வியாழன், டிசம்பர் 31, 2020

கடை ஏழு வள்ளல்கள்

 



கூகுள்  சர்ச்  மூலம் பாரத வள்ளல்கள் 



முதல் ஏழு வள்ளல்கள்

குமுணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி

இடைக்கால ஏழு வள்ளல்கள்

அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன் (கர்ணன்),சிசுபாலன், சந்திமான், தந்திவக்கிரன்

கடை எழு வள்ளல்கள்

காரி, பாரி, ஓரி, எழினி, நள்ளி, பேகன், மலையன்

கடை எழு வள்ளல்கள் பற்றிய விவரமே முழுதும் கிடைக்கிறது. ஏனையோரில் நளன், கர்ணன், அரிச்சந்திரன் போன்றோர் பற்றி மட்டுமே நாம் அறிவோம். அதுவும் நாம் அறிந்த இதிஹாச, புராண புருஷர்தானா அல்லது அதே பேரில் உள்ள வேறு வள்ளல்களா என்பதையும் அறியோம்.

சங்க கால வள்ளல்கள் எழுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததை நாம் அறிவோம்; ஆதலால் மற்ற 14 பேரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரே!

சனி, டிசம்பர் 12, 2020

ஏதாவது எழுது

 தாவது எழுது

ஏமாறியதை எழுதவா ?
ஏற்றத்தை எழுதுவதா?
ஏக்கத்தை எழுதுவதா ?
தாக்கத்தை எழுதுவதா ?
தர்மத்தை எழுதுவதா ?
அதர்மத்தை எழுதுவதா?
ஏட்டுப்படிப்பு வேறு .
ஏளனம வேறு .
ஏழ்மை வேறு .
படிப்புக்கும் பண்புக்கும்
பணத்திற்கும் ஏணி
ஊழல். பொய்கணக்கு எழுதித்தரும்
ஆடிட்டர் ,
ஊழல் என்று தெரிந்தே
அவர்களுக்கு வழக்காடும்
வழக்கறிஞர்,
கருப்புப்பணத்தையும்
அறிவியல் ரீதியால்
வையகம் அறிந்த ஊழலை
இல்லை என்று நெஞ்சு நிமிர்த்தி
கொடுத்த வாக்குறுதி
நினைவேற்றாமால்
அதே வாக்குறுதியை
புதியதுபோல் கூறி
வாக்கு பெறும் நா வன்மை
ஏதாவது எழுதி
வம்பில் மாட்டாதே என்று
ஜனநாயக பயம் காட்டும் நட்புகள்-உறவுகள் .
ஆஹா!கூலிப்படைகள்
ஈவு இரக்கமற்ற படுகொலைகள்
ஏதாவது ஏடாகூடாமாக எழுதி
வஞ்சனை செய்வாரடி கிளியே ,
வாய்ச்சொல்லில் வீரரடி..