செவ்வாய், செப்டம்பர் 03, 2013

அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு இந்த நிலை.?

இந்துக்கள்  ஒற்றுமை ,ஒரே குரல்  என்றெல்லாம் முயற்சி எடுக்கும் இந்தக் காலத்தில்  ஸ்ரீ கணேஷ் உற்சவத்தில்  ஒற்றுமை இன்மை ,பதற்றம் காணப்படுவதாக செய்திகள் வெளியாவது வேதனையாக உள்ளது.

எல்லா இந்துக்களுக்கும் விநாயகர் முழுமுதற் கடவுள். எந்த ஒரு தேவதை பூஜைக்கும் பிள்ளையார் பூஜை தான் ஆரம்பம்.பிள்ளையார் சுழி என்பது போடாமல் எந்த ஒரு விஷேசத்திற்கும் பொருள் வாங்கும் பட்டியல் தயாரிப்பது இல்லை.

ஒரு சிறு மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபாட்டு செய்துதான் ஹோமம் ,திருமணம் போன்றவை நடத்தப்படும்.


இப்பொழுது  விநாயகர் சதுர்த்தி விழாவில்  முழுமுதற்கடவுள்  விநாயகர் 

சிலை பிரதிர்ஷ்டையில் இந்துக்களிடம் ஒற்றுமைக்குப் பதிலாக பதற்றம் காணப்படுகிறது என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

ஹிந்து முன்னணி,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஹனுமான் சேனா,ஹிந்து மக்கள் கட்சி மற்றும் பல ஹிந்து அமைப்புகள் பொள்ளாச்சி நகரில் மட்டும் ௬௪௦ சிலைகள் .ஒரே பதற்றம் .

தெய்வ வழிபாடு என்பது மன சாந்திக்கும் .மக்களின் ஒற்றுமைக்கும் ,நல்லிணக்கத்திற்கும் .

அந்த வழிபாடு, ஒரு அமைதியற்ற பீதியையும் ,பதற்றத்தையும் உருவாக்குமானால்   மிகவும் சிந்திக்கவேண்டிய கவலைப்பட வேண்டிய நிலை.

சிந்தியுங்கள்  இந்து சகோதரர்களே!
பொருள் விரயம்.கால விரயம்.
பதற்றமான சூழல்.காவல்துறையினர் மற்ற குற்றங்களைத்தடுக்கவோ,ஆய்வு செய்யவோ முடியாத நிலை.

அழகு  சிலைகள் அவமானப்படுத்தி எரியும் காட்சி.

ஒவ்வொரு சிலை இருக்கும் தெருவிலும்  ஒரு பயமான பாதுகாப்பு.

எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சம்.


இந்த கோடிக்கணக்கான பணம் பாழடைந்த பழம் ஆலயங்களை புனருந்தாரணம் செய்யவோ.மற்ற பயனுள்ள பணிகளுக்கோ பயன்படுத்தலாம்.

ஞானபூர்வமாக சிந்திக்கவும்.

ஓம் கணேசாய நமஹ;
 விநாயகா!வினைகளைத் தீர்ப்பவனே!

மக்கள் உன் அழகு உருவங்களை அலட்சியமாக எரிந்து  நீ சின்னா பின்னமாக கடல் அலைகளால் கால்,கை ,முண்டமாக அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு
 இந்த நிலை.?
அரசியல் ,ஆன்மிகம்  இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள்.

ஒன்று நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெவது.மற்றொன்று அன்பு,பண்பு ஒழுக்கம்,பண்பாடு,கலை ,உண்மை ,நேர்மை ,ஈகை,பரோபகாரம்  போன்ற மனிதத்தன்மை வளைப்பது.

    அரசியல் நம் நாட்டில் சுதந்திரத்திற்குப்பின்,௧௯ஆம் நூற்றாண்டிற்குபின் 

 என்ற நிலையில்  சுதந்திரப்போராட்ட கால தியாகம்,தேசபக்தி ,சுயநலமின்மை 

போன்றவை  மாறிவிட்ட மனநிலையை இன்று காண்கிறோம்.காரணம்,

நாடு அடிமைப்பட்டிருந்தகாலத்தில் இருந்த துன்பங்களை மறந்துவிட்டோம்.

       நன்றாக  சிந்தித்தால் அறிவு வளர்ச்சி என்பது  பொருளாதாரம் மட்டுமே 

என்ற நிலைக்கு வந்துள்ளோம்.காரணம்  அரசியல் கல்வியை வியாபாரமாக்க 

வழிவகுத்துவிட்டது.ஆன்மீகமும் வணிகமயமாகிவிட்டது.


அரசியல் வணிகமயமாகிவிட்டது. ஒரு கட்சி வளரவேண்டுமென்றால் உண்மையான தேசப்பற்று,தொண்டு மனப்பான்மை ,சுயநலம் இல்லாதவர்களால் வளரவேண்டும்.இன்று சிறு=சிறு கருத்துவேறுபாடுகளால்

கட்சிகள் உடைகின்றன. ஊழலைக்காட்டி கட்சியை உடைத்து வெளிவருபவர்கள்  ஒரு ஊழல் கட்சியுடனே கூட்டணி சேருகின்றன. தி.மு.க.
அ.தி.மு.க,கம்யுனிஸ்ட்.,பா ம.க  ,ம.தி,மு,க ;தே.தி.மு.க ,பார்வர்ட் பிளாக் ,சரத் கட்சி,திருமா.கட்சி,அனைத்தும் முதல் இருகட்சிகளானா திரு.மு.க. அல்லது செல்வி ஜெயலிதா இன்றி இயங்கமுடியாது என்ற நிலையிலேயே 

கட்சிகள் நடத்துகின்றனர்.

தேசீயக் கட்சிகள் தமிழகத்தைப் பொறுத்தவரை தன காலில் நிற்க முயற்சிக்கவே இல்லை.காரணம் திராவிட இயக்கம் வளர்ந்ததது  இளைஞர்களால். 
அந்த இளைஞர்களை தமிழக காங்க்ரஸ்  ஒரு சக்தியாகப் பயன் படுத்தவில்லை.

பெருந்தலைவர் காமராஜரை இளம் வயதுள்ள ஸ்ரீநிவாசன் தோற்கடித்தார்.
குடந்தை ராமலிங்கம் தேசியக்கட்சி. அனால் இந்த இளைஞர்கள் எங்கே என்ற நிலை விரைவில்.

இளைஞர்களை பின்னர் அரசியலுக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இது அரசியல் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாமல் இருக்க இந்திராகாந்தி 

அவர்களும் தமிழகத்தில் தேசியக்கட்சி காங்கிரஸ் ஆட்சியில் அமர முயலவில்லை. தமிழக காங்கிரசில் இன்றும் ஒற்றுமை ஏற்படவில்லை.
ப.சிதம்பரம் தனியாக நின்றால் நிச்சயம் வெல்லமுடியாது, அனால் அவர் மத்தியில் தொடர்ந்து அமைச்சர்.

தொடரும் ......