வியாழன், நவம்பர் 15, 2012


அம்மாவின் நினைவலைகள்--பகுதி--5.


அம்மாவைத் தனிக்குடித்தனம் அல்லது வீட்டிற்கு செல்லவிடாமல் செய்த தாத்தா ,ஒரு தெய்வீக மனிதர்.அவர் தான் மரணம் அடையும் நாளை அறிந்து வைத்திருந்தார்.மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு அம்மாவை அழைத்து தாத்தா ,கோமதி,! சென்றதைக் கருதாதே, நான் நாளை மறுநாள்  இறந்துவிடுவேன்.எனக்கு சாப்பிட பழங்கள் வாங்கிவா.பள்ளிக்கு லீவு போடு. நான் இறந்த பின் இந்த வீடு துண்டுதுண்டாகி விடும். பல கஷ்டங்கள் வந்தாலும் நீ வீட்டை விற்கமுடியாது. நான் உனக்கு  பக்க பலமாக இருப்பேன்.தெய்வம் துணை இருக்கும்.இந்த ஆசிர்வாதம் செய்ததும்,அவர் சொன்ன படி அவர் இறந்துவிட்டார். அந்த ஆசிகளின் பலன் அந்த வீடு  பல துண்டுகளானாலும்   அம்மா வீட்டைக் காப்பாற்றிவிட்டார்.

           இது தான் ஒரு தெய்வீக சம்பவம்.
1965-67இரண்டு  ஆண்டுகள் அம்மா படுத்த  படுக்கையானார்.அப்பொழுது தலைவர் கே.சின்னப்பன்,அவர்கள் பரிந்துரைப்படி,அம்மா வேலைபார்த்த சொக்கலிங்கக் கவுண்டர்  நினைவு  உயர் நிலைப்பள்ளி,கொரிக்கடவு ,எனக்கு ஹிந்தி ஆசிரியர் பணி கிடைத்தது.ஆனால்,இருமொழிக்கொள்கை ப காரணமாக,பயிற்சி பெறாத ஹிந்தி ஆசிரியர்கள்  பணி இழக்க நேர்ந்தது. அந்நிலையில், எனக்கு அம்மா மிகவும் தைரியமாக இருந்தார். அப்பாவும் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.அம்மாவின் உடல் நிலை. தேர்ச்சி அடைந்தது.  அச்சமயம்,தக்ஷின் பாரத ஹிந்தி பிரசார் சபா  புதிய ஹிந்தி வகுப்புகள் ஆரம்பிக்கும் திட்டம் கொண்டுவந்தது. அம்மாவும்  ஹிந்தி வகுப்புகள்  ஆரம்பிக்க ஊக்குவித்தார்.
தொடரும்.

கருத்துகள் இல்லை: