புதன், ஆகஸ்ட் 28, 2013

சற்றே சிந்தியுங்கள் . நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.?


தேர்தல் வரும்போது மட்டும் ராமர் கோயில் கட்டும் பிரச்சனையை


முன் வைத்துப்  போராடுவது  ஏன் ?

ராமர் போராட்டம் இந்துக்களை ஒன்று படுத்துமா?

வாக்கு வங்கியாக மாறுமா?

சாதுக்கள் ,தலைவர்கள்   என கைது செய்யப்பட்டு

போராட்டம் தீவிரமடைந்துள்ளதா?

இந்த நேரத்தில் ஆசாராம்  ஆசாரம்  இழந்து

இந்து மதத்திற்கு களங்கம் ஏன் ?

2014 தேர்தலில் ராமர் கைகொடுப்பாரா?

நாடு முன்னேறிவருகிறது.

ஊழல் பெருகிவருகிறது.

ஊழல் அரசியல் வாதிகள் நீதிமன்ற தீர்ப்பை மாற்ற தீர்மானம்

நிறைவேற்றி உள்ளனர்.

இரவுபகல்  பாராமல்  மிக அழகாக  நேர்த்தியாக   வடிவமைக்கப்பட்ட
விநாயகப்பெருமான்  பூஜைகள் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து
கடல் அலைகளில் தூக்கி எறியப்பட்டு
பக்தி காட்டும் இந்துக்கள் ஒன்றுபடுவார்களா ?
கணேசப் பெருமாளின் அருள் கிட்டுமா?
ஊழலைப்பெருக்கி ,கடமை மறந்து
கடவுள் பெயரால் மக்களை வேறுபடுத்தி
வெந்த வேக்காட்டில் குளிர் காயும்
நாற்காலி  பக்தர்கள்.
மக்களே சிந்திப்பீர்!ஆக்கப் பணியில் ஈடுபட்டு
கடமையைச் செய்தால் கடவுள் அருள் கிட்டும்.

அதை விடுத்து ஆண்டவன் பெயரால் அச்சுறுத்தி ,
ஆளுபவர்கள் ,ஆண்டவர்கள் ஆஸ்திபெருகுகிறது.
கற்பழிப்பு பெருகுகிறது.
கள்ளக்காதல் கொலைவெறி பெருகுகிறது.
விவாகரத்துக்கள் அதிகமாகின்றன .
கல்வி,ஆலயம்,நீதி, மருத்துவம்  நாட்டின்
இன்றியமையாத துறைகள்  ஏழைக்கு எட்டாக் கனியாகி
உயர உயரமான கிளையில் காய்க்கத் தொடங்கி வளர்ந்து வருகின்றன.

இதற்கு ஓர் வகை செய்வோம்.

கீதை  உயர்நூல் என்று அதை கற்று காசாக்காமல்
கடமையைச் செய்.

சற்றே சிந்தியுங்கள் . நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.?
21ஆம்  நூற்றாண்டா? 15 ஆம் நூற்றாண்டிற்கா?