிரார்த்திப்போம்.ஆராதிப்போம்.
*********************************************************
இறைவன்

அறிவுப்புரட்சி.
அறிவியல் புரட்சி,
அரசியலில் புரட்சி.
ஆகாயத்தில் ஆய்வு.
ஆற்றலில் புரட்சி.
ஆழ்கடல் ஆராய்ச்சி
அனைத்தும் செய்தாலும்
மனிதனிடம்
ஒரு பயம்.
பதட்டம்.
புதியதை
அறியாததை,
புரியாததை
தெரியாததை
தெரிந்து
அறிந்து
அடைந்து
மீதம்
உள்ளதோ
மன நிறைவற்ற நிலை.
பற்றற்ற நிலையிலும்
ஒரு பற்று.
நாம் அனைத்தும் செய்தோம்.
  புலன்களுக்குப்புலப்படா
ஆற்றல்  நம்மை ஆட்டிவைத்தது.
இப்பொழுது
ஐம்புலன்களும்
அடங்கும் நேரம்.
ஆடிய ஆட்டங்கள்,
பாடிய ஆட்டங்கள்,
உற்றார் உறவு
சொத்து சுகம்
அனைத்தையும்
துறந்து
மண்ணில்  புதைந்தோ
தீயில் எறிந்தோ
மற்றவர்கள்  காண முடியாமல்
ஆகும் இயற்கை நிலை.
சிலரின் உற்றார் ,உறவினர்கள்,
இறைவனாக ஆராதிக்கலாம்.
போற்றலாம்.
ஆனால்
அகிலத்தில் இருக்கப்போவதில்லை.
அப்பொழுது தான்
இறைவன்  உணரும் நேரம்.
மனிதனுக்கு  இந்த தீர்ப்பு நாள்
நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.
அதனால் தான்
இறைத்தூதர்கள்
இருக்கும் வரை
உண்மையாக இரு என்றனர்.
மற்றவர்களுக்கு உதவியாக இரு என்றனர்.
நேர்மையாக இரு என்றனர்.
ஒற்றுமையாக இரு என்றனர்.
இறைவின் படைப்பில்
ஆற்றல் வலிமை,அழகு,அறிவு என
உள்ளவற்றிற்கு
மாறாக உள்ளவர்கள்   அதிகம்.
தனக்குள்ள ஆற்றல்
மனித அமைதிக்கு ,அன்பிற்கு,பயன் பட வேண்டும்.
ஆணவம் கூடாது.
வெறுப்பு ,பொறாமை கூடாது.
ஹிம்சை கூடாது.
அனைத்தும் கற்கிறோம்
தேர்விற்காக.
அதனால் தான்
வள்ளுவர்   திருக்குறளில்

"கற்க கசடற கற்க கற்றபின் நிற்க
அதற்குத் தக."
ஒழுக்கம் விழுப்பம் தரலால், ஒழுக்கம்
உயிரிலும் ஓம்பப்படும்.
அன்பில் அதனை வெயில் போல் காயுமே
என்பில் அதனை  அறம் .

குழந்தைப்  பருவத்தில் இருந்தே
தெய்வீக  நூல்களை  கற்பிக்கவேண்டும்.