வெள்ளி, மே 24, 2013

போராட்டமே. ஐம்பது சதவிகிதம்.



திருமணம்  என்பதில் மன ஒற்றுமைக்கும் ,

அன்பிற்குமே முதலிடம்  கொடுக்கவேண்டும்.

ஆனால் அதில் பெற்றோர்கள்  இளம் உள்ளங்களை 

பாதிக்கும் அளவிற்கு  பேசும்  பேச்சுக்கள்,

அதை மறந்து வாழ்ந்தாலும் அதை நினைக்கச் செய்யும் 

மீண்டும் மீண்டும்  சம்பவங்கள்.

இன்றைய கல்விப்புரட்சி யுகத்தில் 

பிரிந்தோ பிரிக்கப்பட்டோ வாழும்

 இளம் தலைமுறையினர்,

சின்ன சின்ன விஷயங்கள்,அதனால் வரும் 

மன அழுத்தங்கள் ,விளைவாக விவாகரத்துக்கள்.

பெண்கள் வீட்டிலும் சரி,ஆண்கள் வீட்டிலும் சரி 

இளம் உள்ளங்களை பிரித்துவிடும் ஆலோசனைகள் 

விவாக ரத்து வழக்குகள்.

கொலை ,தற்கொலை ,வெறுப்பும் எல்லை.

பொறுமை,சகிப்புத்தன்மை இல்லா நிலை.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை ,

குழந்தைகள் படும்  திருமணத்திற்குப் பின் ,

இல்வாழ்க்கை கசக்கும் நிகழ்ச்சிகள்.

அநாதை நிலையில் பெற்றோர்கள்,

கல்விப்புரட்சி  யுகத்தில் 

திருமண பந்தங்கள் போராட்டமே.
ஐம்பது சதவிகிதம்.










மனித மனம்.

  மனிதன்  மன எண்ணங்கள்,எண்ண அலைகள்,நடவடிக்கைகள்,நண்பர்களை

இணைத்தல்,நண்பர்களை ஒதுக்குதல்,நண்பர்களால் ஒதுக்கபடுதல்,

உறவினர்களால் போற்றப்படுதல், வெறுக்கப்படுதல் ,மற்றவர்களின் மனம் கவரப் பேசுதல்  இந்த ஆற்றல்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன.

மனிதர்கள்  போற்றப்படும் ,இகழப்படும் குணங்கள் இயற்கையாகவே வருகின்றன.

அதனால் ஒருவர் சிறந்த தலைவர்களாக முடிகிறது.சிலரால் சிறந்த நிர்வாகியாக முடிகிறது.

மனித மன எண்ணங்கள் மாறுவதும் ,எண்ணங்கள் மனதில் தோன்றுவதும்
ஒரு இயற்கையான ஒரு சக்தியால் ஏற்படுகின்றன.அதை மாற்றி உத்தமனாக
மாறும் அறிவையும் ஞானத்தையும் இறைவன் அளித்துள்ளான்.அந்த மெய் ஞானத்தைப் பெற முயற்சிக்கும் மனிதன்  தெய்வமாகிறான்.

இவ்வுலகில் உண்மை பேசுவதால் நண்பர்களை ,உற்றார்களைப் பிரிய நேரிடுகிறது. கசப்பான உண்மைகள் அதாவது நண்பர்கள் தவறு,உற்றார் உறவினர்கள் தவறு  ,தலைமைப்பீடங்கள் செய்யும் தவறுகள் மறைக்கப்பட வேண்டும்; அல்லது  போற்றப்படவேண்டும். இதுதான் உலகியல் எண்ணமாக,உளவியல் எண்ணமாக மாற்றப்படுகிறது.