செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அவனி முழுதும் ஆங்கிலப் புத்தாண்டு
ஆனந்தமாக ,பூஜை பஜனையுடன்
வரவேற்கும் நாம் , வளம் பெறுகிறோம்
பொருளாதார ரீதியில்.
ஆங்கிலமின்றி அவனியில் வாழ ,
வழியில்லை வேறு.
நட் என்றும்,போல்ட் என்றும்
பிட் என்றும் பிகர் என்றும்
டிரெஸ் என்றும் ரோடு என்றும்
நடு சென்டர் என்றும் ஷாப் கடை என்றும்
டைம் என்று பேசியே தனிதமிழ் இயக்கம்
வளர்ந்த நாட்டில் வொய் திஸ் கொலைவெறி
ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
இப்படியே வளம் பெற்றாலும்
அரைகுறை ஆடை,ஆட்டம் ,போதை
நடு ரோட்டில் ஆட்டம்,முத்தம் ஆலிங்கனம்
என்ற அநாகரீகம் ,பண்பற்ற ,ஒழுக்கமற்ற செயல்
தவிர்த்தால் விலங்கிலிருந்து வேறுபடுவோம்.
ஆங்கிலம் அறிவைத்தந்து ஆற்றலைத்தந்து ஆஸ்தியைத்தந்து
அவனை சுருக்கி இனவெறி ,மதவெறி,அனைவருக்கும் கல்வி என்று
உணர்த்தினாலும் பெற்றோரை மதியாமை,அமைதியற்ற குடும்பவாழ்க்கை ,ஒருவர் மற்றவரை மதியாமை
விவாகரத்து,தற்கொலை என்ற படித்து பட்டம் பெற்றாலும்
பண்பற்ற செயல்கள் அங்கெங்கு தலை தூக்குவதால்
தாய்மொழி அறிவுரை நட்சத்திரம் மினுமினுக்குதே என்ற பாடலுடன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம் ,ஆறாம் செய விரும்பு என்பதையும்
நினைவில் வைத்து இந்த ௨௦௧௪ புத்தாண்டை
ஆனந்தத் துடன் கொண்டாடுவோம்.
ஸ்பீட் தேவை அதில் ஆக்ஸிடென்ட் தடுக்க
தாய் நாட்டு புத்தாண்டுக்கு தாய் மொழிக்கு அதிகம்
இம்பார்டன்ஸ் கொடுப்பதும் தேவை.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், டிசம்பர் 24, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

உன்னடி





சிலந்திவலையில் சிக்கிய புழு.

கணவன்   
கணவன்   மௌனக் கண்ணீர்  வடிப்பவன்

திருமணத்திற்கு முன்  சுதந்திரப் பறவை.
பின்னர் 
மத்தளம் போல் வேதனை இடிகள்.
தாயார் ,தம்பி ,தங்கை  ஆதி உறவு 

மனைவி  புதிய உறவு.

இந்த புதிய உறவை  மகிழ்விக்க 
ஆதி உறவுகள்  சற்றே உதாசீனப் படுத்தும் உணர்வுகள்.
தாய் வீடு  செய்யும் தவறுகள் 
அவமானங்கள்  அநீதிகள் 
உதவாத தன்மைகள்,
கேளிக்கைகள் கிண்டல்கல்கள் அனைத்தையும் 
சகிக்க வேண்டும் கணவன் .
அப்பொழுதான் அன்பின் தழுவல்.
இல்லையேல் மழுப்பல்.
சகுனியின்  செயல்கள் மகாபாரதம்.
கூனி யால் ராமாயணம்.
எல்லாம் தாய்வீட்டு உறவு.
இப்படிப்பட்டவர்களை  சஹித்து
வாழ்ந்தால் இல்லறம் நல்லறம். 
பு திய உறவு /புத்தம் புது வரவு

ஆதி உறவுக்கு ஆனந்தம் குறைவு.
மாமியார் வீட்டார் தவறுகள் 
மனைவியால் அரங்கம் ஏறும்.
மனைவியின் தாய்வீட்டுத் தவறுகள் 
மறைக்கப்படும்.
மறக்கப்படும்.
மனைவியின் முகத்தில்  சிரிப்பு 
அன்பு   காண 
கணவனால் மறக்கப்பட வேண்டியவர்கள் 
கணவன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்நிலை அதிகம்.
பாவம் கணவன்.
பாசம் மறக்கும் மோஹ சிலந்திவலையில் 
சிக்கிய புழு.
பாசம் உறவு  இவ்வலையில் மடிந்துவிடும் 
விளைவு முதியோர் இல்லம்.

சனி, டிசம்பர் 07, 2013

மறக்கப்பட்டது

அறச் செயல்
 அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்றைய மழலைகள்
திரைப்பட பாடல்கள்  பாடுகின்றனர்.
அவர்கள் சினம் ஆறாமல் வளர்கின்றனர்.
சிறுவயதிலிருந்தே ஆண் /பெண் நண்பர்கள்
அவன் பிரண்ட் /நான் லவ் பண்ணலை
மூன்றுவயதுக்  குழந்தையின் மழலைப்பேச்சு.
அதை ரசிக்கும் பெற்றோர்கள்/உறவினர்கள்.
விளைவு மணநாளன்று  மணமகள் ஓட்டம்.
அனைத்து ஏற்பாடுகள், மண மேடை அலங்காரம்,
திருமண மண்டப முன் துகை,
மேளதாள ஏற்பாடு,
சமையல் ஒப்பந்தக்காரர்,
என பெற்றோர் செய்யும் சிலவுகளை
மௌனமாக  பார்த்துவிட்டு ஓடும் மகன்,மகள்.
இந்த சமுதாய அவலம் .
இதற்கு அதரவு,எதிர்ப்பு,
அடிப்படை கொலை,தற்கொலை ,கைபேசி ஆபாசப்படங்கள் ,
மிரட்டல்கள்.
பலன்  அமைதி இல்லா வாழ்க்கை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆப் மைண்ட்.
இதில் மற்றொரு அவலம் அனைவரும் பட்டதாரிகள்.
மாடியிலிருந்து குதித்து தற்கொலைகள்.
சேர்ந்து வாழலாம் திருமணமின்றி,
பெற்ற குழந்தைகளை அரசு பிராமரிக்கட்டும்----_
!!!உச்ச நீதிமன்றம்.!!!
சின்னத்திரையிலோ ஒருவர் இரு காதலிகள்.
வஞ்சம்.ஏமாற்றம் துரோஹம்.
காதல் கட்டாயப்படுத்த அமிலவீச்சு,தூக்கமாத்திரை.
மணிக்கட்டு அறுத்துக்கொள்ளுதல்
இப்பொழுது  தற்கொலை செய்வதை

பலர் ரசிக்கும் படி
வலைக்காட்சி  . அறிவியல் கல்வியின் மறுமலர்ச்சி.
கல்வி முதுகலைப்பட்டம். பொறியியல் .
காதல் பொறி;கள்ளக்காதல் ,அதற்காக அடியாள் வைத்துக் கொலை.
கல்வி என்பது இப்பொழுது பணத்தை
 ஆதாரமாகவைத்துத்
திணிக்கப்படுகிறது. ஆணவம் அதிகமாகிறது.
பாசம் இல்லை; அன்பு இல்லை;பண்பு இல்லை;நேசம் இல்லை;
இயந்திர வாழ்க்கை. நிம்மதிக்கு போதை;
அதற்கு அரசு மதுபானக்கடைகள்.
அதன் வருமானத்தில் தான்
அரசு நல திட்டங்கள்.
தீயவழி வருமானம்.
அதனால் போடும் சாலைகள்
போட்ட வேகத்தில் பல்லாங்குழி.
தீயவழி வருமானம்.
அதில் கல்விக் கூடங்கள்.
அதுவும் மாணவர்கள் வராத பள்ளிகள்.
பல ஆசிரியர்கள்;சில மாணவர்கள்.
வரும் வருமானம் எப்படியோ அப்படியே வீண் சிலவுகள்.
நீதி கிடையாது,எல்.கே.ஜி.கே சிபாரிசு;கைஊட்டல் ;நன்கொடை;
பணத்திற்கு மதிப்பு;
இதில் அறம் செய விரும்பு இல்லை.
மீனைப்பிடி;விட்டுவிடு.
ஒன்னு,இரண்டு,மூணு,நாலு அஞ்சு.மீனைப்பிடி;
ஆர்,எழு,எட்டு ,ஒன்பது ,பத்து  மீனை விட்டுவிடு.
என் பேரனின் ஆங்கிலப்பாடல் பொருள்.
அருளற்ற ஆங்கிலக்கல்வி.
பூனையே!பூனையே!எங்கே போறே;
லண்டனுக்குப்போறேன் ராணியைப்பாக்க. மழலைப்பாடல்.
மாதா,பிதா ,குரு தெய்வம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்  ஒலிக்கவில்லை;ஒளிரவில்லை;
ஆலயம் தொழுவது சாலவும் நன்று --இந்த அறவுரை அகற்றப்பட்டது.
ஒழுக்கம் இல்லா வளர்ச்சி;

 தற்கொலை;
 காவல் துறை அறிவிப்பு:
நடமாட்டமில்லா  மாடிகள் பூட்டப்படவேண்டும்.
மடிக்கணினிகள்  அனுப்பும் முகநூல்
 ஆபாசங்கள்.

மறக்கப்பட்டது:-
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து.