புதன், நவம்பர் 14, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள்--பகுதி-3

அப்பா பற்றி அம்மா புகழ்ந்து பேசுவார். அவர் அப்பா பற்றி,

அவர் கடினமாக உழைக்கிறார். 
அவர் வருமானம் தானம் ,தர்மம்,அண்ணா குடும்பத்திற்கு செல்கிறது என்பார். 
இது சம்பந்தமாக சிலசமயம் சண்டை வாக்குவாதம் நடக்கும்.
இருந்தாலும் அப்பா என்றால் அம்மாவிற்கு உயிர்.

என் அப்பா  தன்  மரணத்தை புரிந்துகொண்டு  சொன்னார்,
டேய் ,அனந்து  போன வாரம் 
,நான்  வேலை  செய்யும்  இடத்தில் விடிய,விடிய இனிப்புகள் செய்தேன்.
அதனால் தான் கண் கெட்டுவிட்டது .
வேலை செய்து பணம் கேட்டேன்.
அவர்கள் உன் அண்ணன் வாங்கிச்சென்று விட்டார் என்றனர் .
என் மனது மிகவும் கெட்டுவிட்டது  என்றார்.
தன் தங்கையையும் வெறுப்பாக பேசினார்.
மனிதர்கள் தங்கள் தம்பி இடமும் இவ்வளவு இரக்கமற்று நடந்துகொள்வார்கள் 
என்பதை என் அப்பா தன் எழுபத்தைந்தாவது வயதில் புரிந்து கொண்டார்.
அவர் எல்லோருக்கும் உதவி உள்ளார்.
 தன்  குடும்பத்தை விட  அதிகமாக என்பது 
அப்பாவின் மரணத்திற்குப்பின் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கூறினார்கள் .
அதுதான் செத்தால் தெரியும் என்று சொன்னார்களோ என்னவோ,அவர் இறந்த பின் அவர் இழப்பு மிகவும் பேரிழப்பாக இருந்தது.அம்மா மிகவும் உடைந்து போனார். ஆனால் எதோ ஒரு சக்தி அவருக்கு ஒரு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது .

கருத்துகள் இல்லை: