புதன், நவம்பர் 21, 2012

! பாரதம்!

வாழ்க பாரதம்!


மனிதன்  பேராசை உள்ளவன்.அனைத்து உயிரினங்களும் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு   திருப்தி  அடைகின்றன.ஆனால், மனிதன் பல தலைமுறையினர்களுக்காக  சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுகிறான்.அதன் பலனாக ஆஸ்தி சேர்ப்பதற்காக அவன் முயற்சிக்கிறான். ஆட்சி செய்பவர்கள் முதலில் தன்  பாதுகாப்புக்காகவும்,நாட்டின் பாதுகாப்புக்காகவும் தன கரூவூலங்களை நிரப்பிவைத்தனர்.மக்களும் அரசனை தன் பிரதிநிதியாகக்
கருதினர்.நாட்டின் நலத்தைப் பெரிதாக மன்னர்கள் கருதிய காலம்.ஆனால்  அவர்கள்,மக்கள் நலத்திற்காக  கல்வி என்ற அழியா செல்வத்தை அனைவருக்கும் தர முன்வரவில்லை. அதன்,பலனாக
நாடு துண்டு  களானது.  இந்த மன்னர்கள் நாட்டை விட  தன் ஆணவம், வீரம்,காதல், தன குறிகிய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு என்ற வலையில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தனர்.
எதிரிநாட்டு செல்வங்களைக் கொள்ளை அடித்து  தன்  அரண்மனை கரூலத்தில்  சேர்த்து வைத்தனர்.
அந்தப்புரங்களை அழகு படுத்தி ராணிகளுடன் ஆனந்தமாக இருந்தனர்.கல்வி அற்ற மக்களும் அரசன் கைதட்டினால் சேவகம் செய்ய உயிரை விட தயாராக இருந்தனர்.
        பல  மொழி,இயற்கை,உணவுப்பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் ஹிமாலயம் முதல் கன்னியாகுமரி  வரை  வேறுபாடு  இருந்தாலும்  ஒரு தெய்வ ஷக்தி  நாட்டை ஒற்றுமை படுத்தி வந்தது.
சிவன்,விஷ்ணு ,சூரியன்,சந்திரன் என்ற தெய்வங்களை விட ,உருவ,அருவ வெளிப்பாடும் நடந்துவந்துள்ளன. இறைவனைப்போற்றும் நூல்கள்   வட மொழி,தென் மொழிகளில் இயற்றப்பட்டாலும்,குஹன் சபரி,விதுரன் ,நந்தனார்,கண்ணப்பர் கதைகள் கூறப்பட்டாலும் சமுதாயத்தில் மிகப்பெரிய வேறுபாடு.

      இந்த சனாதன தர்மம் வளந்த பாரத தேசம்  வெளிநாட்டினர் புகுந்ததால் சிந்து நதி மூலம் வந்து
ஹிந்து அல்லது ஹிந்துஸ்தானம் ,ஹிந்து தர்மம் என்று மாறியது. சுயநலத்தால் இருந்த மன்னர்களும்,
மதவாதிகளும் மக்களை மடையர்களாக்கி தங்களுக்குள் இருந்த பகையால் வெளிநாட்டினர் ஆட்சி
அமைக்க காரணமாக இருந்தனர்.விருந்தாளிகள் தெய்வம் என்றனர்.  अथिति देवो भव्
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால் ஆண்டவனுக்கு மற்ற மொழி  வழிபாடு புரியாத.? என்ன.
சர்வ ஷக்தி உள்ள ஆண்டவன் பல சோதனைகளைக் கடத்து வந்த மக்களுக்கு சர்வ சிக்ஷா அபியான்
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் வரை வழிகாட்டி உள்ளார்.
பல இளைஞர்கள் ஜாதி,மத,இனம் வேறுபாடு மறந்து காதல் திருமணம் செய்யும் அளவிற்கு பகுத்தறிவு ப பெற்றுள்ளனர்.
மக்கள்  தன்  நாட்டின் வரலாறு அறிந்து சிந்தித்து பரந்த மனப்பான்மை உடன் சயநலம் மறந்து
பாரத நாட்டின் ஒற்றுமைக்கும் தேசனலனுக்கும் வேறுபாடுகள் மறந்து  நாட்டைப் பாதுகாக்கும்
உயர்ந்த எண்ணங்கள் தர இறைவனைப் ந்ப்ரார்த்திப்போம்.
வாழ்க பாரதம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!வந்தே மாதரம்!

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -11.

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -10

அம்மாவிற்கு  உடல் நிலை சரி இல்லாத போதும்  ,ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். எனக்கும் தம்பிக்கும்  19. ஆண்டுகள் வித்தியாசம்.மிக செல்லமாக வளரவேண்டியவன்.
அம்மா  பள்ளிகள் நடத்தினாலும் பையனை கவனிக்க முடியவில்லை. அவனையும்  பட்டதாரி  ஆக்கினார். அம்மாவிற்கு நான் தான் வேலைக்கு போய் விட்டேன். என் தம்பியாவது பள்ளியை நிர்வஹிக்கவேண்டும் என்று.ஆனால் எனக்கு அவன் வேலைக்கு செல்ல வேண்டும்  என்று. அவனும் வேலைக்கு சென்றான்.நானும் என் பள்ளியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.
ஆனால் அம்மாவின் விருப்பமோ அல்லது ஆண்டவனின் விருப்பமோ தெரியவில்லை,எங்கெங்கோ வேலைக்குச் சென்று இறுதியில் பழனிக்கே வந்து பள்ளியை நிர்வாகம் செய்கிறான். அவன் மனைவியும் பள்ளியில் கவனம் செலுத்துகிறாள்.வருமானம் குறைவு என்றாலும்,இருவருமே சிக்கனமாக,பள்ளியை நடத்திவருகின்றனர். எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை இருந்து பள்ளியை நடத்த அருளவேண்டும்.பல சோதனைகள்.பொருளாதார வசதி இல்லை.அம்மாவிற்கு இன்றும் அந்த பள்ளியின் நினைவலைகள் தான்.பள்ளிவளர வேண்டும் என்பதே.எல்லாம் அவனருளால்  தான் நடக்க வேண்டும்.

இறைவனின் சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான் புரியும்.

மரணம்  மற்றவர்களின் மரணம் .ஆறுதல் .மரணம் நிச்சயம். நம் தந்தையின் மரணம் நமேக்கே நாம் தேற்றிக் கொள்வது.
என் அப்பா சொல்வார்.உலகம் மிகவும் ஆபத்தானது. மிகவும்  ஜாக்கிரதை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். மரங்கள் பல தானாகவே வளர்கிறது. அதில் முள்ளும் இருக்கின்றன. நிமிர்ந்தும் ,வளைந்தும் உள்ளன.முடத்தேங்குகளும் உள்ளன. விஷமும் உள்ளது.அது பருவகாலங்களுக்கேற்ப இலைகளை உதிர்த்து துளிர்கிறது. அப்படியே குடும்ப விருக்ஷம். இன்ru சொன்னதுபோல் இருந்தாலும் 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் போன்ற தளிர்கள் பேரன் பேத்தி,நான். இறைவனின் அதிசயம்.அறிviயல் சற்றே பணிவது இதற்குத்தான். இல்லை எனில்...உலகம்......ஆஹா!
அஹங்காரர்களின் அசுர ஆட்சிகள் அழியாமல் தான் இருக்கும்.நான் எனக்கு நானே செய்துகொண்ட ஆறுதல். ஆறு பருவகாலங்கள் போல் தான் வாழ்க்கை.மனிதவாழ்க்கையும் அப்படித்தான். நாம் அழுவது சிரிப்பது புரிந்து தெரிந்தே செய்யும் அறிவற்ற ஆனால் அறிவுள்ள செயல்.இறைவனின் அபூர்வ உணர்வுகள். தான் ஆடவிட்டாலும் தன்  சதை ஆடும்.என் அப்பா பழனியில் ப்ராnaaவஸ்தை. 
அன்று என் பையன் பத்தாவது பாஸ் சேதி. 
என் அடிவயிற்றில் ஒருகலக்கம். 
ஐயோ என்று கதறவேண்டும் என்ற துடிப்பு.சென்னையில் .
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விஷயத்தை சொல்லாமல் பழனி செல் என்றார். புரிந்துவிட்டது.இதுதான் ரத்தபந்தம்.
இறைவனின்  சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான்  புரியும்.மற்றவர்களுக்குக் கூறும் ஆறுதலை நினைத்து  naam aaruthal adaiya vendiyathuthaan.