திங்கள், டிசம்பர் 26, 2011

golden words(tamil)ponmolikal

  1. ஒரு ஞாநியின் அருகில் உள்ளவர்கள் ,அவரின் ஞானத்தை அறிவது இல்லை  .அவரின் வாழ்க்கையை பார்க்கிறார்கள். அவரின் வாழ்க்கையை பார்க்காதவர்கள்  அவரின் ஞானத்தை அறிகிறார்கள்.
  2. தர்மம் ஒன்றுதான்.சம்பிரதாயங்கள் பல. தர்மத்தை அறியாதவர்கள் அவர்களின் தர்மத்தையே சம்பிரதாயமாக கூறுகிறார்கள்.
  3. மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் ஞானம் பெற்றால் தான் விலகும்.மதச்சடங்குகள் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன,
  4. அறியாமை நிலையானது. அறிவு பெறக்கூடியது.அறியாமையின் உணர்வுதான் அறிவின் நுழை வாயிலைத் திறக்கிறது.
  5. மனிதன் சமுதாயம் என்ன சொல்லும் என்பதை நினைக்கக் கூடாது.அவனை தொடர்ந்து முன்னேறச்செய்யும் தன்னம்பிக்கையைதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  6. வேள்விகள்,சடங்குகள் மனிதனை மாற்ற முடியாது.அவை மனிதனை ஆன்மீகவாதி என்று ஏமாற்றுபவை.
  7. அறிவியல் என்பது பாலங்கள்,பாதைகள்,ஏவுகணைகள்,கணினிகள் போன்றவற்றை உருவாக்க முடியும்.நல்ல மனிதனை நிர்மாணிக்க முடியாது.அறிவியல் நீதி ,அன்பு,நல்லுணர்வு,இறக்கம் ,போன்ற மனித குணங்களை உருவாக்க முடியாது.இந்த உன்னத காரியங்களை தர்மமும் ஞானமும் தான் செய்ய முடியும்.
  8. ஒரு நாட்டிலோ சமுதாயத்திலோ ஆசிரியர்களின் மதிப்பும் கௌரவமும் குறைந்தால்,அந்த நாட்டை வீழ்ச்சியிலிருந்து தர்மமோ ,அரசியலோ தடுக்க முடியாது.
  9. குறிக்கோள் நாம் எடுத்து வைக்கும் காலடிகளில் ஒட்டி உள்ளது.குறிக்கோளை அடைய காலடிகளை முன்னால் வைத்து செல்லவேண்டும்.
  10. அறிவியல் காரணமாக அநீதிகளும்,ஊழலும்,கொள்ளைகளும் ஊக்கமடைகின்றன.தர்மத்தால் ஏழ்மை ,சுரண்டல்,மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அறிவியல் மற்றும் தர்மத்தால் சமுதாயம் ஆறுதலோ,அமைதியோ பெறவில்லை.

VIVEKAANANDAR KATHAIKAL --BROAD MIND

கிணற்றுத்தவளை
 சுவாமி விவேகானந்தர் சமதர்ம மகாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று உலக மதங்களின் ஒற்றுமையின் மேன்மையை உணர்த்தியவர்.
மனித நேயம் ,மனிதர்களுக்கான சேவை,அன்பு  என்ற உயர்ந்த பரந்த மனப்பான்மைக்காக பல சிறு கதைகள் கூறுவார். அதில் என் மனம் கவர்ந்த கதை. நாம் அனைத்து மதங்களின் ஆழ்ந்த அறிவை தெரிந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.
சூரியன் ஒன்று.சந்திரன் ஒன்று.ஆகாயம் ஒன்று. காற்று உருவமில்லா உணர்வு.
அவைகள் அனைவருக்கும் பொது. மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே.
பசி,தாகம்,சிரிப்பு, அழுகை,மரணம் ,இன்பம், துன்பம் அனைத்து இன மக்களுக்கும் ஏற்படும். நம் மனம் தாராளமாக தயை நிறைந்து விளங்கவேண்டும்.
சுவாமிஜியின் கதை:----
ஒரு முறை ஒரு கடல் தவளை கிணற்றில் விழுந்து விட்டது.அப்பொழுது கிணற்றுத்தவளை கடல் தவளையிடம் உன் கடல் என் கிணற்றைவிட பெரியதா என்று வினவியது.
கடல் தவளை  என்கடல் மிகப்பெரியது என்றது.
கிணற்றுத்தவளை எனது  கிணற்றை விட கடல் மிகப்பெரியதாக இருக்கமுடியாது.
இவன்  பொய் சொல்கிறான். இவனை விரட்டுங்கள் என்று கத்தியது.

இது தான் பல ஆண்டுகளாக மனித இன ஒற்றுமைக்கு பாதகமாக விளங்குகிறது.
நான் ஹிந்து .நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்து என் மதம் தான் பெரியது என நினைக்கிறேன்.இதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
கிறிஸ்தவன் தனது மதம் தான் உலகம் என்று கிணற்றுத்தவளை போல் கருதுகிறான்.அவ்வாறே முஸ்லிமும் தன சிறு கிணற்றில் இருந்து கொண்டு ,அதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
நமது இந்த குறுகிய  மதங்களின் எல்லைகளை உடைத்தெறிய
இறைவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை சுவாமிஜிக்கு இருப்பதாகக் கூறுகிறார். இதே நம்பிக்கை  அனைத்து மனித நேயர்களுக்கும் ஏற்பட இறைவன் அருளட்டும்.

vallalaar kee prarthna -hindi

रामलिंग   अडिकल  तमिल भाषा के प्रसिद्ध कवि थे. 

उनका मार्ग शुद्ध समरस सन्मार्ग है.वे भगवान् मुरुगन अर्थात
कार्तिकेय के अनन्य भक्त है.
उनका प्रसिद्ध काव्य ग्रन्थ है -तिरु अरुटपा.
 उनकी प्रार्थना है:-

एकाग्र चित से तेरे ध्यान में मग्न
 भक्त का रिश्ता चाहिए मुझे.

मन में एक बात ,बाहर एक कहने वाले का
 नाता नहीं चाहिए मुझे.
तेरे श्रेष्ठ यशोगान  बोलना चाहिए
,कभी झूठ नहीं बोलना चाहिए,
ज्ञान चाहिए.तेरी करुणा निधि चाहिए.
नीरोग जीवन जीना चाहिए.
दुखप्रद कामिनी का मोह नहीं चाहिए.
हमेशा तेरी याद मन में चाहिए.
धर्म क्षेत्र चेन्नई में  कन्द कोट्टममें
स्थित कार्तिकेय !
तेरा मुख पवित्र है.शैव रूप है,
तेरे षन्मुख है.देव शिरोमणि है.