சனி, ஜூலை 26, 2014

இறை சக்தி.

இறைவன்  இல்லை ,இருக்கிறான் என்ற வாதம் 

தேவையோ ,தேவை இல்லையோ 
அது ஆத்திக நாத்திக விவாதம்.
உலகில்  இறைவன் உள்ளான் என்பதே 

அதிக எண்ணிக்கையில் மக்கள் நம்பிக்கை.

அமெரிக்க நாணயம் ,டாலர் நோட்டுகளில் 

எழுதப்பட்ட வாசகம் "IN GOD WE FAITH".
அங்கு அறிவியல் வளர்ந்தாலும் ,பொருளாதாரம் வளர்ந்தாலும் 
இயற்கையின் விந்தை கண்டு இறைவனை நம்புகின்றனர்.
நாம் இறைவனுக்காக கோயில்கள் கட்டிக்கொண்டே இருக்கிறோம்.
அதன் அடிப்படை நோக்கம் இறைப் பற்றா ?
இரைக்காக வணிக நோக்கமா?
கோயில்களில் பக்தியைவிட 
வணிக நோக்கமே அதிகம்.
பழனி என்றாலே பஞ்சாமிரிதம் 
தினைமாவு தான்.
இன்று  ஆறே  கால் கோடி ஏலம் ஒப்பந்தகாரர் 
அது ஒரு இனிப்பகம், அது பிரசாத ஸ்டால் .
பிரசாதம் வடமொழி .ஸ்டால் ஆங்கிலம்.
இந்நிலையில் சம்ஸ்கிருதவாரம் எதிர்ப்பு.
வடமொழி சொல் இல்லாமல் தனித்து தமிழ் இயக்கம் ஆரம்பித்தும் உதய சூரியனே சின்னம்.
முச்சந்தி நாற்சந்தியில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று எழுதிவைத்துள்ள 
தமிழ்நாட்டில் ஆலயங்கள் அதிகம்.
கந்தரனுபூதி ,கந்தர் அலங்காரம் ,திருமூலர் திருவாசகம் ,நாலாயிர திவ்ய பிரபந்தம் 
அவ்வையார்  எழுதிய விநாயகர் அகவல் 
எத்தனையோ பக்தர்கள்,பாடல்கள் 
இறைவனை தியானம் செய்தால் அமைதி.
மானுடப் பிரயத்தனம் தெய்வ பலமின்றி வெற்றிபெற இயலாது.
இயற்கையின் சக்தியே இறைவனின் சக்தி.
அதை மீறி எச்செயலும் நடக்காது.

வெள்ளி, ஜூலை 25, 2014

அன்பு

அன்பு  எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் 

ஒரே மாதிரி அல்ல.

நம்மை மட்டும் நேசிக்கவேண்டும் 
நாம் சொல்வதைக்கேட்கவேண்டும் 
என்பது ஒரு ரகம்.

நம்மையும் நம்மை சுற்றியிருப்பவரையும் 

மகிழ்விக்க பொருளுதவி செய்தால் தான் 

நம் மீது அன்பு என்பது ஒரு ரகம்.
வில்லையே என்பது ஒரு ரகம்.
 நாம் சொல்வதெல்லாம் கேட்கவில்லையே அதனால் அன்பு இல்லை என்று நினைக்கும் ஒரு ரகம்.
செய்நன்றி காட்டி அன்பு செலுத்தவில்லையே என்று வருந்தும் அன்பர்கள் ஒரு ரகம்.
கொடுத்தால் தான் அன்பு என்பது ஒரு ரகம்.
நாம் செய்த தியாகம் உணர்ந்து அன்பு  செலுத்தவில்லையே என்பது ஒரு ரகம்.

எவ்வளவுதான் அவமானம் செய்தாலும் 

தன் உடன்பிறப்புகளின்  அவமானங்கள் சஹித்து
அவர்களுக்கு உதவ வேண்டும் அப்பொழுதுதான் அன்பு என்று கருதுவது ஒரு ரகம்.

நாம் சம்பாதிக்கிறோம் நாம் இஷ்டப்படி செய்வோம் இதில் பெற்றோர் தலையீடு எதற்கு என்று அன்புகாட்டி உள்ள உணர்வு புரியாத ரகம்  


தான் காட்டுவது தான் அன்பு என்று 
 வெறுப்பாக நடந்து கொள்வது ஒரு ரகம்.
நாம் கேட்பதுபோல் செய்யாமல் தான் செய்வதை விரும்பி சாப்பிடவேண்டும் என்று அன்பு காட்டி 
கேட்பவர்கள் விரும்புவதை செய்யாமல்
தான் காட்டுவதுதான் முழு அன்பு என்பது ஒரு ரகம்.

 சுருங்கச் சொன்னால் அன்பை புரிந்து கொள்ளாமல் 
நொந்து வாழ்வதே அதிகம்.
அகவை கூடக் கூட அன்பில் வெறுப்பும் 
புரியாத புதிர்போல் வாழ்க்கை.
அதுவே இவ்வுலகை விட்டுச்செல்ல பந்தங்களை அறுப்பது.இல்லை எனில் பந்தம் விடாது.


திங்கள், ஜூலை 14, 2014

SILENCEsilence is a best prayer.


silence is a best prayer.
when   we   read  about  
our spititual history
aadi kavi vaalmiki   when he  gave up all his robbery 
and sat for meditation with the guidance of muni naarad 
he began to spell "MARA"
 it slowly chagned "RAM"
and he became a great poet.
His epic "Ramayan"  is a uniqe one.

in tamil the POET Arunagiri ,a women lover ,
with the boon of God kartikeya  sit silent and wrote a famous tamil book "thiruppukal',kandaranubhuti and many.
Ramanamaharshi  ,tiruvannaamalai  is famous for his silence.
Shri Ramana Maharshi   is famous as a mouna samy i.e., silent saint.
MOHAMMAD nabi sat silently in "heera" mountain cave and he Got the divine message.
like there are thousands of examples  including "Ravan's tapas".

SO GOD  likes  the  prayer of silence.meditation.
RISHI Dadhichi  got more power than devas .
devas got his backbone to win  asuras.
OM SHANTI!! OM SHANTI !!  OM SHANTI!! 

ஞாயிறு, ஜூலை 13, 2014

சனாதன தர்மமும் சீரடி சாய்பாபாவும்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் இடுகை .

ஏன் ?

நமது மதம் மூலம் இயற்கையை இறைவனாக வழிபட்டது.

இயற்கையின் ஆற்றலை வெல்ல முடியாமல் 

இருக்கும் வரை சூரிய  பகவான் ,சந்திர பகவான் ,வாயு பகவான்  என்ற இயற்கையே இறைவன்.

பின்னர் ஆறுகள் ,காட்டாற்றுவெள்ளம் ,சமுத்திர அலைகள் .

காடு ,வனதேவதை ,மரங்கள் ஸ்தல வ்ருக்ஷமாக  வழிபாடு ,

மனிதன் ஆற்றலில் அறிவியல் வளர்ச்சி 

கணினி வரை,சிகிச்சை முறைகள் வளர்ச்சி .
இயற்கையிலிருந்து  தன்னை பாது காத்துக்கொள்ளும் 

உயர்வு  சற்றே அவனை
கடவுளின் ஆற்றல் மீது ஐயப்படும்
 ஒரு பிரிவு  . ஆனால் இந்த பிரிவால் 

ஒரு பேராற்றல் அல்லது இறைவன் உள்ளான்
 என்பதை மறுக்க முடியா நிலை.

அது தான் மூப்பு ,மரணம்.

இந்த நிலையில் அறிவு செயல்படத்தொடங்கியதுமே 

மனிதனின்  ஆணவம் .பேராசை ,பொறாமை ,சுயநலம் ,கோபம் ,பழிவாங்கல்,வெறுப்பு ,அபகரித்தல் போன்ற தீய குணங்களும் வளர்ந்தன,
சிவபுராணம் படிக்கும் போது அரக்க குணங்கள் உடையவனை 

சிவன் ,விஷ்ணு ,ப்ரம்மா மூவரும்
 இணைந்தே படைக் கின்றனர்.

இதில் சிவன் அரக்கர்களுக்கு
 அவர்கள் வேண்டிய வரமளிப்பவர் ,
விஷ்ணு அரக்கர்களை அளித்து காப்பவர்.
இப்பொழுது சிவ ,வைஷ்ணவ் பக்தர்கள் 
தங்கள்  தங்கள்  இறைவனின்
 ஆற்றல்  படி பிரிந்தனர்.

ஒருவர் சுடலையில் வாழ்பவர். மற்றொருவர் லக்ஷ்மி யுடன் 

இருப்பவர்.இவர்களை எல்லாம் யார் உயர்ந்தவர் 
என்ற நிலை. 
இப்படி  இருக்கும் நிலையில் 
ஆசார்யர்கள் தோன்றினர்.
.அவர்கள் தங்களுக்கு இறைவன் கொடுத்த ஆற்றலால் 
எளிமையாக வாழ்ந்து 
தங்கள் எண்ணங்களால் ,செயல்களால் ,வாக்கால் 
மக்களை நெறி படுத்தினர்.
அவ்வாறன  ஒரு அறநெறி ,அன்புடன் வாழ்ந்த 

கடவுள் எல்லோருக்கும் எஜமானர்  ஒருவரே என்று 

அனைவரையும் ஒற்றுமைப் படுத்த 

தோன்றியவரே  சீரடி சாய்பாபா.

அங்கு மத சண்டைகள் இல்லை .

அவரை ராம் என்பவரும் உள்ளனர்,
அவரை கிருஷ்ணர் என்பவரும் உள்ளனர்.
அவரை சிவன் என்றும் கூறுகின்றனர்.

அல்லா சாய் என்கின்றனர் .
பஜனைப்பாடலில் ஏசு சாய் என்கின்றனர்.

இப்படிப்பட்ட  சாய் பக்தர்கள் ஒருவர் மற்றொருவரை 
சந்திக்கும் போது  மிக சிரத்தையுடன் கூறுவது சாய் ராம் .
ராம் நாம ஜபம் உடன் இணைகிறது.
சாய்பாபா கோயில் இல்லாத இடம் இல்லை.
இப்பொழுது  ஜ்யோதிர் மட் ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ சங்கராச்சாரியார் 

சாய் பக்தர்களுக்கு "ராம்"என்று சொல்ல தகுதி இல்லை.

சாய் பக்தர்கள் புனித கங்கையில் குளிக்கக்கூடாது.

சாய் பக்தர்களுக்கு எதிர் விளைவுகள் ஏற்படும்.
அவர்கள் இந்து மதத்தை துண்டுபோட்டு அழிக்கப்பார்க்கிறார்கள் 

என்று தன தொண்ணூற்று இரண்டாவது அகவையில் 

அறிவிக்கிறார்.
இதில் உண்மை இருக்குமா ?என்று சிலருக்கு ஐயம் எழுந்துள்ளது.

எதிர்ப்பு அலைகளும் கிளம்பியுள்ளன.

நமது சனாதன தர்ம ஒற்றுமை உயர நாம் பாடு படும் 
நேரத்தில் இப்பாடிஎல்லாம் பிரிவினை ஏற்படுத்துவதும் 
யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறியதும் அவரைப்பின் பற்றி சிலர் மாறப்போவதாகவும்  இந்த மாற்றத்திற்கு 
பயங்கரவாதிகள் சதி என்றும் பல வதந்திகள்
 வந்து கொண்டிருக்கின்றன.

சனாதனதர்மத்தை பேராற்றல் கொண்ட 
இறைவன் காப்பாற்றுவார்.
நானும் சாய் பக்தர் தான் .
சாய் ராம் துணை இருப்பார்.