புதன், டிசம்பர் 21, 2011

mana amaithikku mathangalin saaram

மனித மனம் மட்டும் கட்டுப்பாட்டில் இருந்தால்
வையகத்தில் சுவர்கலோகம் காணலாம்.
மனம் எப்பொழுதும் வேகமாக கற்பனை செய்கிறது.
அந்த மனம் காணும் கனவு
செயல்  படுத்த முடியவில்லை என்றால்
  அந்த கனவுகள் பொய்த்துவிட்டால் மனிதன் படும் வேதனை .  அவன் மன எண்ணங்கள் வெற்றிபெற அவன் போடும் திட்டங்கள்
 அவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றுகிறது.
அறிவியல் மேதை கனவானாலும்.
ஆன்மீக சுவாமிகள் கனவானாலும்
அதில் வெற்றிபெற்ற மனிதன்
 மனம் தீய எண்ணங்களுக்கு ஆட்படுவதே
உலகத்தில் அமைதி இன்மைக்கு காரணம்.
எந்த ஒரு மனிதனும்   அவனை கெட்டவன்
 என்று  சமுதாயம் சொல்வதை விரும்புவதில்லை.
இருந்தாலும் ஆலயங்களிலும் ,ஆராய்ச்சி மாணவிகளிடமும்
தவறு செய்யும் வேதம்,பைபிள் படித்த குரான்
படித்த விற்பன்னர்களும்,பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும்
 சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதற்கான காரணம் அருளைத்தேடாமல் பொருளைத்தேடுவதே.
இவ்வுலகியல் இன்ப வாழ்க்கை நாட்டமே.
தெய்வ நம்பிக்கையில் ஏற்படும் சந்தேகங்களே.
ஆண்டவன் அனைவரையும் சமமாக
நோக்குவதில்லை என்ற எண்ணம்.
இது தவறு.
சமுதாயத்தைப்பாருங்கள்.
பணம் படைத்தவர்கள் பலர் நிம்மதி இன்றி
தான் சேர்த்த செல்வங்களுக்கு ,
ஒரு செல்வன் இன்றி தவிக்கின்றனர்.
செல்வந்தர்கள் சரியான நேரத்தில்
சிகிச்சை செய்தும் பலனின்றி இறக்கின்றனர்.
மகிழுந்தில் செல்லும் சிலர்  விபத்தில் மடிகின்றனர்.
தேர்தலில் சிலருக்கு எதிர் பார வெற்றியும்
சிலருக்கு எதிர்பாரா தோல்வியும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஒரு திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.
.. வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லையே.
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லையே.
நோய் இன்றி நடமாடும் ஒருவன் இறந்து விடுகிறான்.
நீண்ட ஆண்டு நோயுடனே சரீர உபதையுடன் ஒருவன் வாழ்கிறான்.
சிலர் ஏழ்மையிலும் மகிழ்வுடன் வாழ்கின்றனர்.
சிலர் செல்வச்செழிப்புடன் வேதனையுடன் வாழ்கின்றனர்.
எத்தனை பங்களாக்கள் காலியாக இருளடைந்து காணப்படுகின்றன
.எத்தனை குடிசைகள் ஒளியுடன் மன மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன.
மனம் ஒரு குரங்காக செயல் படாமல்
ஆசையின்றி கடமைகளில் ஈடுபட்டு
ஆண்டவனையே சரணடைந்தால்
அமைதி என்பது அனைத்து மதங்களின் சாரம்.  .



manthirangal

இறைவனின் அருள் பெற மந்திரம் என்பது அனைத்து மதங்களிலும் வலியுறுத்தப்படுகிறது.
மந்திரம் என்ற சொல் ,வசனம்,ஸ்லோகம் என்று கூறப்படுகிறது.மந்திரங்களின் பொருள் ஆழமானது.அதன் ஒலிவடிவம் சூக்ஷ்ம சக்திகளை இயக்கவல்லது.உயிரனங்களை  ஒலிகளைக்கொண்டு இயக்கமுடியும்.சாடைகள் காட்டியும் இயக்க முடியும்.மனிதர்களை எழுத்தைக்கொண்டும் அது எழுப்பும்  த்வனியைக்கொண்டும் (ஓசை)(ஒலி)கொண்டும் ,நினைவலைகள் மூலமும் தேவதைகள் போன்ற சூக்ஷ்ம சக்திகளை இயக்க அல்லது தொடர்புகொள்ள முடியும்.
இறைவனைக்காண  எழுத்து,குறியீடு,சொற்றொடர் ஆகியவை மந்திரங்களாக அமைக்கப்படுகின்றன.
  "
ஓம்  என்ற வடிவமும் ஒலியும் ஹிந்து மதத்தில் மிக சக்தி  வாய்ந்தது.

காயத்ரி மந்திரம் :-
ஓம்.    பிரணவமாகவும் அனைத்தையும் படைத்து 
வியாபித்து நமது அறிவைத்தூண்டும்
அந்தத்
தெய்வீக ஒளியைத் தியானிப்போம்
.ஓம்.
ॐ भूर्भुवस्सुवः  तत् सवितुवरेण्यं भर्गो देवस्य धीमहि  धियो यो नः प्रचोदयात् ईई

பைபிள்:--
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.
உமது ஆட்சி மண்ணுலகிற்கு  வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது   போல
 மண்ணுலகிலும் நிறைவேறுவதாக.
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை
நாங்கள் மன்னித்துள்ளது போல்
எங்கள் குற்றங்களை மன்னியும்
.எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்துஎங்களை. விடுவியும்.
ஆட்சியையும் வல்லமையும் மாட்சியும்
என்றென்றும் உமக்கே. ஆமென்


குரான்:
 பூர்ண அருளையும் கருணையும்  கொண்ட அல்லாவின்  பெயரால் வேண்டுகிறோம்.எல்லாப்புகழும் அல்லாவை சார்ந்ததாகும்.அல்லாவிற்கே உரியதாகும்.
பூர்ண அருளாளர் ஆகவும் கருணையுள்ளவராகவும் இறுதித் தீர்ப்பாளராகவும் அல்லா உள்ளார். உமக்கே நாம் அடிபணிவோம்.எமக்கு நீ நேரான மார்க்கம் காட்டுவாயாக.
அது நீ அருள்புரிந்தவர்களின் வழி.
அது உம்முடைய கோபத்திற்கு ஆளாகாத நெறி  தவறாத   வர்களின் நேர்வழி.


மனமும் மந்திரமும்

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.
மனமது செம்மை யானால் வாயுவை வியர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்.
மனது செம்மையானால் மந்திரம் செம்மையாமே -----அகஸ்தியர்.
திருமூலர்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத்தாநிருந்தானே.
கடுவெளி சித்தர்
பாபஞ்செய்யாதிரு மனமே--நாளை
கோபம் செய்தே எமன் கொண்டோடிப்போவான்.

 .

vallalaar kurippidum pavangal' tamil and hidi

வள்ளலார் பொதுவான பாவங்களாக குறிப்பிட்டவைகளில் சில பொதுவான பாவங்கள்:----

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தல்

மனமொத்த நட்புக்கு வஞ்சகன்செய்தல்,

பொருளை இச்சித்துப் பொய்சொல்லுதல்,
ஆசைகாட்டி மோசம் செய்தல்
பசித்தோர் முகத்தைப்பாராதிருத்தல்,
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தல்
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடத்தல்,
தெய்வமிகழ்ந்து செருக்கடைதல்.

வள்ளலார் மந்திரம்
அருட் பெருஞ்சோதி  அருட்பெருஞ்சோதி  
தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

मनुष्य के पाप
रामलिंग स्वामी तमिलनाडु के मुरुगा  अर्थात कार्तिक के भक्त थे.उन्होंने मनुष्य के पाप कार्य के बारे में बताये है.
उनमें कुछ देखिये :-

अच्छे मनुष्यों के मनको  दुःख देना.
दिली दोस्ती को धोखा देना
वस्तुवों के मोह में झूठ बोलना
इच्छा पैदा करके ठगना
भूखों   की भूख न मिटाना
पहरे में रही कन्या को नाश करना
माता-पिता की बात न मानना
ईश्वर निंदा करके अहंकार होना.

उनका  दीक्षा मंत्र है:
अरुटपेरुन्ज्योती  अरुट पेरुन्ज्योती
तनिप  पेरुन्करुने  अरुत्पेरुन्ज्योती