ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

வாழ்க ஜனநாயகம்.-varippanaththil kaioottu.




நாட்டிற்கு  விடுதலை,
இன்றும்
நடைபாதை வாசிகள்,
குடிசை வாசிகள்,
சமத்துவபுரம்
நாட்டின் ஒதுக்குப்புரத்திலே.
அவர்கள் ஏழைகள்.
பணிபுரிய வர  நடக்கமுடியும்.
நகரப்பேருந்தில் தொற்றிக்கொண்டு,
உயிரைப்பணயம் வைத்து
பயணம் செய்யமுடியும்.
ராஜமார்க்கம் இன்றி.
மழைநீர் சேற்று நீரில் நடக்கமுடியும்.
மின்சார மின்றி சம்சாரம் நடத்தமுடியும்.
அவர்களுக்கு  மின்விசிறி ,
மிக்சி,கிரைண்டர்,
எதற்கென்று தெரியுமா?
ஒட்டுப்போட்ட  நன்றிக் கடனுக்கு.
நவராத்திரி கொலு போம்மை போல்
அடுக்கிவைத்து
அவசர ஆத்திரத்திற்கு ஈனக் கிரயத்தில்
விற்று வயிறு வளர்ப்பதற்கு.
கட்சி
வளம்  பெற,
வரிப்பணத்தில் கொடுக்கும் நேரடி கை ஊட்டு.
இலவச மிதி வண்டிகள்
நகர மாணவர்கள் விற்க பள்ளி அருகிலே தரகர்கள்.
தொலைக்காட்சிபெட்டிகள்,
பார்ப்பதற்கு மின் சாரமில்லை.
விற்றால் டாஸ்மார்க்  இன்ப பானம் அருந்த.
தாலி  மெதுவாக விலைபோகும்.
அடுத்த தேர்தல் கை ஊட்டுக்கு
என்ன இலவசமோ?


,குடிநீர் வசதிசெய்ய  இயலா   அரசு,
ஏழைகள்  வசதியாக வாழவைக்க
விரும்பா அரசு.
கல்விச்சாலைகள் இலவசமாக திறந்து வைத்து,
அவைகளை தரமில்லாமல் செய்து,
தனியார் தான் அனைத்தும்  என்று
கறுப்புப் பணத்தால்
ஆடம்பரமாக வாழும்
கருணை அற்ற அரசு.
இதைப்புரிந்தும்  அவர்களுக்கு விலை போகும்
மக்கள்.
வாழ்க ஜனநாயகம்.



வாழ்க ஜனநாயகம். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை


நம்  மக்கள் நாட்டு நலம் சிந்திக்கும்  காலம் 


நம் நாடு விடுதலை  அடைந்து   67 ஆண்டுகள்  ஆகியும்  
மக்களிடம்    விழிப்  புணர்ச்சியும்  நாட்டுப் பற்றும் 
கடமை உணர்வும் நேர்மையும் 
பண்பாடும் கலாச்சாரமும் 
குறைந்து கொண்டே வருகின்றன.
இதை அறிவு வளர்ச்சியின்  முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.
பட்டங்கள்  பெறுவது பண்புகள் வளர.
நாட்டுப்பற்று வளர.
நாட்டின் மதிப்புகள் வளர.
ஆனால் 
புற ஆசைகள்  வளர 
ஜன நாயகம்  பண நாயகமாக மாறுகிறது.
நான் குழந்தையாக இருக்கும் போது  
தவறு செய்பவர்கள் வெறுக்கப்பட்டனர்.
அப்பொழுது படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு.
எனது ஆசிரியர்  வறுமையில் வாடினார்.
தனி வகுப்புகள்  கிடையாது.
இன்று தனிவகுப்புக்கு அனுப்பினால் தான் 
பெற்றோர்கள்  திருப்தி அடைகிறார்கள்.
மழலைப் பள்ளியில் இருந்து 
உயர்கல்வி வரை பணம்.
அவன் கெட்டிக்காரன் .
பதிவாளர் அலுவலகத்தில் பணி .
பணம் கொட்டுகிறது.
அவன் காவல் துறை.அவனுக்கு வசூல் தான்.
அவன் சட்டமன்ற உறுப்பினன்.
இவன் பாராளுமன்ற உறுப்பினர்.
கோடிக்கணக்கில் தேர்தல் சிலவு.
தொகுதி சீட்டு வாங்க கட்சி தலைமைப் பீடத்திற்கு 
மட்டும்  கோடி.
நாட்டுப்பற்று நா நயம் என்பது 
நாணயமாக மாறிவிட்டது.
ஊழல் ,கொலையாளிகள் பலர் 
பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் .
நாடு முன்னேறுகிறது.
வேலைவாய்ப்புகள் பெரு குகிறது.
ஆனால் 
சமுதாயம் அமைதி இழக்கிறது.
மின்சாரம் இல்லை.
விலைவாசி உயர்கிறது.
கொலை கொள்ளை ஊழல் அதிகரிக்கிறது.
அடுத்த தேர்தலுக்கு  கோடிக்கணக்கில் 
பணம் சேருகிறது.
மீண்டும் ஜனநாயகம் 
ஜீவிக்கிறது.
கோயில் நிலம்.புறம் போக்கு நிலம் விளைநிலம் 
விலை போகிறது.
பட்டதாரிகள் எண்ணிக்கை  கூடுகிறது.
ஊழலை எதிர்த்து போராட்டம் செய்யும் 
குழுவிலும் ஊழல் தெரிகிறது.
அங்கிருப்போரின்  பேரிலும் 
ஆளும் கட்சியினரின் பேரிலும் ஊழல் அறிக்கை/
பல ஊழல் தலைவர்களின் கூட்டணி ஆட்சி 
தொடர்கிறது.
ஜனநாயகம்  கூட்டணி என்ற போர்வையில் 
ஊழல்  நாயகர்கள் சேர்ந்து 
புதிதாக மலர்கிறது.
வாழ்க ஜனநாயகம்.
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை 
என்பதை நிர்ணயிக்கிறது.





வாழ்க ஜனநாயகம்.


மக்கள்   நலம் 

மக்கள் நலம் விரும்பும் மக்கள் பிரதிநிதிகள்
  ஒரு புதிய குடி இருப்பு 

உருவாகும் பகுதியில்
  உடனடியாக சாலை வசதிகள்,
குடிநீர் வசதிகள்
 மின் மின் வசதிகள் 
,சுகாதாரம்,கழிவுநீர்  வெளியேறும் வசதிகள் போன்றவற்றை 
செய்ய முழு முயற்சி எடுக்கவேண்டும்.

வரிகள் மட்டும் வாங்கி சிலை வைக்க ஒரு அரசு சிலவு செய்கிறது.
அதற்கு சில லக்ஷங்கள்.
மற்றொரு அரசு சிலை எடுக்க சில லக்ஷங்கள் 
சிலவு செய்கி றது.
ஐந்தாண்டுகளுக்குப்பின் மீண்டும் சிலை வைத்த அரசு 
ஆட்சிக்கு வருகிறது.
மீண்டும் சிலை வைக்க சில லக்ஷங்கள் சிலவு செய்கிறது.
இது எல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சுகாதாரமற்ற 
பகுதிகளில் வாழும் மக்கள் வரிப்பணம்.
சமாதிகள் புதுப்பிக்க லக்ஷக்கணக்கில் பணம்.
குடை வைத்த சிலவு,
குடை அகற்றி சீர் படுத்த சிலவு,
ஆயிரக்கணக்கில் மக் கள்   செல்லும்  சாலைகள் 
மேடு,பள்ளம் ,கழிவு நீர் ஓடும் சாலைகள்,
உண்மையில் ஜனநாயகத் தலைவர்கள் ஆத்மா  ஷாந்தி அடையுமா?
ராம்நகர் வாசிகள்,குபேர் நகரவாசிகள் எவ்வளுவு வேதனை உடன் வாழ்கிறார்கள்.
நாடு வளம் பெற மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்.
ஒருபகுதியில் பூங்காவிற்கும் சாலைக்கும் அழகுபடுத்தி, 
ஒருபகுதி மக்களை குண்டும் குழியும் சாக்கடை நீரும் உள்ள பகுதியாகவைத்து.
ஓட்டுமட்டும் பெரும் அரசுக்கும் 
ஜனநாயகம் என்ற பெயர்.
சட்ட மன்றம் மாற்ற,மீண்டும் மாற்ற, இடிக்க, கட்ட சிலவு.
அடிப்படைவசதியில்லாப் பகுதி அப்படியே .
கழிவுநீர் ஓடும் துர்நாற்றத்துடன்.
வாழ்க ஜனநாயகம்.
மக்கள் ஒருநாள் விழித்தெழ 
பகுத்தறிவு வேண்டும்.
ஆயிரக்கண க்கில் வாழும் குடி இருப்பு 
பகுதி மக்கள்   தங்கள் அடிப்படை வசதிக்குப் 
போராடவேண்டும்.
சுதந்திர நாட்டில் மீண்டும் வரிகொடா இயக்கம் வேண்டும்.

வரி வசூலிக்கும் அரசு தண்ணீர் விநியோகம் செய்யாமலேயே 
தண்ணீர் வரி வசூலிக்கிறது.
மன சாட்சி இல்லா, அரசு,அமைச்சர்கள் .அதிகாரிகள்.
இதைக்கேட்கத் தயங்கும் மக்கள்.
மன்னர்கள் காலத்தில் மன்னர்கள் சுகபோக வாழ்க்கை.
ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள்.
வாழ்க ஜனநாயகம்.


சனி, செப்டம்பர் 29, 2012

வாழ்க பாரதம்.


நமது நாட்டில்   தெய்வ  நம்பிக்கை 
 அதிகம் இருப்பது நல்ல விஷயம் என்றாலும்  
,அந்த நம்பிக்கை சுயநலத் தோடு 
பொதுநலம் குறைந்து காணப்படுகிறது.
நம் நாட்டின் வரலாற்றில் மக்கள் நலத்தைவிட 
மன்னர்கள்  தங்கள் நலத்தைத்தான் பாதுகாக்க 
மாடமாளிகைகளும்,சமாதிகளும் 
கட்டிவந்தனர்.
மக்கள் நலமாக வாழ அனைத்துத்தரப்பு 
மக்களும் முன்னேற வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கல்வி அனைவருக்கும் தர முன் வரவில்லை.
சிலரை அடிமைத் தொழிலுக் காக 
அறியாமை  என்ற சமுத்திரத்தில் 
மூழ்கி  இருக்க முழு முயற்சி செய்தனர்.
அதன் விளைவு 
நமது நாட்டு இந்துக்ககள் மதம் மாறிய அளவுக்கு 
எந்த நாட்டிலும்  ஏற்பட்டதில்லை.
நம்நாட்டில் செல்வம் இன்றும் குறையவில்லை.
ரோடுகள் மேடுபள்ளமாக இருந்தாலும்,
ஏரிகள், குளங்கள் தூர்வாரி நீர் சே மி க்காவிட்டாலும் 
வளைவுக்கு ஒருகோடி,
சிலைஎடுக்க,வைக்க 
சில பகுதிகளில் மட்டும் சாலைகள் மீண்டும் மீண்டும் 
பராமரிக்க  
கோடிக்கணக்கில் பாழடைந்து கிடக்கும் கட்டிடங்கள் கட்ட 

பணம் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் இடங்களில் சாலைகள்  அமைக்க 
முடியாது.
வாழ்க பாரதம்.

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

நியாயங்கள் சாகும் நேரம்.


காதல் படு கொலைகள் 

செய்த்திதாள்   படிக்க ஆரம்பித்தால்   கொலை பற்றிய செய்திகளும் 

குழு கற்பழிப்பு செய்திகளும் வருகின்றன.
கடத்தல் செய்திகள் வேறு.
அதைவிட  நாட்டுப் பாதுகாப்புப் படைகள்  போன்று 
கூலிப் படைகள்.கடத்தல் படைகள்.
இதை எல்லாம்  மிகைப்படுத்திக்காட்டும் 
திரைப்படங்கள்.
பரிதி தொலைகாட்சி நாடகங்கள் அனைத்திலும் கடத்தல் 
காட்சிகள்.
மருத்துவ மனை ,சிறைச்சாலைகள் கொலை களங்கள் .

சிறைச்சாலை ஜோதிடம் ; காதல் திருமணம் பெற்றோர்களால் 
நிச்சயிக்கப்பட்ட  பெண்  கடத்த திட்டம்.
தங்கம் நாடகத்தில் கடத்தப்பட்ட பெண் நீரில் மூழ்கடித்து 
கைதான கொலை முயற்சி செய்த கைதி விடுதலை.
காவலர் கையில் இருந்த குற்றச்சாட்டு மனு கிழிக்கும் தைரியம் 
ஒரு பெண்ணுக்கு.மாவட்ட ஆட்சியாளர் செய்வதறியாமல் விடுதலை.
நாடு எங்கே செல்கிறது.
பணம்,பலம்,கூலிப்படைகள் இருந்தால் எதுவும் 
சாதிக்கலாம்.
நியாயங்கள் சாகும் நேரம்.


வியாழன், செப்டம்பர் 27, 2012

எல்லாம் இறைவன் திருவிளையாடல். சனாதன தர்மம். எல்லாம் இறைவன் திருவிளையாடல்.எல்லாம் இறைவன் திருவிளையாடல்.




சனாதன  தர்மம்.

மனிதர்கள்  மட்டும் சிந்தித்து  செயல் ஆற்றுபவர்கள்.

ஆனால் அவர்கள் மனத்தில் எழும் எண்ணங்கள் 

எப்படி  உண்மைக்கும் பொய்மைக்கும் சார்ந்து  

நடைமுறையாக மாறுகின்றன.

ஒருவர் நேர்மையாகவும் ,ஒருவர் நேர்மை   அற்றவராகவும் 

இருக்க காரணம் என்ன?

தெய்வ சக்திக்கும் ,அசுர சக்திக்கும்
  புராணங்களிலும்  போராட்டம்.
அதர்மம் தலை தூக்கும் பொது தர்மத்தை நிலை நாட்ட  இறைவன் 
அவதரிக்கிறான்  என்றும் ,ஒவ்வொவொரு யு க த்திலும் 

இறைதூதர்கள்  அவதரிக்கின்றனர்.

பாரத தேசத்தில் மட்டும்  தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவன் 
அவ்வப்பொழுது  அவதாரம் எடுத்துள்ளான்.
ஆண்டவனைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை 
ஆண்டவனாக  ஆராதிக்கும் தேசம் பாரதம்.
ஆனால்  பாரதநாட்டில்  
இறைவன் பெயரைச்சொல்லி  ஏமாற்றுபவர்கள் அதிகம்.

அதற்கு காரணம் மக்கள் இறைவனை
 சரணாகதி அடையாமல் 
நடுவில் சாமியார்கள்,மந்திரவாதிகள்,ஜோதிடர்கள்,
மாந்திரீகர்கள் ,தாயத்து, ஹோமம் என்ற 
பெயரில்  இறை சக்தியின் பெயரால் ஏமாற்றுபவர்கள் அதிகம்.

ஏமாற்றுபவர்களைவிட ஏமாறுபவர்கள் அதிகம்.

இறைவனிடம் சரணாகதி அடைபவர்களைக்
 காக்க இறைவனே வந்து  பணியாளாக 
வாழ்ந்த புராணக்கதையும் உண்டு.
இறைவனே சாக்ஷி சொன்ன கதைகளும் உண்டு.
திரௌபதி  மானம் காக்க இறைவன் நேரில் அவதரித்த 
 கதையும் உண்டு.
கஜேந்திர மோக்ஷம்  கதையும் உண்டு.

ஆனால் ஆச்ரமங்களை நம்பும் கூட்டம் அதிகம்.
மடாலயங்களில் கோடிக்கணக்கில் பணம்  சேருவதும் அதிகம்.
ஆஸ்ரமங்களில் நடக்கும் காம லீலைகளும் அதிகம்.
சாமியார்கள்  ஆஸ்ரமங்களில்  அனைத்து 
 நவீன அறிவியல் சாதனங்களும்  ,தொலை தொடர்பு சாதனங்களும் அதிகம்.

அங்கு சத்சங்கம் ,இறைவன் பற்றிய உபன்யாசங்களும் ,
தீக்ஷைகளும் ,போதனைகளும் அதிகம்.
அதே சமயம் போதைப்  பொருள் களும் அதிகம்.
தங்கம்,தங்கக்கட்டிகள், கோடிகள்  புரளும் இடமாகவும் 
ஆஸ்ரமங்கள் இருக்கின்றன.

இவையெல்லாம் ஆண்டவன் லீலைகளா ?
அல்லது 
மக்களின் அறியாமையா?
இதுதான் இன்றைய சனாதன தர்ம  நிலை.
ஒரே  ஒரு சந்தேகம் 

இந்த ஆஸ்ரமங்கள் இறை பணியை  விட்டு  விட்டு 
அரசியல் ஊழல் பற்றி பேசும் போதுதான் 
ஆஷ்ரம ஊழல்கள் .கடவுச் சீட்டு ஊழல்கள் வெளி வருகின்றன.
அரசியல் வாதிகளுக்கும் ,ஆஷ்ரம வாசிகளுக்கும் தொடர்பு 
இராமாயண காலத்தில் இருந்து வருகின்றன.
ஆனால் சிறுகுடிலில் வனாந்திரங்களில் கட்டாந்தரையில் 
படுத்து எளிய வாழ்க்கை  அது அந்தக்காலம்.
விலைஉயர்ந்த மெ த்தைப்படுக்கையில்
 படுப்பது  இன்றைய ஆஷ்ரமம்.

எல்லாம்  இறைவன்  திருவிளையாடல்.














புதன், செப்டம்பர் 26, 2012

ஆன்மிகம்----நாத்திகம்.-.சனாதன தர்மம்.



சனாதன தர்மம்.

தர்மம்  சார்ந்த கதைகள்
 சொல்லப்பட்ட  கதைகள்
 மீண்டும்  மீண்டும்  
சொல்லப்   படவேண்டிய  கதைகள்.
ராமாயணம்,மகாபாரதம் 
வால்மீகி இராமாயண மாகவே 
இருந்திருந்தால் 
பலருக்கு  அது புதிராகவே  இருந்திருக்கும்.

துளசிதாசர் ராமசரிதமானஸ் எழுதிய பின் 
இல்லந்தோறு ம்  படிக்கப்பட்டது.

இலக்கிய  ராமாயணம்  படித்து தெரிந்தவர்களை விட 
கிராமியப்  பாடல்களில் தெரிந்து கொண்டவர்கள் அதிகம்.
அதனால் தான் ஆன்மீகவாதிகள் செய்யும் 
தவறுகளை 
"படிப்பது இராமாயணம் ,இடிப்பது பெருமாள் கோயில் ""
என்ற பழமொழி  வந்தது.

சனாதன தர்மத்தில் 
இறை நம்பிக்கை  ஒன்றே ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவன் கொடியவன் என்றால் அவன் ஜாதகப்படி 
அவன் பிறந்த நேரம் அப்படி என்பர்.
பச்சைக்கிளி  கூண்டில் இட்டு வளர்த்தல் 
அடுத்த பிறவியில் சிறை  தண்டனை என்பர்.
அவன் செய்த தவறுக்கு இப்பிறவியில் 
தண்டனை இல்லை  என்ற கருத்தல்ல.
இப்பொழுது தவறு செய்யாதே என்று பொருள்.
ஒருவன் வறுமையில் வாடினாலும்
 அவன் விதி என்பர்.
ஒருவன் செல்வச்செழிப்பில் இருந்தால்
 அவன் செய்தபுண்ணிய மென்பர்.
செல்வந்தனுக்கு துன்பம் ஏற்பட்டால் 
அவன் சம்பாதித்த  பணம்
 பாவப்பட்ட பணம் என்பர்.
ஒருவனுக்குப் பதவி வந்தாலும் 
பூர்வ ஜன்ம பலன் என்பர்.
அவன் தவறு செய்து
  வேலை இழந்தால் 
ஆண்டவன் கொடுத்த அதிர்ஷ்டம்
 அவனாக கெடுத்துக் கொண்டான் 
அறிவிருந்தும் அவன் விதி 
அறிவுகெட்ட செயல் செய்து 
மாட்டிக்கொண்டான் என்பர்.
விபத்தில்   இறந்தால்,
எமன் அவனுக்கு வாகன 
 உருவத்தில் வந்துள்ளான் என்பர்.
ஒவ்வொரு உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் 
இறைவனே காரணம் என்பர்.
மகாபாரதத்தில் கூட வீரர்களின் 
கௌரவர்களின் மரணம்
 சிந்திய ரத்தம் .
அனைத்தும்  விஷ்ணுவே என்பர்.
அனைத்துக்கும் மூலம் ஆதிமூலம்.
இதிலும் 
ராமாவதாரமும் க்ரிஷ்ணாவதாரமும் 
அதில் வரும் பாத்திரங்கள் 
ஆண்டவன்  அனுக்ரஹத்தால் 
என்பர்.
சிவபுராணத்தில்
 நெற்றிக்கண்ணில்
 தோன்றியவன் 
கார்த்திகேயன் .
கார்த்திகைப்  பெண்களால் 
வளர்க்கப்பட்டான்..
ஐயப்பன் 
சிவன் -விஷ்ணு விற்குப்பிறந்தவன்.
சீதை பூமியில்  இருந்து எடுக்கப்பட்டவள் .
ஆண்டாள்  பூங்காவனத்தில் தோன்றியவள்.
சங்கராச்சாரியாரின் அத்வைத்துவம் 
நான் கடவுள்  என்பது 
படிக்காத கபீர்  தோஹையில் 
கூறினார்.
ஆனால் அவர்  ஒரு சாதுவின்
 ஆசிர்வாதத்தால் 
தோன்றியவர்.
இன்று 
ஷீரடி சாய் பகவான்   உலகத்தில் 
கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுபவர்.
ஆனால்  அவரது  பிறப்பு  ரகசியமானது.
ஏசுநாதரின் பிறப்பில் அவரது அன்னை முற்றிலும் 
கன்னியாகவே இருந்துள்ளார்.
தெய்வப்  பிறவிகள்,தெய்வீக  நூல்கள் 
அனைத்தும் என்றென்றும் மாறாத் தன்மை வாய்ந்தவை.
அதுதான் உலகில் நிலையான கோட்பாடுகள்.
அறிவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு க ள் 
மாற்றமும் மன சலனமும்  ஆசைகளும் 
விபத்துகளும் ஏற்படுத்தி துன்பங்களை
 இன்பங்கள் போல் தந்து 
அழிவைத்  தருபவை.
முன்னேற்றம் என்று இருந்தால் 
மனம் திருப்தியைத் தரவேண்டும்.
அறிவயல்முன்னேற்றம்
 மனநிறைவைத் தருகிறதா?
எதுவுமே  புரியாமல் ஒரு  ரகசியமே 
ஆன்மிகம்.

அதை ஆழ்ந்து புரியாத 
ஒரு மேற்போக்கான பார்வை நாத்திகம்.
.
**********************************************






















செவ்வாய், செப்டம்பர் 25, 2012

தர்மத்தின் மூல தத்துவம்.சனாதன தர்மம் -2.



சனாதன தர்மம் 

ஹிந்து  மதத்தில்  இயற்கையின் ஆற்றலுக்கு மதிப்பளித்து 

இயற்கையை வழிபட்டு வந்துள்ளனர்.இன்றும்  ஹிந்து 
மதம்  பற்றுள்ளவர்கள் சூர்ய  நமஸ்காரம் செய்கின்றனர்.
பஞ்ச பூதங்கள் எனப்படும் பூமி,ஆகாயம்,அக்னி ,நீர்,நெருப்பு 
அனைத்துமே  பகவான்களாக போற்றப்படுவது சனாதன தர்மத்தில் தான்.
இறைவனை ஒளி வடிவாக வழி பாடு செய்யப்படுகிறது.
அதற்காக ஹோமம் வளர்க்கப்படுகிறது.
ஹோமப்புகை,அதில்போடும் மூலிகைகளால் 
ஒரு மாசுக்கட்டுப்பாடக பயன் பட்டுள்ளது.
இயற்கையைப் பாதுகாக்க வனங்கள் காக்கப் பட்டன.
ஆலயங்களில் ஸ்தல விருக்ஷங்கள் வளர்க்கப்பட்டன.
நந்தவனங்கள்  வளர்க்கப்பட்டன.
நீர்வளம் சிறக்க ,பெருக்க குளங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால்  இன்று கோயில் குளங்கள் குப்பை கொட்டும்
  இடமாகவும்,அரசியல் கட்சிகளால்  ஆக்கிரமிக்கப்பட்டு 
வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
அறக்கட்டளை  ,தர்ம  கார்யங்களுக்காக  ஒதுக்கப்பட்ட 
நிலங்கள்,வீட்டுமனைகள்  ஏழை எளி   யோருக்குப் பயன் படுத்தப்படுவதில்லை .
அரசியல்  படுகொலைகள் அதிகமாகின்றன.
காதல் கொலைகள் அதிகமாகின்றன.
பொருளாதாரத்தால் செழித்து இருக்கும் 
அரசியல்வாதிகள், அதிகாரிகள்   தனிப்பட்ட வாழ்க்கையில் 
நிம்மதி இருக்காது. பணம் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும்.
அநியாயங்கள் நடை பெறும் .
மனிதமனத்தில்  பணம்,சுயநலம்,குடும்ப வாழ்க்கையில் விவாகரத்துக்கள்,
கண்டதே கோலம்,கொண்டதே காட்சி  பிறர் கணவன் அல்லது 
மனைவி மீது  மோகம் ,இவை எல்லாமே 
இயற்கைக்கு மாறுபட்டு அதர்மம் தலை தூக்குவதால் தான்.
இதுதான் சனாதன தர்மத்தின் மூல தத்துவம்.

திங்கள், செப்டம்பர் 24, 2012

சனாதன தர்மம்.


சனாதன தர்மம் 

இவ்வுலகில் பாவ மன்னிப்பு உண்டு  என்பதற்கு அனைத்து மதங்களிலும் 

மனம் வருந்தி இறைவனிடம் சரணடைதல் என்ற தத்துவம் 

மேற்கோளாக கூறப்பட்டுள்ளது.

சனாதன தர்மத்தில் எண்ணங்களுக்கேற்ற பலன் என்றே கூறப்பட்டுள்ளது.
நல்ல  எண்ணங்கள் நன்மையைத் தரும்.
தீய எண்ணங்கள் தீமையைத்தரும்.
கர்ம பலன் என்று மனிதனுக்கு செயலுக்கேற்ற பலன் என்று கூறுகிறது.

எப்பொழுதும் தீய சக்திகள் அதிக வலிமை உடையவை.
அதை எதிர்த்துப்போராடும் வலிமை தெய்வீக சக்தி கொண்டவர்களால் தான் முடியும்.சனாதன  தர்ம கதைகளில் வரம் கொடுத்த ஆண்டவனே பயந்து 
ஓடிய கதைதான் ஐயப்பன் கதை.
பாத்திரம் அறிந்து பிச்சை போடு ,கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு என்பது பழமொழி.
அதே சமையத்தில்  ஆண்டவனே காதல் திருமணம்  செய்ய 
மாமனாருடன்  போரிட்ட கதைகளும் உண்டு.
ராமாவதாரம் ஒன்றே  ஏக பத்னி  வ்ரதத்தை  வலியுறுத்துகிறது.
மகாபாரதத்தில்  கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள்.
குந்தி தேவிக்கு  திருமணத்திற்கு முன் குழந்தை.
பாண்டுவிற்கு  பஞ்ச புத்திரர்கள்.அனைவரும் மந்திரத்தால் .
ராமாயணத்தில் மூன்று மனைவிகள்.ஆனால் அமிருத கலசத்தை 
அருந்தியதால்  பிறந்த குழந்தைகள்.
திரௌபதிக்கு ஐந்து கணவர்கள்.
இவ்வுலகில்  இந்த கலி யுகத்தில்  அனைத்துமே நடக்கின்றன.
ஜாதிமத பேதம் ஒழிய விதுரன்.
ராமாயணத்தில் குஹன்,சபரி.
மிருகங்கள் பழக்கினால் மனிதர்களுக்கு உதவும் 
குரங்கு,கரடி,அணில்,அனைத்தும் உதவுகின்றன.
புலி,சிங்கம்,மயில்,மூஞ்சூறு,காளை ,குதிரை ,கிளி,கருடன்  வாகனங்கள்.அனைத்துமே  இறைவனின்.
நாகதேவதை என்றும் சிவனுக்கு நாகாபரணம் என்றால் விஷ்ணுவிற்கு 
சயனம் .காமதேனு  ,கல்பக விருக்ஷம்.
வாழ்க்கைக்கு என்றும் தேவையான 
மாற்ற மில்லா அறிவியல் தத்துவமே சனாதன தர்மம்.

ஆனால் அதில் சில ஆசுரி சக்திகள் லௌகீகத்தை புகுத்தி 
அதை அசிங்கப்படுத்துகின்றன.
மதத்தின் சக்திக்கு ஆண்டவன் அழகுச்சிலை ஊர்வலம் .
சிலை அவமதிப்பு என்பதை மாற்றி இந்து அமைப்புகள் எளிய 
இந்துமத  நூல்கள்,குறுந்தகடுகள்,பிரசாரம் என்று 
அழியும் சிலைகளுக்கான சிலவுகளை விநாயக சதுர்த்தி கொண்டாடும் நேரத்தில் 
ஆக்கரீதியில் பயன் படுத்தலாம்.
இந்து மதச் சிறப்பைக்  கூறும் மேலை நாட்டு அறிஞர்கள்  கூற்றைத்  தொகுத்து 
எளிய மக்கள் புரியும் வண்ணம் கோடிக்கணக்கான துண்டு 
பிரசுரங்கள் வெளியிடலாம்.
"உருவச்சிதைவு என்பது உருவ வழிபாடு "

உயர்ந்ததாகக் கருதும்  இந்துக்களுக்கு 

ஏற்றதா என்பது   இந்து முன்னணி  சிந்தனைக்கு .







ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

மதி


'மதி 

"மதி "

மதியால் விதியை வெல்லலாம்.
மதி என்றால் நிலவு என்றும் ஒரு பொருள்.
மதிக்கும் மதி என்பது குளிர்ந்து 
இருக்கும்.
சுட்டெரிக்கும் சூரியன் போல் 
மதி நடந்தால் 
மதிகெட்டுப்போகும் .
விதி  விளையாடும்.
ஆகையால் 
மதி என்ற சொல்லுக்கு 
அறிவு,நிலவு  என்ற 
பொருள் போலும்.
மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் 
எனவே 
மதிப்பு மிக்க வாழ்க்கைக்கு மதிவேண்டும்.
வள்ளலார்  முருகனிடம் 
முதலில் கேட்பது மதி.
மதி வேண்டும்.
நின் கருணை நிதிவேண்டும் என்கிறார்.
"மதம்"என்பதை பேய்  என்கிறார்.
அது ஆணவமாகவும் இருக்கலாம்.
தன்  மதம்  தான் பெரிது 
என்ற எண்ணம் வரக்கூடாது.என்றும் 
இருக்கலாம்.
இறைவன் மதங்களைக்கடந்தவன்.
மதம்  கொண்டவனிடம் இறைவன் இருப்பதில்லை.
மனிதநேய மிக்கவனிடம் இறைவன் 
குடிகொண்டிருப்பான்.
மதி  மதத்தைத் தணிக்கும்.
மதிக்கு அழகு என்று சொல்வார்கள் 
மதியழகன் ,அறிவழகன் ஞான சுந்தரம் 
என்று மதிக்கும் பெயர்.
மதி தான் மதத்தை வெல்லும்.
மனித~ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

அமானுஷ்யசக்திதான்


மனிதனும் மதமும் 


மதம் பிடித்த யானையும் 
மதப்பற்றுள்ள  மனிதனும் 
மனித நேயம் மறுப்பவர்கள்.
மதங்கள்  தோன்றியதே 
அன்பை வளர்க்க.
சத்தியத்தை காக்க.
அஹிம்சை வளர்க்க.
நேர்மை செழிக்க.
அறம் வளர,
தானங்கள் வளர.
பற்றற்ற வாழ்க்கை வாழ.
**************************

ஆண்டவன் பெயரால் 
ஆஸ்திகள் சேர்க்க அல்ல.
தன்  தெய்வம் தான் 
தன் மதம் தான் உயர்ந்தது 
என்று மனிதர்களுக்குள் 
சண்டை போட வைத்து 
மதத்தலைவர்கள் 
மமதையுடன் 
மன்மத லீலையில் 
மகிழ்ந்திருக்க,
வீடியோக்கள் 
அனைத்து ஆஸ்ரமங்களிலும் 
வைத்தால் தெரியும் என்று 
எதிர்கால ஆதீனம் பேட்டி  கூற,
அரசியலின் சுயநலத்திற்கும் 
ஆஸ்திக சுயநலத்திற்கும் 
அதிகாரிகள் சுயநலத்திற்கும் 
அகலா ஒற்றுமை.
மதங்கள் ஊழல் செய்தால் புது மதம் 
உதயமாகிறது.
அரசியல் ஊழலால் 
புதிய கட்சிகள் 
உதயமாகிறது.
உதயசூரியன் 
சுட்டேரிக்கும்போது 
இரட்டை இலை.
முடிவு 
ஊழல்கள்   மலியும்  போதும் 
கேடுகள் அதிகரிக்கும்போதும்
சங்கரர்,இயேசு ,முஹம்மது நபி,ஜைனர்புத்தர் 
போன்ற இறை தூதர்கள் 
தோன்றுகின்றனர்.
அவர்கள்  மறைந்த  பின் 
மதங்கள் துண்டாடப்படுகின்றன.
அரசியல் தலைவர்கள் இறந்த பின்,
கட்சிகள் துண்டாடப்படுகின்றன.

சயனவாதிகள் கைகளில் 
கோடிகள்  புரள்  கின்றன.
அப்பாவி ஜனங்கள் அவர்கள் 
மயக்கும்மொழிகளில் 
மயங்கி  
போதையில் தன் வயம் இழக்கின் றனர்.
போதை  ஏற்றுபவர்கள் 
ஆனந்தப்  படுகின்றனர்.
அடிமையானவர்கள் அல்லலுறுகின்றனர்.
அமானுஷ்ய சக்தி தான் 
மக்களை காக்க வேண்டும்.






வியாழன், செப்டம்பர் 20, 2012

கணநாயகா !! நீ படும் சிதைவு , என் நெஞ்சத்தை சிதைக்கிறது.

கபாலீஸ்வரர்  மூத்த குமாரன்,
கார்த்திகேயன் சஹோதரன்,
கண நாயகன்,
நவகோள்களின் அதிபதி,
நவசித்தி நவ நிதி 
தரும் தயாளன்.
கஜவதனன்.
தயாநிதி.
அரசமரத்தடியில் 
அமர்ந்து 
தன்  சக்தியால்.
காப்பாளர்கள் இன்றி 
தரணி ஆள்பவன்.
அருகம்புல் 
அர்ச்சனையால் 
அகம் மகிழ்பவன்.
எளி மையில் 
ஏற்றம் பெற்று 
ஏழைகளுக்கு 
ஏற்ற தெய்வம்.
ஆகையால் தான் 
ஆராதனைக்குப்பின் 
அலட்சியத்துக்கு 
ஆளாகிறான் .
நாட்டு விடுதலைக்கு 
மக்களை ஒன்று படுத்த 
திலகருக்கு 
தூண்டுதல் அளித்து,
இந்து மதத்திற்கு ஒற்றுமை அளித்தவன்.
அதனால் தானோ 
இன்று 
விடுதலை 
இந்தியாவில் 
துண்டாடப்படுகிறனோ!!?
ஒற்றுமைக்கு 
உறுதுணை அருள் புரிந்தவனுக்கு 
தக்க சன்மானம்.
ஆராதனை செய்து 
அவனை நடுக்கடலில் ,
ஆற்றில் 
போடுவது.
வினாயாகா!!
கணநாயகா !!
நீ  படும் சிதைவு ,
என் 
நெஞ்சத்தை சிதைக்கிறது.
ஒற்றுமை என்பது,
மதம் வளர்வது,
பதட்டம் பயம் இன்றி 
மகிழ்ச்சியால் 
வருவது.
அந்நாளில் 
விநாயகர் புகழ் பாடலாம்.
கரையும் விரயத்தை,
பக்தி கறுந்தகடில்நிரப்பி ,
நூல்கள் பல அச்சடித்து,
நிலையாக ஒற்றுமை 
நிலை நாட்டலாம்.
மற்றவர் புண் படும் தடத்தில் செல்வேன் 
என்று ஒரு பதட்டம்.
காவல்துறை  பாவம்!!
கொலைகளைத் தடுக்குமா!
கொள்ளைகளைத்  தடுக்குமா?
வழிப்பறி தடுக்குமா?
ஷாந்தி அளிக்கும் பக்தி.
அசாந்தி  ஆவதை தடுக்குமா/?
அறிவியல் யுகம் .-ஆனால் 
ஆண்டவன் பெயரால் 
ஆதங்கம்.
அமைதிப்படுத்த பக்தி.
ஆத்திரமூட்ட அல்ல.
பலத்தைக்காட்ட ,
ஒற்றுமை ஏற்படுத்த,
அன்னதானம்,
 புனித நூல்  தானம்.
கோதானம்,
பூதானம்,
கடவுள் உருவச் சிதைப்பு அல்ல.






நானும் பக்தன் தான்


நானும் பக்தன் தான்.


அவனின்றி ஒரு அணுவும் அசையாது  

சிவன் கட்டளை இன்றி எறும்பு கூட கடிக்காது.

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன்.
காடுடைய சுடலைப் பொடி  பூசி ,
எந்நாட்டிற்கும் இறைவனாய் ,
விஸ்வனாதனாக 
விளங்கும் விநாயகன் புதல்வன்,
தன்னை 
ஆற்றிலும் கடலிலும் கிணற்றிலும் 
போட்டு ,
ஊர்வலத்தன்று ஒரு பயத்தையும் 
பதட்டத்தையும் 
உருவாகும் 
ஆராதனையை 
உள்ளம் விரும்பி ஏற்பானா ?
உலகம் இப்படிப்பட்ட 
பக்தியை ரசிக்குமா?
அல்லது கரை ஒதுங்கும் 
அசிங்கப்பட்ட 
அலங்கரத்தைப்பார்த்து 
உள்ளாடைகளிலும் 
காக்க காக்க கனகவேல் காக்க 
என்று 
உருவத்தை அச்சடித்து அணிவதை 
எதிர்க்க நமக்கு அருகதை உண்டா?
சற்றே சிந்தித்த பின் 
எனது பிரார்த்தனை.
விநாயகா!
கணங்களின் நாயகா!
பக்தர்கள் உன்னை சிதைப்பதைத்  
தடுக்க 
அவர்களுக்கு ஞானம் கொடு.
நீ உன்னை அவமானத்தில் இருந்து காத்துக்கொள்.
இது நீ விரும்புகிறாய் ,
என்றால் எனக்கு 
உன்னை சிதைக்கும் செயல் 
நல்லது என்று சாந்தப்படுத்து.
எனக்கு 
உன் உருவம் சின்னாபின்னமாவது 
வேதனையின் 
எல்லைக்கே அழைத்துச் செல்கிறது.

புதன், செப்டம்பர் 19, 2012

ஊழ் - Fate


ஏரிகள் ,விளை  நிலங்கள்,
விலை போகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக.
மலைகள் தூளாகின்றன.
மலைப்  பிரதேசங்கள் 
குடி இருப்புகளாக மாறுகின்றன.
விளைவாக,
விளைச்சல் குறைகிறது.
மழை குறைகிறது.
குடிநீர்  பஞ்சம் ,
அரிசி விலை ஏற்றம்.
சுற்றப்புற சூழல் 
மாசு படுகிறது.
காசுக்காக 
அரசியல் வாதிகள் 
நில  ஊழல் குற்றச்சாட்டு 
அனைத்துக் கட்சிகள் மேலும்.
ஆனால் 
ஆட்சி மாறும்  போது 
ஆளும் கட்சியினர் மறைக்கப் படுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் 
கைது செய்யப்படுகின்றனர்.
சிறுசேரி முதல் ஊட்டி ,கொடைக்கானல் 
என 
கட்சினரின் ஊழல் செய்த்தித்தாளில் 
செய்திகளாக வருகின்றன.
செய்திகள் மறக்கப் படுகின்றன.
ஊழல்கள் தொடர்கின்றன.
இது மக்களுக்கு ஊழ்வினைப் பயனாகின்றன.


செவ்வாய், செப்டம்பர் 18, 2012

paadam panivom.பஞ்சகரன் , பாதம் பணிவோம்


Why this ad?
Virtualization White Paper - www.aternity.com - Learn effects of virtualization on business performance & productivity


வேலனின் மூத்தோன்,
வேழமுகத்தோன் ,
சிவகுமாரன்,
சித்திகள் தருவோன்,
பார்வதி குமரன்,
பார் புகழ் பகவான்,
பக்தர்களுக்கு அருள்வோன்,
பார்க்கும் இடமெல்லாம்,
நோக்கர்களுக்கு எளியோனாய்,
கம்மாக்கரையிலும்,
ஆற்றங்கரையிலும் ,
அரசமரத்தடியிலும் ,
வெட்டவெளியிலும் ,
எழுந்தமர்ந்து ,
வேண்டிய வரமளிக்கும் 
வேலனுக்கு மூத்தோனை ,
வேழமுகத்தோன் 
எளிய இறைவன் 
கண நாயகன்,
பஞ்சகரன் ,
பாதம் பணிவோம்.

W & productivity

Expand all

Print all

In new window

(no subject)

வேலனின் மூத்தோன்,
வேழமுகத்தோன் ,
சிவகுமாரன்,
சித்திகள் தருவோன்,
பார்வதி குமரன்,
பார் புகழ் பகவான்,
பக்தர்களுக்கு அருள்வோன்,
பார்க்கும் இடமெல்லாம்,
நோக்கர்களுக்கு எளியோனாய்,
,

எழுந்தமர்ந்து ,
வேண்டிய வரமளிக்கும் 
வேலனுக்கு மூத்தோனை ,
வேழமுகத்தோன் 
எளிய இறைவன் 
கண நாயகன்,
பஞ்சாக்ஷரன் ,
பாதம் வணங்குவோம்.

திங்கள், செப்டம்பர் 17, 2012

ஓம் கணேசாய நமஹ.


ஓம்  கணேசாய  நமஹ.

சனாதன தர்மத்தில் உருவ வழிபாட்டுக்கு என 

ஒரு மகத்தான இடம்.

புத்தர் சிலை சிதைத்ததற்கே சிந்தை கலங்கினோம்.

ஆனால்,

அடுத்தவாரம் ஆயிரக்கணக்கான 
பூஜிக்கப்பட்ட 
ப்ராணப்   பிரதிஷ்டை செய்யப்பட 
ஆயிரக்கணக்கான 
அழகான கவர்ச்சி 
சிலைகள்.
ஆராதனை செய்யப்பட்ட அழகு 
இறை உருவங்கள்.
ஆராதனைக்குப்பிறகு 
வரம் தர ஆயத்தமான 
ஆர்வமுடன்  இருக்கும் 
வினை தீர்க்கும் விநாயக சிலைகள்.

அடுத்தவாராம் கடல் அலைகளால் 
அலங்கோல மாகும் 
அநாகரீகக் காட்சிகள்.
ஆகையால் தான் 
ஆள்பவர்கள் மனதில் 
சுயநலம்.
ஊழல் .
லஞ்சம்.
ஆசிரியர்கள்.
காவலர்கள் 
அதிகாரிகள்,
அலைபேசி.
தொலைபேசி 
அனைத்திலும் 
அழியும் உலகத்திலும் 
அகலா  மாயை.
காம வாசனைகள்.
கற்பழிப்புகள்.
கொலைகள்.
கொள்ளைகள்.
கொலைவெறிப் பாடல்கள்.
வரம்கொடுக்காமல் வரும் விக்னங்கள்.(தடைகள்)
உருவ வழிபாட்டுக்கு  நேரும் அவமானங்கள்.
விநாயக பக்தர்களே!
சற்றே சிந்தியுங்கள்.
அவரின் அழகு உயிர்பெற்ற (பிராணப் பிரதிஷ்டை)
உருவங்களை 
சிதைக்காதீர்கள்.
அவரை இவ்வாறு அலங்கோலப்படுத்துவது,
அவரிடம் அருள் பெறவா ?
சாபம் பெறவா ?
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.



சனி, செப்டம்பர் 15, 2012

சிந்தனை தா!1 இறைவா! இறைவன் அருள் யாருக்கு?





இறைவன்  அருள்  யாருக்கு?

ஆஷ்ரமம் என்ற குடிலில் கானகத்தில் 
வாழ்ந்த முனிகள்.
பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் ,
முற்றிலும் அறிந்தும் மௌனியாய் 

இருக்கும் சித்தர்கள்.
உலக நமைக்காக நவ பாஷாணம் சிலை 
அமைத்த போகர்.
வேதங்கள் ,உபநிஷத்கள் ,
பைபிள் ,குரான் ஆகிய 
நன்னெறி காட்டிய இறை நூல் எழுதும்,

இறை தூதர்கள் .

மாயை,சைத்தான், சாத்தான் 
என்றும் 

உலகவாழ்க்கை  போராட்டம் என்றும் 
வாழும் வரை மற்றவர்களுக்காக வாழ வேண்டும் 
வாழு ,வாழவிடு என்ற ஜைனதத்துவம்.
ஆசையை மற  அன்பு காட்டு 
என்ற புத்த தத்துவம்.
எவ்வளவு சேர்த்தாலும் எட்டடி நிலமோ 
அல்லது 
ஒருபிடி சாம்பலோ மிச்சம் 
என பட்டினத்தார் ,ப்ருத்ருஹரி ,
சித்தர் வாக்கு.
அருணகிரிநாதர் வாழ்க்கை ,
கோவலன் கதை,
அனைத்தும் 
இருந்தாலும் 
பக்தி என்ற பெயரில் 
பலகோடி செல்வம் புதைத்து வைத்து ,
தானும் அனுபவிக்காமல்,
நாட்டிற்கும்  பயன்படாமல்
கோடிக்கணக்கில் 
சேர்த்துவைக்கும் 
முதலாளிகள்.
அரசியல்வாதிகள்.
அதை இருக்கும்போதே பலருக்கும் 
பயன் படுத்தலாம்.
விநாயகர் ஊர்வலம் என்ற அண்மைக்கால வழிபாடு.
அந்தக்  கோடிக் கணக்கு விரயம் 
ஒவ்வொரு  தெருவையும் 
சுவர்கமாக்க தூய்மை படுத்த,

கழிவுநீர் தடம் அமைக்க ,
ஏழைகளின் மருத்துவ சிலவு 
என பயன் படுத்தலாம்.
இறைவா!!
மக்களுக்கு நல்வழி  காட்டு.
உன் பெயரால் உன்னை அழகுபடுத்தி, 
அலைகடலில் அழிக்கும் 
அறியாமை பக்தியைப்போக்கு.
புதிய பக்தி முறை, 
நீ படைத்த 
நொடிகள்,
குருடர்கள்,
அனாதைகள்,
நோயாளிகள்,
பசிப் பிணி  உள்ளவர்கள்.
கழிவு நீர் ஓடும் 
மேடுபள்ள புது நகர்கள் 
அனைத்தும் 
பயன் பெற 
கருணைகாட்டு.
நீ விரும்பும் பக்தி 
வால்மீகி,
துளசி,
துருவன்,
வள்ளுவர் 
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் 
நபி ,
ஏசு,
ஜைனர் 
புத்தர் 
என்றால் 
இந்த மாயை பக்தி 
உன் அழகு சிலை 
சிதைக்கும் பக்தி 
அரசியலும் சுயநலமும் கலந்த பக்தி.
இதை மாற்றும் 
சிந்தனை  தா!1
இறைவா!
விநாயகா!





ஏன் இந்த கடவுள் அவமானம்?இன்றைய செய்தி.



இன்றைய செய்தி.

வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்கள் 
கட்-அவுட் வைக்கும் சிலவிற்கு 
ஒரு கிராமத்தைத்  தத்து எடுக்கலாம் 
என்று கூறி உள்ளனர்.
இந்த செய்திக்கு பிரான்சு நாட்டு 
இந்தியர் தன்  கருத்தாக 
போனமா பார்த்தமா என்று வாருங்கள்.
இல்லை என்றால் பத்திரமாக திரும்ப முடியாது 
என்று தன் அனுபவ உண்மையாக கூறி உள்ளார்.
இது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வளவு  பெரிய  அபாயம்.

நான் எழுதுகிறேன் 

6500 பிள்ளையார் சிலைகள் .(சென்னையில் மட்டும்)
குறைந்தது ஒன்று ஆயிரம் என்றால் 
6500 X 1000=6500000.
ஆறு லக்ஷத்து  ஐம்பதாயிரம்.
அலைகட்லிலோ ஆற்றிலோ எரிய 
காவல்துறை பாதுகாப்பு ,போக்குவரத்து பராமரிப்பு 
என  கோடிக்கணக்கில் பணம் 
விநாயகரை சிதைக்க.
இந்த தொகையை நாட்டு நலம்,
சாலை சீரமைப்பு போன்றவற்றிற்கு 
பயன்படுத்தினால் 
விநாயகர்  அருள் கிட்டும்.
இது சென்னையில் மட்டும்.
பகுத்தறிவுத் தந்தை 
கடவுள் இல்லை என்கிறார்.
கடவுள் இருக்கிறார் 
என்பவர்கள் மனத்தில் 
ஏன் 
இந்த கடவுள் அவமானம்.

இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும



இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும்.

பாரத நாட்டில் அறிவியலும் ஆன்மீகமும் 
இணைந்தே கற்பிக்கப் பட்டன.
ஆண்பெண் ஈர்ப்பிற்கு மனக்கட்டுப்பாடு 
தேவை எனவும் அதைக்கட்டுப்படுத்த 
பூஜை விரதங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டன.
சித்த வைத்தியத்திலும் 
"ஒன்ரைவிடேல் ,இரண்டை அடைக்கேல் "
என்று கூறப்பட்டது.
ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் 
பல முன்னேற்றங்கள் இருந்தாலும் 
மனிதன்  குறிப்பாக 
இளைஞர்கள் இளைஞிகள் 

காதல் ,காதல் என்று 
கைபேசியுடன்  அழைகின்றனர் .
இதனால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே.
கட்டுப்பாடு இல்லாமல் சுற்றுவதுடன் 
காதல் கைகூடாவிடில் 
கொலை தற்கொலைவரை சென்றுவிடுகின்றனர்.
அதைவிட கொடுமையான செய்தி 
ஹிந்தி நாளிதழில் 
படித்து  எதிர்கால பாரதம் எப்படி இருக்கும்?
என்ற வேதனை பெற்றோர்களுக்கு  வரும்.
பதிமூன்று முதல் 20 வயது வரை உள்ளவர்கள் 
75% no problem ,no commitment,  என்று 
காண்டமும் கருத்தடை மாத்திரையுடன் 
அலைவதாக சேதி.
சென்னை பிராட்வே கொலை தற்கொலைக்கு காரணம் 
காண்டம்.
காதலனின் பாக்கெட்டில் காண்டம் கண்ட காதலி 
காதலை மருத்துள்ளாள் .
காண்டமே அவள் உயிருக்கு   எமகண்டமாகி உள்ளது.
அறிவியல்  வளர்ச்சி பகுத்தறிவு அவசியம் தான்.
ஆனால் மனரீதியான நோய்  தீர 
ஆன்மிகம் அவசியம்.
ஆனால் அது.

திரைப்படங்கள் கொலைவெறி ;
பாடல்களுக்கும் சென்சார் தேவை.
காதலிக்க மறுக்கும் பெண்ணை அவன் நண்பர்கள் 
அடிடா  அவளை;உதைடா  அவளை ;வெட்டுடா அவளை;
விளைவு 
பிராட்வே  கொலை.




வெள்ளி, செப்டம்பர் 14, 2012

ஏமாறும் வணிக ஸ்தலங்கள்.




ஆலயம்  தொழுவது  சாலவும் நன்று .
அறம்  வளர்ப்பது ஆலயம்.
ஆலயம் சென்றால் ஆத்ம சுகம்.
ஆன்மிகம்  வளர்ப்பது  ஆலயம்.
ஆலயத்தின் நோக்கமே 
ஏழை களுக்கு உதவுதல்.
அன்னதானம் ,
பால் அபிஷேகம் , 
பஞ்சாமிர்தம் ,
தினைமாவு ,
தேன் ,
சிதர்  தேங்காய்,
தன  தானம் ,
என 
அனைத்துமே 
ஆறாம் வளர ,
ஆலயம் .
புடவை, 
வளையல் ,
சுமங்கலி பூஜை ,
நவராத்திரி சுண்டல் 
என 
மற்றவர்களுக்கு 
கொடுக்கும் எண்ணம் 
வளர 
வளர்ந்தது ஆலயம்.
இன்று 
ஆலயம் ஏழைகளுக்கு அல்ல .

பணம் படைத்தோருக்கு.
இன்றுமட்டுமல்ல 
அரசர்கள்  காலத்திலும்.
அனந்த பத்மநாபர் 
ஆனாலும் 
திருப்பதி ஆனாலும் 
பழனி ஆனாலும் 
அங்கு பக்தர்கள் 
பெருகினாலும் 
பக்தியைக்  காட்டி ,
பட்டை நாமமோ 
பட்டை விபூதியோ 
போட்டு ஏமாற்றும் 
கூட்டம் ,
ஏமாறும் கூட்டம் அதிகம்.
ஆலாயங்களா ?
அங்காடித் தெருக்களா?
கிரிவலப்பாதையா?
கடைவீதிகளா?
ஆலயம் என்பது 
இன்று 
வணிகவளாகங்கள்.
பக்தர்கள் 
ஏமாறும் 
வணிக ஸ்தலங்கள்.