ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஆங்கிலப் புத்தாண்டு பிரார்த்தனை.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிரார்த்தனை.

அன்பும் ,ஆற்றலும் பெருகவே,
அநியாயங்கள் அகலவே,
அதிகாரிகள்,பொதுமக்கள்,
அரசியல் வாதிகள்,
பேராசையின்றி கடமை செய்யவே,
ஊழால்-லஞ்சம் ஒழியவே 
பேரருளாளன் ஆண்டவன் 
அருள் பொழிய ,
அனைவரையும் 
நல்ல நேராளனாக மாற்ற 
நல்லவர்கள் நோய்-நொடி இன்றி 
சகல செல்வங்களும் பெற்று 
தீயவர்கள் நல்லவராகி ,
அன்பும் பாசமும்,நேசமும்,
தேசப்பற்றும் உள்ளத்தில் 
கொண்டு வாழ கிருபைகாட்ட 
கணேசனிடம் பிராத்தனை.
அவன் தம்பி ஆறுமுகனிடமும்.
அவர்கள் தந்தை சர்வேஸ்வரநிடமும்,
விஷ்ணு விடமும் 
அல்லாவிடமும்,
ஏசுவிடமும் 
ஜகம் முழுவதற்கும் கிருபை காட்ட 
பிரார்த்தனை.
புத்தாண்டு பிரார்த்தனை.
ஆங்கிலப் புத்தாண்டு 
பிரார்த்தனை.

சனி, டிசம்பர் 29, 2012

சரியான தண்டனை.

பாலியல் பலாத்காரம்
தில்லியில் படு அமர்க்களம்.
தமிழகத்தில் செய்திதாள்களில்
வராத நாளில்லை.
அதுவும் சிசுக்கள்
மனிதர்களா?மிருகங்களா?
நாய் ஜென்மங்களா?
ஈடுபடுவோர் மட்டுமல்ல,
இக் காமக் கொடூரர்களைக்
காக்க  வக்காலத்து வாங்குவோரும்,
அந்த கொடியோர்களை ஆதரிப்போரும்
தண்டனை பெறவேண்டும்.
இக்கொடூர செயல் எந்த உருவத்திலும்
காக்கக் கூடாது.
குற்றவாளிகளை ஆதரிப்போருக்கும்
தண்டனைகள் கடும் தண்டனைகள்
தரப்படவேண்டும்.
பாலியல் கொடுமை,
மரணத்திற்கு மரண தண்டனையே
சரியான தண்டனை.

இனிதே கொண்டாடி, இந்தியப் பண்பு காப்பீர்.

ஆங்கிலப் புத்தாண்டு ,
 ஆடம்பரமாகக் கொண்டாடுவோம்.
ஆங்கிலம் இல்லையேல்
இல்லையே  வேலை.
வேலை இல்லையேல்
வேதனைதானே.
வைத்தியம் ஆங்கிலம்,
கல்வி ஆங்கில வழி
ஆனால்
காலம் தவறாமை,
கடமை தவறாமை,
கண்ணியமான பார்வை,
பொன் ஆசை இல்லாமை
நேர்மை போன்றவை
பின்பற்றப்படாமல் ,
அங்கு வெறுப்பதை
ஒதுக்குவதை  இங்கு  ஏற்பது ஏனோ?
ஆங்கிலம் அனைத்தும்
தந்தாலும்
நள்ளிரவுக் கும்மாளம்
நமக்கு ஏற்றதா?
எத்தனை எத்தனை இழிசெயல்கள்.
கேக் உணபதற்கா? உடலில் பூசவா?
உடலில் பூசும் கேக்கை
உதவும் கரங்களுக்கு ஈயலாமே?
நடுநிசியில் போதை,ஆட்டம்,
நம் நாட்டு சீதோஷ்ணத்திற்குப்
பொருத்தமா?
இறுக்கமான ஆடைகள்
சில தோல்நோய்கள் அரிப்பு,படைக்குக்
காரணம்.
வெப்பமுள்ள நாட்டில்
வேனைக்கட்டிவருமே/
வியர் வைக்கிருமிகள்
பெருகுமே.
ஆங்கிலத்தைக் கொண்டாடுங்கள்.
நம் பண்பாடு விட்டு
பட்டுப் போகாதீர்கள்.
உணவு நம் முன்னோர்வழி
தான் சிறந்தவழி.
வேக  உணவு,
வேகமாக ஆரோக்கியக்கேடு.
பட்டம் பெற்றோரே!
நள்ளிரவு உணவாக விடுதி
வீண் ரகளை
ஆங்கிலப் புத்தாண்டு
துயர சம்பவம் இன்றி
கொண்டாடுங்கள்.
இங்கிலீஷ் இளைஞர்களுக்கு
ஆங்கிலப்புத்தாண்டு.
இனிதே கொண்டாடி,
இந்தியப் பண்பு  காப்பீர்.







வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஆண்டவனை வேண்டி , அ றம் செய்வோரைக் காக்கும் கலியுகம். அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்புத்தாண்டு  2013 ,
ஆனந்த  மிக்க ஆண்டாக ,
இனிய சுகங்கள் தரும்,
மன நிறைவுதரும் ஆண்டாக.
மகிழ்ச்சிதரும்  ஆண்டாக,
மங்களம் தரும் ஆண்டாக,
சத்தியவான்களும்,
நேர்மையாளர்களும்
நியாயவாதிகளும்
தலை நிமிர்ந்து பயமின்றி செல்லும்
ஆண்டாக ஆரம்பித்து,
ஆண்டாண்டுகள்   தொடர,
ஆண்டவனை   வேண்டி ,
அ றம் செய்வோரைக்
காக்கும் கலியுகம். அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வியாழன், டிசம்பர் 27, 2012

கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை; இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.


செய்திகளும்  மக்களும்

தில்லி கலவரத்தில் காவலர் மரணம்.
உசிலம்பட்டி  காவல்துறை ஆய்வாளர் மரணம்.
கற்பழிப்புகள்;4வயது சிறுமி பலாத்காரம்.

தில்லி காவலர் மரணம் குறித்து
காவல்துறை அறிக்கை ,பொதுமக்கள் கூற்று,
எது உண்மை ?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியால்தான்
உண்மை அறிய முடியும்.
மக்களுக்குப் பாதுகாப்புத்தரும்
அரசியல்வாதிகள்,பணம் படைத்தோர்,பணத்திற்கு மயங்கும்
அதிகாரிகள்,இரத்த பந்தத்தால்
இந்தவித குற்றங்களை ஆதரிப்போர்,கம்சன்,
இராமாயண ,மஹா பாரத காலத்தில் இருந்து
நடக்கும் அவலம்.
மாற்றான் மனைவியின்மீது ஆசை கடத்தல்,
இன்றா நேற்றா,
இராவணன்,இந்திரன் ,கம்சன் ,திரௌபதி துகில் உரித்தல்,
அதிகாரபலம்,சூதாட்டம்,வரலாறு காட்டும் உண்மைகள்.
அவரவர்கள் பாதுகாப்பு அவரவர்கள் சக்தியால்,
அறிவுத் திறனால்.
மக்களுக்கு எச்சரிக்கை தேவை.
தங்களைத்தாங்களே பாதுகாக்கும் ஆற்றல்,
ஊழல் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,
ஊழலை ஆதரிக்கும் பொதுமக்கள்,
தன்னலம் இதுவே இன்றைய சூழல்.
ஒரு தெய்வீக சக்தி,மனித  சக்திக்கு அப்பாற்பட்ட
சக்தி ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
கிடைத்து,சட்டத்தை,புலனடக்கத்தை,
நீதி,சத்தியம்,தர்மம்,நேர்மை மதிக்கும் பண்பு ,
பெற  இறைவணக்கம்  ஒன்றே வழி .
திரைப்படம்,சுயநல எழுத்தாளர்கள் ,
வணிக நோக்க விளம்பரதாரர்கள்
அரசியல் தலைவர்கள் ,
காமத்துடன் கலந்த காதலுக்கு
முக்கியத்துவம் அளிப்பதால்வரும்
கொடூரங்கள்;
துர்க்கை! நீ நேர்மையாளர்களுக்கு ஆற்றல் கொடு;
ஆணவ அநியாயங்களை ஒழிக்க அவதாரமெடு;
இன்றைய என் பிரார்த்தனை இதுவே.
ஆலயங்களும் வணிக நோக்கம்;
அரசியலும் வணிக நோக்கம்;
கல்வியும் மனித வனிகநோக்கம்;
கலவியிலும்  மனிதநூகாம்;
காளி  தேவியே!
கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை;
இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.

செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

ஏசுநாதர்  பிறந்த நாள்.
எளிமை,சேவை,அன்பு, மனிதப்பண்பு,
 பாபங்கள்   தான் ஏற்று ,
மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க,
ரத்தம் சிந்திய மகான்.

இந்நன்னாளில்  நல்லதே செய்து,
செய்த பாபங்கள் உணர்ந்து
 உயர்ந்த சிந்தனைகளுடன் ,
உண்மை,நேர்மை ,சத்தியம் ,அன்பு ,சேவை,
பரோபகாரம் என்ற உயர் குணங்களுடன் ,
உலகில் வாழ்ந்து இறை தூதர் துணையுடன்
உயர்ந்த மனிதனாக வாழ , உள்ளநிறைவு,மகிழ்வுடன்
வாழ ,
கிறிஸ்மஸ் தின 
வாழ்த்துக்கள்.

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஜாதி ஒழிந்தது. ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.

"காந்தி என்ற பெயரில் என்ன  இருக்கிறது"---என்றதொரு கட்டுரை.


"காந்தி "  என்ற  பெயரில் ஜாதி இருக்கிறது.பனியா ,வைஷ்ய  என்பதுதான் பொருள்.

நம்த தலைவர்களை  அன்னாஜி ,நேஹ்ருஜி,காமரஜ்ஜீ  என்பதுபோல்

மோகன் ஜீ  என்று அழைத்திருக்கலாம்.இப்பொழுது அனைவரும் காந்தி  சேர்ப்பதால்  ஜாதி ஒழிந்துவிட்டது. ஆனால் ,காந்தி என்றால் இந்திரா,ராஜீவ்,சோனியா  என்றே பலர் நினைக்கின்றனர். படித்தோருக்குத் தெரிந்து  இப்பொழுதுதான்  அனைவரும் துணிந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

நான் முதலில் இதை வெளியிட்ட பொழுது பலர் ஆச்சரியப்பட்டனர்.

ஹரிஜன்  என்ற  சொல் கபீரின்  தோஹையில்  உள்ளது.

கபீர்  சொல்கிறார்=="நாடும்,சொத்தும்,பெயரும்,புகழும் இறைவன் அளிப்பவை.

இறைவனை அளிப்பவன் பக்தன் ,அதற்கு அவர் எழுதிய சொல் "ஹரிஜன்".

எளிய மொழியில் ஆழ்ந்த கருத்தை வெளி யிட்டால் அது படிக்காதவன் ,கிராமீயப்பாடல்.
அது அனைவருக்கும் புரியும்  மொழி. அனைவராலும் ஒதுக்கப்படுவது

அதனால் தான் நாம் அடிமையானோம் .

இன்றும் பலர் பல விஷயங்கள் புரியாமல் இருக்கும் மொழியிலேயே

புரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

சோனியா காந்தி ஊழல் என்றால் காந்தியின் வாரிசின் ஊழல் என்று
நினைப்போரும் உண்டு.
தேசீய கீதம்   வங்க  மொழி என்பது தெரியாதவர்களும் உண்டு.

    காந்தி  என்பதற்கு முக்கியத்துவம் அளித்து  ஜாதிப்பெயர்   பொதுப் பெயராகியது.

ஜாதி ஒழிந்தது.

ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.




. இதுதான் உலகம்.

நமது முன்னோர்கள்  வாழ்க்கையை பிரம்மச்சரியம்,க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம்,சன்யாசம் என்று பிரித்து   மனப்பக்குவம் ஏற்படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவிலும் அவர்கள் வாழும் முறை சாகும் வரை தன சக்தியை நம்பியே.90 வயதில் கார் ஓட்டி  செல்லும் முதியர்.ஒரு கை இல்லாமல் ஒரு முதிய பெண் சாமான்களை எடுத்து காரில் வைத்தபொழுது உதவச்சென்ற  என் மகனைத் தடுத்துவிட்டார்.அது அவர்கள் தன்னம்பிக்கை. நான் 58 வயதில் வயதில் ஒய்வு பெற்றதும் தளர்ந்துவிட்டேன்.அங்கு சென்றதும்  இளமையை உணர்ந்தேன். ஏன் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.
நம் சனாதன  தர்மம் வாழ்க்கைத் தத்துவங்களைக் காட்டுகிறது. தசரதர் மூப்படைந்ததும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.

நாம் வயதானாலும் 52 வயது மகனை குழந்தையாய் தான் பார்க்கிறோம். நாம் நமது கலாச்சாரத்தை ஆழ்ந்து படித்தால் பிரிவு ஒன்றும் பெரிதல்ல.

தாயின் கருவில் இருக்கும் காலம் தாய் நாடு.பின் நாம் வெளிநாடுதான். இயற்கை நீதி  ஆகையால் தான் நம் சகோதர மதம் இஸ்லாம் இறப்பில் சிரிக்கிறது.  பிறப்பில் அழுகை.வாழ்க்கையின் எதிர் நீச்சல். இதுதான் உலகம்.

வியாழன், டிசம்பர் 20, 2012

குஜராத் தேர்தல்

குஜராத்  தேர்தல் 

மோதியின்   வெற்றி அவரின் தனிப்பட்ட சாதனையின்  வெற்றி. அதன் சான்றுதான் 
ஹிமாச்சல் பிரதேச  தோல்வி.

மக்கள்  சாதனைகளைப்ப்பார்க்கிறார்கள் ,சாதி-மதம் 
பார்ப்பதில்லை.இருப்பினும் ஊழல் என்று போற்றப்படும்  காங்கிரஸுக்கு  ஓட்டுகளும் ,வெற்றியும்   மக்களின் மோகம் சற்றே குறைந்தாலும் சற்றே மீண்டும் காங்கிரசுக்கு  ஆதரவு  உள்ளது. மக்கள் ஊழல்களை ஆதரிப்பதுபோல்  உள்ளது. படுதோல்வி ஏற்பட்டாலே விழிப்புணர்வு என்ற நிலை மாறி 
சற்றே  அதற்கு உயிர்காற்று கிடைத்துள்ளது. 
மக்கள்  மீண்டும்  தங்கள் சக்தியை 2014 தேர்தலில் காட்ட  வேண்டும்.ஒரு முறை ஊழலுக்கு மரண  அடி கொடுக்கத் தயங்காத  நாட்டுப்பற்று வரவேண்டும். சர்வசக்தியான ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.

புதன், டிசம்பர் 19, 2012

மன சாட்சி இல்லா போராட்டம்.


நாட்டில்  ராமரையும் இறைபடங்களையும் செருப்பால் அடித்தபோது மௌனம்.

இறைவன் உருவம் பதித்த உடைக்கு எதிர்ப்பு. 

எத்தனையோ புடவைகள் இறைவனின் படத்துடன் வந்துள்ளன.

கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடலாமா என்ற பாட்டிற்கு எதிர்ப்பு இல்லை.

குஷ்பு விஷயப்போராட்டங்கள்   வீண்.மன சாட்சி இல்லா போராட்டம்.

இறவன் படம் நாமம் போட்ட துண்டுகள் அணிகிறோம்.
ஐயப்பன்  பெயர் எழுதிய துண்டுகள்.
கோயிலில் சாமி படம் போட்ட திரை. 

அதில் துடைக்கும்  ஈரக்   கைகள்.
சாமி அல்லது அம்மன் திரை அழுக்குத்திரையாக.

வீண் போராட்டங்கள் விடுத்து ஆக்கப்பணிகள் செய்தால் 
மதங்கள்  வளரும்.

ஏழைகள் வேதனைப் படமாட்டார்

மனிதர்கள்  மனம் ஆழ்கடல் போன்றது.

அதில் யதார்த்த வாதிகள் படும் துன்பம் 


அவர்களுக்குக் கிடைப்பது அவமரியாதை 

மட்டுமல்ல,வெறுத்து ஒதுக்கும்  மனிதர்கள்.

சுயநலம்  வேண்டியபொழுது மட்டும் பயன்படுத்தல்,உடனே அந்த யதார்த்தவாதியை 

அவமரியாதை என்ற சிகரத்தில் ஏற்றல் ,
அலக்ஷியம்  செய்தல்,உண்மையாக இருந்தால் 
மிஞ்சுவது    அவமானமே.

உண்மை யாக இருப்பதால் நான் அவமானப்படுகிறேன்.
வெற்றிவாய்ப்பு தோல்வியாக மாறுகிறது.
கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் கிட்டாமல் போகிறது.
உற்றார்  உறவினர்கள்,நண்பர்களால் ஒதுக்கப் படுகிறேன்.
ஒருவர் செய்யும் தவறுகள் சுயநலம் உள்ளோரால் 
கபட தாரிகளால் மறைக்கப்படுகின்றன.
தவறே செய்யாத யதார்த்தவாதியை   பெரும் கூட்டமே  சேர்ந்து ஒழி க்கப்பாடு  படுகிறது.

அரசியல்,ஆன்மிகம் இரண்டுமே ஏழைகளை ஒழிக்கும்   சாமார்த்தியமான தலைமைகளக் கொண்டவை.
கோடிக்கணக்கில் சேரும் பணம்  இரண்டுதுறையைச்  சேர்ந்தவர்களையும்
 பேராசைக்காரர்களாக்குகிறது .

அவர்கள் பணத்தைப் பதுக்கி  நாட்டுநலம் என்பதில் 

அக்கறை காட்டுவதில்லை.

கோடிக்கணக்கில்  பணம் புதைத்து கிடக்கிறது.
அதை நாட்டு நலத்திட்டத்தில்  பயன் படுத்தினால் 

ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்ற பாடல் 

மெய்யாகும்.



திங்கள், டிசம்பர் 17, 2012

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும்

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும் 

    குஜராத் தேர்தல் மாநில அளவில் நடந்தாலும்   பாரத நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயம்  செய்யும் தேர்தல்.
இதில்  நாட்டு  மக்கள் சுயநலத்தை மறந்து ஓட்டுப் போட  வேண்டும்
,.ஜாதி,மதம்,இனம் என்று மக்கள் மனதில் விஷ விதைகள் தூவும் அரசியல் தலைவர்கள் ,சுயநல அரசியல் வாதிகள் 
ஒழிக்கப்படவேண்டும்.
கருப்புப்பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து வெளிநாட்டு முதலீட்டிற்கு  கை ஊட்டுப்பெறும்  சோனியா காங்கிரெஸ்  முற்றிலும் 
ஒதுக்கப்படவேண்டும். பல ஊழல் புகார்கள் மேல் எவ்வித உறுதியான நடவடிக்கை இன்றுவரை எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட அரசியல் 
கட்சிகளும் ,ஊழலுக்குத் துணை  போகும் மாநிலக்கட்சிகளும் மாறி மாறி கூட்டணிவைத்து நாட்டின் பொருளாதாரம் ஏழைகளுக்குப்  பயன்படாமல் 
பணமுள்ளவர்களே கல்வி பெறமுடியும் என்ற அரசியல் ஒழி க்கும் சக்தி  மக்களிடம் தான் உள்ளது. இந்திய மக்களின் விழிப்புணர்வு  எப்படிப்பட்டது 
என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். பாரத நாட்டைக் காக்கும் ஒரு தெய்வீக சக்தி மக்கள் மனதில் நேர்மை உணர்வைத்  தரவேண்டும்.

சனி, டிசம்பர் 15, 2012

வளரும் பாரதம். ஆண்டவன் காக்கும் பாரதம்.

பாரத நாட்டில் ஊழல் ,ஊழல் என்றாலும் ,
மக்களும்,மந்திரிகளும் ஊழலுக்கு ஆதரவு என்றாலும்,

நாட்டின் முன்னேற்றம் ,அயல்நாட்டினரை அசரவைக்கிறது.

நாடு என்பதற்கு வள்ளுவன் காட்டிய இலக்கணம்,
மற்றவர்களை நாடக்கூடாது என்பதே.

ஆனால் ,நம் நாட்டின் கல்விமுறை ,
ஆங்கிலேயர் வந்தபின் தான்
அனைவருக்கும் கல்வி என்ற நிலை.
சமவாய்ப்பு,சம அந்தஸ்து என்றாலும்,
அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும்,

புதிய தலைமுறையினர் சிந்தனைக்கும்,
பழைய தலைமுறையினர் சிந்தனைக்கும்
மலை-மடு வுக்கு உள்ள வேறுபாடு.

மதங்களால் மனிதனை  பிரிக்கும்
சுயநல ஆட்சியாளர்கள்,
ஜாதிவெறி தூண்டும் குறுகிய மனநிலையாளர்கள்,
சுய நலத்திற்காக   நாட்டைக்காட்டிக்கொடுக்கும்
நயவஞ்சகர்கள்,நா நயம் தவறுவோர்,
தன்  சகோதரனையே அழித்து  நாட்டின் ஆட்சி பிடித்தோர்,
பங்காளிப் பகைகள்,
மாமன்-மச்சான்  வெறுப்புகள்,
இரக் கமில்லா  ஒரு கூட்டம்,
தன்  மொழி தன் இனம் தன பண்பாடு
தன் கலைகள் அழிந்தாலும்
தன தனம் காக்கும் கூட்டம்,
ஆலயங்களின் ஆஸ்திகள்,
ஆஷ்ரமங்களின் ஆஸ்திகள்,
ஆண்டிகளின் கோலங்கள்,
தியாக உணர்வு,
சுய  நலமில்லா கூட்டம்,
  இதற்கு நடுவில் நாட்டின் முன்னேற்றம்,
அதுதான் இது ஆன்மீக பூமி.
அதிகாரம் இருந்தாலும்,
ஆஸ்தி இருந்தாலும்
இங்கேயே நரகவேதனை
மனவேதனை,
கலியுக தண்டனை.
பாரத பூமி, பழம்  பெரும் பூமி,
இந்நினைவு அகற்றாதீர்கள்,
என்ற பாரதியின் கூற்று.
ஆன்மீகத்தால் வளரும் பாரதம்.
ஆண்டவன் காக்கும் பாரதம்.




வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.

மனிதமனம்

மனிதன்  தன்  கடந்த  காலங்களை  மறந்து

உறவை விரும்பினாலும் சில உறவினர்களின்

பேச்சுக்கள் உறவை துண்டிப்பதாகவே அமையும்.

மலரும் நினைவுகளும்  சுகமளித்தாலும்.

கசப்பான அனுபவங்கள்

ஆழ்மனதில் இருந்து நீங்கி சாதரணமான  நிலைக்கும்

சஹஜ நிலைக்கும் வருவது

கடினம்.
இந்நிலையில் தான்  பட்டினத்தார்
அனைத்தையும் வெறுத்து
ஒட்டைஅப்பம்  வீட்டை சுடும் என்றார்.

இந்த விரக்தியில் தான் சித்தர்கள் நிலை.

சித்தர்த்தருக்கு  சமுதாயத்துன்பங்கள் துறவு நிலைக்குத் தள்ளியது.

மன்னர் பர்த்துஹரிக்கு ராஜசுகம் கசந்தது.

அருணகிரிக்கு நாரிசுகம் ரோகத்தை அளித்து  பக்தனாக மாற்றியது.

சிலர் பிறவியிலேயே தெய்வாம்சம் அடைகின்றனர்.

அசோகர் கொடுங்கோலனாக இருந்து

புத்தமதத்தைத் தழுவிய பின்

மக்கள் போற்றும்  பேரரசர்.

பலர் திருந்துகின்றனர். சிலர் இறுதிவரை அவப்பெயர் .

அவன் ஹரிச்சந்திரன்.அவன் விபீஷணன்.

இவன் கர்ணன். அவன் மைதாஸ் டச்.
பேராசை. இவன் இராவணன்.

இவன் ப்ருடஸ் .(துரோஹி)

எட்டப்பன் பரம்பரை.
செயல் எப்படி மனிதனை உயர்த்திதாழ்த்துகிறது .

காந்தியைத் தாத்தா என்கிறோம்.
நேருவை மாமா என்கிறோம்.
ஹிந்தியில் "சாச்சா "என்கின்றனர்.
காமராஜரை கர்மவீரர் என்கிறோம்.
படேல் இரும்புமனிதர்.
வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.












--
Regards,
Anandakr

வியாழன், டிசம்பர் 13, 2012

ஆற்றலும் "நான்" என்ற பார்வையில் அழிவையும் தரும்.


இன்றியமையாத  ஒன்று 
இறைவழிபாடு  என்று 
அகிலம் கூறினாலும் ,
அறிவியல் அறிஞர்கள்  கூறினாலும்,
சிலருக்கு சில சமயம் 
உலக  நடப்பினைக் கண்டு '
உலகநாதன் மேல் வெறுப்பு 
ஏற்படுவது உண்டு.
நாம் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்துள்ளோம்.

நாம் துவக்கும் செயல் தோல்வி கண்டால் 

அச்செயலை மாற்றி விடுவோம்.
அதே செயல் அடுத்தவர்களுக்கு 
வெற்றிக் கனி தருவது கண்டு,
மீண்டும் அதே செயலில் 
ஈடுபடுவோர் உண்டு.
மீண்டும் தோல்வி என்றால் 
விதி என்ற ஓர் கருத்து எழுவது உண்டு.

அதை அதிர்ஷ்டம் என்போரும் உண்டு.
 'அத்ருஷ்ட ' என்றால் பார்க்காத என்ற பொருள்.
பார்வைக்குப் புலப்படாத ஒரு சக்தி 
நமக்கு தரும் ஆற்றல் /தோல்வி 
அதுவே  ஆன்மீக சக்தி.
அமானுஷ்ய சக்தி.
அதுவே இறைவன்.
இறைவனுக்கு முன்
 மதங்கள் 
கிடையாது.
மனிதனின் வினை தான் முக்கியம்.
மனிதனுக்குத்   தீய நோக்கம் ஏன்  வருகிறது 
என்ற வினா  எழுவது உண்டு.

முள், மலர், அம்ருதம் விஷம் 
இதில் நல்லதை ஏற்று அல்லதை 
விடும்  அறிவு/ஞானம் 
மனிதனுக்கு உண்டு.
பூபாரம்  குறைக்கவேண்டும்.
அதற்கு பாவ எண்ணங்கள் .
புண்ணியவான் மரணம் 
பாவி மரணம் 
அனைத்தையும் சிந்தித்தால் 
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆற்றல் 
அண்மையில் தெளிவுறும் தென்படும்.
அளவுக்கு மீறி கொடுத்த அறிவும்  
அளவுக்கு மீறி கிடைக்கும் செல்வமும் 
அகங்காரம் அளித்து 
நல்லதைச் செய்தாலும் 
தீமையே அதிகம் செய்யும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் நஞ்சாகும்.
அப்பொழுது ஆண்டவன்  ஆற்றலும்   "நான்"
என்ற பார்வையில் அழிவையும் தரும்.






செவ்வாய், டிசம்பர் 11, 2012

சராசரி இந்தியன் நான்.

நான் பாரதநாட்டில் பிறந்தவன்.

எனக்கு என் நாடு மிகவும் அன்பானது.

இருந்தாலும்  வெளிநாட்டு   மோகம் அதிகம் .

பாரத நாட்டை சிந்துவை  ஹிந்துவாக மாற்றி மாறி
ஹிந்துஸ்தான்  இந்தியா  என்பதை

 மன நிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்.

பாரதம் என்று சொல்பவன் அறிவிலி.

மதுரை  என்ற பெயரை மஜுரா  என்று மாற்றினால்,
 அதை ஏற்றால்  படித்தவன்.
மதுரை  என்பவன் மடையன் என்பதில்
எனக்கு ஒரு ஆனந்தம் .
தூத் துக்குடியை  டுடுகொரின் என்று
வெளிநாட்டான் சொல்வதை ஏற்றுச் சொல்வதில்
ஆக எனக்கு ஏற்படும்  கர்வம்  ,
மீண்டும் தூத்துக்குடி என்றால் கேவலம்.

தூய தமிழ் பேசினால் அவன் பட்டம் பெற்றும்

தூற்றலுக்கு  உரியவன் .

ஆங்கிலம்  கலந்தோ  ,ஆங்கில நடை தமிழ்  பேசினால்

போற்றற்கு  உரியவன்.

தாய்மொழி வழி  கற்றால் தரம்  கேட்டவன்.

எவ்வேலைக்கும்  ஏற்புடையவன் அல்ல.

நீதிநூல்கள் ,நல்வழி,திருக்குறள் ,அறியாமல்

இருந்தால்  வுய ர்ந்தவன்.

நம் நாட்டுக்கலைகள்  ரசிக்கா  உள்ளம்

 உயர்ந்த உள்ளம்.

நம்   மொழி  மறந்தாலே ,

வருமானத்திற்கும் ,வயிற்றுப்பிழைப்புக்கும்

வருங்காலத்திற்கும்  கனவுகள் நிறைவேறும்

என்ற  பரந்த  மனப்பான்மை கொண்டவன்.

நம்நாட்டுத் தொழில்கள் ஏழைகளை  வாழ  வைக்கும்

என்பதால்  அதை எள்ளி நகையாடி ஒதுக்குவதில்

எள்ளளவும்  பிசாகாதவன்.

முதலீடு வெளிநாட்டவர் என்றால் வரும்  அடிமைத் தளையில்

பேரானந்தம்  காண்பவன்.

ஆள்பவர்கள் ஆனந்தமாக வெளிநாட்டு வங்கியில்

பணம் சேர்த்தாலும் , பொதுமக்களின் நன்மைக்கு

பயன்படா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும்

கறுப்புப் பணம்  சேர்த்தாலும் ,
ஆயிரமாயிரம் பொதுமக்கள் செல்லும் சாலைகள்
குண்டும் குழியுமாக இருந்தாலும்
கவலை இல்லாமல் ,
 பணமும் இலவசமும் கொடுத்தால்
ஆள்பவரின்  தரம் பார்க்காமல் வாக்களிப்பவன்.

காவல்துறையினர்  ஏளனம் செய்யும்  ரசிப்பவன் .

போக்கிரி கதாநாயகனாகி,காவல் அதிகாரிகளின்
கருங்காலித்தனத்தைக்   கண்டு  அவர்களை
அடிக்கும்  காட்சிகள்   நாட்டிற்கு
நல்லதல்ல என்ற  உணர்வில்லா  திரைப்படங்கள்.

 விளைவு   தென் மாவட்டங்களில் காவலர்களைக்

கொல்லும்  துணிவு.

காதல்  என்று கூறி சீரழியும் இளைஞர்கள்.

கண்ணீர் சிந்தும் பெற்றோர்கள்.

விலைவாசி ஏற்றங்கள்.
 ஏழை   களின் வேதனை,
கல்வி வணிகமயமாதல் எதையும்
கண்காணாமல் நடமாடும்  ஜடம்.
லஞ்சம் ஊழல் வளர  உதவும் கரம் கொடுக்கும்
 உத்தமன்.
நான் இந்தியன் ,பாரதவாசி.
திரு அனந்தபுரம் ற்றிவென்றம் என்றால்
எவ்வளவு ஆனந்தம்; வெளிநாட்டு மோகம் .

இந்தியக்கலைகள் ,இசைக்கருவிகள் ,உடைகள்
 வெறுக்கும் சராசரி இந்தியன் நான்.














வெள்ளி, டிசம்பர் 07, 2012


 நாட்டில்  நல்லோர்கள் பல வழிகளில் மக்களுக்கு 

நல்ல  எண்ணங்களை ஏற்படுத்துகின்றனர்.

பொள்ளாச்சியில் கே.கவின் ,நேசினி  என்ற இருவர் சேர்ந்து   மோகன்குமார்   நினை வாக   வெளி  இட்டுள்ள துண்டு  பிரசுரம் .

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்.
வாழ்வதிலும்  பொருள்  வேண்டும்.

இன்றைய  லட்சியம் .  நாளைய மாற்றம்.

இன்றைய அலட்சியம் ,நாளைய ஏமாற்றம் .


  1. ஏசி ---2500 திறன் வாட்ஸ் = யூனிட்  24 நிமிடம் 
  2. தண்ணீர்  ஹீட்டர். 1500  1 யூனிட் 30 நிமிடம்.
  3. மின் அடுப்பு.---1000---60 நிமிடம் 1யூனிட்.
  4.  வேக்குவம் கிளீநேர்  750   1 மணி 18 நிமிடம் யூனிட்.
  5. மிக்சி -450   ஒரு யூனிட் 2 மணி 6 நிமிடம்.
அயர்ன் பாக்ஸ் -450  2 மணி 6 நிமிடம்.

வாசிங்  மெசின் ---325 வாட்ஸ் ஒரு unit 3 மணி 2 நிமிடம்.

      நேரமறிந்து  பயன்  படுத்துவீர் .

மின்சார சிக்கனம் தேவை இக்கணம்.
  

வியாழன், டிசம்பர் 06, 2012

குரு  ஞானக் கண்ணைத்  திறப்பவர் .

உபாத்யாயர்  பாடத்தை மட்டும் கற்பிப்பார்.

ஆசார்யன் மாணவனை மனிதனாக உயர்த்துபவர்.

பாடம்  முதல் நிலை .

பண்பு  அடுத்த நிலை.

ஆன்ம விளக்கம்  கடைசி  நிலை.


 

புதன், டிசம்பர் 05, 2012

மன நிறைவுடன் ,மன மகிழ்ச்சியுடன் வையகத்தில் வாழலாம்.

மனிதனின்  துன்பங்கள்  குறைகிறதா ?
மனிதனே துன்பங்களைக் குறைக்க ,
துன்பங்களை அதிகரித்துக்கொள்கிறானா ?

துன்பங்களிலும்  இயற்கைத்துன்பங்கள் உண்டு.
செயற்கைத்  துன்பங்களும்  உண்டு.

இயற்கையால்  ஏற்படும்  பொருளாதாரத் துன்பம் ஒன்று.

அது புரியாத புதிர். அதற்கு முன் ஜன்ம -பாவ -புண்ணியங்கள்.

பிறவியில் ஏற்படும் பிணிகள்.அகால  மரணம்.

எதிர்பாரா விபத்துக்கள்.அங்கஹீனப்பட்டு சித்திரவதை அனுபவித்தல்.

எல்லோருக்கும் ஏற்படும் மரணத் துயர் சம்பவங்கள்.

வெற்றி -தோல்விகள்.
எக்குற்றமும் செய்யாமல் பழி -பாவம் தண்டனைக்கு ஆளாதல்.
காரணம் இல்லா , பயம் ,சஞ்சலம்,பிரமை.மறதி
பல துன்பங்கள் மனிதனுக்கு தன்னை அறியாமலேயே ஏற்படுகின்றன.
இந்த அறியாமல் ஏற்படும் துன்பங்கள் இப்பிறவியில்  நல்லது செய்ய.

மனிதனுக்கு சுய பச்சாதாபம்,இறைவணக்கம் போன்றவற்றால்

திருந்தி வாழ்வதால்  துன்பங்கள் குறையும்.அல்லது நிவர்த்தியாகும்.

பகவானின் பாதங்களில்  முழுமையாக சரணாகதி அடையவேண்டும்.
அப்படித்தான்  மார்க்கண்டேயன்  நித்தியத்துவம் பெற்றான்.
அபிராம பட்டர் மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டார்.
கொடிய ரத்னாகர்  வால்மிகிமுனிவர் ஆனார்.
இந்த  சுய மாற்றம் பக்தி பலரை மகான் ஆக்கி உள்ளது.


செயற்கைத்துன்பங்கள் ஏற்படுவதற்கு மனிதனே காரணமாகின்றான்.

ஆணவம்,ஆசை,பேராசை,பொறாமை,கோபம், பிறரைக் கெடுத்து வாழ  நினைத்தல் , ஹிம்சை,   வீண்  பிடிவாதம் ,கஞ்சத்தனம்,பொன்னாசை ,பொருளாசை,பெண்ணாசை  என  பல மகான்கள் வழி  காட்டி உள்ளனர்.

புறப்பற்று  அகப்பற்று தவிர்த்து ,ஆண்டவன்மேல் பற்று தியானம் தான்
அமைதிக்கு  வழி  என்றும்  மஹான்கள்  அனுபவம் மூலம் உணர்த்தி யுள்ளனர்.

கற்றது,படித்தது,அறிந்தது,தெரிந்தது ,புரிந்தது  ஆகியவைகளை பின்பற்றி னாலே  மனிதன்  மன நிறைவுடன் ,மன  மகிழ்ச்சியுடன்  வையகத்தில்  வாழலாம்.






 

செவ்வாய், டிசம்பர் 04, 2012

ஆலய வழிபாட்டில் நேர்மை,சத்தியம் ,வரிசை இருந்தால்


ஆலயம் தொழுவது  சாலவும் நன்று.

ஆன்மீகம்  தழைக்கவும் ,ஆஸ்தி  தேவையே.

ஆலயங்கள்  ஆடம்பரமிருந்தால் ,

அலைபாயும் பக்தர்கள்.

 வைரக் கீரீடம் ,அலங்கரித்த  ஆண்டவன் ,

அந்த  ஆண்டவன் முகத்தில் ஒரு புன்னகை,

அந்த முகத்தில் பேசும் நயனங்கள் ,

அந்த ஒரு கண  தரிசனம் ,

அப்பொழுது பெரும் ஒரு பிரம்மானந்தம்,

அருள் பெற்ற அநுபூதி,

பெற்ற  தன்னம்பிக்கை,

அவனின்றி  எதுவும் இயலா  என்ற,

மன உறுதி  ,செயலாற்றத் தூண்டும் ,

ஒரு  உத்வேகம்,
பலவித   அலங்காரங்களால்  காணும் ஆசை,
சந்தனக் காப்பு ,அதன் அழகு ,
புஷ்பாலங்காரம்  அதன்  புனிதம்,
அஷ்டோத்திரம்,சஹஷ்ராநாமம்
அதன்  மந்திர ஓசை ,
வேத மந்திரம் தரும் பரமானந்தம்,
மன  சாந்தி ,சத்விசாரங்கள் ,
சதசாரங்கள்,
ஒருமுறை  தரிஷன முன்னேற்றம்,
ஆலயங்களுக்கும் ஆஸ்தி தேவை.
ஆலயப் பிரசாதங்கள் ,
அதன் தெய்வீக  மணம் ,ருசி ,
ஆஹா. ஆலயங்களுக்கும் ஆஸ்திகள் தேவை.
பிரசாத ஸ்டால்கள் ,வணிகநோக்கம் .
தவிர்க்கப்பட வேண்டும்.

பழனி  என்றால்  பக்தர்கள் அனைவருக்கும்
பஞ்சாமிருதம் ,தேன்  தினைமாவு வழங்க
வேண்டும்; அதில் நேர்மை வேண்டும்;
திருப்பதியில்  ஒரு சின்ன லண்டு
அனைவருக்கும்  கிடைக்கும்,
அந்நிலை பழனியில் வர தனி
புரவலர்கள் வரவேண்டும்.
அதில் போய் பிரட்டு நடக்காமல்
ஆண்டவன் காக்க வேண்டும்.
ஆஸ்திகள் தரும் புரவலர்கள்
தான் கொடுத்த நன்கொடை நற்பயனாக
இருந்தால் அள்ளிக்கொடுப்பார்

ஆனால்  பிரசாதம் கிள்ளிக்  கொடுக்கக் கூடாது.
நேர்மை  ,சத்தியம்,தர்ம சிந்தனை ,நியாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
பக்தர்கள் பிரசாதம் பெற  ஒழுக்கம்,கட்டுப்பாடு,வரிசையில் செல்லுதல்.
ஆண்டவன் அருள்  பெற வழி  என்ற கோட்பாடை உணர்ந்து
செயல் படவேண்டும்.
ஆலய அநியாயங்கள் சனாதன தர்மம்
தழைக்க  உதவாது.
அதையும் மீறி அலைபாயும் கூட்டம்
அதுதான்  ஆலய மகிமை.
தரிசனம் செய்யும் வரை பக்தர்கள் புலம்பல்.
மூலவர் தரிசனம் இரண்டு நொடி;
மீண்டும் வர  சங்கல்பம்.
எத்தனையோ  பேர் வெறுத்து
செல்லவேண்டாம் என்ற சங்கல்பம்  
தவிர்த்து ஆண்டாண்டு தோறும் இடைவிடா
புனிதப் பயணம்.
புனித ஆலயங்களில்  ஒரு காந்தக் கவர்ச்சி.
அந்த உள்ளுணர்வு இருந்தாலும்,
அனைவருக்கும் கிட்டுவதில்லை
அந்த பாக்கியம்.
சிலரை சில சூழல் கள்  இழுத்துச் செல்கின்றன.
ஆலய தரிசன மகிமை ,
அனுபவ  உண்மை.
அதனால் தானே கூட்டம் அதிகம்.
இன்னும் ஹிந்துக்களில் ,கட்டுப்பாடு ஒழுக்கம்,
ஆலய வழிபாட்டில் நேர்மை,
சத்தியம் ,வரிசை  இருந்தால்
வையகத்தில் இதற்கோர்  இணையில்லை .







 

திங்கள், டிசம்பர் 03, 2012

இவர்களில் இருந்து தப்பிக்கவே பகுத்தறிவு வாதம்.நாஸ்திகவாதம்மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி உண்டு


 கண்ட  காட்சிகள்,
கண்ட கண்ட எண்ணங்கள் ,
எண்ணங்களில் மோதல்கள்,
ஏற்றத்தாழ்வுகள்,ஆசைகள் -பேராசைகள்,

பொறாமைகள்,ஆணவம் ,காமம்.
தீய சேர்க்கைகள்,தீய எண்ணங்கள்,

இவைகளில் இருந்து விடுபடா  ஒரு மாயை,

மனிதனை  மகிழ்ச்சி அற்றவனாக,

மனநிறைவற்றதாக  மாற்றுகிறது .

இந்த உலகத்தில் தேவைகள் அதிகம்.
அறிவியல் முன்னேற்றம்  பொருளாதார சிக்கல் .

தேவைகளும் ஆசைகளும் விருப்பங்களும் 
செயலாக்கமும் தேவைதான்.

ஆனால் அவை சுயநலமாக மாறும் போது  
நாட்டிற்கு ,வீட்டிற்கு,சமுதாயத்திற்கு 
மிகவும் ஊறு  விளைவிக்கிறது .

கொலை,கொள்ளை ,மாது,மது மயக்கங்கள் 

அமைதி தருவதாக ஒரு மாயத் தோற்றம் .

துன்பக்கடலில் தள்ளிவிடுகிறது.

அமைதியற்ற,ஒற்றுமையற்ற,அன்பற்ற ,வாய்மையற்ற ,அஹிம்சையற்ற சமுதாயம்.

இந்நிநிலை தன்  வரம்பை மீறும் பொழுது ,
ஒரு யு க புருஷன் 
சங்கரராக,புத்தராக,மகாவீரனாக,குருநானக்காக 
முஹம்மது நபியாக ,ரமண மகரிஷியாக,
ராமக்ரிஷ்ணராக அவதரித்து ,
பல சீடர்கள் மூலம் 
மாயை அகற்றி  அமைதிக்கு ,அன்புக்கு ,வாய்மைக்கு, மனித நேயத்திற்கு,
தான -தர்மத்திற்கு ,தியாகத்திற்கு ,பற்றற்ற நிலைக்கு 
 
பக்தி மார்க்கத்தைக் காட்டுகின்றனர்.
அவர்கள் மறைவிற்குப்பின்  மீண்டும் போலிகள் 
மூலம் மதங்கள் சுயநல வாதிகள் மூலம் 
போலி  பக்தர்கள்  மாசுபடுகின்றன.

மக்களுக்கு மதங்கள் விஷயத்தில் விழுப்புணர்வு தேவை.
சுய நல மதவாதிகள் மனிதர்களை பிளவு 
படுத்தி ,வேற்றுமைப் படுத்தி 
தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க 

பக்தி நாடகம் ஆடுகின்றனர் .

இவர்களில் இருந்து தப்பிக்கவே 
பகுத்தறிவு வாதம்.நாஸ்திகவாதம் .

நாஸ்தி என்றால் அழிவு.
மூட பக்திக்கு அழிவு.
தூய பக்திக்கு ஒரு சிந்தனை.

மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு 
தெய்வீக சக்தி உண்டு என்பதை 

எந்த அறிவியல் வாதியும்  பகுத்தறிவு வாதியும் 
மறுத்ததில்லை.
மறுத்தாலும் இறுதிக்காலத்தில் 

 இறைவன் இருப்பதை உணர்த்திச் சென்றுள்ளனர் .




சனி, டிசம்பர் 01, 2012


மனிதன்  'மனம் ' பற்றி சிந்திக்கிறான்.

மனிதனுக்கு  அலை பாயும் மனம்.

மற்றவர்களுக்கு  மன நிலை  சரி இல்லை  என்றால்

அவர்களின்  மனதின் கவலைகளைப்போக்கும்  மனிதன்,

தனக்கு   வரும் கவலைகளை  மறக்க  முடியாமல்  

தவிக்கிறான்.தள்ளாடுகிறான்.

தனக்கு  வந்த துன்பம் தானே தன்  நண்பனுக்கும் வந்தது.

நாம்  அவனுக்கு ஆறுதல் கூறினோமே,

நம்மை நாம் ஏன்  தேற்றிக்கொள்ள முடியவில்லை.

அதற்கான  மனப்பக்குவம் ஏன்  இல்லை?

தலை வலியும்  காய்ச்சலும்  தனக்கு  வந்தால் தானே தெரியும்.

ஆனால்  மன தைரியம்  எப்படி  வரும்?

அரசகுமாரர்   சித்தார்த்தர்  அரண்மனையில்  எல்லாவித

 வசதிகளுடன் வளர்ந்தாலும் ,அவர் தந்தை  அவர் துறவறம்

மேற்கொள்ளக்கூடாது  என மிக  எச்சரிக்கை   நடவடிக்கை எடுத்தாலும்

சித்தார்த்தருக்கு   திருமணம் செய்து  வைத்தாலும்

அவர் புத்தர்  ஆவதை  தடுக்கமுடியவில்லை.

சமுதாயத்திற்கு  நல்லது செய்ய அவரை ஆண்டவன் அனுப்பியதால் ,

மற்றவர்கள்  படும் வேதனைக்காக தன் மெய் வருத்தி ,மனம் வருந்தி

தவம் செய்து   அன்பு அஹிம்சை  என்ற மனநிலை  ஏற்பட்டது.

பலநாட்டு    மக்களுக்கு  வழி  காட்டியது.

மன நிலை   என்பது  அலைபாயும் நிலை.

மனம் ,சொல்,செயல்  மூன்றையும் ஒரு நிலைப்படுத்துதல்  
என்பது    எல்லோராலும் முடியாது.

அதற்கு  பலரின் வாழ்க்கைவரலாற்றைப்  படிக்கவேண்டும் .

முடிவு     இறைவழிபாடும் தியானமும் தான்.