செவ்வாய், ஜனவரி 08, 2013

நமக்கே தண்ணீர் இல்லை;பிறருக்குப்பால். எண்ணம் உயர்ந்தது;செயலாக்கம்?

திருமண பந்தம்


   வாழ்க்கையில்  திருமணம் என்பது ஒருமுறை;

  அது வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி தர;

  ஆனால்,  இன்று இளம் தலை முறையினர்
 
இருநாள்  திருமணம் தானே ,ஒருமுறை தானே

என பத்திரிகை அடிக்கவே இருபதாயிரமாம்.

ஒரு பத்திரிகை 100 ரூபாய்;

இது தவிர பெற்றோர் அடிக்கும் பத்திரிக்கை வேறு;

சத்திர வாடகை  75,000/
சாப்பாட்டுச்சிலவு   காலை  ஒரு இலைக்கு 100/
மதியம்  ஒரு இல்லை         160-180/

வரவேற்பு சாப்பாடு 200/

மாலை டிபன்  80/

மொத்தம் 640/ குறைந்த பக்ஷம் 500 =            320000/

மற்ற சிலவுகள் -------------பந்தல்,போகஸ்  விளக்கு ,மேளம்,ப்ரோஹிதர்,
பூ ,அலங்காரம்,அழகு நிலையம்,நகை

நடுத்தர வர்க்கம்  குரிவிபோல் சேர்த்ததோ/கடனோ/பரம்பரை வீடை விற்றோ , தன்  அன்றாட அத்தியாவசிய தேவைகளைக் குறை த்தோ

இருநாள் ஆனந்தம்;பல ஆண்டு  பொருளில்லா போராட்டம்.

இதைக் குறைக்கச் சொன்னால் மனப் போராட்டம்; பொருளில்லை என்று.

கர்நாடகத்தில் வீணாகும் திருமண சாப்பாடு 3000/ கோடி  என்ற செய்தி.

இந்தத் துகை  பெருந்துகையோ /சிறுதுகையோ

என் எண்ணத்தில் இது பெரும் முதலீடு;
ஒரு நாள் ஆனந்தம்.

அந்த சிலவு செய்யவில்லை என்றால் என்ன கல் யாணம் என்ற பிடுங்கல்.

அறிவியல் முன்னேற்றம் ஆஸ்தி உள்ளவர்களுக்கே;

ஞானம் உள்ளோர் சிக்கனம்  என்றால் கஞ்சன் என்றே பெயர்;

கஞ்சன் என்றால் தங்கம்;

நாம் நமக்காக வாழ்கிறோம்;

நம் இன்னலில்  பொருள் கொடுக்க மாட்டார்கள்;
பொருளில்லா உலகம் பொருள் இல்லை என்றால் மதிக்காது.

திருமண சிக்கனம் ,நம் மகிழ்ச்சிக்கு.

ஊர்ப்பெருமை,நமக்கு சிலநாள்;
நடுத்தர மக்களே! சிந்திப்பீர்! செயல் படுவீர்;

வீண் சிலவுகள்;வீண் வேதனைகள்;

நமக்காக வாழ்ந்தால்  தான் பெருமை;
பிறருக்காக வாழ்வது இன்னல் தரும் .

நமக்கே தண்ணீர் இல்லை;பிறருக்குப்பால்.
எண்ணம் உயர்ந்தது;செயலாக்கம்?