திங்கள், ஜூலை 02, 2012

2.why the Hindus voice differs? Why there is no one voice Part-2




ஒரே குரல் ஒலிக்கவில்லை .ஏன் ?


ஹிந்து தர்மத்தில் ஒரே குரல் ஒலிக்காதது ஏன் ?என்று ஒருவர் கேட்டதில்

இருந்து பல எண்ணங்கள்  /சிந்தனைகள் மனதில் தோன்றிக்கொண்டே

இருக்கின்றன.
கோரி முஹம்மது,கஜினி முஹம்மது  படை எடுப் பின்  போது  ஒற்றுமை

உணர்வு இருந்ததால்  பல முறை கொள்ளை அடிக்கப்பட்டாலும் காசி மாநகரம்
காக்கப்பட்டது.

நமது இலக்கியங்கள் ,வரலாறுகள்  நமது நாட்டின் ஒற்றுமை இன்மையை

காட்டுகின்றன.வரலாறு என்பது இன்றைய சூழலில் நம்மை உயர்த்த

,சிந்தனை நமது வீழ்ச்சியின் காரணங்கள் அறிந்து எழுச்சி பெற உதவும்

 காலக் கண்ணாடி.

ஹிந்தி இலக்கிய வரலாறு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
 இலக்கியங்கள்
சமுதாயத்தின் பிரதிபலிப்பாக  விளக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் பிரிவு  வீர காப்பியங்கள்.

வீரகாப்பியங்கள் தோன்றிய காலத்தில் எவருக்குமே நாட்டை பற்றிய

 அக்கறை கிடையாது.கவிஞர்கள்  அரசனை  சார்ந்து   வாழ்ந்தனர்.

அவர்கள் நோக்கமே "உணவு  அளிப்பவர்களின்  உள்ளம் மகிழ  கவிதை பாடுவதே".

அழகிய அரசகுமாரிகளின் அழகை  வர்ணித்து

 அரசனின் வீரம்,வலிமை,சக்தி ,சாகசம் போன்றவற்றைப்

 புகழ்ந்து ,அவன் மனதில்

வீரத்தையும் ,அரசகுமாரிகளின் மீது  மோகத்தையும்

 அதிகரித்து போரிடத்தூண்டுவதே.

மேலும்  ஒரு சிறப்பு புலவர்களே  புரவலர்களின்  படைத் தளபதியாக இருந்ததே.
அரசனின் எண்ணம் முழுவதையும் ,நோக்கம் முழுவதையும் அரசகுமாரியை அடைவதே.
 போர் என்பது நாட்டின் நலனுக்காக அல்ல;

.நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதற்காக அல்ல;

,அழகிய அரசகுமாரியை கவர்வதே.

இந்த இலக்கியங்களுக்கு இடையில் சில பக்தி இலக்கியங்களும் தோன்றின.

அனால் தற்காலம் போன்றே பக்தி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம்

கொடுக்கப்படவில்லை.
(தொடரும் )

1.why the Hindus voice differs? Why there is no one voice Part-1


ஹிந்துக்கள்  ஏன்   ஒரே  குரல்  எழுப்புவதில்லை?

           நேற்று  ஒரு நண்பர் ஒன்று சேர்தல் (Get together function) சந்தித்தல் -(விருந்தோம்பல்  என்பதற்கு ஆங்கிலப்பெயர்) நடந்தது.

அதில் ஒருவர்  எழுப்பிய  வினா என்னை சிந்திக்கவைத்தது.

.தமிழ்நாட்டில் கோயில்,ஹிந்து மடாலயங்களில் மட்டும் ஊழல் நடப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆனால் மசூதியிலும்,மாதகோவிலிலும் ஊழல்
இல்லையா?அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?


இந்து ஆலயங்கள்,மடாலயங்கள்,ஆதீனங்கள்  சிக்கலாகும் போது ஏன் 
இந்துக்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதில்லை ?
சிக்கலான வினா?

விடை அளித்தால்  கோபம் வரக்கூடாது
.மக்களாட்சியில் தங்கள் கருத்தை தெரிவிக்க  கருத்து சுதந்திரம் வேண்டும்.உண்டு.
நமது நாட்டில் உள்ள முஸ்லீம்கள்  யார்?கிறிஸ்தவர்கள் யார்?புத்தர்கள் யார்/?
சமணர்கள் யார்?
அவர்கள்  முன்னோர்கள் சனாதன தர்மத்தைதானே பின்பற்றி இருக்கவேண்டும்.அவர்கள் மதம் மாற காரணம் என்ன?

சுயநலமா?பேராசையா?உயிர் பயமா?அடக்குமுறையா?கட்டாயமா? இருந்தால்  அனைவரும் ஆங்கிலம் கற்பதுபோல் மதம் மாறி இருப்பார்.
இவை   காரணங்கள் அல்ல.

.இவைகளுக்கப்பால்,  ஒரு காராணம் .இந்துக்களால் இந்துக்கள்  அவமானப்படுத்தப்பட்டனர்
.பாரதியாரே அவமானத்திற்கு ஆளானார்.

சுதந்திரப்போராட்ட விநாயகர் ஊர்வலம்
 இன்று கேலிக்கும் பயத்திற்கும் காரணமாகி ,

 பலநாட்கள் உழைப்பு,பணம் முதலியவற்றை  கடலில் கரைத்து ,

இறைவனை  கை கால்  என்று பிய்த்து மிதங்கவைத்து,
 கரையில் ஒதுங்கச்செய்தல் ,
அதன் மேல் மறைவில் நாயும் மனிதனும் மலம்-ஜலம் கழித்தல் '
 எவ்வித  பக்தி?
.இந்த ஊர்வலம் நடத்தும் நாள் !! ஒரு பதட்டமான நாளா?பக்திசிரத்தை யான நாளா?!!!

காவலர் புடை சூழ  உருட்டை கட்டை உடன். எப்பொழுது கலவரம்

வெடிக்குமோ/?குண்டுவேடிக்குமோ  ?
 என்ற அச்சம் வேறு.
அழகு  சிலைகள் சிதைக்கப்படுவது,

  என்  நோக்கில் குரங்கு கையில் கொடுத்த,பூமாலை போல்  அழகு

கலைவண்ணம் மிக்க வினாயகர்களின் சிலைகளை

தூக்குவான் மூலம் கடலில் எறிவது.

அதற்கான   முதலீட்டை ஆக்க பயனுள்ள

பணிகளுக்கு,அரசுப்பள்ளிகளின்  குடிதண்ணீர்,கழிவறை வசதி ஏற்படுத்த

செலவு செய்து சக்திவினாயகர்  திருவிழாவை பக்தர்கள் அழிக்கும்

 நிலைக்கு பயன் படுத்தாமல் ஆக்க பணிக்கு பயன் படுத்தலாம்.

பால கங்காதர திலகர் வெள்ளையனை எதிர்த்துப்போராட,

 மக்களை ஒன்று சேர்க்க விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும்
  என்ற இயக்கம் தொடங்கினார்..
இன்று  அது ஒரு மத உணர்வாக மாற்றப்பட்டு,

 இலட்சக்கணக்கான ரூபாய்கள் கடலில் கரைக்கப்படுகின்றன.

.எனது  கருத்து.

கொந்தளிக்கவேண்டாம்

(தொடரும்)

ORE KURAL OLIKKAVILLAI.en?இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை




இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை.


 ஏன் ?  என்ற வினா


 என் மனதில் பல சிந்தனைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
.
பல ஹிந்து மத சிந்தனையாளர்களையே  குழப்பும் வினா  இது.

சைவம் என்று சொன்னால் அதில் வீர சைவம்.லிங்காயத்து

சம்பிரதாயம்,அகோரர்கள்,நாத் பன் தி ஜோகிகள் .பல மடாலயங்கள்;ஆதீனங்கள்.அவர்களுக்கிடையே போட்டிகள்;பொறாமைகள்.ஒருவர் வளர்ச்சி மற்றவர்கள் தளர்ச்சி.
பின்னர் இன -ஜாதி வேற்றுமைகள்.

வைணவம் என்றால் உயர் நீதிமன்ற யானை நாம வழக்கு  பிரபலம்...வடகலை,தென்கலை.
ஆண்டவன் ஆஸ்ரமம் .
அர்ச்சகர்கள் என்றால் குருக்கள்;வைகாநசர் .இவர்கள் இறைவனுக்கு கைங்கரியம் செய்பவர்கள்.
தனியார் ஆலயங்கள்,அரசின் கீழ் வரும் ஆலயங்கள்,ஜாதிகளின் ஆலயங்கள்,
தன்  சிலையையே வைத்து வழிபடும் ஆலயங்கள்
,தலைவர்களின் மேல் உள்ள பற்றால் ஏற்படுத்தும் ஆலயங்கள்,
ஒருவர் சமாதியின் மேல் காட்டப்படும் சிவாலயங்கள்,கிராமகோயில்கள்,
அதன் பூசாரிகள்,காவல் தெய்வங்கள்,அம்மன் கோயில்கள் அதில் பூசை முறைகள்,அந்தணர்கள்  அர்ச்சகர்கள்.அந்தணரல்லாதவர்கள் கிராமத்து பூசாரிகள்.தெய்வத்தை வழிகாட்டுபவர்கள்  பல்வேறு சங்கங்கள்.

அனைவரும் ஒரே குரலில்  ஒலி  எழுப்ப காலம் கணிந்துவிட்டதா?ஆம்.
நாட்டின் விடுதலைக்குப்பின்  பொருளாதார அடிப்படையில் சோ அவர்களின்
எங்கே பிராமணன் ?? என்ற தொடர் இந்தக்காலத்திய பகுத்தறிவாளர்களின்
அந்தண  வெறுப்பைப் போக்கும்.பரந்த மனப்பான்மையை உண்டாக்கும்.
இப்பொழுது  அக்ரகாரங்கள்  காலியாகி  விட்டன.. அப்படி இருந்தாலும்  வயதானவர்கள்  தான் இருக்கின்றனர்..இளைஞர்கள்  அனைவரும் நகரத்தை நோக்கி அல்லது வெளிநாட்டிற்குப்பயணம் செய்து
விட்டனர் . பல பழைய ஆலயங்களில் வருமானமே இல்லை..பேருக்கு
ஒரு மணிநேரம் திறந்து வைக்கின்றனர்..

புதிய ஆலயங்களுக்கு வரவேற்பு இருப்பது வியப்பில் ஆழ்த்து கிறது..அரசாங்க பள்ளிகள்,அரசு கோயில்கள்  புறக்கணிக்கப்பட்டு  தனியார் கோயில்கள்,தனியார் பள்ளிகள் மக்கள் விரும்பும் வருமானம் வரும் அமைப்புகளாக  மாறிவருகின்றன..



(தொடரும்)