வியாழன், ஏப்ரல் 25, 2013

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே

      இன்றைய  கட்டுரைத் தலைப்பு  "என்னை செதுக்கிய நூல்கள்",.செதுக்குதல் என்ற சொல் ஆழ்ந்த கருத்துடையது.கல்லை சிலையாக செதுக்குவர்கள்.
உருவமற்ற கல்  ஆண்டவனாக உயிர் பெறுகிறது..அதற்கு உளிகொண்டு அடிக்கிறார்கள். ஒரு அழகிய சிலை உருவாகிறது.அது தெய்வச்சிலை ஆனால்
அனைவரும் வழிபடுகிறார்கள்.அவ்வாறே நல்ல நூல்கள் ஒருவனை அழகாக செதுக்கி மரியாதைக்குரிய  மனிதனாக்குகிறது.மனிதனை மனிதனக்குவது கல்வி. அந்தக் கல்விக்கு வேண்டியவை  நல்ல நூல்கள்.ஒவ்வொரு நூலும் கட்டாயம் ஒரு நல்வழி அல்லது நீதி புகட்டுவதாகத்தான் அமையும்.

      நூலகம்  வாசகர் வட்டம் கட்டுரைப்போட்டி -- நூலகர்  கலந்துகொள்ளத் தூண்டியதும்  சரி என்றேன்.என்னைப்போன்றே ஒய்வு பெற்றவர்கள்  ஆறு பேர் கலந்துகொண்டோம். நீண்டனாட்களுக்குப்பின்  பேனா வில்  எட்டுப்பக்கம்  தோன்றியதை எழுதினேன்.

இறுதியில் துளசிதாசர் தோகையின்  தமிழ் கருத்துடன் முடித்தேன்.

அப்பொழுதுதான் நூலின் அருமை தெரிந்தது.நூல்கள் மனிதனை எப்படி செதுக்கு கின்றன என்பதை அறிந்தேன் .
 அறம் செய விரும்பு ... ஒரு சிறிய ஆத்திச்சூடி.ஆனால்எவ்வளவு  பெரிய படிப்பினை. ஊக்கமது கைவிடேல் -எப்படிப்பட்ட தன்னம்பிக்கை தரும் சூடி.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் ,அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

எப்படிப்பட்ட குரள்.

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே. எப்படி செதுக்குகிறது.

  

முதலிடம் பெறவேண்டும்

 இன்றைய தேவை  மனிதம்.இது

இன்றியமையாத  ஒன்று.

ஆணவம்,பேராசை,காமம் ,கோபம்  இவை
நான்கும் மிருக குணங்கள்.

ஆசை ,அவா ,வெகுளி ,இன்னா சொல் இவை நான்கும்
இழுக்க இயன்றதரம் .  என்றார் வள்ளுவர்.

நமது பண்பாடு கற்புக்கு முதலிடம் அளித்தது.

பத்தினிப்பெண்டிர்களை  தெய்வமாகப் போற்றியது.

இன்று  கற்பழிப்பு செய்திகள் அதிகம்.

இரக்கமில்லா கள்ளக் காதல் கொலைகள் அதிகம்.

பிறர் மனைவி,கணவன் ஆசையால் தம் மக்களை

தன் கட்டிய மனைவியை கொலை செய்தோர் அதிகம்.

விவாக ரத்து வழக்குகள் அதிகம்.

காரணம் நம் தமிழ் நீதி நூல்கள்  இன்றைய தலைமுறையினர்கள்

மறந்து ஆங்கிலமோகம் .
கல்வியில் நேர்மை இல்லை.
மழலைகள் பள்ளிக்கே பல லக்ஷம்.
மேற்கல்விக்கோ  மேலைநாட்டு மோகம். விளைவு
நமது சித்தர்கள்,சித்த வைத்தியம் சொன்ன

புலனடக்கம்  புறக்கணிக்கப்படுகிறது.

புலவர்கள்  புவியில் ஒரு ஒழுக்கம் ஏற்படுத்த

நீதி நூல்கள் எழுதினர்.

மம்மி டாடி யாருமில்லை -கண்ணாளா
என்றெல்லாம்  பாடல் எழுதவில்லை .

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா என்ற பாடல்,
விவசாய முக்கியத்துவப்பாடல்
இன்று ஒரு போக்கிரி கதாநாயகன்.
காவல் துறை வேடிக்கை பார்க்க,
போக்கிரி  ,பொறுக்கி என்று காவல் துறை மேம்பாடு.
கறுப்புப் பணம் கள்ளப்பணம்  கையூட்டு
இது ஒரு பழமொழியை நினைஊட்டுகிறது

அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
அரசு வருமானத்திற்கு போதைப் பொருள்  அங்காடிகள்.
அரைகுறை ஆடை வருமானத்திற்கு,
திரைப்படம் முக்கியத்துவம்.
நாயகிகள் கதா நாயகிகள் அழகு காட்டும்  விதம்,அதுவே வருமானம்.
அனைத்திலும் அலங்கோலம். 
அறுபது வயதுக்கே கிறுகிறுக்கும் என்றால்.
இளம் மாணவர்கள் மதிப்பெண் 
மதிப்பு  என்ன ஆகும்?
மாணவர்கள் தேர்ச்சி குறைவு ?
காரணம் கவர்ச்சிப்பாடல் ,கவர்ச்சி காட்சி அதிகம்.
மன சாட்சியுடன் இதற்கு ,
பண சாட்சி மறந்து,
பண்டைய பிரம்மச்சரியம் ,புலனடக்கம்  ஆகியவை முதலிடம் பெறவேண்டும்.

 मनुष्य तभी बनता है, जब उसमें  जीती है मनुष्यता.
अब  आहिस्ते -आहिस्ते  मनुष्यता तोड़ रही है दम;
मनुष्यता  में  सत्य  निहित है,  
मनुष्यता में  दया निहित है,
मनुष्यता में संवेदना निहित है;
मनुष्यता में अहिंसा  और  प्रेम  निहित है;
मनुष्यता में सहानुभूति निहित है;
मनुष्यता  में  संयम प्रधान है;
ब्रह्मचर्य  विशिष्ट  तत्व है;
ईमानदारी ,कर्त्तव्य परायणता  तो प्रधान अंग है;
निस्पृह जीवन इंसानियत का  सार  है;
दूसरों के लिए  जीना-मरना इंसानियत के प्राण है;
अब  ये इंसानियत के गुण छत्तीस  का नाता बनकर 
नव -दो ग्यारह बन गए --कारण स्पष्ट  है---
यथा राजा तथा प्रजा --लोकोक्ति सार्थक बनता जा रहा है.

புதன், ஏப்ரல் 17, 2013

வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.


    ௨௦௧௪   பாராளுமன்ற தேர்தல்.

பார் புகழ்  பாரதம்,
 இன்று  ஊழல்,லஞ்சம் ,பலாத்காரம்  என்று

பார் இகழ் பாரதமாக
பாரினில் களங்கப்  பெயருடன்
பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்
பயப்படும்  படி  எச்சரிக்கைகள்
கொடுக்கும் பத்திரிகைச் செய்திகள்.


குற்றவாளிகள் தண்டிக்கப்  பட்டாலும் ,
நாட்டை இரத்தக் கிளறி ஆக்கும் குண்டுவெடிப்புக்குத்

துணை போனாலும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்

ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்கள் ,மின்னும் விண்மீன்கள் ,
குடித்து காரோட்டி பலரைக் கொன்றாலும்
வழக்கு நடந்துகொண்டே இருக்கும் அவல நிலை.
அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் .

இவைகளைக்  கருத்தில் கொண்டு ,
இந்தியாவின் இன்னல்களைத் தீர்க்கும்
அச்சம் போக்கும் அனைவருக்கும்
ஆனந்த மளிக்கும் நேர்மைக்கும்
உரிமைக்கும் நீதிக்கும் உண்மைக்கும்
ஊக்கமளிக்கும் அரசாங்கம் அமைய
இந்திய இளைஞர்கள்
இந்த பாராளுமன்ற தேர்தலில்
 வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை
வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.






இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும் பயன் படுத்தலாமே ?

 இறைவனைப் பற்றி ,
பற்றுக  என்பதே ஆன்றோர் வாக்கு.
அனுபவத்தில்  மனிதன் தனக்கும்
 தன் சமுதாயத்தில்  மிக உயரிய நிலையில்
இருப்பவர்களை ஒப்பிடுகிறான்.

அவனுக்கு  இறவனைப் பற்றுக என்ற எண்ணம் மேலோங்குகிறது.

சாய்பாபா  கோயிலுக்கு ௨௦௦ கோடி ரூபாய் நன் கொடை கொடுத்த செய்தி.

திருப்பதி எழுமலையானுக்கு 16 கோடி .

வைரக்கிரீடம் .

காணிக்கைகள் குவி கின்றன.

அரசர் காலத்திலிருந்தே  பணமும் தங்கமும் குவியும் இடம் கோயில்.

இந்த ஆலயங்களில் இருக்கும் பணம் ,ஆஷ்ரமங்களில் இருக்கும் பணம் .

இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும்  பயன் படுத்தலாமே ?

என்பது நாத்திக வாதமா?பகுத்தறிவு சிந்தனையா? இறை  நிந்தனையா?

என்ற சிந்தனையில்  என் மனத்தில் தோன்றும் சிந்தனை  இந்த துகை/நகை/
மூலம் ஊழலற்ற ,லஞ்சம் அற்ற நேர்மையான அரசு ஊழியர்கள்,அமைச்சர்கள்
மற்றவர்கள் இருக்க ஏற்பாடு செய்யலாமே?

ஆண்டவனிடம் ஒரு பிரார்த்தனை --
(  ஏனென்றால் பல நிகழ்வுகள் ஆண்டவனைஉணர ச்செய்கின்றன.)

ஊழல் ஒழிக்க  / இரக்கமற்ற லஞ்சம் ஒழிய ஒரு அரசு சக்தியை
அசுர சக்தியாக ஏற்படுத்தட்டும்.பணம் தான் எல்லாமே சாதிக்கும் என்ற எண்ணம் ஒழிய கருணை காட்டட்டும்.
மக்கள் குறிப்பாக அதிகாரம் படைத்தவர்கள் மனதில் கடமை /நேர்மை
கோப்புகளை உடனுக்குடன் முடித்தல்,பொதுமக்களை வீணாக அலைக்களைத்தல்  ஆகியவை மாற ஆண்டவனிடம் பிரார்த்தனை.

திங்கள், ஏப்ரல் 15, 2013

ஞானம் வரும் இது அறிவியல் உண்மை.




தூய மனத்துடன் 

தும்பிக்கையானை
  நாளும் துதித்து 
நம்பிக்கையுடன் 
துவங்கும் பணிகள் 
துரிதமாக  
துள்ளியமாக
தங்கு தடையின்றி
நினைத்தபடி 
நிறைவேறுமே.

சங்கடங்கள் தீர்ப்பான் 
சக்தி மைந்தன் ,
சங்கட ஹர விநாயகன்.
சகல சுகம் தருவான் 
சர்வ சித்தி விநாயகன்.
சகலமும் தருவான் 
கற்பக விநாயகன்.
கந்தனுக்கு 
மூத்தோன்.
சிக்கலைத் தீர்ப்பான் 
சிவனின் ஜேஷ்ட குமாரன் .
முக்திக்கும் சக்திக்கும்
 வித்தாவான் 
முக்குருணி விநாயகன்.
சக்திகள் நவநிதி தருவான் 
சக்திவினாயகன்.
காதலுக்கும் கரம் கொடுப்பான்
கார்த்திகை சகோதரன்.
தாய் தந்தையரே உலகம் என்று 
சிறாருக்கு வழிகாட்டி,
கலியுகத் தெய்வம் கந்தனை 
பழனியம் பதிக்கு அனுப்பி,
தென்னாட்டில் 
தமிழகத்தில் 
காக்கும் தெய்வமாக 
தண்டாயுத பாணியை 
முருகப்பெருமானை,
ஆறுமுகனை,
கந்தனை,கடம்பனை
அனுப்பி அனுக்ரகித்த
யானை முகத்தோனை,
எளிய பக்திக்கு 
எங்கும் வீற்றிருக்கும் 
எலி வாகனனை 
இருசெவி பிடித்து 
தோப்புக்கரணம் 
போட்டால் 
ஞானம் வரும் 
இது அறிவியல் உண்மை.














விஜய வருடம்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  என்று தொண்டு செய்யவே 
தொல்லுலகில்  தோன்றியோர் பலர்  நம் பாரதத்தில் - 
ஆன்மீகக் கொள்கைக்கும் ,ஆசையில்லா வாழ்க்கைக்கும் 
வழிகாட்டிய  தர்மத் தலைவர்கள் ,கவிஞர்கள் 
வெற்றிநடை   காட்டிய  வழியினில் 
பக்தி  வழியில் பார் புகழும் பாரதத்தில் ,
பாதை தவறி முறை தவறி  பணமே பெரிதென்று 
நீதி தவறி வாழ்வோர் மனம் மாறி நேர்மை வளர 
நேர்வழியில் செல்ல  ஆண்டாள் நாச்சியார் 
ஆள்வோரை சீர் படுத்த இரு கரங்கள் கூப்பி ,வேண்டி 
விஜய  வருடம் அனைவருக்கும்  வெற்றி தர 
வாழ்த்துக்கள்; பிரார்த்தனைகள்.

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

இதை அறிவு ஜீவிகள் புத்தாண்டு விஜய் வருடத்தில் சபதமாக ஏற்றால்

 பொதுமக்களே! நாட்டைக் காப்பாற்றுங்கள் !

    விஜய  வருடம்  வெற்றி தரும் வருடம்.

இந்த வருடம் நல்ல வருடமாக அமையட்டும்.

நமது சனாதன தர்மம் நல்ல நல்ல அறிவுரைகளைக் கொண்டது.

வையகம் வாழ்க!வையகம் ஒரு குடும்பம்; -என்ற

இணையற்ற குரல் கொடுத்தது;

ஆகாயம் ஒன்றே;பூமி ஒன்றே ;

சூரியனும் ஒன்றே;

நிலவும் ஒன்றே ;

ஆகையால் மனித இனம் ஒன்றே  என்றது;

வீசும் காற்று வேற்றுமை பார்ப்பதில்லை;

கொட்டும் மழை  வேற்றுமை பார்ப்பதில்லை;

மரணமும் தக்க நேரத்தில் வேற்றுமை பார்ப்பதில்லை;

 நாம் அறிவு ஜீவிகள்;

நாம் மதம்,இனம்,மொழி என்ற வேற்றுமையால்

ஒருவர் மற்றொருவரை உயர்த்தவேண்டுமே ஒழிய

15 நொடியில் ஒரு இனத்தையே அழிப்பேன்  என்று பேசுவோரின்

முட்டாள் பேச்சை செவி மடுக்கக் கூடது;

நடிகர்களின்  கட் அவுட்டுக்கு  பாலாபிஷேகம் செய்யக்கூடாது;

அவர்களை உருவாக்கிய அறிவு ஜீவிகளின் கருத்தை

ஆராதிக்கவேண்டும்.

நடிகர்கள் இயக்குனர்,பாடலாசிரியர்,கதை ஆசிரியர்களின்

கருத்துக்களை  எடுத்துச்சொல்லும் நடிகர்கள்;

நமது தேர்தலில்  60-65% ஓட்டளிப்பதும்.

40% சதவிகிதம் ஓட்டளிக்காததும்

ஊழல் ,லஞ்சம்,அராஜகம்,கற்பழிப்பு செய்யும்

அரசியல் வாதிகளுக்கு  சாதகமாகிறது.

பணத்திற்காக  சுய லாபத்திற்காக சம்பாதிக்கும்

நடிப்புமேதைகளை  விட நல்ல கருத்துக்களை உருவாக்கி

மக்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
அறிவு ஜீவிகளைத் தேர்ந்தெடுத்து

2014 தேர்தலில் வெல்பவர்கள் ஊழலை ஒழிப்பவர்களாக,

நாட்டின் நலனே பெரும் நலனாக கருதும்,

வீரவாஞ்சிகர்மவீர,ஆசாத்,பகத் சிங் ,கொடி  காத்த குமரன்

போன்றவர்களாக இருக்கட்டும்;

இதை அறிவு ஜீவிகள் புத்தாண்டு

விஜய் வருடத்தில் சபதமாக ஏற்றால்

நாடு வையகத்தில் உயர்ந்து விளங்கும்.


சௌராஷ்டிர சங்கத்தின் தஸ்வா வின் திருவையாறு ஆராதனை

 सौराष्ट्र  संघ  द्वारा आयोजित  "पंच रत्न कीर्तन " -मेरे दोस्त जयराम .M.S.(MASTER of success)
 के और संघ के कठोर प्रयत्न से सौराष्ट संगीतन्ज्ञों  की झाँकी 

  डा ०.  जेयारम ने   नया सन्देश दिया कि   सौराष्ट्र   जाति  के वेंकट रमन भागवतर  ने ही   भक्त त्यागराज के कीर्तनों को लिखा है;
 तस्वा  विन  तिरुवैयारु - आराधना महोत्सव  पि.एस.एस. स्कूल के आडिटोरियम में 

बड़ी भीड़ के बीच   यह कर दिखाया कि  "सौराष्ट्र  के लोग पञ्च रत्न कीर्तन" में बेजोड़ है;
उनका  यह  प्रदर्शन सराहनीय रहा.  

சௌராஷ்டிர சங்கத்தின் தஸ்வா  வின் திருவையாறு ஆராதனை மகோற்சவம்  சென்னை  பி.எஸ்.எஸ். மேல் நிலைப்பள்ளி  கலை அரங்கில் மிக விமர்சன மாக  அரங்கேறியது.
அந்த சமூகத்தினரின் சங்கீதத் திறனை  உலகிற்கு எடுத்துக்காட்டிய அந்த நிகழ்ச்சி  மிகவும் இணையற்றதாக பாராட்டும்படியாக இருந்தது.

பஞ்ச இரத்தின கீர்த்தனைகளை மிகவும் ரசிக்கும் படி பாடியது அந்த சங்கீத மேதைகளைப்  பாராட்டும்படி அமைந்தது.

எனது இனிய நண்பர் மருத்துவர் ஜெயராம்  இன் நிகழ்ச்சியின் முக்கிய பொறுப்பாளர்  என்பது எனக்கு பெருமிதத்தை  தந்தது.

ಚೆನ್ನೈ ಪಿ.ಎಸ್.ಎಸ್. ಪಲ್ಲೀಕ್ಕೂದ ಕಲಿ ಅರನ್ಗಾಲ ಸೋರಾಸ್ತ್ರ ಸಂಗಮ್ ತ್ಯಾಗರಾಜ ಸ್ವಾಮಿಕಲ್ ಪಂಚ ರತ್ಹ್ಥಿನ ಕೀರ್ಥ್ಥನೈಕಲ್  ಕಾರ್ಯ ಕ್ರಮಾಲ ಆ ಸಂಗ ಜಾಥಿವಾಳ ಪಂಚ 
ರತ್ನ ಕೀರ್ಥ್ಥನಿ ಕಾರ್ಯಕ್ರಮಂ ಸಾಲ ಬಾಕ ಜರಿಹಿಂಡಿ, ಡಾಕ್ಟರ್ ಜೆಯರಂ ಆ ಕಾರ್ಯಕ್ರಮ ಆಯೋಜನ ಮುಕ್ಕಿಯ ಸದಸ್ಯದು. ವಾಲ ಪ್ರಯಥ್ಥನಂ ಪ್ರಸಂಯ ನೀಯಂಗ ಉನ್ದನು. 
ಸೌರಾಷ್ಟ ಸಮಯಾನಿ ಸಂಗೀತ ಜ್ಞಾನಂ ಭಾಗ 

வியாழன், ஏப்ரல் 11, 2013

.500 ரூபாய் வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது. இது நாத்திகவாதம். கடவுள் !!!!????

நம்பள்கி   என்பவர் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க நேரடியான சான்று

கூறி உள்ளார்.500 ரூபாய்  வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது. இது நாத்திகவாதம். கடவுள் !!!!????

இதைப்பற்றி கூறும் போது  அதிக கருத்துக்கள் காற்று பற்றிதான் வரும்.
காற்று உணர்கிறோம்; பார்க்க முடியாது.
மின்னோட்டம் சக்தி பெறுகிறோம் பார்க்க முடியாது.

உருவமற்ற இரண்டில் உணரும் காற்று இல்லை என்றால் இறந்துவிடுவோம்;

மின்சாரம் தொட்டால் இறந்துவிடுகிறோம்;

இவை இரண்டும்  உணரக்கூடியவை.

இறைவனையும் நாம் உணரத்தான் முடியும்;

  இறைவன் இல்லை என்ற குழுக்கள் உருவாவதற்குக் காரணம் இறைப்பற்றாளர்களே.

 ஆய கலைகள் 64 என்கின்றனர்;
இதில் ஓவியம் மற்றும் சங்கீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்;சிற்பக்கலையும்  சேர்த்துக்கொள்ளலாம்;

ஒரு பணக்காரர் தன்  மகளுக்கு ஒரு சங்கீத மேதையிடம்  சங்கீதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார்; அனால் அவர்கள் வீட்டில் பணிசெய்த
பணிப்பெண்ணிற்கு அழகாக பாட முடிந்தது;ஆனால் அவர் பெண்ணிற்கு பாட்டு வரவில்லை; அவ்வாறே ஓவியம் சிற்பக்கலை இரண்டும் தெய்வீகக்
கலைகள்; ஐந்துவயதில் அழகான ஓவியம் ஆசிரியர்கள் வழிக்காட்டுதல்
இல்லாமல் வரையும் ஆற்றல் பெற்ற குழந்தைகளைப்பார்க்கிறோம்.

நோயாளிகள் கோடிக்கணக்கில் சிலவு செய்தாலும் தீராத நோய்கள்;
எத்தனையோ நோயாளிகளை மருத்துவர்கள் கைவிட்டாலும்  உயிருடன் இருக்கும் அதிசயம்.

இதனால் தான் நாத்திகவாதம் எடுபடவில்லை.
பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது;
கடவுளை உணர்பவர்கள் பல கோடி;
கடவுளை காண்பவர்கள் தெய்வப்பிறவிகள் ; இறை தூதர்கள்;
மனிதனை நல்வழி ,நேர்வழி ,அன்பு,பரோபகாரம்,சத்திய மார்கத்தில் அழைத்து செல்பவர்கள்.

ஆனால் சீடர்கள் அவர்கள் மறைவிற்குப்பின் செய்யும் தவறுகள் சுயநலத்தால்
மனிதர்களை பிரித்து சண்டையிட வைத்து சுகம் காண்கிறார்கள்; அரசியல் கட்சிகள் போல்;இவர்களுக்கு தெய்வ பக்தி கிடையாது; அவர்களுக்கு நாட்டு பக்தி கிடையாது;
500 ரூபாய்  வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது.




புதன், ஏப்ரல் 10, 2013

புகார் பெட்டியில். அப்படியாவது லஞ்சம் ஊழல் ஒழியட்டும்.


"விஜய் " வருடம் ;
வெற்றியின் விஜயம்;
இந்த புது வருடத்தில் சற்றே 
புதி தாக யோசிப்போம்;

பணம் படைத்தவர்கள் ,
பாபம்  தீர,தன துயரம் தீர 
கோயில் உண்டியலில் 
போடும் பணம் 
பாரத நாட்டின் ஊழல் ஒழிக்கவில்லை;

அரசாங்க அலுவலகங்களில் 
இறக்கம் இல்லை;
மாநகராட்சி ஊழியர்கள் 
தண்ணீர் இணைப்பிற்கு   
தயவு காட்டவில்லை;
நாட்டின் பாபங்கள் தீர 
புகார் பெட்டியில் 
போடுங்கள் 
கோயில் உண்டியலில் 
போடும் பணத்தை;
கையூட்டு பெறாமல்  இருக்க 
போடுங்கள் பணத்தை 
புகார் பெட்டியில்.
அப்படியாவது லஞ்சம் ஊழல் ஒழியட்டும்.




































விஜய் .विजय . ವಿಜಯ -

விஜய் .विजय .  ವಿಜಯ   -
అందిరును  నా తెఇగు కొత్త సంవంత్ర   శుభాకాంక్షాలు 

எல்லோருக்கும்  என்    தெலுங்கு வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.


सबको  तेलुगु नव -वर्ष की  शुभ -कामनाएँ।


விஜய்  வருடம்  வெற்றி என்ற பொருள்.

விண் னைத்   தொடும்   வேற்றி ,
வினைதீர்க்கும் விக்னேஸ்வர் அருளால்,
சர்வ சித்தி தரும் சர்வேஸ்வரனருளால்,
விஷ்வ நன்மை தரும் விஸ்வநாதன்
க்ருபா கடாக்ஷத்தால் ,
அனைத்து நல்  ஆசைகளும் நிறைவேற,
ஆனந்தம் பொங்க ,மன நிறைவு அடைய,
அனந்த கிருஷ்ணனின்  பிரார்த்தனைகள்.
வாழ்த்துக்கள்.



திங்கள், ஏப்ரல் 08, 2013

\சிவவாக்கியார் பாடல்

\சிவவாக்கியார் பாடல் 

மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே 
மாட மாளிகைப்  புறத்தில் வாழுகின்ற நாளிலே 
ஓடிவந்து கால தூதர் சடுதியாக மோதவே 
உடல் கிடந்து   உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர் . 

இந்த உலகில் நாம் கோடிகோடியாக சொத்துக்கள் சேர்த்தாலும் ,
நாம் அவைகளை விட்டு விலகிப்போய் விடுவோம்.காலனின் தூதர்கள் 
எந்தநேரத்திலும் நம் மீது மோதுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.இந்த நிலைத்த உண்மை அறிந்து தெரிந்து புரிந்து இருந்தாலும்  உணராமல் உள்ளனர்.
உணர்ந்துவிட்டால் ஊழல்,லஞ்சம், போய்,புரட்டு எல்லாம் ஒழியும்.

शिव वाक्कियार   तमिल के एक सिद्ध पुरुष है;  उन्होंने अपने उपर्युक्त पद में कहते हैं कि  मनुष्य यम दूत के आगमन के अटल सत्य  को महसूस करें तो  वह भ्रष्टाचार,रिश्वत,झूठ ,आदि से विश्व बचेगा. 

अत्यंत दौलत ,प्रिय पत्नी-पुत्र ,आलीशान महल,आदि सहित ,
संतुष्ट  जीवन आनंद में जीने के दिनों में 
काल-दूत द्रुत गति से याकायक आएगा,
प्राण ले जाएगा;केवल शरीर धरती पर पडा रहेगा;
जानते  हैं  यह प्राकृतिक सत्य को लोग; 
फिर भी इस दुर्दशा  का  महसूस करते नहीं सन्सार. 


2.

கறந்த பால் காம்பில்  மீண்டும் புகாது.
கடைந்தெடுத்த வெண்ணெய்  மீண்டும் மோரில் புகாது,
உடைந்துபோன சங்கில் ஓசை எழாது.
விரிந்து வீழ்ந்த பூவும் ,உதிர்ந்த காயும் மீண்டும்
மரத்தில் புகா....அவ்வாறே பிரிந்து போன உயிர்களும்
உடல்களில் புக மாட்டா......
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை.




ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

நீதிபதிகள் மனிதாபிமானத்துடன் தீர்ப்புவழங்கவேண்டும்.

 இன்றைய தினமலர் செய்தி--தனியார் பள்ளிகளில் 25%மாணவர்கள் சேர்க்கை ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என்று.

இதற்கு மறைமுகமான பொருள் அரசுப்பள்ளி தரம் உயராது.இயக்குனர்,இணை ,உதவி இயக்குனர்,மாவட்டக்கல்வி அதிகாரி,உதவி பெரும் பள்ளிகளின் நிர்வாகம் ,அதிகம் ஓய்தியம் பெறும்  ஆசிரியர்கள். பள்ளிகள் மூடும் நிலை. மனசாட்சி நேர்மை இல்லா உத்தரவு.
மறைமுகமாக பள்ளிகள் ஏழைகள் நடத்தக்கூடாது. அரசியல் வாதிகள் நடத்தவேண்டும்.பெரும் முதலாளிகள் நடத்தவேண்டும்.

இறைவன் உள்ளானா?என்ற ஐயம் இந்தமாதிரி சூழலில் ஏற்படுகிறது. சந்தேகம் வருகிறது.நீதிதேவன் மீது.

50 ஆயிரம் நன்கொடை. பள்ளிமுதல்வர்களைப் பார்க்கமுடியாது. பிப்ரவரி மாதாம் விண்ணப்பம் வழங்கி,ஏப்ரல் மாதம் சேர்க்கை முடிவு. பின்னர் பரிந்துரை.

ஏழைகளுக்காக ஏழைகள்  நடத்தும் பள்ளிகள்.குறைந்த கட்டணம். ஆசிரியர்கள்  குறைந்த ஊதியத்தில் கடும் உழைப்பு.

நிர்வாகத்தினர்  வரும் வருமானத்தில் பள்ளியை மேம் படுத்துகின்றனர்.
வருமானம் குறைந்துள்ளவர்களுக்கு  இப்பள்ளிகள் வரப்பிரசாதம்.

பலருக்கு வேலைவாய்ப்பு. தாங்கள் கற்ற கல்வி மற்றவர்களுக்கு உதவட்டும் என்று  என்னும் தொண்டுள்ளம்.
  மக்களை மடையர்களாக்கும் அரசு; அரசுப்  பள்ளிகளில்
ஆசிரியர்கள் வருவார்கள் பாடம் நடக்கும்;தரம் உயர்த்தப்படும் என்ற  உத்திரவாதம் கொடுக்க முடியாத கல்வித்துறை.
எத்தனை பள்ளிகள் மூடும் நிலை. எந்த தனியார் பள்ளி யாவது மூடும் நிலை ஏற்பட்டுள்ளதா?

அரசியல்வாதிகள் பள்ளிகள் திறக்க அங்கீகாரம் என்ற போர்வை; இடவசதி இல்லை; இது மக்களுக்குத் தெரியாதா? இடவசதியுடன் கூடிய அரசு அரசு உதவி பெரும் பள்ளிகளின் சேர்க்கைக்கு முயற்சிக்காமல்  தனியார்களை
கட்டாயப்படுத்துவது கல்வித்துறையின் இயலாமை.

 பள்ளிகள் நடத்தக்கூடாது என்பது நிலம் வேண்டும்.பெரிய வசதிகள் வேண்டும் என்பது. தங்கள் குழந்தைகள் படிப்பு பெற்றோர் நிர்ணயம் செய்வது.பெற்றோர்கள்  தங்கள் குழந்தையின் படிப்புக்காக  படும் துயரம்
மன வேதனைகள் அதிகம்.

இச்சூழலில் திரைப்பட நாயகர்கள் அனைவருமே கதையில் போக்கிரிகள்.படிக்காதவர்கள்;காதலுக்குத் துணை போகிறவர்கள்.சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு  காவல்துறை,அரசாங்கம் பாதுகாப்பில்லை  என்ற கதைகள்.

இந்நிலையில் எத்தனை அரசு உதவிபெற்று பல ஆண்டுகளாக நடத்தப்படும் பள்ளிகள் சென்னையில் அதிகம் விளையாட்டுமைதானம் கிடையாது.

தங்கள் வசதிக்காக ஏழைகள் நடத்தும் பள்ளிகளின் மீது கைவைப்பது அநீதி.

நீதிபதிகள் மனிதாபிமானத்துடன் தீர்ப்புவழங்கவேண்டும்.



செவ்வாய், ஏப்ரல் 02, 2013

இறைவனைப்பற்றிய சிந்தனைகள்.

இறைவனைப்பற்றிய  சிந்தனைகள்.

  1. இறைவன் உள்ளானா? உள்ளான் என்பதே பெரும்பான்மை.
  2. இந்த ஐயம் எழ  காரணம்?=எண்ணங்கள் நிறைவேறாதது.
  3. வேறு?==சமுதாய நிகழ்வுகள்.பொருளாதார/ஆரோக்ய/அழகு  வேற்றுமைகள்.
  4. வேறு :-தவறு செய்பவர்கள் இவ்வுலக சுகங்கள் அனுபவித்தல்.நேர்மையாளன் இன்னல் படுதல்.


  5. வேறு :  அதிகாரிகள்,அமைச்சர்கள் அரசாங்க ஊழியர்கள் ஊழல் கண்டும் காணாமல் இருப்பது, இவைகளுக்குத் துணை போவது.
வேறு : எதிர் பாரா விபத்து./அல்ப ஆயுசு/

     மனிதனுக்குள் இறைவனைப்பற்றிய ஐயங்களை அதிகரிக்கச்செய்யும் ஆன்மிகம்:

  1. ஆலயங்கள் புனிதமானவை.நல்ல எண்ணங்களை /ஆரோக்ய அலைகளை எழுப்பும் இடம்.இன்று நகரங்கள்எல்லை விரிவு படுத்தப்படுவதால் மக்கள் வேலைப்பளு அதிகரிப்பதால் ஆலயங்கள் புதிதாக எழுப்பப் படுகின்றன. அங்குதான் ஆன்மிகம் தழைக்கிறதா ?மனிதனை வேறுபடுத்துகிறதா ? என்ற ஐயம்.
  2. ஜாதிகளின் அடிப்படையில் கோயில்கள்.ஒரு ஜாதியினரின் கோவிலுக்கு வேறு ஜாதியினர் சென்றால்  மனதில் ஒரு சஞ்சலம் தான்.
  3. எந்த இறைவனைக் கும்பிடுவது என்பதில் குழப்பம்.தாத்தா சொல்லும் விநாயகரா?,பாட்டி சொல்லும் காளியா ?,அம்மா சொல்லும் மாரியா ?.அப்பா சொல்லும் ஐயப்பனா?மாமா சொல்லும் சிவனா ?மாமி சொல்லும் விஷ்ணுவா?
  4. விளம்பரங்கள் கவரும் பல சாமியார்களா?அவர்கள் கூறும் தெய்வங்களா?
  5. ஒருமுறை சத்யா சாயிபாபா தன்  சொற்பொழிவில் , ஒவ்வொருவரின் பேச்சு சாதுரியத்தால் ஆன்மீக  சொற்பொழிவுகளால் மனிதமனம் இறைவனை வழிபட இங்கும் அங்கும் அலைபாய்கிறது.இறைவனை வழிபட  மன ஒருமைப்பாடு அவசியம்.அது எங்கே இங்கே நடக்கிறது.எவ்வளவு ஆதர்ஷமான சாயியின் சாய்ராமின் உணர்வுபூர்ணமான  வெளிப்பாடு.
  6. அவர் பிரார்த்தனை,ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை மதங்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது.மனித உள்ளங்களில் சமத்துவம், சகோதரத்துவம்,மனித நேயம்,மனித ஒற்றுமை காணப்படுகிறது. மத ஒற்றுமை,மதங்களின் நல்லிணக்கம் காணப்படுகிறது.அங்கு ஒழுக்கத்திற்கு முதலிடம். பிரசாத தட்டைக்கண்டு எழுந்து ஓடும் தள்ளு-முள்ளு, தில்லு-முல்லு  கிடையாது.அமைதி, அமைதி, அமைதி.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி  தான்.
  7. திருப்பதி ஆண்டவன் மிகவும் சக்தி வாய்ந்தவன். ஆனால்  அங்கு நடக்கும் மூலஸ்தானம்  செல்லும் இடிபாடுகள் மறுபடியும் செல்லவேண்டாம் என்ற எண்ணம்.ஆனால்...
தரிசனம் முடிந்ததும் அனைவரின் பிரார்த்தனை ஒரு இறை சக்தி ஒரு ஈர்ப்பு

மீண்டும் அடுத்த ஆண்டு வர கருணை புரியவேண்டும் என்பதுதான்.
அவ்வாறே பழனிக்கு செல்வோருக்கும் ஒரு ஈர்ப்பு.

இருப்பினும்  இரண்டு புனித ஸ்தலங்கலுமே மிக சக்திபெற்ற ஸ்தலங்களாக 
இருப்பினும் வணிக ஸ்தலங்களாக மாறிவருவது அலௌகீகத்தைவிட  லௌகீகத்திற்கு  ஊக்கமளிக்கிறதாகவே  தோன்றுகிறது.இதற்கு ஆன்மீகப்பெரியோர்கள்  ஒன்றுபட்டு முயற்சிக்கவேண்டும். இறைவன் உள்ள இடங்கள் புனிதம் கேட்டால் வீட்டிற்கும்,நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் கேடு.
அராஜகங்கள் அதிகமாகும்.

பக்தர்கள் ஆலயங்களுக்குள் இருப்பதைவிட கடைதெருவில் அதிகநேரம் செலவழிப்பது எதிர்கால  வாரிசுகள் அறிவுப்பெருக்கம் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டத்தை குறைத்துவிடும்.பக்தி அதிகரிப்பது ஒரு மாயத்தோற்ற மாகி  இறைவனின் மேல் உள்ள அன்பு,பற்று,சிரத்தை குறைந்து ஆடம்பர பகட்டு காட்டுவதாக மாறிக்கொண்டுள்ளது.உண்டியலில் பணம் சேர்வதால் பக்தியா?உள்ளத்தில் உண்மைவேண்டாமா?சம்பாதிக்கும் பணம் நேர்மையாக இருக்கவேண்டாமா?

ஊழல் பணத்தில் பிராயச்சித்தம் /ஹோமம்/யாகம் இறைவன் அருள் என்றால்......
ஆன்மீக ஐயங்கள் அதிகரிக்கும்.அதர்மம் தலைத்தோங்கும்.வானம் பொய்க்கும்.



இறைவன் இல்லை-இல்லை.ஏன் ?யாருக்கு?


இறைவன் இல்லை-இல்லை.ஏன் ?யாருக்கு?

ஒரு வாடிக்கையாளர் அடிக்கடி ஒரு சிகை அலங்காரக் கடைக்கு செல்வது 
வழக்கம்.அங்கு பல விஷயங்கள் பேசப்படும்.அரசியல்,உள்ளூர்  பிரச்சனைகள் .ஊழல்  மேலும் பல. ஒருமுறை இப்படியே பேச்சு தொடரும்போது 
நாவிதர் இறைவனைப்பற்றி பேச ஆரம்பித்தார். வாடிக்கையாளரும் மௌனமாகக் கேட்டார்.

நாவிதர் :- இறைவன் உண்மையில் இருக்கிறாரா?சாமி. இல்லை.இல்லவே இல்லை.இறைவனுக்குமுன் அனைவரும் சமம்.ஏற்றத்தாழ்வு இல்லை.இதெல்லாம் பொய்.கடவுள்னு ஒருத்தர் இருந்தால் அனைவரும் சமமாகத்தானே இருக்கவேண்டும்.பணக்காரர் ,ஏழை,ஆரோக்கியம் உள்ளவர்,நோயாளி,குருடு,செவிடு, ஊமை ,அநாதை,மலடு,
என்ன கொடுமை.கடவுள்னு இருந்தா அநீதி,ஊழல்,கற்பழிப்பு போன்றவை நடக்குமா?யாருக்கு சாமி இறைவனின் மேல் பயம் இருக்கு.தப்பு நடக்குதே?
கடவுள் இல்லை.

வாடிக்கையாளர் மௌனமாக முடி அலங்காரம் முடிந்ததும் வெளி ஏறினார்.

சிறிதுநேரம் ஆனதும் திரும்பி வந்து  நாவிதரிடம் 
இந்த ஊரில் நாவிதர் இல்லை.நீர் நாவிதர் இல்லை. என்றார்.
நாவிதருக்கு ஒன்றும் புரியவில்லை.நான்தான் இருக்கிறேனே.என்றார் நாவிதர்.
நீர் இருக்கிறீர். அங்கு பாரும்.தாடி,மீசை,பல வருடங்களாக அவர் சுற்றுகிறார்.
நாவிதர் இல்லை. நீர் நாவிதர் இல்லை.இருந்தால் ஏன்  அப்படி அவர் தாடி -மீசை உடன் சுற்றவேண்டும்.
நாவிதர்: அவர் என்னிடம் வந்தால் நான் அவருக்கு முக சவரம்,முடி அலங்காரம் செய்திருப்பேன், அவர் வரவில்லை.

வாடிக்கையாளர்:-அவர் வரவில்லை.நீர் வெட்டவில்லை.ஆனால் நாவிதர் இருக்கிறார். இல்லையா?நீர் இருக்கிறீர்?
அப்படித்தான் இறைவன் இருக்கிறார். அவரை அணுகி உள்ளன்போடு 
வணங்குபவர்கள் இல்லை. உமக்குத் தெரியுமா?மனிதர்கள் யாரும் முழு மகிழ்ச்சியுடன் இல்லை. காரணம் அனைவருமே பாவிகள்.ராமாவதாரம்,கிருஷ்ணாவதாரம்  மனித உருவில் இறைவன்.அவர்களும் தர்மத்தை வெல்ல அதர்மம் செய்துள்ளனர்.
அறிவு,ஞானம், மெய் ஞானம் அனைத்தும் பெற்ற மனிதன் செய்யும் செயலுக்கேற்ற தண்டனை அனுபவித்துவருகிறான்.செல்வச் செழிப்புடன் இருப்பவர்களும் ஆனந்தமாக இல்லை.அவர்கள் ஆலய உண்டியல்,பரிகாரம்,ஹோமம் போன்று வெளிப்பகட்டில் கௌரவம் பக்தி என்று வாழ்கின்றனர்.மனதில் வேதனை இல்லாதவர் யார்?கடவுள் படைத்த முள்ளை  ஒதுக்கும்  மனிதன் ,மலரை விரும்புகிறான்.ஆனால் ,
தன சுய நலத்தால் தவறான செயல்கள் செய்கிறான். தவறான வகையில் சொத்து சேர்க்கிறான்.
முற்றும் துறந்த  முனிவர்களுக்கும் துன்பம்.அப்படி இருக்க இறைவன் மேல் 
என் குற்றம் சாட்ட வேண்டும்.மனிதன் விஷம் என்றால் ஒதுங்குவதுபோல் ,
தீயவைகளை ஒதுக்கி  தனக்கு இறைவன் கொடுத்த கடமையை பாரபட்சமின்றி செய்தாலே இறைவனுக்கு ஆற்றும் தொண்டு.
ஊழல் செய்த பணத்தை உண்டியலில் போட்டாலோ பரிகாரம் செய்தாலோ பலன் இல்லை.பல யாகங்கள் செய்த தசரதருக்கு நிம்மதி இருந்ததா?பாண்டவர்களுக்கு இருந்ததா?ராமருக்கு கிருஷ்ணருக்கு இருந்ததா?
கடவுள் இருக்கிறார்.
உண்மையாக அவரை அணுகுபவர் இல்லை.
மனத்தூய்மை,மனசாட்சிப்படி
 நேர் வழியில் 
அறவழியில் ஆண்டவனை 
துதித்தால் துருவன்,பிரஹலாதன் ,
கண்ணப்பர்,நந்தனார்,தியாகராஜர் போன்று 
இறைவனின் அருட்பார்வை,
நேர்காணல் கிட்டும்.
இறைவன் உள்ளான்.


;-

திங்கள், ஏப்ரல் 01, 2013

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

  எனது  குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம். என் அம்மா. பெரியம்மா,சின்னம்மா
பெரியப்பா,சித்தப்பா,அப்பா,இதில் அப்பா மட்டும் சம்பாதிப்பவர். அடுப்படியில் தோசை ஊற்றும் போதே பிய்த்து சாப்பிடுதல்,தங்கள் குழந்தைக்கு முதலில் அழைத்தல், தட்டில் அதிகமாக பரிமாறிவிட்டு அந்த மீதியை சாப்பிடுதல்.இதில் சில சமயங்களில் சில குழந்தைகளும் அம்மாவும் பட்டினி.

இதற்குப் பொருளாதாரமும் சுயநலமும் காரணம். பின்னர் ஆடைகள் வாங்குதல்,பக்கத்துவீட்டுடன் நட்பு,எவ்வளவோ கஷ்டங்கள்.

இதில் சுயநலம் என்பதை விட பாதிப்புகள் அதிகம்.சிலர் செய்யும் கொடுமைகள் அவர்கள் பேச்சு, நடத்தை,நடிப்பு ஊரில் உள்ளவர்களும் சோம்பேறியாக  உழைக்காமல் இருப்பவர்களுக்கே.பாவம் நல்லவன். அவன் நேரம் வேலை கிடைக்கலே. அண்ணன் கள்  மனைவிதானே.குழந்தைகள்தானே என்று பேசும் அளவிருக்கு அக்கம் பக்கத்தில் சொல்லி  மயக்கும் உறவினர்கள். உழைக்கும் அப்பா,அம்மா,குழந்தைகள் தான் கஷ்டப்படுகின்றனர்.
நாங்கள் கூட்டுகுடும்பத்தில் தியாகம் தான் அதிகம். வேதனைகள் தான் மிச்சம்.
ரத்தபாசம் காணப்படவில்லை. பஞ்சபாண்டவர்கள் பங்காளிப்பகை  ஏன் ?
ராமன் காட்டுக்குச் சென்றது ஏன் ? ஔரங்க ஜீப் பேரரசர். ஆனால் அவர் கூட்டுக் குடும்பம் அதிகார வெறி.
ஒரு சிறிய குடும்ப சுற்றில்  எப்படி? வருமானம் வேலை இல்லா காலத்தில்
சரிப்பட்டுவந்தது  கூட்டுக்குடும்பம். ஆனால் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும்
காலத்தில்   சரிப்பட்டுவருமா? ஒருவர் பார்க்கும் தொலைக்காட்சியையே மற்றவர் பார்க்க முடியுமா? ஒருவர் விருப்பம் மற்றொருவர் விருப்பம்...
மிகப்பெரிய சகிப்புத்தன்மை இல்லாமல் இன்றைய சூழலில் கூட்டுக்குடும்பம்
சரிப்பட்டுவராது.