வெள்ளி, நவம்பர் 30, 2012

எங்கே?எங்கே?எங்கே?


அன்பும்  அறிவும் ஆற்றலும் 
நேசமும் பாசமும் தானமும் 
 தர்மமும் தியாகமும் பற்றற்ற
 தன்மையும் பணிவும்,பொறுமையும் 
சாந்தமும் சஹிப்புத்தன்மையும் 
பரோபகாரமும் தன்னலமற்ற 
எளிய வாழ்க்கை முறையும் ,
ஆடம்பரமற்ற தன்மையும்,
ஆத்மதிருப்தியும் அஹிம்சையும்,
விருப்பமும் வெறுப்பும் அற்றநிலை ,
ஆசை -பேராசையற்ற நிலை,
இன்னா -இனியவை யில்  நடு நிலை 
 ஆன்மீக மார்க்கம்.

ஆனால்   இன்று 
ஆன்மீகத்தில்  ஆடம்பரம் ,
ஆஸ்திகள் இல்லை என்றால் 
ஆஷ்ரமங்களில் இடம் இல்லை.
தங்கமும் வைரமும் வைடூரியமும் ,
கோடிக்கணக்கில் பணமும் 
பதுக்குமிடங்கலாகவும் இருக்கின்றன .
 பத்துக்கும் செல்வங்களால்   யாது 
பயன்.
ஆயிரக்கால் மண்டபங்களும் ,அழகுசிற்ப மண்டபங்களும் 
கடைகளால் மறைக்கப்பட்டு 
வணிக ஸ்தலங்களாக மாறும் நிலை.
லௌகீகமா அலௌகீகமா என்றால்,
லௌகீகமே  பிரதானம்.
 வழிபாடு ஐந்து நிமிடம் ,
கடைத்தெருவில் ஐந்துமணிநேரம் .
கடவுளின்  கருணை கிட்டுமா?
உள்ளத்தில் சஞ்சலம் தீருமா?
உடல்  ஆரோக்கியம் பெறுமா?
உள்ளம் அமைதி பெறுமா?
வாழும்  கலை மறந்து,
பொருளாசை வளர்க்கும் மையமாக 
மாறும் வணிகஸ்தலங்கள் 
 ஆலயங்கள்  என்றால் 
ஓம் ஓம் ஓம் 
சாந்தி !சாந்தி!சாந்தி !
எங்கே?எங்கே?எங்கே?




பிரேம மார்க்க பக்தி./காரணம் அவைகளுக்கு ஜாதி தெரியாது.


 பாப்பா  பாட்டு பாடிய  பாரதியாலும் ,

ஜாதி  இரண்டொழிய வேறில்லை  என்ற

ஔவையாராலும்  ஜாதி ஒழியவில்லை.

ஜாதிக்கட்சிகள், ஜாதீய உணர்வுகள் ,

மத  உணர்வுகள்,மத வெறிகள்,

மதம் ஜாதி என்ற பெயரால்

படுகொலைகள்   இன்னும் ஓயவில்லை.

 இராமாயண காலத்தில் ஜாதிவெறி

இருந்ததால்  தான்  ராமன் -குகன்  நட்பு

போற்றப்படுகிறது .

அறிவு,பண்பு , அடக்கம் உள்ள விதுரன்

சற்றே  ஒதுக்கிவைக்கப்பட்டான்.

கர்ணன்  வளர்ப்புப் பெற்றோர்களின் ஜாதிகாரணமாக
ஏளனத்திற்கு  ஆளானான் .
 அனைத்து மொழி  இலக்கியங்களில்,
  காதலுக்கு  முக்கியத்துவ,ம் .

அன்னம், மேகம்,காற்று புறா,

என அனைத்தும் காதலுக்கு தூது.

 காரணம்  அவைகளுக்கு  ஜாதி தெரியாது.

 ஞானம் பெற்ற  மனிதன் தன்   சுய  நலத்திற்காக
மனிதனை  மதம்,மொழி என்ற பெயரால்
வேறு    படுத்தினான்.
 ஆனால் இவைகளையும் கடந்து

காதல் வெற்றிநடை போடுகிறது .
அதனால்  காதல் படங்கள் வெற்றிபெறுகின்றன.

கபீர்

लाली   मेरे लाल की  जित  देखो , तित लाल;
लाली देखन  मैं गयी गयी  मैं भी  हो गयी लाल।

என்கிறார்.

காதலனைத்  தேடிச்சென்றேன் ;
எங்கு    எ தை ப்    பார்த்தாலும்

அவனையே  பார்த்தேன்.

அவனைப்பார்த்த  போது  நானும் அவனாக மாறிவிட்டேன்.

இதைத்தான்  காதலின் முற்றிய நிலை,

இது சங்கரரின் அத்வைத பக்தி.

பக்தி காதலுடன் இணைத்து விளக்குவதுதான்

பிரேம மார்க்க பக்தி.

அங்கு மீராவையும் பார்க்கலாம்.
ஆண்டாளையும் பார்க்கலாம்.
ஆண்டவன் முன் பிரேமையும் பக்தியும்
ஒன்றாவதால்  ஜாதி -மதம் பார்க்கப் படுவதில்லை.
காதலுக்கும் கண்ணில்லை ;பக்திக்கும் கண்ணிலை
அங்கு பேரானந்தத்திற்கும் ,முக்திக்கும் வழி  உண்டு .
அதுதான் பக்திப் பரவசம்.



















அன்னம் ,மேகம் .காற்று






துரியோதனன்