திங்கள், பிப்ரவரி 27, 2012

koodan kulam

அவர்கள் நாங்கள் நீங்கள்  என்று கைகாட்டி தட்டிக்கழிக்கும்  காலம்  அரசியலில் என்றுமே நடக்கிறது.நல்லது செய்தால் நாங்கள்.இல்லையென்றால் அவர்கள்.தவறுகள் நடந்தால் நீங்கள்.
கூடங்குளம் விஷயத்தில் அல்லும் பகலும் எதிர்ப்புத்தெரிவிக்கும் கூட்டம்.
காங்கிரஸ் மட்டும் ஆதரவு.மாநிலக்கட்சிகள் மௌனம்.பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் ஒளி பெற செலவழிக்கப்பட்டு  முடியும் தருவாயில்
எதிர்ப்பு.அழிவு என்ற காரணம்.அபாயம் என்ற காரணம்.
நமது நாட்டின் நலம் விரும்பி உண்மை அறிவியல் மேதை முன்னாள் குடியரசுத்தலைவர் கூற்றுக்கும் மதிப்பில்லை. உலகத்தமிழ்  மகாநாட்டில்  ஒதுக்கப்பட்ட இணையற்ற  தமிழ்  தொண்டர்..சுயநலத்திற்காக ஏசுவையும்,முஹம்மது நிபியையும் அழித்த கூட்டம்.
அபாயம் என்பது மின்சாரத்தாலும் உண்டு.சம்சாரத்தாலும் உண்டு.எரிவாயுவாலும் உண்டு.வாகனத்தாலும்   உண்டு. சுனாமியாலும் உண்டு.
ஆண்டவன் தூதர்கள் அழிவில்லாதவர்கள்.ஆண்டாவன் உள்ளான் என்றால்
கூடன்குள மர்மங்கள்  வெளிப்பட்டு  நாட்டின் மின்பற்றாக்குறை தீர்ந்து
 நாடு ஒளிமயமாக இறைவனைப் பிரார்த்திப்போம்.தீமைகள் தாமதமாக எரிக்கப்பட்டு நன்மைகள் நடக்கும்.