ஞாயிறு, ஜனவரி 29, 2017

हस्थ फोन

मेरी नयन तारा सखी!
जगाती मुझे न गालियाँ देकर।
मधुर गीत गाकर  जगाती।
याद दिलाने किसी की जरूरत नहीं,
यादों की सूची लेकर 
दैनिक कार्य - क्रम लेकर
साथ ही रहती है वह।
छूटने न देती ,भूलने न देती।
,गला फाडकर चीखने - चिल्लाने की जरूरत नहीं,
तरंगों के शोरों के पार के दोस्तों से,
आहिस्ते -आहिस्ते बोलने की मधुर सुविधा देती।
  जल्सों की बधाई संदेश के तार
पहुँचते   अति विलंब।
अब संक्षेप - संदेश
तुरत पहुँचाने, साथ देती ।
अपूर्व संवाद,
दुर्लभ  दृश्य ,
तुरंत जमै करने का चातुर्य।
मधुर यादों के गीत ,
जब मन चाहता ,
तब सुनाने में समर्थ।
मेमरी कार्ड ।।
कविता लिखना है तो
न कागज  की जरूरत न स्याही की।
उंगलियों से लिखता हूँ,
ठीक करता हूँ, पढता हूँ ।
तरंगों के गोपुर काम नहीं करता तो
रुकावट खेद नहीं  कहा करती।
तरंगों के गोपुर काम नहीं करता तो
रुकावट खेद नहीं  कहा करती।
एक पल भी मुझसे अलग नहीं कटती,
मेरी प्रिय सखी।
इसकी निकट संपर्क देख ,
मेरी तबीयत की चिंता है सब को।।
केवल इसका वजन मात्र नहीं,
किरण -असर भी कम होता ,तो
और भी अच्छा हो जाता।

வாழ்க பாரதம்

அவனியின் ஆனந்தம் ,
ஆண்டவனருளினாலே.
 அவனின் திருவிளையாடல்
அவன் மீதே ஐயம் உண்டாகும்.
நல்லோர் என்போர் உலக நலம் நாடுவோர்.
ஆசையின்றி அவனருளே
போதும் என வேண்டுவோர்.
சுயநலமிகள் ஆட்சி அதிகாரம் என
ஆடம்பர வாழ்க்கையில் ஆனந்தமடைவோர்.
பற்றற்ற துறவிகள் வையக நலனுக்காக
தனக்கென சேர்க்கா அன்றாடங்காய்ச்சிகள் .
அவர்கள் மரம் போன்றவர்கள்.
அவர்கள் நதி போன்றவர்கள்.
அவர்கள் நிலவு போன்றவர்கள்.
அவர்கள் பரிதி போன்றவர்கள்.
 மற்றவர்களை அவர்கள் பிரித்துப்
பார்ப்பதில்லை.
மதம் பார்ப்பத்தில்லை.
இனம் பார்ப்பதில்லை.
ஜாதிகள் பார்ப்பத்தில்லை.
சமரச சன்மார்க்கம் காட்டுபவர்கள்.
நல்வழி காட்டும் உத்தமர்கள்.
அவர்களைப்போல் நானும் என்று
அயோக்கியனும் கூறுவதில்
பெருமை கொள்வான்.
அடியார்கள் தொண்டரடிப்பொடியாழ்வார்கள்.
புலனடக்கம் கற்பிப்பார்கள் .
இந்த திரைப்பட பண முதலைகள் போல்
மயக்கும் பாடல், மங்கை உடல் காட்சிகள்
காட்டாதவர்கள்.
இறைவனின் அறக் கொள்கைகள் வகுத்து
தொகுத்து மக்களுக்கு பிரம்மானந்தம் அளிக்கும்
மார்க்க தரிசிகள்.
போற்றுவோம். அவர்நூல்கள் படிப்போம்.
நல்லவர்களால் அகிலம் சிறக்கும் .
அகிலம் செழிக்கும் .
ஐம்புலனடக்கம் ஆண்டவன் பற்று
சாந்தியும் ஆனந்தமும்  மனநிறைவும் அளிக்கும்.
கோடிகள் சேர்த்து கேடிகள் என்ற பெயர் வேண்டாம்.
அரச பதவி துறந்து அன்புவழி அறவழி காட்டிய
ஆசிய ஜோதி அகிலப் புகழ் பெற்றார்.
மகாவீரர் முற்றிலும் துறந்து அறநெறி புகட்டினார்.
ரிஷிகளும் முனிகளும் காட்டுக் குடிலில்
வாழ்ந்து வையகம் உய்ய பெரும் வழி காட்டி
பாரதநாட்டை பார்புகழும் நாடாக்கினர்.
அய்யகோ! இன்று அராஜக ஊழல் ,
நீதிமன்ற அவ நம்பிக்கை
நியாயமற்ற செயல்கள்
அவனியில் அவமானச் சின்னமாகும்  நிலை மாற
இளைஞர்களே ! விழித்தெழுங்கள்.
விழிப்புணர்வை  உண்டாக்குங்கள்.
வாழ்க பாரதம். 

வெள்ளி, ஜனவரி 27, 2017

வாழ்த்தி வணங்குவோம்.

வையகம் வாழ்க என்றே
வேதங்கள் முழங்கும்
பாரத ஆன்மிகம்.
பார் போற்றும் பாரத ஆலயங்கள்.
அவனியின் ஆச்சரியத்திற்கு
அறிவியலின் வியப்பிற்கு ஒரு
திருநள்ளாறு,ஒரு தஞ்சை பெரியகோயில்.
சிதம்பர நடராஜர் கோயில் ,
நெல்லையப்பர் கோயில்.

வேற்றுமையில் ஒற்றுமைகாணும்
புவியியல்  பூகோள வேற்றுமைகள் .
மொழிகள் பல,
தெய்வீக வழிபாடுகள் பல
அனைத்திற்கும்  மேலா ஒற்றுமை தரும்
காசி -ராமேஸ்வர தீர்த்த யாத்திரை.
பத்த்ரிநாத்,அமர்நாத்,கேதார்நாத் ,ரிஷிகேஷ்
திரிகம்பேஸ்வரர், சீரடி ,ஐயப்பன் கோயில்
யாத்திரைகள்.
அன்பே சிவம் .
தென்னாடுடைய சிவன் ,
எந்நாட்டிற்கும் இறைவன்.
எளிமையின் காட்சி ,
சுடலை பொடிபூசி
வைத்தியநாதனாக
குருநாதனாக
வையகம் வாழ்விக்க இறைவனவதாரங்கள்.
கிராம  காவல் தெய்வங்கள்.
கருப்பண்ண சாமி, மதுரைவீரன் , மாரியம்மன்
துர்க்கை அம்மன் , துரௌபதி அம்மன்
ஹிந்து மத வழிபாடுகள்
ஆடம்பரங்கள்
எளிய கோயில் ஏழை மாரியம்மன்
இந்த அற்புத ஆன்மிகம்
கல்கத்தாகாளி  தீண்டப்படாத தீண்டும் ஜாதிகளின்
இணைப்பாக ,அந்த ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி விவேகானந்தர் , ராமானுஜர்
சிந்திப்பீர் இளைஞர்களே!
பாரதம் பழமை அறிவீர் ,
பாரினில் சிறந்து வாழ்வீர் .
இறைவன் அருள் பெற
  வாழ்த்தி வணங்குவோம்.
ஓம் கணேசா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி.
ஓம் நமச்சிவாய
ஓம்  துர்கயே போற்றி. 

வியாழன், ஜனவரி 26, 2017

குடியரசு நாளில்
 நாம் நாட்டின் குறிப்பாக தமிழகத்தின்
வரலாறு பற்றி சிந்தித்தால்
தீர்க்கதரிசி பாரதியின் பாட்டு
நமக்கு நினைவிற்கு வரும்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவருக்கும் தாழ்வே".
  சேர சோழ பாண்டிய நாடு.
மண்ணிற்கு ஒரு குணம்.

வெட்சி நிறைகவர்தல் ;
மீட்டல் கரந்தையாம்.
வட்கார் மேல் செல்வது வஞ்சி;
எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை--அதிரப்
பொருவது தும்பையாம்;
போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்.
இப்படி நில அமைப்பு.
  கல்வி பண்பாடு உள்நாட்டு
வெளிநாட்டுத் தொடர்பு
என்ற சிந்தனையில் பார்த்தால்
பாரதம் என்ற தேசிய சிந்தனை
விடுத்து  குறுகிய  தமிழன் என்ற சிந்தனை நாட்டை வளர்க்குமா?
 பல்லவர்களாட்சி
தெலுங்கர்கள் ஆட்சி
சரபோஜி மராட்டிய ஆட்சி
இவர்களது ஆட்சியில்
தமிழ் நாடு வளம் பெற்றதா
இல்லையா?
தமிழ்   மொழி வளர்ந்ததா இல்லையா?
மதுரையில் மக்கள் தொகையில்
சௌராஷ்ட்ர மொழி பேசுவோரின் வாக்குகள் தான்
அந்த நகர மக்கள் பிரதிநிதியை நிர்ணயிக்கும்.
இங்குள்ள  தமிழ் தாய்மொழி இல்லாதவர்கள் தமிழை மிகவும் வளர்த்துள்ளனர்.
நாயக்கர்கள் ஆட்சியில்
தெலுங்கு கற்பிக்கப்படவில்லை.
மராட்டிய மன்னர் ஆட்சியில்
மராட்டி கற்பிக்கப்படவில்லை.
 இங்கு சிந்திக்க வேண்டியது
கல்வி வியாபாரத்திற்காக
தமிழ் வழிக்கல்வி    மூடப்பட்டு
ஆங்கிலப்பள்ளிகள் அதிகம்
திறக்கப்பட்டு தமிழ்  வழி வேலைவாய்ப்பில்லை
என்ற நிலை திராவிடக்கட்சிகள்
ஆட்சி வந்தபின்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்று இந்திப் போராட்டத்தில்
பல இளைஞர்களை பலியிட்டு
ஆட்சி பிடித்தபின்
அவர்கள் திறப்பது ஆங்கிலப்பள்ளிகள்.
 தமிழ்  தமிழ் என்று வாக்கு வாங்க.
சிந்தியுங்கள்.
தேசீயம் பாரதம்
இந்திய தேசம்
என்பதே நம்மை வளர்க்கும்.

புதன், ஜனவரி 25, 2017

திங்கள், ஜனவரி 23, 2017

மாணவர்கள் இடையில் அராஜக அரசியல் வாதிகள்.

முகநூலில்    மட்டும் தொலை தொடர்பு  சாதனங்களில்

தவறான செய்திகள்,படங்கள் போட்டு
நாளுக்கு நாள்  நம்பகத் தன்மை இழந்துவருகிறது. இழந்துவிட்டது,

சனி, ஜனவரி 21, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்.

 ஜல்லிக்கட்டு  போராட்டம்
 அதிக மனமார்ந்த ஆதரவு
தன்னிச்சையான  போராட்டம்.
இதே போராட்டம் கிரனைட் ஊழல்,
டாஸ்மாக்  ஊழல்,
௨ஜி ஊழல்,
நீதிமன்ற தீர்ப்பு  ஒத்திவைப்பு
வராதது,
அம்மா மரண சந்தேகங்கள்
லஞ்சம் , ஆலய நிலங்கள் ஆக்கிரமிப்பு ,
மணல் கொள்ளை ,
சகாயம் அளித்த அறிக்கை மீது நடவடிக்கை
பல நாட்டுத்துரோக ,
இறைவன் விரோத செயல்கள்
மின்வாரிய ,மாநகராட்சி ஊழல்கள்,
இன்னும் எத்தனையோ.
இறைவா! நீ தான் ஒரு எழுச்சியைத்தரவேண்டும் .
நாட்டை காப்பாற்ற உன்னிடமே சரணம்.
இப்படியே செய்தால்   இறை நம்பிக்கை குறையும்.
தர்ம நம்பிக்கை குறையும்.
கோடிகள்  சேர்த்து நாடுக்காக்கா  அரசியல் கட்சிகள்
இன்றல்ல நேற்றல்ல வரலாற்று நிகழ்ச்சிகள்.
இறைவனே சரணம் !

வியாழன், ஜனவரி 19, 2017

தினம் தினம்

   தினம் தினம் ஆட்டுக்கறி
   விற்கப்படுகிறது.
சேவல் சண்டை , ஜல்லிக்கட்டு
போன்ற பாரம்பரிய பண்பாட்டு
விளையாட்டுக்குத் தடை.
இது முட்டாள் தனமப்பா.
நீதிபதிக்கு என்னாச்சு?
நிதிபதி ஆகிட்டாரா ?
வெளிநாட்டு மோகம்
பாரதீய கலாச்சாரத்தை அழிக்குமா?
பொறுத்தது போதும் பொங்கி எழுந்தாச்சு.
மனசாட்ட்சியுள்ள காவல் அதிகாரிகளாக
செயல்பட்டு அமைதிப்போராட்டம்
வெல்ல வழிவிட்டால் போதும்.
காளை வளர்ப்பது ஒருகலை.
அதை அடக்கி வீரம் வீரமுள்ள
இளைஞர்கள் உருவாக்க வேண்டுமே ?
ஆண்டுக்கு ஒருநாள் காளை விளையாட்டு .
ப்ளுகிராசே ! பீட்டாவே!
தினம் தினம் நீ திங்கும்
மீன்கள், ஆடுகள், ஒட்டகம் ,
கடல் ஜீவராசிகள் ,
பைத்தியக்கார எதிர்ப்பு.
மனசாட்சி இல்லா சட்டமேதைகள்.
நீதியா இது ?
நீதி வாழ  ஜல்லிக்கட்டு
நடத்த தீர்ப்பு வேண்டும்.




  தினம் தினம் பலவித
மாமிசங்கள் உயிர்ப்பலி
ஊர்வன, பறப்பன, நடப்பன ,
முட்டை, முட்டடைபோட்ட கோழி ,
சேவல்,  காடை என பலியிடும்
மனித  இனம் .
ப்ளுக்ராஸ் , பீட்டா  தெரியுமா ?
தெருநாயிக்கு பாதுகாப்பாம்,
அது துரத்தி எத்தனை விபத்துக்குள்
தெரியுமா  இந்த பீட்டாவுக்கு.
எலிக்குன்ஞ்சு அடித்ததற்கு
கல்லூரி அழகுப் பெண்கள்
ப்ளுகிராஸ் சென்றதும்
காவல்துறை விசாரிப்பு,
அந்த எலிகள் எங்கள் வீட்டு
தொலைகாட்சி பெட்டி ,
துணிமணிகள்  , நோட்டுகள்,
நோட்டுப்புத்தகங்கள்
கடித்து குதரவுவது தெரியுமா ?
கொசுவும் ஒரு ஜந்துதானே ?
கரப்பான் பூச்சியும் ஜந்து தானே
ஹிட் விளம்பரம் தடை செய்யுமா?
முட்டாள் ப்ளு கிராஸ்,பீட்டா,
சட்டம் வீணாக விலங்கினங்கள் காக்கிறதாம்.
ஆண்டவன் படைப்பில்
மாமிசம் மட்டுமே சாப்பிடும் மிருகங்கள்,
பூனை வளர்ப்பதே எலித்தொல்லை நீங்க,
அரசர்கள் வேட்டை ஆடுவது
கொடிய மிருகங்கள் வதம் செய்ய.


செவ்வாய், ஜனவரி 17, 2017

ஜல்லிக்கட்டு.

 ஜல்லிக்கட்டு

தேவைதான் . ஆனால்

போராட்டத்தில்
நாட்டை துண்டாடும் கோஷங்கள்.
மோடியைத்திட்டுவது
சென்ற ஆண்டு ௨௦௧௧இல்
காங்கிரஸ் -தி.மு.க இரண்டும்  சேர்ந்து செய்த தடை .
மோடி என்றும் , தனித்தமிழகம் என்றும்
தேசீயம் உடைக்கும் கோசம்
ஆந்திராவில் கோழிச்  சண்டையில் இல்லை.
அங்கு முதல்வரே ஆதரவு.
இங்கு மாநில அரசே தடைக்கு ஆதரவு.
சிந்திப்பீர்.
ராஜா தன மாட்டுடன் களத்தில்.
௨ஜி ராஜா காலத்தில் வந்த தடை.
பாரதம் துண்டாடும் கோஷங்கள் சரியில்லை.
தேவை இல்லை.
இது வெளிநாட்டு சதி.
ஒரே போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.
தேச விரோத கோஷங்கள்
தேசீயக் கொடி விரோத முழக்கங்கள்
கண்டிக்க தண்டிக்க வேண்டியவை.
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கு.
போலீஸ் தடியடி வேண்டாம்.
அது மாநில அரசின் அடக்குமுறை.
சிந்தித்து தெளிய வேண்டும்.

திங்கள், ஜனவரி 09, 2017

இறைவன்

காலை வணக்கம்.
இறைவன் காட்சிப்
பொருளா?
உணரும் மஹா சக்தியா?
ப்ரம்மானந்தம் என்கின்ற 
நிலையில்
அவர் தன்னை முதலில் பல
வகையிலும் உணரவைக்கிறார்.
கந்தர் அநுபூதி
ஈஷ்வராநுபூதி
இது லௌகீகம்.
அலௌகீகம் என்பது
மெய்மறந்த உயர்நிலை.
தன்னையே மறத்தல்.
ஆண்டவன் வேறா?
நான் வேறா?
ஆத்மா வேறா?
பரமாத்மா வேறா?
மனிதன் அனைவரும்சமமா?
நாம் சொல்லமுடியுமா?
ஒருவரைப் பார்க்கிறோம்.
நமக்கு மிகுந்த மரியாதை
தோன்றும் .
மற்றொருவரை பார்க்கிறோம்
நம்மையும் நம் கட்டுப்பாட்டையும் மீறி
சிரிப்போம் கோபமோ மகிழ்ச்சியோ
அல்லது அவரை விட்டு விலகியோ
அல்லது. சேர்ந்தோ இருக்கத் தோன்றும்.
இந்தவுணர்வுகள் எப்படி தோன்றும் ?
புரியாத புதிர்.
குழந்தைகள் நம் வீட்டிற்கு வரும்
உறவினர்கள் நண்பர்களிடம்
ஒரே மாதிரியான பழகுகின்றன?
பலரிடம் பயம்.அந்த மாமாவை கூப்பிடட்டு மா.?அழுகும் குழந்தை
அழுகை நிறுத்தும்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை
சாப்பிடும்.
சிலரிடம் மட்டுமே அன்பு.

சிலரிடம் அந்தரங்க அன்பு.
சிலரிடம் மட்டுமே அன்பு.
சிலரை பார்த்தாலே எரிச்சல்.
இந்த மனநிலையில் ஒரு விசித்திர நிலை.
நம்மை வெறுத்து துரோகம் செய்பவர்களிடமும் அன்பு.
இரத்த பந்தங்கள்.
இவைகள் அனைத்துமே
உணரும் நாம்
நம்தன்னிலைகளை மறந்து
அமர்ந்து தியானம்.
அதுவே மெய்ஞானம்.
இறைவன் உணர்வு
இறையன்பு.
இது உண்டியல் காசு போட்டு
பாலாபிஷேகம் தங்கத்தேர்
போன்ற கமர்சியல் பக்தி அல்ல.