வியாழன், மே 16, 2013

பால் மணக்குது பழம் மணக்குது தென்பழநியிலே


தமிழ் நாட்டில் சாகு படி  நிலம் குறைந்துவருகிறது.

சி .ஏ.ஜி   அறிக்கை.

பழனி   ஷண்முக  நதி செல்லும் வழி முப்போகம் என்று என் தத்தா கூறுவார்.

சுயலத்தால் இப்பொழுது  ஷண்முக நதி செல்லும் இருகரைகளிலும்

கட்டடங்கள். பள்ளிகள்.


வையாபுரிக்கண்மாய்  இன்று பாதி பேருந்து நிலையம்.சிவகிரிப்பட்டி அருகில் சித்த மருத்துவகே கல்லூரி அல்லது பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.

பேருந்து நிலையம்  வெளியில் புனித ஸ்தலத்தில்  வெட்டவெளி சிறுநீர் கழிப்பிடம். பன்னீரும் சந்தனமும் ஜவ்வாதும் மணக்கும் பழனி பேருந்து நிலையம் இறங்கினால் சிறுநீர் நாற்றம்.வையாபுரிக் குளம் சாக்கடை நாத்தம்.

கிரிவலம்  புனித கடம்பமரப் பூக்கள் மணம், சஞ்சீவி க் காற்று போய்

கடைவீதியில் வளம் வருவதுபோல்  உள்ளது.

அங்கும் விளைநிலங்கள்  முன்பு போல் இல்லை. வெறும் கட்டடங்கள்.

இயற்கையான புனிதம் போய் இப்பொழுது  வெறும் செயற்கை ஆடம்பரம் தான்.பெரிய வையாபுரிக்குளம் பாதியாக குறைந்தது,சுயநலத்தால்

புனித ஸ்தலம் வணிகஸ்தலமாக  மாறியது,

இருப்பினும் கூட்டம்.

அதுதான்  தண்டபாணி  அருள் என்றாலும்

பக்தர்கள் மனம் பக்தியை மட்டும் நினைக்கிறதா?

இந்த இயற்கையான புனிதம் செயற்கை யாக  மாறுவதும்

இறைவனின் லீலையா?

தண்ணீர் கஷ்டம் பழனியிலே.

பால் மணக்குது பழம்  மணக்குது
தென்பழநியிலே  என்பது மாறி,

சிறுநீர் ,சாக்கடை நாற்றம் தென் பழனியிலே

என்று பாடும் சூழல் சுயநலவாதிகளாலே !!


இந்நிலை மாற பழனி முருகனைப்

போற்றி பிரார்த்திப்போம்.