வெள்ளி, செப்டம்பர் 14, 2012

ஏமாறும் வணிக ஸ்தலங்கள்.




ஆலயம்  தொழுவது  சாலவும் நன்று .
அறம்  வளர்ப்பது ஆலயம்.
ஆலயம் சென்றால் ஆத்ம சுகம்.
ஆன்மிகம்  வளர்ப்பது  ஆலயம்.
ஆலயத்தின் நோக்கமே 
ஏழை களுக்கு உதவுதல்.
அன்னதானம் ,
பால் அபிஷேகம் , 
பஞ்சாமிர்தம் ,
தினைமாவு ,
தேன் ,
சிதர்  தேங்காய்,
தன  தானம் ,
என 
அனைத்துமே 
ஆறாம் வளர ,
ஆலயம் .
புடவை, 
வளையல் ,
சுமங்கலி பூஜை ,
நவராத்திரி சுண்டல் 
என 
மற்றவர்களுக்கு 
கொடுக்கும் எண்ணம் 
வளர 
வளர்ந்தது ஆலயம்.
இன்று 
ஆலயம் ஏழைகளுக்கு அல்ல .

பணம் படைத்தோருக்கு.
இன்றுமட்டுமல்ல 
அரசர்கள்  காலத்திலும்.
அனந்த பத்மநாபர் 
ஆனாலும் 
திருப்பதி ஆனாலும் 
பழனி ஆனாலும் 
அங்கு பக்தர்கள் 
பெருகினாலும் 
பக்தியைக்  காட்டி ,
பட்டை நாமமோ 
பட்டை விபூதியோ 
போட்டு ஏமாற்றும் 
கூட்டம் ,
ஏமாறும் கூட்டம் அதிகம்.
ஆலாயங்களா ?
அங்காடித் தெருக்களா?
கிரிவலப்பாதையா?
கடைவீதிகளா?
ஆலயம் என்பது 
இன்று 
வணிகவளாகங்கள்.
பக்தர்கள் 
ஏமாறும் 
வணிக ஸ்தலங்கள்.