திங்கள், நவம்பர் 05, 2012

பட்டறிவாளர் சொல்வது கேட்டால், பண்பும் அறிவும் வளரும்.



வேங்கடவன் துணை இருக்க,
வேதனைகள் அகலுமப்பா?
வேலனுக்கு மாமன் அவன்,
வேண்டுவோருக்கு துணைவன் அவன்.
வழிக்குத் துணை அவன்
வாழ்வின் மேன்மைக்குத்  துணைவன் அவன்.
இறைவன்  ஒருவனே என்றாலும்,
இந்நில வுலகில்,
அவன்  தோற்றம்
அங்கிங்கெனாதபடி
பல வடிவம்.
கணபதி  என்றொரு இறைவன்.
அவன் தம்பி கார்த்திகேயன்,
அவன் தந்தை சிவன்.
அன்னை பார்வதி.
கல்விக்கு
கலைமகள்.
செல்வத்திற்கு அலைமகள்.
வீரத்திற்கு
மலைமகள்.
என்றெல்லாம்
தெய்வப்பெயர்கள்.
அல்லா   என்பர்.
எப்பெயர்  சொன்னாலும்,
ஏற்றம் தரும்.
நம்பினோர்  கெடுவதில்லை.
நான்கு  மறை தீர்ப்பு.

அதனால் தான்
அனைத்து ஆலயங்களிலும்
அலைமோதும் கூட்டம்.

ஆன்  மீகபயம்,
அகிலத்தில்  உண்டு.
தெய்வம் இல்லை என்றோரும்
தேவன் ஒருவனே என்ற மாற்றம்.

நாத்திக முத்தையா
ஆத்திக கண்ணதாசனாக.
காமுகன்  அருணகிரி ,
திருப்புகழ்  அருங்காவியக்
கலைஞராக.
மனைவியைப்  பிரியா ,
துளசி தாசர் ,
ராமச்சரிதமாநாசம்
படைத்தவராக.
மனிதக் காதல்,
தேவதாசனாக;
அனார்கலி -சலீமாக;
அம்பிகா பதி அமராவதியாக
சோகக்கதைகள்.
பைத்தியமாக அலைவதுதான்
மிச்சம்.
இந்த கிகிளுப்புக்காக
பட்டி மன்றங்களும்  இப்படி.
கல்லுரிகளும் இப்படி.
திரைப்படங்களும் இப்படி. சமுதாயமும் இப்படி.

பட்டு அறியும்  போது ,
படபடப்புதான் மிஞ்சும்.
பட்டறிவாளர்  சொல்வது கேட்டால்,
பண்பும் அறிவும் வளரும்.
அறிவும் அமரத்துவமும் வேண்டுமா ?
கடவுளை வேண்டுங்கள்.
மன அமைதி வேண்டுமா
இறைவன் மேல்,
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவீர்.

கல்லூரியில்,
படிப்பில் தோல்வி உற்று,
உயர் படிப்பிற்கு
வழி  இன்றி
பெற்றோருக்கு பாரமாக,
மனச்சுமையுடன்,
இருக்க வேண்டுமென்றால்,
மனிதக் காதலில் ,
கன்னியின்  பெற்றோரையும்
கலங்க வையுங்கள்.

மன அமைதிக்கு  இறைப்பற்று.
மன  வேதனைக்கு  சதைப்பற்று.
ஆறறிவு படைத்தோரே,
ஆண்டவன் காதலா? மனிதக் காதலா?
சிந்திப்பீர்!!  செயல் படுவீர்!!



















வாழ்க போராடுவோர் மன சாட்சி.



உணவுவிடுதியில்  ஐயர்  பெயருக்கு எதிர்ப்பு.

என்  கண்ணில்   பட்ட  பெயர்கள்:

செட்டி நாட்டு உணவகம்.
செட்டி நாட்டு மண்பானை  சமையல்.
சங்கர லிங்க நாடார் மேல் நிலைப் பள்ளி.
வெள்ளையன்  செட்டியார்  மேல் நிலைப் பள்ளி.
ஹிந்து மேல் நிலைப் பள்ளி.
முஸ்லிம் மேல் நிலைப்  பள்ளி.

கிறிஸ்தவ  மேல் நிலைப்பள்ளி.

யாதவ  கல்லூரி.
சௌராஷ்டிரா மேல் நிலைப்பள்ளி.
நாடார் உறவுமுறை கல்வி நிறுவனங்கள்.

வாழ்க போராடுவோர் மன சாட்சி.

ஜாதிவாரி  மக்கள் தொகை கணக்கெடுப்பு.

காந்தி   என்றால்  செட்டியார்.

தமிழில்  மொழிபெயர்ப்பு.தூய தமிழ்

இந்திரா செட்டியார்.

சோனியா செட்டியார்.(வாணிக )(அரசியல் வியாபாரம் சேமிப்பு கூட்டாளிகள்
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு)
ராகுல்  செட்டியார்

மகாத்மா செட்டியார்.

மேனகா செட்டியார்.

மூப்பனார்

ஜாதி  ஒழிப்போர்.

ஒரு ஜாதி ஒழிக்க,
ஜாதிவாரி கணக்கு.
அதுவும்3%.

மனசாட்சி இல்லா  போராட்டம்.
மீண்டும்  மீண்டும்  வாழ்க ! பாரதியார் . ஔவையார்
ஜாதிகள் இல்லையடி பாப்பா.

ஜாதி இரண்டொழிய வேறில்லை
இட்டார்  பெரியோர்  இடாதார் இழிகுலத்தோர்.
ஐயர் கடை இட்லி சட்னி வாங்கிட்டுவா.
சாம்பார்  பிரமாதம். இது வழக்கு.
ஆனால் ,
இன்று  அரசியல் நடத்த  போராட்டம்.

ஆண்டாண்டு காலமாக சாலைவசதி, தண்ணீர் வசதி,வாகனவசதி,
மின்வசதி,மருத்துவ வசதி இல்ல இடங்களில் அமைத்துக்கொடுக்க போராடினால் ,போராட்டம்.
ஒழுக்கம்,அமைதி,பிரமச்சரியம்,மனக்கட்டுப்பாடு,
உள்ளதைக்கொண்டு நிறைவுடன் வாழ்
என்று தங்கள் பணி புரியும்  ஒரு ஜாதி.


எந்தப்போராட்டம் அரசியல்?
ஜாதி வளர்ப்பது யார்?

ஐயர் உணவு விடுதி  எதிர்த்துப்போராடுவோர்

சற்றே தங்கள்போராட்டத்தை
 மக்கள் நலம் பக்கம் திருப்புங்கள்.