செவ்வாய், டிசம்பர் 24, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

உன்னடி





சிலந்திவலையில் சிக்கிய புழு.

கணவன்   
கணவன்   மௌனக் கண்ணீர்  வடிப்பவன்

திருமணத்திற்கு முன்  சுதந்திரப் பறவை.
பின்னர் 
மத்தளம் போல் வேதனை இடிகள்.
தாயார் ,தம்பி ,தங்கை  ஆதி உறவு 

மனைவி  புதிய உறவு.

இந்த புதிய உறவை  மகிழ்விக்க 
ஆதி உறவுகள்  சற்றே உதாசீனப் படுத்தும் உணர்வுகள்.
தாய் வீடு  செய்யும் தவறுகள் 
அவமானங்கள்  அநீதிகள் 
உதவாத தன்மைகள்,
கேளிக்கைகள் கிண்டல்கல்கள் அனைத்தையும் 
சகிக்க வேண்டும் கணவன் .
அப்பொழுதான் அன்பின் தழுவல்.
இல்லையேல் மழுப்பல்.
சகுனியின்  செயல்கள் மகாபாரதம்.
கூனி யால் ராமாயணம்.
எல்லாம் தாய்வீட்டு உறவு.
இப்படிப்பட்டவர்களை  சஹித்து
வாழ்ந்தால் இல்லறம் நல்லறம். 
பு திய உறவு /புத்தம் புது வரவு

ஆதி உறவுக்கு ஆனந்தம் குறைவு.
மாமியார் வீட்டார் தவறுகள் 
மனைவியால் அரங்கம் ஏறும்.
மனைவியின் தாய்வீட்டுத் தவறுகள் 
மறைக்கப்படும்.
மறக்கப்படும்.
மனைவியின் முகத்தில்  சிரிப்பு 
அன்பு   காண 
கணவனால் மறக்கப்பட வேண்டியவர்கள் 
கணவன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்நிலை அதிகம்.
பாவம் கணவன்.
பாசம் மறக்கும் மோஹ சிலந்திவலையில் 
சிக்கிய புழு.
பாசம் உறவு  இவ்வலையில் மடிந்துவிடும் 
விளைவு முதியோர் இல்லம்.