சனி, ஆகஸ்ட் 24, 2013

ஆயிரம் கோயிலில் அடித்துச் சொல்வேன்.

தூக்கம் வரவில்லை.
 எதையாவது எழுதலாமே என்றால்  எதை எழுதுவது.
அரசியல் ?
ஆன்மிகம்?திரைப்படம்?
இலக்கியம்.
அறிவியல்
வரலாறு
புதினம்
சிரிப்பு
கவிதை

புத்திவேண்டுமே   எழுத?
படிக்கவேண்டுமே ?
எழுத்தில் கவர்ச்சிவேண்டுமே ?
கரு புதுமை படிக்கவேண்டுமே?

அரசியல் சாக்கடை என்றால்

ஆன்மிகம்?உடனே செய்திபடித்த நினைவு.

ஆசாராம்  ஸ்வாமிகள்

ஆபாசமான எண்ணம்.

சமுதாயம் என்றால் விபத்து,கொலை கொள்ளை கற்பழிப்பு

மதம் மனிதர்களை வேறுபடுத்துகின்றன.தீவீரவாதி குற்றவாளி.

அதிலும் மதம் இந்து தீவீரவாதி;முஸ்லிம் தீவீரவாதி

அதிலும் முஸ்லிம் தீவீரவாதிகள் வழக்கு விரைவில் தீர்க்கவேண்டும்.

மத்திய அரசு ஆர்வம்.
உடனே மற்ற தீவீரவாதிகள்  ஏன்  அக்கறை இல்லை.
தேர்தலுக்காகவா?
மீண்டும் ராமர் கோவில் கட்டப்படும் .
அழகான இறைவன் யானைமுகத்தோனை
அழகு படவே செய்து ,கலைஞனின்  உழைப்பினையும் 
ஆண்டவனின் அழகையும் அலட்சியம் 
பளுதூக்கி  மூலம் எரியும் பரிதாபம் 
கழுத்தைப் பிடித்து கணேஷா ஒழிந்து  போ 
ராவண எரிப்புக்கும் .கஜமுகாசூரன்  கழுத்தருப்புக்கும்
கஜமுகனை கடலில் எறிவதற்கும் 
 என்ன வேறுபாடு என்பதை ஆன்மீகவாதிகள் 
விளக்கம் அளிப்பார்களா?
திலகருக்குமுன் இப்பழக்கம் உண்டா?
எந்த வேதம்  முழுமுதற்கடவுளை அழகுபடச் செய்து கடலில் வீசச் சொன்ன ஆதாரம் உள்ளது?
அர்த்தமற்ற மூட பக்தி  ஏன்?
இந்துக்கள் எழுச்சி என்று காட்ட 
இறைவனை அலைபாய வைத்து துண்டுகலாக்குவதா?
துங்கக் கரி முகத்து தூமணியை 
தூக்கிஎரியும்  துயரக் காட்சி  உணரா 

ஹிந்து ,
நானும் ஹிந்து தான் எனக்கும் பற்றுண்டு .

ஆனால் இச்செயல் எனக்கு ஹிந்துமதப்பற்று என்று கூற ஒப்பாது.
ஆயிரம் கோயிலில் அடித்துச் சொல்வேன்.