வியாழன், மே 30, 2013

ஆனந்தம் என்றாலே பொருளுள்ள வாழ்க்கை

பொருள் என்றால் செல்வம்,

பொருளுள்ள என்பதில் செல்வமும் அடங்கும் .

அர்த்தமும் உள்ளது.

வடமொழியிலும் அர்த்த என்பதற்கு செல்வம் ,பொருள் என்ற

இரட்டை பொருள்.

பொருளா ?தாரமா.? என்றால்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

என்று இவ்வுலக வாழ்வில்

பொருளும் இணைந்தே புகழ் பெற்றுள்ளது.

பொருள் -பொருள்  இல்லாதவருக்கு

இவ்வுலக ஆனந்தம்  எங்கே?

இதுதான் வையகம். ஐயோ!பாவம் !நல்லவன் !

தரணி ஆள  ,
பொறுத்தார் பூமி ஆள்வார் 

பொறுமை  கடலினும் பெரிது.

இந்த பொறுமை வையகத்தில் சாத்தியமா?

குனியக் குனியக் கொட்டுவோரே அதிகம்.
ஐயோ !பாவம்! நல்ல மனிதர் !

என்பதை ஆராய்ந்து ஹிந்தியில் ஒரு கதை.

யார் ஏமாறுகிறார்களோ அவர்களையே சமுதாயம் 

ஐயோ பாவம் நல்ல மனிதர்கள் என்கிறது.

பல ஆண்டுகளாக வாடகை உயர்த்தாத 

வீட்டுச் சொந்தக்காரர்,

குறைந்த வாடகையில் வரும் ரிக்ஷா தொழிலாளி,

கதை,கட்டுரை எழுதி பணம் கேட்காத எழுத்தாளர் 

என ஒரு பெரிய பட்டியலுடன் நகைச்சுவை 
கலந்த கதை  ஐயோ !பாவம்! நல்லவர்கள்.

கடன் கொடுத்து திருப்பிக் கேட்காத நண்பர்கள்,
கைமாறு கருதாமல் கூலி அதிகம் கேட்காதவர்கள் 

ஐயோ!பாவம் !நல்லவர்கள்.
அனுபவத்தில் கதை ஆசிரியருக்கு 
தன்னை யாரும் புகழ்ந்தாலோ /
நல்லவர் என்று சொன்னாலோ  

அவர் மனதில் தோன்றுவது 

தான் ஏமாறுகிறோம் /அல்லது ஏமாற்றுகிறோம் என்பதே.

கெட்டிக்காரன்/சாமார்த்திய சாலி என்று 

பாரட்டப்படுவோர் கிரிக்கெட் விளையாட்டைப்போல் 

அரசியல்வாதிகள் போல் 

மற்றவர்கள் கருவைத்திருடி 
 கதை மாற்றி எழுதுபவர்கள் போல் 

எமாற்றுபவர்கலாகவே இருக்கின்றனர்.

பொறுத்ததுபோதும் பொங்கி எழு 

என்பது இந்நிலையில் பொருத்தமாகிறது.

அதே நிலையில் தான் நானும்.
உறவினர்களுக்கு பொருளுதவி செய்து 
அவசரத்திற்கு திருப்பிக்கேட்டால் 
அவர்களின் வாக்குச் சாதுர்யம் 
என்னை பகவனாக்குகிறது.
அதைத்தான் 

கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை என்கின்றனர்.



மற்றவர்கள் ஏமாற்றும் பொழுது 
.
ஏமாறிக்கொண்டே இருந்தால் 

ஐயோ!பாவம் !நல்லவன் !

விழித்துக்கொண்டால் .....

அனைவருக்கும் பகை.

இதுதான் வையகம்.