செவ்வாய், ஜூன் 26, 2012

DHARMAM



குல தாழ்ச்சி சொல்லல் பாவம் என்றார் பாரதி.ஆனால் பாரதத்தில் கர்ணன்,விதுரன்  இருவருமே ஒதுக்கிவைக்கப்பட்ட  பாத்திரங்கள் .

கர்ணன் தன்  குருவின்  தூக்கம் கலையாமல் இருக்க தொடையில் வண்டு துளைத்து சென்றதை  பொறுத்துக் கொண்டான்.ஆனால்  அவன் புகழப் படவில்லை. சபிக்கப்பட்டான்.
ஏகலைவனின்  திறமைக்கு  கட்டை விரல் காணிக்கை.
புராணங்கள்  தான் அப்படி என்றால் சமுதாயப்  புரட்சி,கலப்பு காதல் திருமணங்கள் நடக்கும் இக்காலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.
அரசியல் அன்றும் சுயநலத்தால்,இன்றும் சுயநலத்தால்.
 என்று தணியும் இந்த ஜாதிகள் மோகம் என்று இன்று பாரதி இருந்தால்
பாடி இருப்பார்.

தான -தர்ம சிந்தனை என்று கோடிக்கணக்கில் கோயில் உண்டியலில் போடுபவர்கள்  ,ஆஷ்ராமங்களுக்கு அள்ளி வழங்குபவர்கள்
 சேரியில் உள்ளவர்களுக்கு  வீடு சாலை  தண்ணீர்  வசதிகள் செய்யலாம்.
குடி இருக்க  குடி இருப்புகள்  கட்டித் தரலாம்.கோடிக்கணக்கில் தனக்காக வீடு கட்டி வாஸ்து சரியில்லை  என்று குடிபோகாமல் இருக்கும் பணக்காரர்கள்
பலர்  குடியிருக்க தர்மம் செய்யலாம்.