ஞாயிறு, அக்டோபர் 14, 2012

பாத்திரம் அறிந்துபிச்சை போடு; இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

தானம்  என்பது மற்றவர்களுக்கு 

கொடுப்பது.
இது  ஒரு தர்மம்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு 

கொடுத்து உதவு வது  தானம்.

இந்த கலியுகம்  கர்மயுகம்.
உன்  கர்மங்களை  செய்.பலனை எதிர்பாராதே என்பது  இறை தத்துவம்.

ஆனால் ,இந்த உண்மை புரியாமல்,
தன்  கஷ்டங்கள்  ,துன்பங்கள் தீர 
சாமியார்களை சந்தித்து தானம் அழிப்பது,ர கோயில் உண்டியல்களில் போடுவது  தானம் ,புண்ணியம் என்றே 
ஒரு  நம்பிக்கை. அதனால் போலி சாமியார்களும்,ஜோதிடர்களும்,குறி சொல்பவர்களும் ஏமாற்றி  வருகிறார்கள்.கோயில்கள் பெருகிவருகின்றன.
ஆண்டவன் பணக்காரர்களை படைத்து 
சோதிக்கிறான்.
பெரும்பாலும் பணம்படைத்தவர்களுக்கு 
சந்தானபாக்கியம்  குறைவு.
எத்தனையோ கோடீஸ்வரர்கள் 
குழந்தை இல்லாமல் சொத்துக்களை 
ஆஷ்ராமங்களுக்கு எழுதிவைப்பதை 
புண்ணியமாக கருது கின்றனர்.
அவர்கள்  மகிழ கர்ம யுகம் என்ற தானம் செய்யவேண்டும்.

கிராமங்களில்  ஒளிபெற சூர்ய  மின்சாரம் தாயரிக்க  ஏற்பாடு செய்யுங்கள்.
தோழிகள் வளர அல்ல.
தொழில் வளம்பெற வேண்டும்.

விவசாய மேன்பாட்டுக்கு உதவுங்கள்.

நீர்வளம் பெருக கிராமங்களில் மழை 
நீர் சேமிப்பு குளங்கள் வெட்டுங்கள்.

கோயில்  காணிக்கைகள் நாட்டு  நலத்திட்டங்களுக்கு  பயன் படுவதில்லை.

ஏழை மாண வர்களுக்கு உயர் கல்விக்கு உதவுங்கள்.

மருத்துவ வசதி செய்து கொடுங்கள்.

பலருக்கு வேலைவாய்ப்பு தரும்  நிறுவனங்கள்  அமைத்துக்கொடுங்கள்.

எது செய்தாலும் தங்கள் நேரடிபார்வை அவசியம்.

சாமியார்களுக்கே  தங்க அரியணை விரும்பும் காலம்.

ஆகையால் தான் தமிழில் ஒரு பழ மொழி :
பாத்திரம் அறிந்துபிச்சை போடு;
கோத்திரம் அறிந்து  பெண்ணைக் கொடு..

ஆண்டவன் தனக்கே மீண்டும் மீண்டும் வைரக்கிரீடம்  வேண்டும் என கேட்கவில்லை.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

உங்கள்ரூபாய்கள் உண்மையாக கஷ்டப்படுபவர்களுக்குப் பயன் படட்டும். ஆயிரக்கணக்கனவர்கள் 
உங்களை வாழ்த்தி  பிரார்த்திப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்.

உண்டியலிலும்,ஆஷ்ரமங்களிலும் கொட்டி   ஊழலை  வளர்க்காதீர்கள்.
அரசியல்கட்சிகளுக்கு எதற்குப் பணம்.
ஊழலை ஒழிக்க செயல் திட்டங்களை நிறைவேற்றுங்கள்.
நாட்டுக்கு தொண்டு செய்யும் கட்சிகள் 
தன்  சொந்தபணத்தில்  செய்யட்டும்.

ஆடம்பர கட்சி அலுவலகங்கள் 
ஊழலை வளர்க்கும்.
உங்கள் நன்கொடை  பல்லாயிரம் பசிப்பவர்களுக்கு உதவட்டும்.
வீண் ஆடம்பர சமாதிகளுக்கும் ,ஆடம்பர கட்சி ஊர்வலச் செலவுகளுக்கும்  பயன்பட வேண்டாம்.
ஆண்டவன் அருள்பெற்று  வரும் 
பணம்  எளியோருக்கு உதவட்டும்.

நீங்கள் ஆண்டவன் கிருபைக்கும் .
வாழ்வியல்  இன்பத்திற்கும் .மன நிறைவிற்கும்   உரியவர்களாவீர்கள்.

வீடுகள்  கட்டி  குறைந்த வாடகைக்கு விடுங்கள். சிற்றூர் களில் .