சனி, அக்டோபர் 06, 2012

கீழ்க்கண்ட செய்திகள் வராத நாள் கிடையாது.

கீழ்க்கண்ட செய்திகள்  வராத நாள் கிடையாது.

காதலிக்க மறுத்த  பெண் மீது ஆசிட்  வீச்சு,
ஆசிரியர் திட்டியதால் தற்கொலை,
காதலனைக் கொன்று  காதலியும்.
காதலியையைக்கொன்று  காதலனும்
தற்கொலை.
 சமுதாயம்   இந்த மாதிரியான  சூழ்நிலைக்கு காரணம் என்ன?
தற்கொலை செய்வதில் எந்தமாநிலம் முதன்மை என்று கணக்கெடுத்து
தமிழ்  மாநிலத்திற்கு இரண்டாவது இடம்.

நமது கல்விமுறையில் நீதி போதனை வகுப்புகள்  குறைந்துவிட்டது.
நீதிபோதனை  நேரத்தில் கணிதம் /அறிவியல் பாடங்கள்.

மதசார்பற்ற  நாடு என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்.
அப்படியாவது தமிழ்  வளர்ந்ததா? வாழ்த்தோடு மட்டும் சரி.
அண்ணா  வாழ்க என்று ஊழல் புரியும்  தலைவர்கள் போல.
ஆங்கிலம் கலந்த திரைப்பாடல், வசனம்.திரைப்படப் பெயர் மட்டும் தமிழ்.
வரி விலக்கு.
மனத்தில்  நல்ல எண்ணங்கள் வளர இறைவழிபாடு அவசியம்.
அதற்குத் தடை.(பெரும்பான்மை கல்வி நிறுவனங்களில் மட்டும்)

மனக்கட்டுப்பாடு ,இந்திரியக்கட்டுப்பாடு,பிரம்மச்சரியம் என்பதெல்லாம்
கூறும்  தமிழ் மருத்துவம்  மறுக்கப்பட்டு, காதல் உணர்வு தேநீர் அருந்துவதுபோல் தீர்க்கப்பட வேண்டியது என்ற ஆங்கில வைத்தியம்
விவாகரத்துக்கள்,நிம்மதியில்லா  குடும்ப வாழ்க்கை,கள்ளக்காதல்,
என்ற அமைதியற்ற சூழல் உருவாக்கி உள்ளது.

இதற்கு அரசாங்கம்  மாணவர்களுக்கான ஆலோசனை,கலந்தாய்வு ,நீதி போதனை,புலனடக்கம் என்பது போன்ற கல்வி திட்டம்   ஏற்படுத்தவேண்டும்.
 திரைப்படங்களில் காதலுக்கான வன்முறை மாற்றும் நிலை ஏற்படவேண்டும்.
காதல் என்பது  கண்ணியமாக கட்டுப்பாடு நிறைந்ததாக இருக்கவேண்டும்.
திரைப்படங்கள்  காதலை மையப்படுத்திகட்டாயக் காதல்,பெற்றோரை மதிக்காத காதல்,ஓடிப்போகும் காதல், காதல் வந்தால் எதையும் பொருட்படுத்தக்கூடாது என்றெல்லாம் அடிக்கடி காட்டுவதால் இளசுகள் காதலுக்கு முதலிடம் தரும்.காதைக்கவில்லை என்றால் கொலை வரை செல் கின்றனர்.  பொரிக்கிகளால்  கட்டாயக்காதல் ஏற்படுத்தும் கதைகள்.சமுதாய நல சிந்தனை உள்ளவர்கள்  இவ்வாருபடம் எடுக்க மாட்டார்கள்.அவர்கள் வீட்டில் இவ்வாறு கடத்திமிரட்டி காதல் பண்ண முடியுமா?
காதல் தான் இளைஞர்கள் வீரம் என்பதுசமுதாயக் கேடு.
சூழல் ஏற்பட்டு ,இளம்வயதில் பெற்றோர்களை தவிக்க வைக்கும்  முடிவை எடுக்கின்றனர்.
மன இயல் வல்லுனர்கள் ஆராய்ந்து இளம் சமுதாயத்தினரின் மேல் அக்கறை காட்ட வேண்டும்.
நல்ல காட்சிகள் கண்டால் நல்ல எண்ணங்கள்  தோன்றும்.