ஞாயிறு, நவம்பர் 25, 2012

ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

ஹிந்து புராணங்களின் சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளன.
மோகினி அவதாரம் பற்றிய சர்ச்சை.
இறைவன் பற்றிய வரலாற்றை ,
விவாதம் செய்வது பாவம் என்றோருவாதம்.
ஆனால் ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

அது ஒரு பூமி.
அதில் சவத்தையும்  புதைக்கலாம்.
சாக்கடையையும் ஓடவிடலாம்.
புனித கங்கையும் ஓடவிடலாம்.
குழியும் தோண்டலாம்.
சுரங்கங்கள் தோண்டலாம்.
தங்கமும் வெட்டி எடுக்கலாம்.
நிலக்கரி எடுக்கலாம்.
வைரமும் எடுக்கலாம்.
எலும்புக் கூடுகளும் கிடைக்கலாம்.
புதையலும் எடுக்கலாம் .
புண்ணியர்களையும் புதைக்கலாம்.
பாவிகளையும் புதைக்கலாம்.
அறிவு,பதவி,அறிவியல் மேதைகள்,
நாஸ்திகர்கள்,ஆஸ்திகர்கள் 
அனைவரும் சங்கமிக்கும் இடம் பூமி.
ஆகையால் இந்துமதம் கர்ம பூமி,
கர்மத்துக்கேற்ற வாழ்க்கையை கொடுக்கும் பூமி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
ஆகையால் இது வினைக்கேற்ற பலன் தரும் 
சனாதன தர்மம் என்ற சகிக்கும் பூமி.
அருவுருவமும் ஆனாய் போற்றி 
அகிலத்திற்கே ஒரு ஆதர்ஷ பூமி.

கருத்துகள் இல்லை: