வெள்ளி, ஜூலை 26, 2013

நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்.

நாட்டின் விடுதலைக்குப் பின்  நாடு முன்னேறி இருக்கிறது.
நடுத்தர மக்களின் பொருளாதாரம் திருப்தி அளிக்கிறது.
மாநகரங்கள்  எல்லை விஸ்தரித்துக்கொண்டே போகிறது.
கட்டடங்கள் சிலைகள் சாலைகள் மேம்பட்டுள்ளன.
இருப்பினும்  பல பெருங் குறைகள்  என்று குறை படுகிறோம்.
ஏன் ?
விவசாயிகள்  தற்கொலை காரணமா ?

விலை நிலங்கள்  கட்டடங்கள்  தொழிற்ச் சாலைகளாக மாறிவருவதாலா?

கல்வி நிலையங்களின்   கொள்ளைகலாளா ?

மாநில மொழிகளால் சம்பாதிக்க வழியில்லை என்பதாலா?

ஊழலும் கையூட்டும் பெருகுவதாலா/?

சாமியார் மடங்களில் கோடிகோடியாக பணம் குவிந்து வருவதாலா>

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணம் சேர்வதாலா?

விலைவாசி ஏற்றத்தாலா?
ஏழைகள் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கி அவசர ஆத்திரத்திற்கு பயன்படுத்தும்
ஒரு வசதியை  கூடாது ஏழைகள் தங்கம் வாங்கக் கூடாது என்ற உயரிய
கொள்கை உள்ள சிதம்பரத்தாலா?

வெளிநாட்டு நிறுவனங்கள்,முதலீடுகள் பெருகுவதாலா/

தனியார் மயம்  அதிகரிப்பதாலா?

மக்கள் வரிப்பணத்தை   தேர்தல் இலவச வாக்குறுதி அளித்து இலவசம் வளங்குவதாலா?

மின்சார ம்  சீராகா விநியோகிக்கப் படுவதாலா?

புறம்போக்கு நிலங்கள்,கோயில் நிலங்கள்,கிரனைட் கற்கள் அரசியல் வாதிகளால் அபகரித்துக் கொள்வதாலா?

கற்பழிப்புகள் ,கொலைகள் ,கொள்ளைகள்,ஆசிட் வீச்சு,கூலிப்படை ஆகியவற்றாலா/

மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லாததாலா?

நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள், கள்ளக்காதல் படுகொலைகள் நடப்பதாலா/

அப்பா-அம்மா வீட்டில் இல்லை  போன்ற பாடல்களலாலா /

தண்ணீர் தட்டுப்பாடாலா/

ஆலயங்களில் கழிப்பிடம் ,தூய்மை ,நேர்மை,சமத்துவம் இல்லாததாலா/

எதோ  நாடு முன்னேற்றம் என்ற மகிழ்ச்சி ஏற்படததாலா/?

நாடு  முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்.