திங்கள், அக்டோபர் 08, 2012

ராமர். ராமர் குடி கொண்டு அருள் புரிவார்.


ராமர்.
ராமரைத் தேடினேன்.
செங்கலால் கட்டப்பட்ட 
ஆடம்பரக் கோயில்களில் 
அவரின் பதுமைகளை 
மட்டும் கண்டேன்.
எளிய மக்களின் இதயங்களில் 
ராமரின் உயிர் துடிப்பைக்கண்டேன்.

அவர்  14 ஆண்டுகள் ஆட்சி  செய்தது 
ஒரு குடில்.
இன்றைய அரசியல் வாதிகள் போல் 
இசட்  பாதுகாப்பு இல்லை.
மக்களுக்கு பயந்து 
மக்களுள் மக்களாக 
கலந்து கொள்ளும் 
மக்களாட்சி தலைவர்கள் இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் சந்திக்கும் 
தலைவர்கள்.
அவர்களிடம் ஏமாந்தாலும் 
அவர்களுக்கே ஓட்டுப்போடும் 
ஏழை நடுத்தர மக்கள்.
40% தான் ஒட்டுப்போடுவதில்லையே?!!
ராமரின் உயிரும் ,ஆத்மாவும் 
உள்ள இடங்கள்:
அடிபட்ட ஜடாயு.
அங்கதன்.
ஹனுமான்.
குஹன்.
அனுசுயா.
சீதா .
கௌசல்யா.
அஹில்யா.சபரி.
ஏழையின் பக்தியில் இறைவன்
 இருப்பதால் தான் 
ஏழைக்கு நிம்மதியான தூக்கம்.
களங்கமில்லா  சிரிப்பு.
இறக்கம்.
பரோபகாரம்.
சுற்றங்கள். நட்பு.
பணக்காரர்கள் 
ஏழையின் உதவியும் 
இல்லாமல் 
வாழ முடியுமா?
ஏழையின் தயவால் வாழும் 
பணக்காரர்கள் 
ஆட்சியைப்பிடித்து, 
ஏழைகளை ஏழையாகவே 
சாலை வசதியின்றி 
மின்வசதியின்றி
குடிநீர் வசதியின்றி 
நிம்மதியாக தூங்குகின்றனர்.


பணக்காரர்களால் 
கோடிகோடி கறுப்புப் பண அரசியல் 
வாதிகளால் 
தூங்க  முடியுமா?
ஏழைகள் இறைவனின் ஆசி பெற்றவர்கள்.
மழலைச்செல்வம் பெற்றவர்கள்.
மன நிறைவு பெற்றவர்கள்.
ஆகையால் தான் 
தரித்ர நாராயன் சேவையில் 
நாராயண னைக் காணலாம்.
ஏழையின் சிரிப்பில்
 இறைவனைக் 
 காணலாம் 
என்றனர்.
இந்த கேடி அரசியல்வாதிகளால் 
நித்யாநந்தர்களும்,ப்றேமானந்தர்களும் 
பணக்காரர்களால் ஆஷ்ராமங்களும் 
அங்கு போதைப் பணக்காரகளின் 
போலியான ஆனந்தமும் 
கூடுகின்றன.
அந்த ஆஷ்ராமங்களில்
 சேரும் பணம்'கொடுக்கும் பணங்களை
 சாலைவசதிகளும்,
கோயில் தெப்பங்குள ங்களில் 
மழைநீர் சேகரிக்கும் குழாய்களும் அமைக்க
கொடுத்தால் 
ஆண்டவனின் கோடி ஆசிகளும் 
நிம்மதியும் 
கிடைக்கும்.
பகட்டு பக்தியை விட்டு 
உண்மை பக்தர்களின் 
மனதில் தான் 
ராமர் குடி கொண்டு அருள் புரிவார்.



கருத்துகள் இல்லை: