புதன், ஜூன் 19, 2013

என்று தணியும் நேர்மையின் தாகம் .

இந்திய அரசியல்.

தடி எடுத்தவன் தண்டல் காரன்.

இன்று பணம் என்ற தடி கொண்டவன் 

அரசியல்வாதி ;மக்கள் பிரதிநிதி;

மக்கள் வரிப்பணம் அதையே இலவசமாக 

வழங்கி வாக்குப் பெரும் அரசியல் தந்திரம்;

அம்மா உணவகம்  நல்ல திட்டம்;

ஆலயங்களில் அன்னதானம் உயரிய திட்டம்.

கல்விக்கொடங்களில் இலவசங்ககள்;

அனைத்தும் உயரிய திட்டங்கள்;

பாராட்டப்பட வேண்டியவைகள்;
அரிசிகார்டுக்கு  இலவசம் ;
சர்க்கரை  கார்டுக்கு கிடையாது.

ஒய்வு பெற்ற முதியோர்கள்,
வருமானம் இழந்தோர் 
எத்தனையோ பேர் 
அன்றைய சூழலில் சர்க்கரை அட்டையாக மாற்றியோர்,

அன்றைய அரிசி  அட்டை,
இன்று  பணவசதி கொண்டோரிடம்,

இலவசங்கள் ஏழைகளை சென்றடைவதில் எத்தனையோ 

ஊழல்கள்; சிக்கல்கள்;

ஒரே வீட்டிற்கு இரண்டு  மூன்று இலவசங்கள்;

இதற்கு ஒரு விசாரணை குழு போட்டால் 

இலவச விநியோக முறைகேடுகள்;

விசாரணைக் குழுக்கள் அறிக்கை  வெளிவராது;
சொத்துக்குவிப்பு வழக்குகள் போல்;

பல விசாரணைக்குழுக்கள் ,பல அறிக்கைகள் 

மீண்டும் கருணை அல்லது ஜெயா;
வேறு மாற்று வழியில்லை 
தமிழக மக்களுக்கு;

என்று ஏற்படுமோ விழிப்புணர்வு;
என் காலம் முடியும் நேரம்;
விழி த்து க்   கொள்ளுமா 

இளைய சமுதாயம்;

பணத்திற்கும் ,இலவசத்திற்கும் 

விலைபோகுமா ,
விலைமதிப்பில்லா வாக்குரிமை.

பாரதி இருந்தால் பாடி இருப்பான்.

என்று தணியும் இந்த இலவச மோகம்,

என்று தணியும் நேர்மையின் தாகம் .