செவ்வாய், டிசம்பர் 04, 2012

ஆலய வழிபாட்டில் நேர்மை,சத்தியம் ,வரிசை இருந்தால்


ஆலயம் தொழுவது  சாலவும் நன்று.

ஆன்மீகம்  தழைக்கவும் ,ஆஸ்தி  தேவையே.

ஆலயங்கள்  ஆடம்பரமிருந்தால் ,

அலைபாயும் பக்தர்கள்.

 வைரக் கீரீடம் ,அலங்கரித்த  ஆண்டவன் ,

அந்த  ஆண்டவன் முகத்தில் ஒரு புன்னகை,

அந்த முகத்தில் பேசும் நயனங்கள் ,

அந்த ஒரு கண  தரிசனம் ,

அப்பொழுது பெரும் ஒரு பிரம்மானந்தம்,

அருள் பெற்ற அநுபூதி,

பெற்ற  தன்னம்பிக்கை,

அவனின்றி  எதுவும் இயலா  என்ற,

மன உறுதி  ,செயலாற்றத் தூண்டும் ,

ஒரு  உத்வேகம்,
பலவித   அலங்காரங்களால்  காணும் ஆசை,
சந்தனக் காப்பு ,அதன் அழகு ,
புஷ்பாலங்காரம்  அதன்  புனிதம்,
அஷ்டோத்திரம்,சஹஷ்ராநாமம்
அதன்  மந்திர ஓசை ,
வேத மந்திரம் தரும் பரமானந்தம்,
மன  சாந்தி ,சத்விசாரங்கள் ,
சதசாரங்கள்,
ஒருமுறை  தரிஷன முன்னேற்றம்,
ஆலயங்களுக்கும் ஆஸ்தி தேவை.
ஆலயப் பிரசாதங்கள் ,
அதன் தெய்வீக  மணம் ,ருசி ,
ஆஹா. ஆலயங்களுக்கும் ஆஸ்திகள் தேவை.
பிரசாத ஸ்டால்கள் ,வணிகநோக்கம் .
தவிர்க்கப்பட வேண்டும்.

பழனி  என்றால்  பக்தர்கள் அனைவருக்கும்
பஞ்சாமிருதம் ,தேன்  தினைமாவு வழங்க
வேண்டும்; அதில் நேர்மை வேண்டும்;
திருப்பதியில்  ஒரு சின்ன லண்டு
அனைவருக்கும்  கிடைக்கும்,
அந்நிலை பழனியில் வர தனி
புரவலர்கள் வரவேண்டும்.
அதில் போய் பிரட்டு நடக்காமல்
ஆண்டவன் காக்க வேண்டும்.
ஆஸ்திகள் தரும் புரவலர்கள்
தான் கொடுத்த நன்கொடை நற்பயனாக
இருந்தால் அள்ளிக்கொடுப்பார்

ஆனால்  பிரசாதம் கிள்ளிக்  கொடுக்கக் கூடாது.
நேர்மை  ,சத்தியம்,தர்ம சிந்தனை ,நியாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
பக்தர்கள் பிரசாதம் பெற  ஒழுக்கம்,கட்டுப்பாடு,வரிசையில் செல்லுதல்.
ஆண்டவன் அருள்  பெற வழி  என்ற கோட்பாடை உணர்ந்து
செயல் படவேண்டும்.
ஆலய அநியாயங்கள் சனாதன தர்மம்
தழைக்க  உதவாது.
அதையும் மீறி அலைபாயும் கூட்டம்
அதுதான்  ஆலய மகிமை.
தரிசனம் செய்யும் வரை பக்தர்கள் புலம்பல்.
மூலவர் தரிசனம் இரண்டு நொடி;
மீண்டும் வர  சங்கல்பம்.
எத்தனையோ  பேர் வெறுத்து
செல்லவேண்டாம் என்ற சங்கல்பம்  
தவிர்த்து ஆண்டாண்டு தோறும் இடைவிடா
புனிதப் பயணம்.
புனித ஆலயங்களில்  ஒரு காந்தக் கவர்ச்சி.
அந்த உள்ளுணர்வு இருந்தாலும்,
அனைவருக்கும் கிட்டுவதில்லை
அந்த பாக்கியம்.
சிலரை சில சூழல் கள்  இழுத்துச் செல்கின்றன.
ஆலய தரிசன மகிமை ,
அனுபவ  உண்மை.
அதனால் தானே கூட்டம் அதிகம்.
இன்னும் ஹிந்துக்களில் ,கட்டுப்பாடு ஒழுக்கம்,
ஆலய வழிபாட்டில் நேர்மை,
சத்தியம் ,வரிசை  இருந்தால்
வையகத்தில் இதற்கோர்  இணையில்லை .