புதன், டிசம்பர் 19, 2012

மன சாட்சி இல்லா போராட்டம்.


நாட்டில்  ராமரையும் இறைபடங்களையும் செருப்பால் அடித்தபோது மௌனம்.

இறைவன் உருவம் பதித்த உடைக்கு எதிர்ப்பு. 

எத்தனையோ புடவைகள் இறைவனின் படத்துடன் வந்துள்ளன.

கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடலாமா என்ற பாட்டிற்கு எதிர்ப்பு இல்லை.

குஷ்பு விஷயப்போராட்டங்கள்   வீண்.மன சாட்சி இல்லா போராட்டம்.

இறவன் படம் நாமம் போட்ட துண்டுகள் அணிகிறோம்.
ஐயப்பன்  பெயர் எழுதிய துண்டுகள்.
கோயிலில் சாமி படம் போட்ட திரை. 

அதில் துடைக்கும்  ஈரக்   கைகள்.
சாமி அல்லது அம்மன் திரை அழுக்குத்திரையாக.

வீண் போராட்டங்கள் விடுத்து ஆக்கப்பணிகள் செய்தால் 
மதங்கள்  வளரும்.

ஏழைகள் வேதனைப் படமாட்டார்

மனிதர்கள்  மனம் ஆழ்கடல் போன்றது.

அதில் யதார்த்த வாதிகள் படும் துன்பம் 


அவர்களுக்குக் கிடைப்பது அவமரியாதை 

மட்டுமல்ல,வெறுத்து ஒதுக்கும்  மனிதர்கள்.

சுயநலம்  வேண்டியபொழுது மட்டும் பயன்படுத்தல்,உடனே அந்த யதார்த்தவாதியை 

அவமரியாதை என்ற சிகரத்தில் ஏற்றல் ,
அலக்ஷியம்  செய்தல்,உண்மையாக இருந்தால் 
மிஞ்சுவது    அவமானமே.

உண்மை யாக இருப்பதால் நான் அவமானப்படுகிறேன்.
வெற்றிவாய்ப்பு தோல்வியாக மாறுகிறது.
கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் கிட்டாமல் போகிறது.
உற்றார்  உறவினர்கள்,நண்பர்களால் ஒதுக்கப் படுகிறேன்.
ஒருவர் செய்யும் தவறுகள் சுயநலம் உள்ளோரால் 
கபட தாரிகளால் மறைக்கப்படுகின்றன.
தவறே செய்யாத யதார்த்தவாதியை   பெரும் கூட்டமே  சேர்ந்து ஒழி க்கப்பாடு  படுகிறது.

அரசியல்,ஆன்மிகம் இரண்டுமே ஏழைகளை ஒழிக்கும்   சாமார்த்தியமான தலைமைகளக் கொண்டவை.
கோடிக்கணக்கில் சேரும் பணம்  இரண்டுதுறையைச்  சேர்ந்தவர்களையும்
 பேராசைக்காரர்களாக்குகிறது .

அவர்கள் பணத்தைப் பதுக்கி  நாட்டுநலம் என்பதில் 

அக்கறை காட்டுவதில்லை.

கோடிக்கணக்கில்  பணம் புதைத்து கிடக்கிறது.
அதை நாட்டு நலத்திட்டத்தில்  பயன் படுத்தினால் 

ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்ற பாடல் 

மெய்யாகும்.