வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

ஆசிரியர்கள் தினம்.

 
 
 
ஆசிரியர்கள் தினம்.
 
 
 
நம்நாட்டில் "குரு"என்பர்.
 
 
"குரு "  என்றால் 
 
 
"பெரிய " என்ற பொருள்  உண்டு.
 
 
குருவே  பிரம்மா ,விஷ்ணு,மகேஸ்வரன்.
 
 
குருவே  சாக்ஷாத்  பர  பிரம்மம் ,
 
 
குரு வாழ்க,குருவே  துணை.
 
 
என்று தான்  வித்யாரம்பம்   செய்வார்கள்.
 
ஆங்கில மீடியா ,
வந்ததும்,
"குரு"
ஆசிரியர், டீச்சர்,மிஸ் 
ஆனார்.
ஊதியம்  பெறும் 
ஊழியர்   ஆனார்.
விளைவு,
புனிதப்பணி 
ஊழியம் 
பெரும் 
பணியாளராக  மாறியது.
காலை  எட்டு மணிமுதல் நான்கு வரை 
கடமை முடிந்தது.
இன்றைய 
நிலை.
 
அரசியல் வாதிகளின்  கல்வி முறை 
ஆசிரியர்களை அடிமைப்படுத்துவது.
இந்த  ஆண்டு 
பெற்றோர்களிடம் 
ஆசிரியர் தின 
ஒரு வேண்டுகோள் 
தயவு  செய்து 
குழந்தைகள் முன் 
ஆசிரியர்களை 
மட்டம் தட்டி,
குறை சொல்லி பேசாதீர்கள்.
ஆசிரியர்களிடம்  ஒரு வேண்டுகோள்.
குழந்தைகளின் 
சூழல் அறிந்து 
அன்புடன் போற்றுங்கள்.
வன் முறையான 
சின்ன,பெரிய தி ரைகள்.
நாமும் வன்  முறையாக  பேசினால்,
அதிகாரம்  எடுபடாது.
பெற்றோர்களுக்கும்  இதுவே.
ஆகையால் 
அன்பிற்கு  உண்டோ அடைக்கும் தாழ்     என 
மன மாற்றம் செய்து,
சீரிய  பணியை  சிறப்பாக்குங்கள் .