திங்கள், ஆகஸ்ட் 13, 2012

ஒற்றுமை காப்போம்.


சுதந்திர தினம் 

பாரதநாடு  பழம்  பெரும்  நாடு.--பிற 

நாடுகளை நாடிச்செல்லா  நாடு.

கடல் கடந்தால் கரை படியும் 

என   தேசத்தந்தையை   முதலில் தடுத்து,

அன்னையின்  பயம் போக்க 

நல்ல   குணங்கள்  பின்பற்ற 

சபதம்   செய்து  ஒழுக்கமே விழுப்பம் தரும் 

என்ற உயரிய நாடு.

"ஆன்மிகம் "  எண்ணங்களால் , 

 வையகம்  புகழும் நாடு.

இந்த நாட்டில் அன்னியர்  புகலிடம் தேடி  வந்தனர் .

கொள்ளை  அடிக்க வந்த கூட்டம்.-அதில் 

நம்  நாட்டின்  கருங் காலிகளால்,

சுயநலமிகளால்,

 பொறாமை  கொண்டாரால்,

அண்ட வந்தவர்கள் .

ஆட்சியாளராக   மாறிய  விந்தை.

ஆண்டவர்கள்  அடிமையான விந்தை.

பாரதியார் பாடிய  

நம்மில்  ஒற்றுமை நீங்கில் ,

அனைவருக்கும் தாழ்வே .

என்பதற்கு ஓர்  எடுத்துக்காட்டு.

இந்த 66வது சுதந்திர நாளில் ,

நம் நாட்டு தியாகிகளுக்கு அஞ்சலியாக 

இதுதான் சபதம்--

நம் நாட்டு கறுப்புப் பணம் ,

வெளிநாட்டில் இருக்க  இட மாட்டோம்.

இந்த உறுதியில் வேற்றுமை மறந்து 

ஒற்றுமை காப்போம்.

நாடே நமக்கு ;

சுயநல வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க  சபதமெடுப்போம்.










கராச்சியில் இருந்து கொக்ரோஜர் வரை-- இந்துக்களின் கருணைக் கதை.



கராச்சியில்   இருந்து  கொக்ரோஜர்  வரை-- இந்துக்களின்  கருணைக்  கதை.  ---தருண் விஜய்.

   பாகிஸ்தானில்  இருந்து இந்துக்கள்  அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர்.அவர்கள் கராச்சி பாகா இந்திய எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கிருந்து இந்தியாவிற்கு இந்துக்கள் அகதிகளாக  சென்றால் அது அவமரியாதை என்பதால்

 இந்துக்களிடம்  பாகிஸ்தான் அதிகாரிகள்  பாரதத்திற்கு சென்று  பாகிஸ்தானத்திற்கு எவ்வித கெடுதலும் செய்யமாட்டோம் என்ற உறுதி மொழி பெற்றுக்கொண்டனர்.
 மரியாதை என்பது பாகிஸ்தானிற்கு உள்ளதா என்பது அன்னாட்டினருக்கே  தெரியாது  என்பதால் அவர்கள் நடவடிக்கை சற்று கடும் விஷயமாகி விட்டது.

         ஒருவரும் தன் வீடு ,சொத்து ,ஊர் ,நாடு ,இருப்பிடம் போன்றவற்றை மிகவும் சுலபமாக விட்டு விட்டு வரமாட்டார்கள் .நிலம் என்பது வெறும் மண்ணோ அல்லது வீடு என்பது  சுட்ட செங்கலால் கட்டப்பட்டது  என்பதை விட  அது உணர்வு பூர்வமான மகிழ்ச்சி,துன்பம் ,மணம்,முன்னோர்களின் வாழ்க்கை,மரணம் ,கவிதைகள்,மரபுத் தொடர்களால் பின்னப்பட்டது.நம் முன்னோர்கள் இருந்த பூமியில்  ஒருவித நம்பிக்கையோடு வாழ்கிறோம்.அது நமக்கு ஒரு பரம்பரை சொத்தாகிறது.புதிய தலைமுறையினர்களின் எதிர்காலத்தை பின்னிப் பிணை கிறோம். அதனுடன் நமக்கு இருக்கும் தொடர்பு நகமும் சதையும் போல.முகமும் கண்களும் போல.
         ஒருவன் தன் உரிமையான இடத்தில் இருந்து வெளியேறும் கட்டாய சூழல் எப்பொழுது உண்டாகிறது?
 அவனுக்கு அங்கே வாழவே வழி இல்லாதபோது,
அனைத்தையும் இழக்கும் போது,மானம்-மரியாதையை  இழந்த அல்லது இழக்கும் சூழல் உருவாகும் போது
  வேறு இடம் செல்ல கட்டாய நிலை ஏற்படுகிறது.அவன் அங்கிருந்து  ஒரு தெரியாத புது இடத்திற்கு செல்கிறான். அவனுக்கு அங்கே பிச்சை  எடுக்கும் நிலைதான்.அனால் அவன் தன் மானம் காக்க,  தன் சொந்த பல தலைமுறையினர் வாழ்ந்த இடத்தை விட்டு விட்டு,
 அனைத்தையும் துறந்து அகதியாக வெளியேறுகிறான்.

        பாரதம் போன்ற மதச் சார்பற்ற  நாட்டுத்தலைவர்களும்,மக்கள் தொடர்பு சாதனங்களும்  ,இந்துக்களுக்கு இன்னல் நேரும் பொழுதெல்லாம் தாலிபன்களாக மாறி  காட்டுத்தனமாக  நடந்துகொள்கின்றன. அங்கு இந்துப்பெண்கள்  பலாத்கரப்படுத்தப்படுகின்றனர். பதின்மூன்று வயது சிறுமிகளை கடத்தி மதம் மாற்றி  கட்டாயத்திருமணம் செய்விக்கின்றனர். பெற்றோர்கள் கதறுகின்றனர். சிந்துவில் மனிஷா குமாரிக்கு  இந்நிலை ஏற்பட்டது. வேறுவழி இன்றி உடுக்கும் இரண்டு துணிகளை சுற்றி எடுத்துக்கொண்டு  மிகவும் வேதனையோடு பரிதாபத்துடன் அகதிகளாக வருகின்றனர்.

  இதைப்பற்றி இந்திய அரசியல் தலைவர்கள் கலங்கவில்லை. இந்த செய்தியை செவிமடுக்கவில்லை. பெற்றோர்கள் எவ்வளவு கதறி இருப்பார்கள்?
அவர்கள் தூங்கியிருப்பார்களா?
              நான் இந்த சேதியை பதினைந்து நாட்களுக்குமுன்  ராஜ்ய சபையில்  எழுப்பினேன்.இது வெளிநாட்டுப்பிரச்சனை என்று பதில் வந்தது. நானும் விடாமல் பல தலைவர்களிடம் கூறிய பின் இந்த அகதிகள் விஷயத்தில் கவனத்தை செலுத்தி மிகவும் கம்பீரமான விஷயம் என்று நடவடிக்கையில் இறங்கினர். அமைச்சர் எஸ்.சி.கிருஷ்ண  இந்த கம்பீரமான விஷயத்தில் பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வோம் என்றார்.ஆனால் இன்று வரை இது சம்பந்தமான அறிக்கையோ,நடவடிக்கையோ பாராளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை.

   நான் இந்த பிரச்சனை  தொடர்பாக  எழுதும் பொழுது தமிழர்  களின் மனிதஉரிமை பார்க்கும் ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்புகிறார். இது வெளிநாட்டில் நடக்கும்  மனித உரிமைமீறல் பிரச்சினைதானே.இது தொடர்பாக ஐக்கிய நாட்டு சபைகளிலும் வினா எழுப்பப்படுகிறது. பல தலைவர்கள் இது பற்றி பேசுகின்றனர். இது வெளிநாட்டுப் பிரச்சினை என்று யாரும் கருதவில்லை. பூடான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ன் போன்ற நாட்டில் இந்துக்கள்மேல் செய்யப்படும் கொடுமையை எதிர்க்காமல் அது வெளிநாட்டுப்பிரச்சினை தலை இட முடியாது என்கின்றனர்.
ஆங்கு இந்துக்கள்மேல்  மனித உரிமை மீறல்கள்    நடந்துகொண்டிருக்கின்றன.

 தமிழர்கள் பிரச்சனையில் உலக நீதிமன்றத்திலும் வழக்காடவேண்டும்  என்கின்றனர். ஸ்ரீலங்கா,மியான்மர்,பீலிச்தன் ,மால் தீப்.தென் அமெரிக்கா  போன்ற நாடுகளின்  உள் நாட்டுப்பிரச்சனையில் தலையீடு  செய்கின்றனர்.
 ஐக்கிய நாட்டு சபைகளிலும் வினா எழுப்புகின்றனர்.
.அதே போல்தானே  இந்துக்கள் மீது நடத்தப்படும்  மனிதாபிமான மற்ற மனித  உரிமை  மீறல்கள்.
 இது எப்படி வெளிநாட்டு உள் விவகாரங்களில் பாரதத்தின் தலை ஈடாகும். ஆனால் அவர்கள் மதசார்பற்ற நிலை என்ற போர்வையில் ஆத்மாவை  விட்டுவிடுயன்றனர்.

பாரத நாட்டு இந்து தலைவர்கள், இந்து அதிகாரிகள், பாராளுமன்றம், மனித உரிமைக்குழு, உள்துறை அமைச்சகம்,பாதுகாப்புத்துறை  என யாருமே ஒன்று கூடி இந்துக்களுக்காக குரல் எழுப்புவதில்லையே. ஏன்? பங்களாதேஷ்,பாகிஸ்தான் ,பூட்டன்  போன்ற நாடுகளில் இந்துக்கள் மேல் நடக்கும் மனித உரிமை  மீறல் பற்றி  பேசும் போது  அவர்கள் ஆன்மாக்கள்  இறந்துவிடுகின்றன. கொகார்ஜாரில் நடந்த அசம்பாவிதத்திற்கு  முஸ்லிம்  தலைவர் ஒன்று கூடி சந்தித்த பொழுது யாரும் மத சார்பற்ற தன்மை என்று கூறவில்லை. அதை ஏற்றனர்.
சில நாட்களுக்குமுன்  பூடாநிலிருந்து சில அரசுப்பிரதிநிதிகள்  குழு பாரதத்திற்கு வந்தது.
அதனிடம் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட  இருபதாயிரம்  இந்துக்கள் குறித்து யாரும் எவ்வித வினாவும்  எழுப்பவில்லை.
 நேபாளம்  இந்து நாடு  என்ற பதவியிலிருந்து அரசியல் அமைப்பு நீக்கப்பட்டது  என்றதுமே  சில மத சார்பற்ற வாதிகள் விழா  கொண்டாடினர்.
 சர்வதிகாரி சையீத் சா  மதவெறிபிடித்தவனை மதிக்கும் கூட்டம் அது.
 கொர்ஜாரில் இந்து போடக்கள் மீது நடத்திய  கொலை,வன்முறை  இன்னும் பசுமையாகவே உள்ளது.
காஷ்மீரில் இருந்து லக்ஷக் கணக்கான இந்துக்கள் வெளியேற்றப்பட்டதுடன்  இந்துக்கள் அமர்நாத்  யாத்திரையையும்  தடை செய்து   இடையுறாக  உள்ளனர். 

கராச்சியிலிருந்து  காஷ்மீர் வரை, காஷ்மீரிலிருந்து  கொர்ஜார்வரை நமது நாட்டிலேயே லக்ஷக்கணக்கான இந்துக்கள்  அகதிகளாக வாழ்கின்றனர்.இந்துக்களின் வீடுகள் பாழடைந்து  விட்டன. வீரமிக்க இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் இந்த பரிதாபநிலை ஏன் ?இந்துக்களின் துன்பங்களில் பங்கெடுக்காமல் அமைதி காப்பது ஏன்? அவர்களின் ஆன்மா இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ?!!