புதன், ஆகஸ்ட் 01, 2012

.வருமான விந்தை



வருமான விந்தை 
நம்  நாட்டில்  வளம்  என்பது  இல்லை  என்று சொல் முடியாது.நீர்வளம் உள்ளது.  மழை  பெய்கிறது. விளைச்சல் பெருகுகிறது.அரிசிப்பஞ்சம் இல்லை.

அரிசி கிடைக்கிறது. விலைதான் அதிகம்.பருப்பு கிடைக்கிறது .விலைதான் அதிகம்.காய்கறி கள்  கிடைக்கிறது.விலை தான்  அதிகம்.தங்கம் கிடைக்கிறது.
தங்க நகைக்  கடைகள்  நாளுக்கு நாள்  அதிகரிக்கிறது.

வேலை  கிடைக்கிறது. செய்ய ஆள் இல்லை.தமிழ் நாட்டிற்கு  பணி  புரிய  பலர்  வேறு மாநிலங்களில்  இருந்து  வருகின்றனர். காய்கறி   கடைகளில்
விற்பனையாள்  கூட வெளிமாநிலம் கட்டிடப் பணியாட்கள் வெளி மாநிலம்.
எனவே  வேலை இல்லாத்திண்டாட்டம்  கிடையாது.

     இச்சூழலில் தமிழ் நாட்டின் ஜீவாதார வருமானமே டாஸ்மார்க் தான் என்ற நிலை. காரணம் புரியவில்லை. ஒரு தீய பழக்கத்தால்  ஒரு வருமானம் வரும் என்று  ஒரு  அரசு  அதை வளப்படுத்தினால், அந்த அரசுக்கு  பொதுமக்கள் மேல் எவ்வளவு  அக்கறை.!!!
ஏழைகளுக்கு  இலவச அரிசி. மின்சாரம்.ஆனால் வருமானம் அவர்களை  குடிகாரர்களாக்கி  அவர்களிடம்  உள்ள தீய  பழக்கத்தால்  அவரிடமே சுரண்டி
அவர்களுக்கே  அரிசி. குடி குடியைக் கெடுக்கும் . உயிரைப்பறிக்கும்  என்ற சிறு
எழுத்து விளம்பரம்..குடிப்பழக்கத்துக்கு எதிரான அரசு விளம்பர  குறும் படங்கள்  விந்தைதானே.

அந்த குடிக்கு  அடிமை யாவது யார்.?அதைப்பற்றி கவலை இல்லை என்றால்

அது  குடி அரசா? குடியரசா ?

மும்பை போன்ற நகரங்களில் ஒருவகைத் தொழில். அதிக வருமானம்.

டாஸ்  மார்க் அதிக வருமானம்.

புகை உயிருக்குப் பகை.ஆனால் அதைத் தடை செய்தால் பலரின் வேலை வாய்ப்பு  பாதிக்கும்.

தீய பழக்கங்கள் வளராமல்  குடிகளைக்    காப்பது    தான்  அரசு.

காசு வருமானம்  என்றால்  தீயவை தான் பெருகும்

காசு-மது-மாது- மயக்கம் -மரணம் . விளம்பரத்தோடு  வருமானம் .விந்தைதான் 
















molikkolkai.மொழிக் கொள்கை

மொழிக் கொள்கை.

தீரன்  மெட்ரிக் பள்ளி மற்றும்  ஈரோடு பள்ளிகளில்  ஹிந்தி,பிரெஞ்சு  போன்ற மொழிகள் கட்டாயமாக 
திணிக்கப்படுகின்றன என்ற செய்தி  தமிழ் மணம்  வெளி இட்டுள்ளது.

இந்த கட்டாயம் என்பது 1970 முதல் நடை முறையில் உள்ளது.

தமிழகத்தில்  தமிழைத் தாய் மொழி இல்லாதவர்களுக்கு குறிப்பாக தெலுங்கு,கன்னடம் பேசுவோருக்காகவும்  மற்றும் சென்னையில் அதிகமாக உள்ள மார்வாடிகள்,குஜராத். போன்ற வெளி மாநிலத்தவர்களுக்காக 
தமிழுக்கு  மாற்றாக  அவர்கள் தாய் மொழி பயில வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதற்காக இருமொழி திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தாய் மொழி பயில்பவர்கள் தமிழ் படிக்கவேண்டாம்  என்ற நிலையில்   அரசாணை  வெளியிடப்பட்டு  அமலாக்கப்பட்டது.

இது அரசுப்  பள்ளிகளிலும் , அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் நடை முறையில் இருந்துவருகிறது.ஆனால் மெட்ரிக் பள்ளியில்  இது வேறு கண்ணோட்டமாக மதிப்பெண்  பெறுவதற்கான  எளிய வழி என 
பின்பற்றப்  பட்டதால்  இன்று வெளிச்சத்திற்கு  வந்து  புதிதாகத் தெரிகிறது.

தமிழைத் தவிர மற்ற மொழிகளில் குறிப்பாக வடமொழி ,பிரஞ்சு  மொழிகளில் பாட நூலே மிகச் சிறிது தான்.அதில் ஆங்கிலத்தில் விடை அளித்தால் போதும்.

இம்மொழி  மதிப்பெண்கள் வேறு மாநிலத்தில் மதிப்பு பெற்றாலும் 

தமிழக கல்வித்துறைக்கு உண்மை நிலைதெரிவதால் 
.
  தமிழக அரசு மாநில முதல் வரும் மாணவன் தமிழ் எடுத்தால்  தான் 

மாநில முதல் மாணவன் என்று அறிவிக்கிறது.

இப்பொழுது  ஹிந்தியை விட தெலுங்கை விட அதிகம் படிப்பது பிரஞ்சு மொழிதான்.புதுவையில் அதிகம்.



.இந்த இருமொழி க்கொள்கையால்  பாதிக்கப்பட்டது தமிழ் தான்.




private schools in tamilnaadu and language policy.

கல்விக்கூடங்கள்  1970 க்குப்பின்  வணிக நோக்கில்  ஆரம்பிக்கப்பட்டு ,

அரசின் பல் துறைகள் போன்று வசதி படைத்தவர்கள் விரும்பும்
 தனியார் துறை  யாக மாற்றம் அடைந்தது  ஏன்?

இதில்  கல்வித்துறை  அமைச்சகம்,இயக்குனர்கள்,தலைமை ஆசிரியர்கள்,

ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்,அரசியல்வாதிகள் ,பத்திரிகைகள் ,அரசுப்பள்ளிகளில் படித்த  மாணவர்கள்  என  அனைவரின் ஒத்துழைப்பு
இல்லாமல்  தனியார் பள்ளிகள் வளர முடியுமா?

கல்வி இன்றியமையாத செல்வம்.    ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒளிமயமாக  கல்வி அவசியம்  என்ற நிலை ஏற்பட்டபின்

கல்வி நிலையங்களில் ஏற்றத்தாழ்வுகள்  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போல் மாறிவிட்டன.

காரணங்கள்:
1.தனியார் வழியிடும்  புத்தகங்கள் ,குறிப்பேடுகள்,கழுத்துப்பட்டை,காலனி,
சீருடை, பேருந்துவசதிகள், எழுது  பொருட்கள் ,விளயாட்டுப் பொருட்கள்,
பள்ளி விளையாட்டுத்திடல்  என அனைத்தும்  தனியார் பள்ளிகள்
கவர்ச்சிக்கு ஒரு மூல காரணம்.
2.ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் ,முதல்வர்களின் கடும் உழைப்பு.

3.கல்வி என்பதை  பெற்றோர்கள்  ஆங்கில வழிதான் என முடிவு எடுத்தாது.

4.தமிழ் வழி   ,இந்திய மொழி வழி  படிப்புகள்

வேலைவாய்ப்புத்தராததால்  ஆங்கிலம் தான் என்ற நிலை.

5.ஆங்கிலம் கலந்து தமிழ் மொழி பேசாவிட்டால் அவன் அறிவு வளர்ச்சி இல்லை என்று   அவமானப் ப்படுதல்.

6.தமிழ்  நாட்டில்  தமிழ் படிக்கவேண்டாம்.
.முதல் மொழி வடமொழி.பிரெஞ்சு எடுத்தால்
  ஒரு பாடம் சுலபமாகி றது .
 மதிப்பெண்களும் அதிகம் கிடைக்கும்.

அண்ணாதுரை  அவர்கள் மாண்புமிகு முதல் அமைச்சராக இருந்த போது

மும்மொழி திட்டம் கொண்டுவர முயன்றார்.

 அதில் தெலுங்கு மொழிக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு

 தோல்வி  அடைந்தது .

        தமிழகத்தில்  உள்ள 40%அதிகமாக உள்ள தெலுங்கர்கள் தங்கள் தாய்

மொழி படிக்கவேண்டும் என்ற  எண்ணமே இல்லாதவர்கள்
.தமிழை மிகவும் நேசிப்பவர்கள் .
 திரு வை.கோ.,விஜயகாந்த்,ஈவேரா .உட்பட
.மாண்புமிகு  முதல்வர்  அண்ணாத்துரை கொண்டுவந்த  திட்டத்தில்

 ஹிந்தி படிப்பதில்பெற்றோர்கள்  அதிகம் ஆர்வம் காட்டியதால் திட்டம்

கைவிடப்பட்டது.

பின்னர் பள்ளி நேரத்திற்கு ப பின் ஹிந்தி கற்பிக்கும் ஒரு திட்டம் வந்து  கைவிடப்பட்டது.

ஹிந்தியை விரும்பா அரசியலில், ஆங்கிலம் மகத்துவம் பெற்று தமிழை

விரும்பா மொழியாக்கியது என்பதுதான் உண்மை.

பொதுவாக மக்கள் விரும்புவது தனியார் துறை தான்.
பணம் சிலவானாலும் நிம்மதி.
அரசுப்பள்ளிகளில்  தனியார் பள்ளி போன்று பொறுப்பு ஏற்பது கிடையாது.
ஐந்து ஆண்டுகள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் கவனிக்காமல் இல்லை.

இன்று தனியார் பள்ளிகள் விலைவாசி ஏற்றத்தால்  மிகவும் கலக்கத்தில்
உள்ளன .

ஆசிரியர்கள்  ,ஆயாக்கள்   aஅனைவருக்கும்  ஊதியம் kகொடுக்க vவேண்டும்

பொருளின்றி   ஆண்டவன்   தரிசனமே  ஆலயங்களில்  தாமதமாக  கிடைக்கும் .

அறிவாலயங்கள்  என்றுமே அரசபோகம் தான் .