வெள்ளி, நவம்பர் 30, 2012

எங்கே?எங்கே?எங்கே?


அன்பும்  அறிவும் ஆற்றலும் 
நேசமும் பாசமும் தானமும் 
 தர்மமும் தியாகமும் பற்றற்ற
 தன்மையும் பணிவும்,பொறுமையும் 
சாந்தமும் சஹிப்புத்தன்மையும் 
பரோபகாரமும் தன்னலமற்ற 
எளிய வாழ்க்கை முறையும் ,
ஆடம்பரமற்ற தன்மையும்,
ஆத்மதிருப்தியும் அஹிம்சையும்,
விருப்பமும் வெறுப்பும் அற்றநிலை ,
ஆசை -பேராசையற்ற நிலை,
இன்னா -இனியவை யில்  நடு நிலை 
 ஆன்மீக மார்க்கம்.

ஆனால்   இன்று 
ஆன்மீகத்தில்  ஆடம்பரம் ,
ஆஸ்திகள் இல்லை என்றால் 
ஆஷ்ரமங்களில் இடம் இல்லை.
தங்கமும் வைரமும் வைடூரியமும் ,
கோடிக்கணக்கில் பணமும் 
பதுக்குமிடங்கலாகவும் இருக்கின்றன .
 பத்துக்கும் செல்வங்களால்   யாது 
பயன்.
ஆயிரக்கால் மண்டபங்களும் ,அழகுசிற்ப மண்டபங்களும் 
கடைகளால் மறைக்கப்பட்டு 
வணிக ஸ்தலங்களாக மாறும் நிலை.
லௌகீகமா அலௌகீகமா என்றால்,
லௌகீகமே  பிரதானம்.
 வழிபாடு ஐந்து நிமிடம் ,
கடைத்தெருவில் ஐந்துமணிநேரம் .
கடவுளின்  கருணை கிட்டுமா?
உள்ளத்தில் சஞ்சலம் தீருமா?
உடல்  ஆரோக்கியம் பெறுமா?
உள்ளம் அமைதி பெறுமா?
வாழும்  கலை மறந்து,
பொருளாசை வளர்க்கும் மையமாக 
மாறும் வணிகஸ்தலங்கள் 
 ஆலயங்கள்  என்றால் 
ஓம் ஓம் ஓம் 
சாந்தி !சாந்தி!சாந்தி !
எங்கே?எங்கே?எங்கே?




கருத்துகள் இல்லை: