சனி, நவம்பர் 03, 2012

நெஞ்சம் பொறுக்கவில்லை, இந்நிலை நீடிப்பது கண்டு. மாணவர்களே! இந்நிலை மாற்றுங்கள்/

சுதந்திரம்  ஆகி  67 ஆண்டுகள்.
தமிழ் தமிழ் என்றே
தமிழகம் ஆளவந்தோர்.
ஒழுக்கம்,
புலனடக்கம்.
மனக்கட்டுப்பாடு
அறியார்.
தனிப்பட்ட வாழ்க்கை வேறு,
தாரணி ஆளும் திறமை வேறு
என்றாலும்,
தலைவனின் /தலைவியின்
அகவாழ்க்கை,
அறியும்  சமுதாயம்,
அதன் பாதிப்பு,
திரைப்பட வாழ்க்கை ,கதை.
அதன் எதிரொலி
இன்று  கட்டாயக் காதல்,
காதலிக்கவில்லை என்றால்,
அமிலம் ஊற்றல்.
கொலைசெய்தல்.
கற்பழிப்பு,
தற்கொலை,
கள்ளக் காதல்
திருமணமான   பெண் ணுடன்காதல்,
ஆணுடன் காதல் ,
கொலை கொள்ளை காதலுக்காக.
அரசன் எவ்வழி,அவ்வழி மக்கள்.
ராமனை கேலிசெய்யும் இவர்கள்,
 வண்ணானின்  சொல்லுக்காக,
மக்களின் ஒழுக்கம்காக்க ,
கட்டியமனைவியை,
கானகம் அனுப்பிய ராமன் துச்சம்.
தனி ஒருவர் ஒழுக்கம்
தாரணி ஆள்வார் ஒழுக்கம்,
தரணிவாழ்  மக்களைபாதிக்கும்.
விளைவு
குடும்பத்தில் பெற்றோருக்கு அமைதி இல்லை.
இளைஞர்கள்  தேர்ச்சி குறைவு.
கலைகல்லூரி,கலாட்டக்கல்லூரி.,
விடுதலை ஆன பிறகும்
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்
அடிதடிக் கல்லூரி,
நெஞ்சம்  பொறுக்கவில்லை,
இந்நிலை நீடிப்பது கண்டு.
மாணவர்களே! இந்நிலை மாற்றுங்கள்/