ஞாயிறு, அக்டோபர் 21, 2012

கோடிக்கணக்கில் பணம் ஏன் சிந்திப்பீர். செயல்படுவீர்.

கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர். செயல்படுவீர்.

மதங்கள் 
மத நம்பிக்கைகள்,
கடவுள் 
கடவுள் நம்பிக்கைகள் 
மனிதனை 
மனிதானுக்குகின்றன.

ஆனால் 
அந்த நம்பிக்கைகள் 
சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
ஆனால் 
இன்று 
அவைகள் மூடநம்பிக்கைகளாகி 
வாணிகமாகிவிட்டன.

இன்றைய செய்தி.
ஒருஆஷ்ராமத்தில் 
குருபாத தீர்த்தம் என ஒரு மயக்க மருந்தளித்து 
ஒரு பெண்ணை பலர் சேர்ந்து கெடுத்துள்ளனர் 

ஆஷ்ரமங்கள்  ஆஸ்திகள் சேர்த்ததுமே 
இந்தமாதிரியான   செயல்கள் தொடங்க ஆரம்பிக்கின்றன.
இன்றைய கலியுகத்தில்  இறைவழிபாடும் 
ஒரு வணிகமயமான ஏமாற்றும்   ஸ்தலமாக 
மாறிவருகின்றன.
இன்றும் சக்திவாய்ந்தசித்தர்கள்  உள்ளனர்.
உண்மையான பக்தியால் இல்லத்திற்கே ஏதோ 
ஒருவிதத்தில் நம்மை ரட்சிப்பார்.
ஆகையால் 
ஆஸ்ரமங்கள் நாடிச்சென்று ஏமாறாதீர்கள்.
பணம்பத்தும் செய்யும்.
சிறைசென்ற சாமியார்கள்  பண  பலத்தால் 
சஞ்சரிக்கின்றனர்.
சாமி யார் என்ற நிலைக்கு வந்தபின் 
கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர்.
செயல்படுவீர்.


மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம், நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

அல்லது

பெற்றோர்களின் அவசரமா?

அல்லது  இயற்கையின்  உந்துதலா?

பெற்றோர்கள் தங்கள் கடமை முடிக்கவேண்டும்  என்ற கடமை உணர்வா?

காதலிப்பதாலா?

 அனைத்து  திருமணங்கள்  ஆனந்தத்தில் முடிகிறதா?

மண  முறிவு பெறப்படுவது   ஏன் ?

குழந்தைகள் பிறப்பு ,வளர்ப்பில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?
படித்த  மேதைக்கு  அறிவில்லா  குழந்தை.
படிக்காத  அறிவிலிக்கு  குழந்த அதி மேதாவி.

ஏழையின்  குழந்தை பணக்காரனாகிறான்.

பணக்காரனின் குழந்தை ஏழை ஆகிறான்.

மருத்துவரின்குழந்தைநோயாளி ஆகிறான்.
பணம் படைத்தோரும்  மன வேதனையில் உள்ளனர்.

இதனால் தான் ஜோதிடக்கலை வளர்கிறது.
சாமியார்கள் வளர்கிறார்கள்.
இதில்  உண்மையானவர்கள்  மரத்தடியிலேயே வாழ்கின்றனர்.

போலிகள்  கோடீஸ்வரனாகின்றனர்.

மக்களிடம்  இறைவன் மேல் உண்மையான  பக்தி,நேர்மை ,சத்தியம்
இருந்தால் தனக்கு  வரும்  சோதனைகளில் நிம்மதி அடையலாம்.

கலி யுகத்தில்   நாம ஜெபமே போதும்.
அங்கிங்கெனாதபடி  எங்கெங்கும்  ஆனந்த பூர்த்தியாய்  இருக்கும்
ஆண்டவனை  ,சத்குருவை  வீட்டில்வழிபட்டால்  போதும்.

கடன்வாங்கி,தானம் வாங்கி ஹோமங்கள் ,யாகங்கள் செய்ய முடியாது.
பணமுள்ளவர்களுக்கே  பாப விமோசனம்  என்பது தான் மூடநம்பிக்கை.

சற்றே மனதில் சிந்தியுங்கள்.நம்மிடம்   உண்மை,நேர்மை,சத்தியமிருக்கிறதா?
என்று. உலக  வாழ்க்கையில்  இது  சாத்தியமா? என்று வினவினால்  துன்பமே.

தூயமனத்தில் இறைவன் மட்டுமே இருப்பான். செய்த  பாபங்களை விட்டுவிடுங்கள்.

நீங்கள் எந்த மதத்தில்  தோன்றிநீர்களோ,
உங்கள்  பெற்றோர் எந்த இறைவனை 
வழி பட்டனரோ,
அந்த இறைவன்பெயரை  மட்டும் சொல்லுங்கள்.
கடமையாற்றுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் 
"நாம ஜபம்" செய்யுங்கள்.
குறுக்குவழியில்
 முன்னேறுபவர்களை ப் 
பார்க்காதீர்கள்.
உலகில் யாருமே மன நிறைவுடன் இல்லை.

இறைவன் பெயரை முடிந்த அளவுக்கு 
சொல்லுங்கள்.
மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.
கலியுகம்=சுய சிந்தனை 
உள்ளவர்களுக்கு.
நேர்மையாளர்களுக்கு.
தன்  இல்லத்திலேயே 
நாம ஜபம் செய்வோர்களுக்கு.
வெளியில் அனைத்துமே
வணிகமே.
கபீர் தாசர் :
பூவில்  மண மிருப்பதுபோல்,
கஸ்தூரி மான் வயிற்றில் 
மணமுள்ள  கஸ்தூரி இருப்பதுபோல்,
கடவுள்  உன் மனதிற்குள் இருக்கிறார்.
உனக்குள்  இருக்கும்  இறைவனை அறியாமல்  வெளியில் தேடுகிறாய்.
இதற்குப் பொருள்  இறைவன் மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் அளித்துள்ளான்.உன் இறைவனை உனக்குள் தேடு.
வெளியில் தேடினால் பொருளாதாரக் கேடு.
அதில் தானம் ,தர்மம் செய்.










விதி என்பது வலியது என்றனர்.---சிலர் விதியை வெல்லலாம் என்றனர்.


விதி  என்பது வலியது என்றனர்.---
சிலர் விதியை  வெல்லலாம் என்றனர்.

மதி எல்லாம் அதிக பட்சம் குற்றங்கள் 
புரியவே?
மதிமயக்கும் விதி என்பர்.
அதனால் தான்  ஊழல் புரிந்தோர்,
ஊழலின் எல்லைக்கே சென்று--இன்று 
செய்தித் தாளில் நீ ஊழல் -நான் ஊழல்,
அவன் ஊழல்,ஊழல் ஊழல் என்று சொல்பவனும் 
ஊழலுக்குத் துணை போவோர் சிலரின் 
ஊழலை மறைப்பதாகக்  குற்றச்சாட்டு.
குற்றம்புரிந்தவன்  வாழ்க்கையில்  
நிம்மதி  எது?
ஆனால்விதி மதியை மயக்கி 
மேலும்மேலும் குற்றங்கள் .
நடந்த  வண்ணமாக உள்ளன.
அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??

அல்லது  விதியென  துன்பங்களை  அனுபவிப்பார்களா/
அப்படித்தானே அயலார் ஆட்சியையும்
இப்பொழுது  மன்மொஹன்சிங்கை ஆட்டிவைக்கும்
தலைவியையும் ஏற்று வாக்களிக்கின்றனர்.