புதன், பிப்ரவரி 06, 2013

இன்றைய சமுதாயம்

நான்  சிறுவனாக  இருந்த போது ,
பேசப்பட்ட நியாயம்  பொது.
இப்பொழுது பேசப்படுவது  தனி.
தனி வழியில் செல்லும் நியாயம்.
பொதுப்பணம் என்றாலே ,
தன்னலத்திற்கு எடுக்கவேண்டும் என்ற
என்பது பொது நியாயம் ஆகிவிட்ட காலம்.
பாலம் கட்டப்படுகிறது,
சாலை போடப்படுகிறது,
அரசு,மாநகர,நகர ஆட்சிப் பள்ளிகளில்
கட்டடம் எழுப்பப்படுகிறது.
தேர்தல் வருகிறது .
பள்ளிகள்,கோயில்கள் கட்டப்படுகின்றன
என்றாலே எவ்வளவு இதில் கொள்ளை
அடிக்கிறார்கள் என்பதே பேச்சு.
இது அரசர் காலப் பேச்சல்ல,
இன்றைய குடியரசு காலப் பேச்சு.
அரசர்காலம் என்பது நலம் அரச குடும்பத்திற்கே.
குடியரசு காலம்   அரசியல் வாதிகளுக்கே.
பணம் படைத்தொருக்கே

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

நீதிகிடைக்கா ஏழை மக்கள்.

ஒரு   ஏழை வீட்டின் அருகில் உள்ள இரண்டடி -மூன்றடி  அகல 15 அடி நீள  இடத்தை ஆக்கிரமித்தால்  அந்த ஏழையால் அதை அகற்றமுடியாது.நகராட்சியிலிருந்து வருகின்ற கடிதம்  இதுதான்  உங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் மூலம் செல்லவும்.
நீதிமன்றம் மூலம் செல்ல வசதீ இல்லை என்றால்  அந்த ஆக்கிரமிப்பை அகற்றமுடியாது.

அந்த ஏழை வசதிபெற்று  வீடு  இடித்துகட்ட முயன்றால் மேலும் இரண்டடி தள்ளி கட்ட வலி உறுத்தல் .நியாயமில்லா தவர்கள்  ஆக்கிரமிப்பு ஏழை நிலம். மீட்க வழி இல்லை.

நியாயமில்லா நகராட்சி சட்டம்.