ஞாயிறு, மார்ச் 04, 2012

பகுத்தறிவும் பகவானும்.

பகுத்தறிவும் பகவானும்.
அறிவுள்ளவன் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து 

பெருக்கி வகுத்து கழித்து நல்லவற்றை பெருக்கி 

அல்லவற்றை கழித்து ,அல்லவற்றிலும் வகுத்து 

கழித்து மீதியை விட்டு விடுகிறான்.

இந்த பகுத்தறியும் அறிவால் கண்டறிந்த மூல   

தத்துவம்   தான் நுண்ணறிவால் காணும் 

ஆண்டவன்


சூக்ஷ்ம திருஷ்டி .இது எத்தனை பேருக்கு வரும்.???

அந்த நோக்கில் கண்டு உணர்ந்து தெய்வீக    

கருத்துக்கள்  , வேதங்களாகவும்   ,குரானாகவும் 

,பைபிளாகவும் .மனித  நேயம்   வளரவும்  ,மனித 

ஒற்றுமைக்காகவும்  ,வையகம்  வாழவும் ,வாய்மை 

வெல்லவும்  ஆன்மீக வழிகாட்டியாக அமைக்க 

ஆண்டவன் அருள் பெற்றவரன்றி வேறு  யாரால் 

முடியும்

அறிவியல் விந்தைகள் பற்றிய குறிப்புகளும் அந்த 

ஆன்மீக தெய்வீக நூல்களில் காணப்படுவதும் 

விந்தை தானே.

.ஆனால் சில பகுத்தறிவு வாதிகள் சுயநல முள்ள 

ஆன்மீக வாதிகளின் போலி வேஷத்தை கலைத்து 

சிந்தனைகள் தூண்டுகின்றனர்.

அறிவு வளம் பெற்ற இந்த உலகில் தீயவை 

சீக்கிரமாக வெளிப்பட்டு விடுகின்றன.