வெள்ளி, அக்டோபர் 12, 2012

மக்களின் நன்மைக்கு பயன் படுத்துங்கள்மக்களுக்காக மக்கள் ஆட்சி.

மக்களுக்காக மக்கள் ஆட்சி.


நாட்டில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஆனால் ,
சிலர் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கின்றனர்.
அதில் ஏற்படும்  மகிழ்ச்சி ,
கம்பீரமாக  மேடை போட்டு  சொல்லமுடியுமா/?
கோடிக்கணக்கில் பணம்
வரிகட்டா பணம் வெளிநாட்டு வங்கியில்
சேமிக்கப்பட்டுள்ளது என்பதை
அலங்கார  மேடையிட்டு
அகங்கார  தலைவர்கள்
 முழங்க முடியுமா?
மன சாட்சி  உள்ள  அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:
ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பொதுமக்களும்  சாக்கடை ஓடும் 
சாலையில் நடக்கின்றனர்.
அந்த சாலை பராமரிக்க பணமில்லை.
 அண்ணா வளைவு கலைஞர் வைத்தது என இடித்து பின்னர் எம்.ஜி.ஆர். திறந்தது என அறிந்து மீண்டும் நிலைநாட்ட கோடி.
சமாதி புதுப்பிக்க  கோடிகள் .
கண்ணகி சிலை இடிக்க ,மீண்டும் வைக்க கோடி .
ஆனால் ,வரி  செலுத்தும்  மக்களுக்கு 
சாலை இல்லை.
குடிதண்ணீர் இல்லை.
மின்சாரமில்லை.
மன்னராட்சியில் தான் ராஜ தர்பார்.
மக்களாட்சியிலுமா  இப்படி/?
மக்களின் வரிப்பணம்
 மக்களின் நன்மைக்கே.
அரண்மனைகட்டவும்,அந்தப்புரம் கட்டவும்  அல்ல.
தலைமைச் செயலகம் மாற்றம்.
துக்ளக் தர்பாரா?
கோட்டூர்புரம்   நூலக மாற்றம்.
எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு,
வரிப்பணம்.
மக்கள் ஏமாளிகள்.
தலைவர்கள் இரக்கமற்றவர்கள்.
மடிப்பாக்கம் சாலைகள் 
பள்ளி செல்லும் குழந்தைகள்  படும் அவஸ்தை.
பாதாசாரிகள் படும் அவஸ்தை.
சுகாதாரக்கேடு.
இதற்கெல்லாம் 
நடவடிக்கை இல்லை.
குப்பை;நாற்றம்;
மகிழ்ச்சியில்லா மக்களின் வரிப்பணம் 
மன சாட்சி இல்லாமல் 
பணப்பெட்டிக்காக.
மரணம் நிச்சயம்.
இயற்கையின் சக்திக்கு 
பயந்து  கிடைத்த பதவியை 
மக்களின் நன்மைக்கு 
பயன் படுத்துங்கள்.







கருத்துகள் இல்லை: