வியாழன், ஏப்ரல் 24, 2014

உறவுகளும் இன்றைய பிரிவுகளும்.

கோபிநாத்  நீயா ?நானா ? தொடர் உறவா ?நட்பா?

அனைத்திலும் வெளிப்படையாக தவறுகளைச் சுட்டிக்காட்டினால்  அல்லது ஜால்ரா போடவில்லை என்றால் நட்பும் உறவும் உடையும்.

கர்ணன் பாண்டவர்களின் தவறு தெரிந்தும் பீஷ்மர் துரோணர் போன்றோரும்   செஞ்சோற்றுக் கடனுக்காக  கௌரவர்களின் தவறுகளை மறுத்து விலகிச்செல்லாமல் திருத்தாமல் இருந்தனர். கண்ணன் சகுனி இருவருக்குமே பழி வாங்கும் எண்ணம்.ஆணாதிக்கம் அதிகமான காலம்.

இன்று சமத்துவம் .அன்றும் நிம்மதியில்லை. இன்றும் நிம்மதி இல்லை.

காரணம் மற்றவர்களிடம் தாழ்ந்து போனாலும் உறவினர்களிடம்  தாழ்வைக் காட்டக்கூடாது  என்று அவர்களைக் களங்கப்படுத் த முயற்சிப்பதே.

உறவுகளில் ஏன் ? ஒரு மன அழுத்தம்?
பணமா?  பாசமா ?  பொறாமையா? ஒருதலை பட்சமா ?
அனைத்தும் சேர்ந்தா?

பணம் கொடுத்தால் திருப்பித்தரும் எண்ணமில்லை. உறவினர்கள் இல்லாதவர்களிடம் வாங்கினால் கொடுத்து விடுவது.

இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் இருவரைக்கொண்டாடுவது . ஒருவரைத்தூற்றுவது.

நண்பர்கள் மற்ற உறவினர்கள் நோய்வாய்ப்பட்டால் பார்த்து வந்து நல்ல பெயர் வாங்குவது.
ஒருவர் வுயிர் போகும் அறுவைசிகிச்சை நடந்தாலும் எட்டிப் பார்ப்பது இல்லை.
ஒருவருக்கு இலக்சக்கணக்கில் உதவுவது ஒருவரிடிடம் கரைப்பது அதுவும் ரகசியமாக. அதை அறிந்த மற்ற உறவினர் கிண்டலடிப்பது.
எல்லாம் மறந்து உறவு பெரிதென்றாலும் மனக்கஷ்டம் வரும்படி பேசுவது. மற்ற உறவினர்களிடம் குரஈ சொல்லி பேசவிடாமல் செய்வது .

கொடுத்தால் வசந்தகாலம் .ஏன் ?என்று கொடுத்ததைக் கேட்டாலோ அல்லது ஏன் தருவது எனக்குத்த்ரியக்கூடாதா என்றால் வெறுப்பு.

சரி நாம் செல்லவேண்டாம் மனம் கசக்கிறது என்று தனியாக வுயிர் சொந்தத்தை போ என்று சொன்னால் போகாமல் தானும் நொந்து கொண்டவனையும் நோகச்செய்வது.
அவன் அன்பாகப் பேசினாலும் அவளின் வெறுப்பு என்று குடும்பங்களில் நிம்மதியில்லா வாழ்க்கை.முதலில் இந்த மெகா தொடர்களில்  வெறுப்பு இருந்தாலும் பல குடும்பங்களில்  நிம்மதியற்ற நிலைக்கு உற்றார் உறவினர்களின் ஒரு மனத் தூய்மை இல்லா உறவே.