திங்கள், மே 27, 2013

ஒரு யுகப்புரட்சியின் போக்கா என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.



புதுச்சேரி  ,

பாரதியார்  புகலிடம் பெற்ற இடம்.

அரவிந்தரின் ஆன்மீகத்தால் புகழ் பெற்ற இடம்.

பிரஞ்சு ஆதிக்கத்தால் சதுரங்கக் கட்டம் போல் 

அழகாக அமைந்த இடம்.
இந்தியாவுடன் இணைந்ததும் 

அதன் இயற்கை அழகில் பெரும் மாற்றம்.

அழகான தெருக்கள்,
இன்று அதில் அழகு குறைந்தே தென்படுகிறது.

விரிவாக்கப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக 

௧௯௭௨ இல் எனது முதல் பணிநியமனம்  அங்கே.

மட்ராஸ் கபே  என்று ஒன்று உண்டு,

 மதிய மாதச் சாப்பாடு  ரூபாய் முப்பது
அளவு கிடையாது.
திருப்தியான சாப்பாடு.
அதற்கு எதிரில் ஒரு ஐயர் இட்லி வியாபாரம்.

ஒரு இட்லி ஒரணா.
இன்றைய இட்லிகளைவிட
 நான்கைந்து மடங்குக்குகுமேல் 
பெரிது.

மாதச்சம்பளம் ரூபாய்  நூற்று ஐம்பது.

 மன நிறைவான மன மகிழ்ச்சியான நாட்கள்.

இப்பொழுது நான் பாண்டியில் 

கிளப் மகேந்திராவில் தங்கியுள்ளேன்.
மூன்று நேர ஒருநாள்  சாப்பாடு 
ஆயிரத்து முப்பத்தைந்து கூடுதலாக வரி.

மனதில் ஒரு நெருடல்.

பாரதம் முன்னேறி உள்ளதா?

ஆம்.  அங்கும் கூட்டம்.
பணத்தை அலட்சியமாக சிலவு செய்யும் கூட்டம்.

ஏழ்மையான சூழலில் எத்தனையோ பேர்கள்.

எங்கும் ஒரு பெரும் கூட்டம்.

இங்கே உணவு அலட்சியம் செய்யப்படுகிறது.

லக்ஷிமிதேவியின் ஓட்டம்  அதிகம்.

அங்கு  கடல் கரையில்  தானே புயலின் தாக்கம்.

விலை போய் வீடுகளாகி காட்சி அளிக்கும் 

விளை நிலங்கள்.

பாரதம் பொருளாதரத்தில் முன்னேறினாலும் 

ஏக்கப் பெருமூச்சுவிடுவோர் எண்ணிக்கையில் அதிகம்.

நாடு முன்னேறியதா? என்பதில் ஐயம் அதிகம்.
மனித மனம் கல்மனமாக 
இரக்கமற்றதாக சுயநலமாக மாறிவருகிறது.
அரசியல் நாட்டு முன்னேற்ற சமத்துவப் 

பாதையில் செல்லாமல் ,
சிலைகளுக்கும் நினைவு மண்டபங்களுக்கும் 
கோடிக்கணக்கில்  சிலவு செய்வது 

முன்னேற்றமா ?எதிர்கால சந்ததியினர்களின் 
ஒரு யுகப்புரட்சியின் போக்கா 
என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.










.